பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 27, 2004

கவிதையும் குப்பையும்.

கவிதையும் குப்பையும்.

இந்த வருடம் புத்தக சந்தையில் எவ்வளவு புத்தகங்கள். அதனுள் மக்களை கவர்ந்த புத்தகங்கள் கீழே.
( இதை அவர்கள் வாங்கினார்களா அல்லது வேடிக்கை பார்த்தார்களா எனக்கு தெரியாது ).

1. ஒஷோ புத்தகங்கள் ( தமிழ் நாட்டு மக்கள் சிந்தனை வளர்ந்தால் சரி )
2. சுகபேதானந்தா ( இந்த தண்ணிர் கஷ்டத்தில் எப்படி ரிலக்ஸ் செய்வது )
3. குமுதம் ஸ்டாலில் கூட்டம் அலைமோதியது. ( சுண்டல் ஏதாவது குடுத்தார்களா ? ).
4. கவிதை தொகுப்புக்கள்.கவிதைப்பற்றி கீழே.

தமிழ் புத்தகங்கள் எல்லாம் நல்ல வழவழப்பான அழகான அட்டைப்பட ஓவியங்களுடன் வருவதால் எது நல்ல

புத்தகம் என்று கண்டுபிடிப்பது கஷ்டமாகிவிட்டது. பதிப்பகங்களும் நிறை வந்துவிட்டது.
ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும், இன்னோரு பக்கம் கவலையாக இருக்கிறது.


கவிதைக்கு இலக்கணக் கட்டுப்பாடு தேவையா ? என்னைக்கேட்டால் தேவை என்பேன்.
நாட்டில் கவிதையை குறைக்கவேண்டுமானால். குடும்ப கட்டுப்பாடு போல் கவிதைக்கட்டுப்பாடு தேவை.
அந்த காலத்தில் இருந்தவர்களுக்கு உணர்ச்சி இல்லையா ? இப்போழுது இருப்பவர்களுக்கு மட்டும்
தான் உணர்ச்சி இருக்கிறதா ? உணர்ச்சியின் வேகத்தில் வரும் எண்ணங்களை எழுதுங்கள் ஆனால் அதை
கவிதை என்று சொல்லாதிர்கள். அதை குப்பை என்று சொல்லுங்கள். முக்கியமாக அதை யாரிடமும் வற்புறுத்தி
படிக்கச்சொல்லாதீர்கள். உபத்திரம் இல்லா இணைய குழுக்களுக்கு அனுப்புங்கள், அல்லது வலைப்பதிவில்
அரங்கேற்றி, கடையை திறந்து, யாராவது வருகிறார்களா என்று காத்திருங்கள்.

ரமேஷ் மாகாதேவன்என்பவர் தம்முடைய வலைத்தளத்தில் வைரமுத்து கவிதை எழுதும் முறையை செல்லியிருக்கிறார். அவர் அனுமதியுடன் வழிமுறையை கீழே கொடுத்துள்ளேன்.

ABC
ராஜா முல்லை காத்திருக்கு
தேவ இதழ் பூத்திருக்கு
ராத்திரி ராஜா விழித்திருக்க
பேசிய மான் பாத்திருக்கு
அழகு ஜீவன் செத்திருக்கு
பூகம்பம் சிரிச்சிருக்கு
மின்னல் பொழுஞ்சிருக்கு


வேர்த்திருக்கு


A, B, C வரிசைகளிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்து ஒரு வரி எழுதினால் வைரமுத்து கவிதை ரெடி!.
உதாரணத்துக்கு இப்படி கவிதை அமைக்கலாம்.

அழகு மின்னல் காத்திருக்கு
தேவ முல்லை சிரிச்சிருக்கு
பேசிய ஜீவன் பாத்திருக்கு
ராஜா இதழ் வேர்த்திருக்கு

பி.கு: வேர்வை வைரமுத்துக்கு பிடித்த வார்த்தை.

இதே போல்
கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு ...
என்ற பாடலை எழுதும் முறை சிம்பிள் - ஒரு பொருள் மற்றும் அதன் தன்மை அறிந்தால் கவிதை sorry குப்பை

ரெடி.

உதாரணத்துக்கு

Objectக்கு attribute அழகு.
ரசத்துக்கு உப்பழகு
பழத்துக்கு ஜுஸ் அழகு
கிழத்துக்கு தடி அழகு...

இப்படி எழுதிக்கொண்டே போகலாம். இதல்லாம் கவிதையா ?

அந்தகாலத்தில் கட்டளைக் கலித்துறை, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, நேரிசை
வெண்பா,எண்சீர்க்/எழுசீர்ச்/அறுசீர்ச்/பதினான்கு சீர்க்.. கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்,
சந்தம், அந்தாதி, சந்த விருத்தம், வஞ்சித்துறை, கொச்சகக் கலிப்பா, நேரிசை ஆசிரியப்பா,
கலிநிலைத்துறை, வஞ்சி விருத்தம் .. இதல்லாம் இப்போ சுறுங்கி ஹைக்கூ ஆகிவிட்டது.
( நாளை "கூ" ஆகிவிடும் ).
*
இந்த மாதம் மஞ்சரி இதழில் எழுத்து அலங்காரம் எனக் கவிதையில் ஒரு வகை பற்றி வந்துள்ளது.
மூன்று சொற்களின் நடு எழுத்தைக் செர்த்து ஒரு சொல்லாக்கி, மீதியுள்ள முதல் மற்றும் கடைசி
எழுத்துக்கள் உடைய சொற்களுக்கும் பொருள் விளங்கும் வகையில் அமைவதுதான் அது.

ராசு நல்லூர் ராமச்சந்திரக் கவிராயர் எழுதிய கவிதை ஒன்று அதனை விளக்கும்.
ஒருசமயம் ..அவர் சீதாராமன் என்ற வள்ளலை சந்திக்க சென்றார். தாம் பெரிய கடனாளி
ஆகிவிட்டதால், அவரிடம் உதவி பெறலாம் எனச் சென்றார். அந்த சமயம் அவரைச் சுற்றி நிறைய பேர் இருந்தபடியால் தாம் சொல்ல வந்தது அவருக்கு மட்டும் புரிய வேண்டும் என்று அந்தக் கவிதையைச்
சொன்னார். அவரும் அதனை புரிந்து கொண்டு உதவிகளை செய்தார். அக்கவிதை இதோ

அத்திரம் வேலா வலயம் இராசி யொன்றிற்கு
        அமைந்த பெயர் மூன்றினிடையாக்க ரத்தால்
மெத்த நடக்குன்றுனை வந்தடந் தேனிந்த
        விதன மகற் றிடு மற்றை எழுத்தோ ராறில்
பத்துடையா னைத் தடித்து பெண் ணாயச் செய்து
        பரிவினுகர் வோனிருதாள் பணிந்து போற்றும்
சித்தசதன! தெளிய சிங்கன் தவத்திற் றோன்றும்
        சீதாரா மப்ரபல தியாக வனே

அத்திரம் = அம்பு - சுகம் [க]
வேலா வலயம் = வேலை, வலையம், வேலா வலையம் = கடல் [ட]
இராசியொன்று = கன்னி [ன்]

சுகம், கடல், கன்னி ஆகிய சொற்களின் நடு எழுத்துக்கள் சேர்த்தால் கடன். தாம் கடனில் திண்டாடுவதை

இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.

மேற்கண்ட மூன்று சொற்களில் நடு எழுத்துப் போக மீதி எழுத்துக்கள் சும், கல், கனி
சும் பத்துடையானத் தடிந்து
கல் பெண்ணாய்ச் செய்து
கனி பரிவினுகர் வோன்

சும் என்றால் தலை; பத்து தலையுடைய ராவணனைக் கொன்று அகலிகை சாபம் நீக்கி, சபரி தந்த கனியை
உண்டவர் ஆகிய ராமபிரான் அந்த ராமபிரான் பெயர் கொண்டவனான சீதாராமனே எனப் பொருள்.
சிதாராம வள்ளலே, நான் கடனால் அவதிப்படுகிறேன் என்பதே இதன் திரண்ட பொருள். ( நன்றி: வை. தங்கவேலு, திருமங்கலம், மஞ்சரி பிப்ரவரி 2004)
*
திருமங்கையாழ்வாரின் திருவெழுகூற்றிருக்கை என்பது மூன்றாவது ஆயிரமாகிய
இயற்பாவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. எழுகூற்றிருக்கை என்பதும் கடினமான பாட்டமைப்பு.
ஏழு, கூற்று, இருக்கை என்று பிரிப்பார்கள். ஏழு அறையாக்கி சிறுமிகளின் பாண்டியாட்டம்
போல கட்டம் வைத்து புகுந்து வெளிப்படும் அமைப்பு. ஒன்றிலிருந்து

ஏழுவரை ஏறியும் இறங்கியும் சொற்கள் அமைக்கப்படும் இதைச் சித்திரக் கவி வகையிலும்
சேர்ப்பார்கள். திருமங்கையாழ்வாரின் எழுகூற்றிருக்கை 46 அடிகள் கொண்டது. நிலைமண்டில
ஆசிரியப்பா வகையைச் சேர்ந்தது. ஒன்று முதல் ஏழு முடிய ஏறி ஏறி இறங்கி, இறுதியில், ஒன்றாய்
விரிந்து நின்றனை என்று அமைத்திருக்கிறார்.

குடந்தை ஆராவமுதப் பெருமாளைப் பாடியதாகச் சொல்கிறார்கள். இதை, தேர் வடிவத்தில் கோலம்
போல எழுத முடிகிறது. ரதபந்தம் என்றும் பெயர் சொல்கிறார்கள். கவிதைக்கு ஒரு பயிற்சியாக
இருக்கும் இந்தப் பாட்டு ஆழ்வாரின் பல் திறமையைக் காட்டுகிறது. இவ்வாறு 1234567654321 என்று ஏற்ற இறக்கத்தில் அனாயாசமாகக் கவிதை புனைந்திருக்கிறார்.
(ஆழ்வார்கள் ஒர் எளிய அறிமுகம், சுஜாதா).

ரதவடிவில் இந்தபாடல்


இவற்றை படித்துவிட்டு நல்ல சுத்தமான கவிதையை எழுதுங்கள், அல்லது பிள்ளையார் சுழியுடன் நிறுத்திவிடுங்கள்!.

Read More...

Wednesday, February 25, 2004

டைப்ரைட்டூன் - 6

typetoonnz


Read More...

Tuesday, February 24, 2004

ஏன் இட்லிவடைக்குள் ஒளிந்து கொள்கிறேன்?

என்னுடைய வலைப்பதிவில் வந்த Top 10 Movies ஒரு சிறு சலசலப்பை
ஏற்படுத்தியிருக்கிறது. சிலர் நன்றாக இருக்கிறது என்றும்,சிலர் "வெளியிலே வாடா
பார்த்துக்கிறேன்" என்று மிரட்டியிருக்கிறார்கள்.என்னுடைய வலைப்பதிவில் எழுதியது
யாரை புண்படுத்தும் நோக்கத்துடன் இல்லை.

திரு முகுந்த் உங்களுடைய வலைப்பதிவில் நீங்கள் உங்கள் கருத்தை சொல்லலாம்,
அதில் தப்பு எதுவும் இல்லை என்றார். நீங்கள் என்னை பற்றி உயர்வாக கூறாவிட்டாலும்,
நீங்கள் எழுதியது நன்றாக உள்ளது என்று எனக்கு தனியாக ஈமெயில் அனுப்பியுள்ளார்.
அவருக்கு எனது நன்றி.

பின் ஏன் இட்லிவடைக்குள் ஒளிந்து கொள்கிறேன்? தைரியமாக வெளியிலே வாடா
என்றால், ஒளிந்து கொண்டு எழுதுவதில் ஒரு சிறு சந்தோஷம் அவ்வளவுதான்.
இவ்வாறு எழுதுவதில் எனக்கு மிகவும் தெரிந்தவரை கிண்டல் செய்யமுடிகிறது, ஏன் என்னை
நானே கிண்டல் செய்துக் கொள்கிறேன். இது ரொம்ப நாள் நீடிக்காது. மனிதர்கள் தப்பு
செய்வார்கள். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டு கொள்வான்.
It is only a matter of time !. காத்திருங்கள்.

Read More...

Monday, February 23, 2004

இட்லி-வடை-சாம்பார் - ஒரு முக்கோணக் காதல் கதை

இட்லியும் சாம்பாரும் ஈருடல் ஓருயிராய்ப் பழகி காதலித்து வந்த காலத்தில்,
புதுசாய் வந்து சேர்ந்தது வடை. இதுவரை மென்மையான இட்லியை மட்டுமே
ரசித்திருந்த சாம்பாருக்கு மொறு மொறுவென்று முறுக்குடன் இருந்த வடை மேலும்
லேசா லேசா பிரியம் வந்தது. இட்லி, இலை தேசத்தில் தன் மெஜாரிட்டி
பலத்தைக் காண்பித்து சாம்பார் தனக்கே என்று வாதம் செய்தது. வடையோ
ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் இட்லியும் வடையும் சாம்பார் மீது
புரண்டு புரண்டு சண்டையிட்டன. பேக் க்ரவுண்டில்,

"சம்பாரே சாம்பாரே, சொக்க வைக்கும் சாம்பாரே,
காதலில் நீ எந்த வகை கூறு?
காதலிலே ரெண்டு வகை, இட்லி ஒன்று வடை ஒன்று,
ரெண்டில் நீ எந்த வகை கூறு?" என்று பாட்டெல்லாம் ஒலித்தது.

வடை விட்ட குத்துக்களை மென்மையான இட்லியால் தாங்க முடியாமல் அது
சோர்ந்து போனது. சாம்பார், வடையை மணந்து நிறைவாக வாழ்ந்தது.

நீதி: காத்திருந்த இட்லியின் காதலியை, நேத்து வந்த வடை தள்ளிக்
கொண்டு போய்விடும்.

பின் கதை: சாம்பாரால் கை விடப்பட்ட இட்லி, அண்மைக் காலங்களில்
சட்னியை டாவடித்துக் கொண்டிருப்பதாய்க் கேள்வி.
--Meenakshisankar

Read More...

Friday, February 20, 2004

இருபதாம் நூற்றாண்டுக் கவிதையின் நயம்!

திரு வாஞ்சிநாதன் அவர்கள் இட்லிவடை மெஸுக்கு சில சரக்குகளை அனுப்ப
உத்தேசித்துள்ளார். சரக்கு மாஸ்டரின் முதல் சரக்கு கீழே. (ஆர்)



சின்ன இட்லி, பெரிய இட்லி எல்லோருக்கும், கவிதை அனுப்புவதற்குப்
பதிலாக ஒரு கவிதையைப் பற்றி நான் எழுதியதை அனுப்புகிறேன்.
உங்கள் கடைக்கேற்ற சரக்குதானே!
--வாஞ்சிநாதன்

22ஆம் நூற்றாண்டு இலக்கிய மாணவர்க்கான தேர்வில் வெளிவந்த கேள்வி.

பின் வரும் இருபதாம் நூற்றாண்டுக் கவிதையின் நயம் குறித்து சிறு குறிப்பு எழுதுக.

போன வருஷச் சாரலுக்கு குற்றாலம் போய்
கைப்பேனா மறந்து
கால் செருப்பு தொலைத்து
வரும் வழியில் கண்டெடுத்த
கல்வெள்ளிக் கொலுசு ஒண்ணு
கற்பனையில் வரைந்த
பொற்பாத சித்திரத்தை
கலைக்க முடியலையே இன்னும்.


மாணவனின் விடை:

வெறும் கொலுசு ஒன்றை வைத்துக் கொண்டே பெண்ணைக் கற்பனைச் சித்திரமாகப்
பார்க்கும் நிலைக்கு அக்காலத்துத் தமிழ் மாந்தர் இருந்தனர் என்று இக்கவிதையிலிருந்து
அப்பட்டமாகத் தெரிகிறது. பாவம், உயிருடன் பெண்களைப் பார்க்க முடியாமல் மக்கள்
இருந்து வந்தனர் என்பதை இக்கவிஞர், கவிஞர்களுக்கே உரித்தான மறைமுக பாணியில்
கூறியிருக்கிறார். பெண்கள் என்ற ஒரு இனம் சதையும் குருதியுமாக அக்காலத்தில் நடமாடிக்
கொண்டிருக்கவில்லை. ஒற்றைக் கொலுசு, உடைந்த கண்ணாடி வளையல் துண்டு,
குளியலறைச் சுவரில் ஒட்டி வைத்த ஸ்டிக்கர் பொட்டு, ஊதிய பலூனில் விட்டுச் சென்ற
மூச்சுக் காற்று, என்பன போன்ற விட்டுச் சென்ற தடங்களை வருடக் கணக்காக பத்திரமாக
வைத்திருந்து அழிந்து போன பெண்கள் என்ற இனத்தை கற்பனைச் சித்திரமாய் மக்கள்
பார்ப்பது இருபதாம் நூற்றாண்டு வழக்கம். உசிலம்பட்டி வழக்கத்தால் பெண்ணினமே அழிந்து
போய், பின்னர் இருபத்தோராம் நூற்றாண்டின் குளோனிங் முறை மூலம் பெண்கள் மீண்டும்
படைக்கப் பெறுவது நடக்கும் முன் தமிழ்நாட்டில் நிலவிய அவல நிலையை இக்கவிதை
அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது.

--வாஞ்சிநாதன்

Read More...

Thursday, February 19, 2004

TOP 10 Movies


1. பிதாமகன்

இதில் வரும் ஹீரோ ஒரு ஸ்கூல் வாத்தியார். (லயோலா, MOP) கல்லூரி "Boy's"
வைத்து ஒரு தமிழ் PC உருவாக்குகிறார். இதைக்கண்டு சிலர் வெகுண்டு எழுகிறார்கள்.
வாத்தியார் இதை எப்படி முறியடிக்கிறார் என்பதே கதை. கடைசியில் வாத்தியார்
(மணிரத்தினம் போல்) ஒரு one-liner'ல் கதையை முடித்தது பலருக்கு பிடிக்கவில்லை.


2. திருடா திருடி

இதில் வரும் ஹீரோ(வெங்கட்) "எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்" என்று
புலம்புகிறார். நீங்கள் தானே திருடன்/திருடி என்று சொன்னதையே திரும்பி திரும்பி
சொல்வதால் படத்தில் ஒரு தொய்வு எற்படுகிறது. புலம்பும் பொழுது, பின்னனி இசை
இல்லாமல் அருமையாக இசையைமைத்துள்ளார் இளையராஜா.படத்தின் டைரக்டர்
இவரே என்பதால் எல்லா சீன்களிலும் இவதே நடிக்கிறார். படம் முழுக்க கனடாவில்
எடுத்திருக்கிறார்கள். கடைசிவரை இவர் திருடினாரா அல்லது மற்றவர்கள் திருடினார்களா
என்று கண்டுபிக்க முடியவில்லை.



3. புதுக் கோட்டையிலிருந்து சரவணன்.

இந்த படம் ஒரு Thriller. கதாநாயகன் தண்ணீர் இல்லாத குடத்தை யார் உடைத்தார்
என்று கண்டுபிடிப்பதுதான் கதை. இலக்கிய படங்களிலேயே இதுவரை
நடித்திருக்கும் முருகன், இப்படத்தில் சரவணனாக நடித்திருப்பது அனைவரையும்
ஆச்சிரியபடித்தியிருக்கிறது. படத்தின் பாடல்கள்(மகுடேசுரன்) சுமார் ரகம் தான்.


4. எங்கள் அண்னா

இதில் வரும் காமெடி ஹீரோ(டைனோ) முகமூடி அணிந்து எல்லோரையும் சிரிக்க
வைக்கிறார். இந்தியன் தாத்தாவிற்கு மேக்கப் போட்டவர்தான் இதிலும் மேக்கப் போட்டுள்ளார்.
அவார்டு வந்தாலும் வரும். காமெடியாக இருந்தாலும் கருத்துள்ள படம். ரமணாபோல் புள்ளி
விவரங்களை சொல்லி தியேட்டரில் கைத்தட்டல்/விசில் வாங்குகிறார்.



5. மெளனம் பேசியதே

ஹீரோக்களே வைத்து படம் பன்னும் இந்தகாலத்தில் ஹிரோயினை(ஜெயராதா)
மையமாக கொண்ட படம். ஹீரோயின் படம் முழுவதும் ஊமையாக நன்றாக நடித்துள்ளார்.
கடைசியில் ஒரு அதிர்ச்சியினால் பேசுகிறார்.



6. பார்த்திபன் கனவு

ஹீரோ சிவா ஒரு தமிழ் PC உருவாக்குவதை போல் கனவு காண்கிறார். அந்த
கனவை நனவக்கினாரா என்பதே கதை. பாடல்களே இல்லாத டாக்குமெண்டரி படம்.
Tax Free, என்பதால் எல்லொருக்கும் (V)CD இலவசமாக தரப்படுகிறது. தொடர்பு
கொள்ள வேண்டிய முகவரி - zhakanini.org.


7. விருமாண்டி
இரண்டு கிராமத்து குழுக்களிடையே (ழ, தமிழ் லினக்ஸ்) நடக்கும் மேதல்களை
மையமாக கொண்ட படம். பத்ரி நாட்டாமையாக நடிக்க முயற்சித்திருக்கார்.
வன்முறை காட்சிகள் அதிகம் உள்ள காமெடி படம்.



8. வர்ண ஜாலம்.
முகுந்த் என்ற ஹீரோ "இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக...", முதல்வன்
அர்ஜூன் போல் TVல் பேட்டி குடுக்கிறார். பேட்டியில் இருக்கும் உதறல்,உளறல்,
போலித்தனம் இவற்றை தமிழ் மக்கள் கண்டுபித்து விடுகிறார்கள் . இதை எப்படி ஹீரோ
மறைக்கிறார் என்பது தான் கதை. ஏற்கனவே இது போல் நிறைய படங்கள் வந்துவிட்டதால்
சுவாரஸ்யம் கம்மி. இந்த படத்தின் திருட்டு VCD(MP3 வடிவில்) படம் வந்த இரண்டு நாளில்
ராயர் காப்பி கிளப்பில் கிடைக்கிறது என்று கிசுகிசு. VCDல் ஆடியே மட்டும் தான், வீடியே மிஸ்ஸிங்.



9.ஆட்டோகிராஃப்
கல்லூரி மாணவர்கள் நடித்திருக்கும் படம். வாழ்கையில் முன்னேர நினைக்கும் மாணவர்கள்
தமிழ் PCயை உருவாக்க உதவுகிறார்கள். அவர்களின் வாத்தியார் அவர்களை ஊக்குவிக்க
அவர்களுக்கு தன் புத்தகங்களை ஆட்டேகிராஃப் போட்டு குடுக்கிறார். வில்லன் கூட்டம் பல
தொல்லைகளை குடுக்கிறது. சவால்களை எப்படி சமாலிக்கிறார்கள் என்பதே கதை.
அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு நல்ல படம்.



10. குறும்பு
நிறைய இரண்டு அர்த்தம் கொண்ட படம். புதுமுகம் இட்லிவடை என்ற பெயரில்
அடிக்கும் லூட்டி தாங்கமுடியவில்லை. வயதுக்கு வந்த இலக்கியவாதிகள் மட்டுமே ரசிக்க
கூடிய படம். புதுமுகம் பேசும் போழுதே நிறைய spelling mistake செய்கிறார்.
திருத்திகொண்டால் நல்ல எதிர்காலம் இருக்கிறது.

Read More...

Wednesday, February 18, 2004

டைப்ரைட்டூன் - 5

இன்று திரு வாஞ்சிநாதன் அவர்களுக்கு ஒரு டைப்ரைட்டூன். நாளை Top Ten Movies.

typetoonop

Read More...

Monday, February 16, 2004

ழ-வும், ராயரும்.

ழ-வும், ராயரும்.

கொஞ்ச நாள் ராயர் கிளப்பை ஒரு நோட்டம் விட்டேன், (ராயர் கிளப் என்பதை வாத்தியார் கிளப் என்று பேர்மாத்தலாமுங்கோ !)

நாட்டுல சில நல்ல விசயமெல்லாம் நடக்குது, விருமாண்டி விளக்கமாறு, ழ கணினி, ஜீரோ டிகிரி னு கலக்கலா போகுது. வெங்கட் ப்லாக் எழுதறார், பத்திரி எழுதறார் எல்லாரும் எங்கயோ போய்டாங்கையா . சரி நாமும் கொஞ்சம் எழுதலாமேனு பாத்தேன். பாத்தா வெங்கட் அண்ணா பீல் பண்ணி இருக்கார். தமிழ் லைனக்ஸ் சர்வர் வேற காலவாரிடுச்சாம் உடம்பு வேற சரியில்லையாம் அப்பறம் சுஜாதா வேற இவர் போர எங்கயும் சொல்லலையாம். ஜெயலலிதா போல் குட்டிகதை எல்லாம் சொல்லராறு.

வெங்கட் புலம்பறதை பாத்தா கவலையா இருக்கேனு அவர் தமிழ் லைனக்ஸ் சைட்டுக்கு போய் பாத்தேனுக்க , ஒரு மாசம் முந்தியும் சரி , இப்பவும் சரி இவர் பேரு மட்டும் தான் சைட்ல இருந்துச்சி . தமிழ் லினக்சே இவர் தான் செஞ்சாரோனு தோனிச்சிங்க .. அப்பவே எனக்கு கோவம் பொத்து கிட்டு வந்துச்சி... சுஜாதாவை என்ன செய்யறதுனு. அப்பறம் தான் வி"யமே விளங்குச்சி நம்ம வெங்கட் தமிழ் லினக்ஸ் சைட்டையே ரொம்ப திக்கி திணறி தான் பாத்துகராறாம். அப்பறம் தமிழ் லினக்ஸ் எப்படி நிறுவரது அப்படினு ஒரு ஃபைல் எழுதி இருக்காராம். சாரிச்சது ல அந்த ஃபைல யூஸ் பண்ணா இன்ஸ்டால் பண்ண முடியலையாம். பாவமுங்க வெங்கட் . திடீர்னு இளசுங்க இவர் ஏரியால கைவெச்சதும் டென்சன் ஆயிட்டார். ஆனா நிஜமாவே வேலை செய்யர வசீகரன் , சிவராஜ் எல்லா சும்மா இருகாங்க குறைக்குடம்......

நம்ம முருகன் கொஞ்சம் ஓவர்...

சுஜாதானு பேர் செல்லி கூப்பிடமாட்டார், வாத்தியார்னுதான் கூப்பிடுவார்) இப்ப தமிழ் நாட்டிலே கூட்டனி சீஸ்சன் அதனால் திடீர்னு.
மன்னவனும் நீயோ! வள நாடும் உனதோ ! உன்னை அறிந்தோ யாம் தமிழை ஓதினோம் எம்மை விரைந்தேற்றுக்கொள்ளாத வேந்துண்டோ அப்படின்னு முருகு வெங்கட் கிட்ட ஒட்டிகிட்டருங்கோ . வெங்கட்டும் விரந்தேற்றுகிட்டாருங்கோ.

இவர்கள் ஒரு technique வைத்து உள்ளார்கள் தங்கள் எழுதியதை யாராவது படிக்க வேண்டும் என்றால் அதில் சுஜாதா பற்றி ஒரு வரி இருக்க வேண்டும். இரா.மு புஸ்தகம் முன்னுரையில வாத்திக்கு ஒரு போற்றி, இப்ப அமுதசுரபினு ஒரு பத்திரிக்கை, அதுல சுஜாதா எழுதிய ஒன் லைனர் எல்லாம் quote பண்ணி குடத்தை உடைச்சிப்புட்டாறு.

இந்தபக்கம் பாத்தா ழ ல புலம்பல்:

என்ன உழச்சாலும் ப்ரயோசனம் இல்லையாம் . ஜெயராதா அம்மையார் ஃபீலிங் . சிவக்குமார் சைட் சரி பண்றார் ஐ சைட் இல்லீங்கோ வெப்சைட்.

எது எப்படியோ ழ-கணினிக்கு இவர்களால் இலவச விளம்பரம் கிடைத்துவிட்டது. அவர்களுக்கு ழ- குழுவினர் என்ன கைமாறு செய்ய
போகிரார்கள் ? அடுத்த முறை இவங்க எல்லாருக்கும் பட்டம் கொடுக்கறேன்.

அப்பறம் இன்னோரு சேதி ...

மொசிலானு ஒரு ப்ரௌசருங்கோ அதல ஒரு 5000 வார்த்தையை தமிழ்ல மொழிபெயர்தாங்கலாம் . அப்பறம் வட இந்தியால இருந்து ஓப்பன் ஆஃபீந... கடனுக்கு வாங்கிகிட்டு தமிழை தான் தான் வளக்கரதா சிலர் பெருமை பட்டுக்கறாங்கலாம் இன்னொரு குழுல பேசிகிட்டாங்க. இது ஊர்வம்பு இல்லங்க பட்டி மன்றம்

போதுமான மேட்டர் இருக்கு இனி தமிழை வளர்பது யார் அப்படினு பட்டிமன்றம் ஆரப்பிக்கலாம்னு தோன்ச்சி

நடுவர் டைனோ

அயல்நாட்டில் வாழ் தமிழர்களே அப்படிங்கற அணியில் 3 பேருங்க

1. வெங்கட் , முகுந்த், திடீர் வருகை - இரா முருகன்.

தமிழக தமிழர்களே என்று அறிவிக்க

1. ஜெயராதா, சிவக்குமார் , மன்மதன் மூனுபேர் இருகாங்க

டிஜ்ஜிடல் காமிரா, ரன்னிங் கமண்டரி உதவி - பத்ரி

டைனோ : அவையோரே ஆன்றோரே குழுவில் பங்கேற்பவர்களே , குழுவை அமைதியாக கவனிப்பவர்களே, குழுவில் தூங்கிகொண்டிருப்பவர்களே உங்கள் அனைவருக்கும் தாய்தமிழின் தலைமகனாம் டைனோவின் முதல் வணக்கம்.

(இரண்டு முறை படிக்கவும் - கவிதை)
இணையத்தில் தமிழ் வளருதுங்கோ நல்லா வளருதுங்கோ
குடுமி புடி சண்டை எல்லாம் நடக்குதுங்கோ நல்லா நடக்குதுங்கோ
ஆனா இதை எல்லாம் நல்லபடியா வளக்கறது யாருங்கோ அது யாருங்கோ

இதை கண்டுபிடிக்க ஒரு விவாதம் நடத்தலாம் அப்படின்னு மரத்தடி ல உக்காந்து முடிவெடுத்தோமுங்க. குழுக்கல்ல இருக்க எல்லா அஞ்சலையும் படிச்சதுல குழுவுல நிறைய வேற நாட்டு தமிழருங்க இருக்கறது தெரிஞ்சதுங்க. மொத்தில் தமிழை வளக்கறது நானுங்கனு அடிச்சி பேச வெங்கட்ட கூப்படறேன்.

வெங்கட்: நடுவர் அவர்களே ! நீதி தேவதையின் துளாக்கோளை கையில் ஏந்திக்கொண்டிரும் கோமகனே தமிழ் தாயின் தலைமகனே வணக்கம் !
கடந்த ஐந்து வருடங்களாக இதுவரை தமிழ் கூறும் நல்லுகுக்கு 51245 மின்னஞ்சல்கள் அனுப்பி இருக்கிறேன். 73 கட்டூரைகள் எழுதி இருக்கிறேன். இரண்டு எப்படி ஆவணம் தயாரித்திருக்கிரேன். 73498 பதில் அஞ்சல் போட்டிருகிறேன் அதில் 67223 சண்டை 6275 சமாதானம். ஒரு தமிழ் இணைய தளத்தை ஆங்கிலத்தில் நடத்திக்கொண்டிருக்கிறேன். அதில் காணாமல் போன தலைப்புகள் உட்பட இதுவரை 9845 தலைப்புகளில் கட்டுரை எழுதி இருக்கிறேன். 1563 வலைப்பூ கட்டூரை எழுதி சாதனை படைத்திருக்கிறேன்.

டைனோ(நடுவர்) : பெரிய சாதனை இதெல்லாம் தமிழ் மக்களூக்கு புரிந்ததா

வெங்கட் : அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை பென்குயினுக்கு புரியும். இதற்கெல்லாம் மேல் என் அறிவை சிலர் திருடிவிட்டார்கள் இதையும் உங்களிடம் முறையிட்டு நீதி கேட்க வந்திருக்கிறேன். நடுவரவர்களே. மனுநீதி சோழனாய் நின்று எனக்கு நீதிவழங்குங்கள். என்னை ஏமாற்றி என் அறிவஒ நல்லிரவில் திருடியவர்களுக்கு பாடம் புகட்டுங்கள் your honour பாடம் புகட்டுங்கள்

டைனோ: சரியான புள்ளிவிவரங்களோடு வெங்கட் அவர்கள் விளக்கி இருக்கிறார். நன்றி வெங்கட் . வெங்கடின் தமிழ் சேவையைக்கண்டு வியந்து நிற்கும் எதிர் அனியினரே இனி நீங்கள் காலி. பெண்புலியே வருக வெங்கட்டுகு சிறந்த பதில் தருக என ஜெயராதாவை அழைக்கிறேன்

ஜெயராதா : ஆன்றவிந்தடங்கிய கொள்கை சான்றான்மையால் முறை கொடாது தீர்ப்பு வழங்க வீற்றிருக்கும் நடுவரவர்களே அவைக்கண் வீற்றிருக்கும் நல்லோரே வல்லோரே உங்கள் அனைவருக்கும் தமிழ் நெஞ்சத்தின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். ஐயா மடலாடும் குழுக்கலில் பங்கு பெற எனக்கு நேரம் இல்லை. மன்னிக்கவும். என் சார்பாக எங்கள் குழுவில் அங்கம் வகிக்கும் சிவக்குமார் பேசுவார். நன்றி வணக்கம்

டைனோ : அற்புதம் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் வெங்கட்டின் அஞ்சல்களை அனைத்தும் வெட்டி வேலை என்பதை ஒரு வரியில் சொல்லாமல் சொல்லிச்சென்றுவிட்டார் அடுத்து முருகன். கவிஞ்ஞரே வருக நல்வாக்கு தருக.. தமிழகத்தில் இருந்தாலும் சுவிசர் லாந்தில் இருந்தாலும் நீங்கள் பேச்சால் அனுபவத்தால் அயல் நாட்டு தமிழரே!!! வருக ராயரே வருக!!!

முருகன் : அமுத சுரபியை குப்பையில் போட்டாலும் அதுவும் சுஜாதார்பணம் என்று வாழ்ந்தவன் நான் . என் முழ நீள கவிதைகளை மக்கள் மனங்களில் பதிப்பித்தேன் . சமுதாயம் விழிக்க மரத்தடிக்கு சென்றேன், அப்போதும் சரிவரவில்லை ராயர் க்ளப்புக்கு போனேன் கூட்டம் கூட்டி கவிதை சொல்லிப்பார்தேன் யாருக்கும் புரியவில்லை, என் தாய் தமிழின் ஆழம். கடைசியில் சுஜாதா என்னை உலகுக்கு காட்டினார்.. விட்டுவைத்தேனா அவரை அவரை க்ளப்புக்கு அழைத்தேன் வரவில்லை இனி ஒரு பெக்கோடு வாழ முடிவெடுத்து விட்டேன். வெங்கட் அவர்களே கைத்தாங்கலாக என்னை என் இருக்கைக்கு அழைத்து செல்லுங்கள் அமர்ந்துகொண்டே க்ளபில் தமிழ் வளர்கிறேன் வாழ்க தமிழ் வாழ்க தமிழ்

டைனோ : உணர்சி பூர்வமாக பேசிவிட்டார் இதற்கு மேல் தமிழ் வளர்க முயன்றவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது. இவருக்கு எப்படி சிவக்குமார் பதில் தரபோகிறார்.

சிவக்குமார் : அனைவருக்கும் வணக்கம். I strongly believe that doing work on applications for Windows platform is helping Microsoft to
prolong their monopoly a bit longer. அதனால ஒரு டீம் ஆரம்பிச்சி லினக்ந... தமிழ்ல செய்யறோம். ஓசில சாஃட்வேர் கிடைக்குது . தமிழ்ல இருக்குது. இதுல மாணவர்களை ஈடுபடுத்தி இருக்கோம் அவங்களூம் தமிழ்ல எல்லாம் செய்யறாங்க. தமிழக மாணவர்களை தமிழ் ல வேலை செய்ய வைக்கதை பெரிய சாதனையா கருதறோம்.

டைனோ : சபாஷ் ஓஹோன்னானாம். நல்ல முயற்சி அடுத்து முகுந்த் தமிழகத்திற்கு வந்து தமிழ் வளர்துவிட்டு செல்பவர் இவர் வெளிநாட்டுக்கு சென்று எப்படி தமிழ் வளர்தார் என்று விளக்க வந்திருக்கிறார்.

முகுந்த் : நடுவரவர்களே இலக்கிய சிந்தனை வளம் பெற்ற பெரியோரே (உங்களூக்கு கம்யூட்டர் சொல்லித்தரேன் உங்க பத்திரிகையில் என்னை கண்டுகோங்க - மெதுவாக). வணக்கம். கணினியில் தமிழ் வளர்க தமிழகத்திலுருந்து பல முறை முயன்றேன் முடியவில்லை. அயல்நாட்டில் சென்று தமிழ் வளர்க முடிவு செய்தேன் . சிவக்குமார் தமிழ் மாணவர்களூக்கு தமிழ் சொல்லித்தந்தார் நானோ வட இந்தியர்களுக்கு தமிழ் சொல்லித்தந்தேன் அவர்கள் மாணவர்களை வேலை வாங்கினார்கள் நாங்களோ ஒரு கல்லூரிக்கு சென்று 600 மாணவர்களூக்கு உட்கார வைத்து சொல்லிக்கொடுத்தோம் இப்போது சொல்லுங்கள். யார் சிறந்தவர் என்று. 5000 சரங்களை மொழிபெயர்த நானா அல்லது 80,000 சரங்களை மொழிபெயர்த்த அவரா.

டைனோ : சரியான போட்டி - இந்த கேள்விக்கு விடை செல்ல என்னால் முடியவில்லை திண்ணையில் தாம்பூலம் தரதா வெங்கட் சொன்னதை நம்பி இந்த பட்டிமன்றத்தை ஆரம்பிச்சேன் இப்படி ஆயிடுச்சி. இதற்கு விடை சொல்ல மன்மதன் அவர்களை அழைக்கிறேன்.

மன்மதன் : Tamizha have translated Mozilla and is translating many other utilities/applications. Zha have translated KDE gui, OpenOffice (better
glossarys than the bharateeyaoo team), is translating Fedora, and integrating all into a packaged Tamil Dekstop OS with Office/Multimedia
tools. அதனால் தமிழக தமிழர்கள் தான் சிறந்தவர்கள் அப்படினு தீர்பு சொல்லும்படி நடுவர் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

டைனோ மூட்டையை கட்டி ரெடியா நீங்க வளத்த தமிழில் நான் ரொம்ப நொந்து போய்டேன் ஆள விடுங்க ஜீட் ..........

டைனோ என்ற நடுவரை கடந்த 3 நாட்களாக காணவில்லை .. முக மூடி அணிந்திருப்பார் கண்டுபிடித்து தருபவருக்கு 1000 பொற்காசுகள் இலவசமாக தரப்படும்.

Read More...

Wednesday, February 11, 2004

டைப்ரைட்டூன் - 4

typetoonmn

Read More...

Tuesday, February 10, 2004

அரசியல்டூன் !

அரசு ஊழியர்கள் strike அன்றும் இன்றும்.
strikeb
strikea

Read More...

இட்லிவடை கவிதை போட்டி - 2 ( எழில் )

From: Ezhil Arasu To: idlyvadai@rediffmail.com
Subject: idlyvadai kavithai pooti -
Date: Mon, 10 Feb 2004 10:34:12 IST


இன்றைக்கு போட்டிக்கு வந்த புது கவிதை உயிர் எழுத்துக்கள் கொண்டே எழுதப்பட்டது. - (ஆர்)













-- எழில்

Read More...

இட்லிவடை கதை போட்டி - 1 ( க்ருபா )

From: S Krupa Shankar
To: idlyvadai@rediffmail.com
Subject: idlyvadai kathai poatti - suppu sariththiram
Date: Mon, 09 Feb 2004 18:29:51 IST



சுப்பு சரித்திரம்
இரண்டு இட்லிகள் சாப்பிட்டு முடித்துவிட்ட சுப்பனிடம் "சுப்பா....சாப்ட,
காசு குடுக்கவே இல்லையே?" என்று டார் கடைக்காரர்.

"என் பேரு சுப்பன் இல்லையே" என்று சொல்லிவிட்டு, நடையைக் கட்டினான்
இன்றுமுதல் பெயரை "சுப்பு" மாற்றிவைத்துக்கொண்டு விட்ட சுப்பன் எனப்பட்ட
சுப்பு.

க்ருபா

Read More...

கிரிக்கெட்டூன் !

indianteam

Read More...

Monday, February 09, 2004

டைப்ரைட்டூன் - 3

typetoongi

Read More...

Friday, February 06, 2004

டைப்ரைட்டூன் - 2

typetoonnh

Read More...

Thursday, February 05, 2004

இட்லிவடை கவிதை போட்டி - 1

எனக்கு திரு.பிச்சாண்டி ஈ-மெயிலில் ஒரு கவிதையை அனுப்பியுள்ளார்.
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் programme
பொன்மணி உன் link செளக்யமா ?
என் link செளக்யமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் statement கொட்டுது.
அதை compile செய்கையில் syntax முட்டுது!
உண்டான bug யாவும்
தன்னாலே solve ஆகும்
மாயம் என்ன பொன்மானே பொன்மானே
என்ன bug ஆன போதும்
என் code தாங்கி கொள்ளும்
உந்தன் code தாங்காது செந்தேனே
TAM standard என்னவென்று சொல்லாமல்
ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் virus உன்னை தாக்கும்
என்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது
மனிதர் review பண்ண இது மனித code அல்ல
அதையும் தாண்டி கொடுமையானது
அபிராமியே mail அனுப்பு சாமியே நான் தானே தெரியுமா
சிவகாமியே C-யில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா

Read More...

Wednesday, February 04, 2004

டைப்ரைட்டூன் - 1

எழுதுவதை விட இது சுலபம் அதனால் ...
typetoonmw

Read More...

Tuesday, February 03, 2004

இட்லிவடை கதை கவிதை போட்டி !

மரத்தடியில் குளிர்க்கால கதை, கவிதை போட்டி பற்றி தெரிந்திருக்கும்.
இதைப்போல் 'இட்லிவடை' கதை,கவிதை போட்டி.
அனைவருக்கும் வணக்கம்!.
நீங்கள் சுமாரான கதை, கவிதை எழுதுவீர்களா ?
வாருங்கள் போட்டிக்கு. முதல் பரிசு: ஹீ. இரண்டாம் பரிசு: ஹீஹீ
போட்டிக்கான விதிமுறைகள்:
1. படைப்புகள் உயிர் உள்ளதாக இருக்க வேண்டும்.
2. மற்ற போட்டிக்கு அனுப்பி திரும்பி வந்தவைகளாக இருந்தால் பரவாயில்லை.
3. கதைகள் இரண்டு அல்லது மூன்று வரிக்கு மிகாமல் இருக்க வேண்டும் ( சுமார் 15-20 வார்த்தைகள்).
4. ஒருவர் ஒன்றுக்கு மேல் கதை, கவிதை எழுதலாம்.
5. மற்றவர்களின் கதை, கவிதைகள் ? - no problem.
6. பெண்களுக்கான சிறப்பு சலுகை:
கதை, கவிதை எழுதத்தெரியவில்லை என்றால் பரவாயில்லை, மங்கையர் மலருக்கு எழுதும் (திடீர் விருந்தாளி வந்தால்...) சமையல் குறிப்பை கூட அனுப்பலாம்.
7. நடுவர் கிடையாது. போட்டிக்கு வரும் அனைத்தும் இட்லிவடையில் பிரசுரம் ஆகும்.
8. போட்டிக்கான கடைசி நாள் குளிர்காலம் முடியும் நாள்.

Read More...

Monday, February 02, 2004

ழ-கணினி அறிமுக விழா!

ழ-கணினி அறிமுக விழா அழைப்பிதழ் உங்களுக்கு ஏதாவது ஒரு இணையக் குழு மூலமாக
வந்தடைந்திருக்கும். அல்லது திரு சிவகுமார், வெங்கட் குடுமிபிடி சண்டையை பார்த்து
ரசித்திருப்பீர்கள்.

நேற்று இந்த ழ-கணினி விழாவிற்கு சென்றிருந்தேன். தமிழ்-PC குழுவினர்,
திரு சுஜாதா, மற்றும் பல மாணவர்கள் வந்திருந்தார்கள். இதைப்பற்றிய ஒரு தொகுப்பு
பத்ரியின் வலைப்பதிவில். (ஏம்பா லேட்டு?)

லினக்ஸ் என்னும் OS மேல் ஒரு சிறிய தமிழ் அடுக்கை (Layer) தந்துள்ளார்கள்.
ஆங்கிலத்திலுள்ள கணிப்பொறி சொற்களை ( சுமார் 70,000) தமிழ்(ழை ?)
படுத்தியிருக்கிறார்கள்.
இந்த கணினியில் எல்லாமே தமிழ்!. இதைக்கொண்டு கிராமத்திலுள்ள ஒரு குப்பன்/சுப்பன் கூட
அமெரிக்காவிலுள்ள தன் மகனுக்கு மின் அஞ்சல் அனுப்பலாம்.
(Font, Encoding பிரச்சனை இருந்தால் தொலைபேசியில் பேசுவது உத்தமம்).

ழ-கணினி சின்னம் (logo) பார்ப்பதர்க்கு விகடன் தாத்தா போல இருக்கிறார்.
zhalogo
கையில் ஒரு குடை, தோளில் ஒரு துண்டு.


ழ-கணினி complan குடித்த குழந்தையைப்போல் "நான் வளர்கிறேன் மம்மி" என்கிறது
( நன்றி லயோலா, எம் ஓ பி வைஷ்ணவா கல்லூரி மாணவ மாணவியர்)
ழ-கணினி (சின்னம் போல்) இன்னும் முதிர்ச்சி(mature) அடையவேண்டும். அதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். காத்திருப்போம்!.

நிகழ்ச்சியில் தமிழ் கூறும் நல்லுலகம் fonts, encoding பற்றி சந்தேகங்கள்
கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.
சிலர் Java programமை தமிழில் செய்யலாமா ? என்றார்கள்.
ஒருவர் "CC" என்பதற்கு கரிநகல் என்று அழகாக தமிழ்ப்படுத்தலாம் என்றார்.

தமிழ் ஒரு கச்சிதமான (concise) மொழி. இதில் கஷ்டப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. அல்லது பெரியார் சொன்னது போல் தமிழ்ர்
காட்டுமிராண்டி. தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்பது உண்மையாகிவிடும்.

ஒருவர் முன்னும் பின்னும் பெர்முடா போட்டுக்கொண்டு digital cameraவில்
பதிவு செய்து கொண்டிருந்தார் ( சார் நீங்கள் எந்த பத்திரிக்கை ?).

நிகழ்ச்சியில் பலபேர் இந்தியா ஆஸ்திரேலியா score என்ன என்று கேட்டுகொண்டிருந்தார்கள்!

Read More...