பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 14, 2003

தற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.

முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளின் விளைவாக,
தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. விவசாயிகள் ஆனந்தக் கண்ணீர்
வடிப்பதால் ஏரிகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து வருகிறது.
மளிகைக் கடைகளில் மளிகைப் பொருட்கள் கிடைக்கின்றன. ஜவுளிக்கடைகளில் துணிகள் கிடைக்கின்றன.
அவ்வளவு ஏன் ? நகைக் கடைகளில் கூட நகைகள் கிடைக்கின்றன. மக்களுக்குத்
தேவையான அனைத்து விதிப் பொருட்கள்ளும் அந்தந்த கடைகளிலேயே கிடைக்க, அரசு ஆவன
செய்துள்ளது பாராட்டுக்குரியது.சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய
விருபினால், சபாநாயகர் உடனே அனுமதி வழங்குகிறார். அமைச்சர்களும் முதல்வர் பேச்சை ஆரம்பித்து
முடிக்கும் வரை ஓய்வு ஒழிச்சலின்றி நாள் முழுவதும் பொறுமையாக பெஞ்சைத் தட்டிக் கொண்டே
சட்டமன்றப் பணி ஆற்றுகின்றனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முகங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறதே -
என்ற கொதிப்புணர்வை கட்டுப்படுத்திக் கொண்டு அவர்கள் முன்னிலையில் முதல்வர் அமர்ந்துயிருப்பது
பாராட்டுக்குரியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்தால்தான் உட்கார வைக்கப்படுகிறார்கள்.
அவர்கள் பேச ஆரம்பித்த உடனேயே, குறுக்கிட்டு பதில் சொல்லி, அவர்களது சட்டமன்ற பணிச் சுமையை
முதல்வர் வெகுவாக குறைத்திவிடுகிறார். நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் கூட கர்நாடக
முதல்வரைத் தவிர, வேறு எந்த மாநில முதல்வர் மீதும் ஜெயலலிதா கோபப்படவில்லை என்பது குறிப்பிடத்
தகுந்தது. முதல்வர் நினைத்திருந்தால் தமிழகத்தில் நடை பெறும் கொலை கொள்ளைகளிக்கு,
மத்திய அரசுதான் காரணம் என்று ஆணித்தரமாகக் கூறியிருக்க முடியும். ஆனால், எனோ அவர்
அப்படிக் கூறவில்லை. மெத்தத்தில் இப்படி ஒரு சட்டசபை இந்தியாவில் இருக்க முடியுமா என்ற ஆச்சரியமே
எற்படுகிறது.
நன்றி - துக்ளக்

0 Comments: