பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 14, 2003

தற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.

முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளின் விளைவாக,
தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. விவசாயிகள் ஆனந்தக் கண்ணீர்
வடிப்பதால் ஏரிகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து வருகிறது.
மளிகைக் கடைகளில் மளிகைப் பொருட்கள் கிடைக்கின்றன. ஜவுளிக்கடைகளில் துணிகள் கிடைக்கின்றன.
அவ்வளவு ஏன் ? நகைக் கடைகளில் கூட நகைகள் கிடைக்கின்றன. மக்களுக்குத்
தேவையான அனைத்து விதிப் பொருட்கள்ளும் அந்தந்த கடைகளிலேயே கிடைக்க, அரசு ஆவன
செய்துள்ளது பாராட்டுக்குரியது.சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய
விருபினால், சபாநாயகர் உடனே அனுமதி வழங்குகிறார். அமைச்சர்களும் முதல்வர் பேச்சை ஆரம்பித்து
முடிக்கும் வரை ஓய்வு ஒழிச்சலின்றி நாள் முழுவதும் பொறுமையாக பெஞ்சைத் தட்டிக் கொண்டே
சட்டமன்றப் பணி ஆற்றுகின்றனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முகங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறதே -
என்ற கொதிப்புணர்வை கட்டுப்படுத்திக் கொண்டு அவர்கள் முன்னிலையில் முதல்வர் அமர்ந்துயிருப்பது
பாராட்டுக்குரியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்தால்தான் உட்கார வைக்கப்படுகிறார்கள்.
அவர்கள் பேச ஆரம்பித்த உடனேயே, குறுக்கிட்டு பதில் சொல்லி, அவர்களது சட்டமன்ற பணிச் சுமையை
முதல்வர் வெகுவாக குறைத்திவிடுகிறார். நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் கூட கர்நாடக
முதல்வரைத் தவிர, வேறு எந்த மாநில முதல்வர் மீதும் ஜெயலலிதா கோபப்படவில்லை என்பது குறிப்பிடத்
தகுந்தது. முதல்வர் நினைத்திருந்தால் தமிழகத்தில் நடை பெறும் கொலை கொள்ளைகளிக்கு,
மத்திய அரசுதான் காரணம் என்று ஆணித்தரமாகக் கூறியிருக்க முடியும். ஆனால், எனோ அவர்
அப்படிக் கூறவில்லை. மெத்தத்தில் இப்படி ஒரு சட்டசபை இந்தியாவில் இருக்க முடியுமா என்ற ஆச்சரியமே
எற்படுகிறது.
நன்றி - துக்ளக்

Read More...

Monday, November 10, 2003

இணைய(யாத?) குழுக்கள்

மரத்(அடி)தடி என்று முன்பு நான் எழுதிய ஒரு பகுதியை பார்த்து. "நீங்கள் ரொம்ப
மிகைப்படுத்தி (exaggerate) எழுதுகிறிர்கள் என்று சிலர் எனக்கு தனிமடல் அனுப்பினார்கள்.
தற்பொது அங்கு நடக்கும் விவாதங்களும், விமர்சனங்களும் பார்த்தால் நான் எழுதியது கொஞ்சம்
கம்மி என்று குழந்தைக்கு கூட புரியும்.
முதல் சில மடல்களில் எழுதும் போது அண்ணா, தம்பி, அக்கா, ஏன் மாமி என்று கூட
கூப்பிட்டு கொள்கிறார்கள். பிறகு எங்கடா உன் குடுமி என்று அடித்துக் கொள்கிறார்கள்.
தன் வீட்டுக்குள் அடித்துக் கொள்ள ஆள் இல்லாமல் பக்கத்து வீட்டில் உள்ளவர்களையும்
கூப்பிட்டு கொள்கிறார்கள்.
சிறு பிள்ளைதனமாக அடித்து கொண்டு இப்போது கோர்ட் படி ஏரவும் துணிந்துவிட்டார்கள்.
இவர்கள் எழுதிய மடல்களை அவர்களே ஒரு வருடம், ஏன் ஒரு மாசம் கழித்து படித்தால்
அவர்களுக்கே நிச்சியமாக சிரிப்பு வரும்.
இணைய குழுக்களில் கருத்து வேறுபாடு வருவதர்க்கு எனக்கு தெரிந்த காரணங்கள் இங்கு
குடுத்திருக்கிறேன். ( இது தமிழருக்கே உரித்த குணம் என்று ஜகா வாங்க வேண்டாம்).
1. சகிப்புத் தன்மை 0.01% இருப்பதனால்.
2. வார்த்தை பிரயேகம் கவிதைக்கு மட்டும் என்று என்னுவதால்.
3. நகைச்சுவை உணர்வு இல்லாதது.
4. "Waiting to settle scores" மனப்பான்மை.
5. வேறுபட்ட வயதினர், மாறுபட்ட கருத்துக்கள், எதையும் seriousஆக எடுத்துக்கொள்ளும்
மனப்பான்மை.

ரோட்டில் இருவர் அடித்துக் கொண்டால் கூட்டம் கூடும், அதே போல்தான் இந்த குழுக்களிலும்
கூட்டம் சேரும். வேடிக்கை பார்க்க, வெண்பா எழுத இல்லை.

கடைசியாக மூல காரணம், எல்லோருக்கும் இருக்கும் EGO

Read More...

Friday, November 07, 2003

மாஜி சண்டியர்

எல்லோரும் டீவியில் மிட் நைட் மசாலா பார்க்கையில் எனக்கு Numerology, Gemology, Astrology,Vaasthu,Horoscope, Palmistry போன்ற காமெடி நிகழ்ச்சிகளை பார்ப்பதில் ஆர்வம்.
இதில் ஓயாது கஷ்டங்கள் - பரிகாரங்கள்.
எப்போழுதும் ஆங்கில பெயரில் இரண்டு "E" அல்லது இரண்டு "A" சேர்த்துக்கொள்ள சொல்வார்கள்.
சில சமயம் பெரிய பெயரை சுருக்கிவிடுவார்கள், சின்ன பெயரை பெரிதாக்கி விடுவார்கள்.
கட்டாயம் பவழ மோதிரம் ( அவர்கள் கடையில் ) போட்டுக்கொள்ள சொல்வார்கள்.
இவ்வாறு மாற்றிய பெயரை தினமும் காலை பல்தேச்சி, குளித்துவிட்டு 108 முறை எழுதினால், ஒன்று விட்ட சித்தப்பாவுக்கு சகல செளபாக்கியங்களும் கிட்டும்.
சிரிக்காதீர்கள் - இவ்வாறு பெயர் மாற்றியவர்களின் பட்டியல் இங்கே...

கமல் தன்னுடைய படத்துக்கு சண்டியர் என்று பெயர் வைத்ததால் கஷ்டபட்டது எல்லோருக்கும் தெரிந்ததே. என்னை கேட்டால் சண்டியர் (SonDear) என்ற பெயரை டியர்சண் (DearSon) என்று வைத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும்!.

Read More...

Monday, November 03, 2003

நான் யார் ?

நான் யார் என்பதை பற்றி நிறைய குழப்பங்கள் இருப்பதால் அது தொடரட்டும் என்று விட்டு விட்டேன்.
சிலர் என்னை நீதானே குப்புசாமி என்று கூறி நான் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சித்தார்கள்.
பலர் என்னை "பாயிஸ்"(Boys) படத்தில் வரும் கெட்ட வார்த்தையை சொல்லி திட்டி உசிப்பேத்தினார்கள்,
சிலர் ஒரு clue தரவேண்டும் என்று கெஞ்சினார்கள்.
ஒருவர் இட்லியையும், எனது தமிழையும் இணைத்து நான் சுப்பிரமண்ணிய சாமி என்றார்.
தழிழர்களுக்கு கற்பனை வளம் அதிகம் என்பதை ஒத்துக்கொள்வதை தவிர வேறுவழி இல்லை.
ஈ-மெயில் அனுப்பிய அனைவருக்கும் உங்கள் விட்டில் உள்ள மழைநீர் சேமிப்பு தொட்டி ரொம்பி வழியுமாறு இறைவனை பிராத்திக்கிரேன்.

Read More...