பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 29, 2003

Blog என்றால் என்ன ?

Blog என்றால் என்ன ? இணையத்தில் தேடுகையில்.
"Blog -- (weB LOG) - A blog is basically a journal that is available on the web.
The activity of updating a blog is "blogging" and someone who keeps a blog is a "blogger."
Blogs are typically updated daily using software that allows people with little or no technical background to
update and maintain the blog.
Postings on a blog are almost always arranged in cronological order with the most recent additions featured
most prominantly."

தமிழில் இதை எப்படி அழைக்கலாம் என்று யோசிப்பதற்குள் நிறைய வார்த்தைகள் வந்துவிட்டது
- வலைக்குறிப்புகள், வலைப்பூக்கள், வலைப்பதிவுகள்.
என்னை கேட்டால் வலைகிறுக்கல் என்பேன்; Blogging - கிறுக்கிங் ( கிங்-ராஜா என்று தவறாக நினைத்துக்
கொள்ள வேண்டாம் - Blogging - கிருக்ing என்பதைதான் அப்படி குறிப்பிட்டேன்!); Blogger - கிறுக்கன்.

Read More...

Tuesday, October 28, 2003

இன்று எதுவும் எழுதுவதாக இல்லை

இன்று எதுவும் எழுதுவதாக இல்லை
cartoon
நன்றி ஆனந்த விகடன்

Read More...

Monday, October 27, 2003

மரத்(அடி)தடி

மரத்தடி என்று சொன்னவுடன் என் நினைவுக்கு வருவது சினிமாவில் காட்டப்படும்
வெட்டி பஞ்சாயத்துதான்.
இணையத்திலும் ஒரு(சில) ( ஒருசில ?) மரத்(அடி)தடி உண்டு!. இங்கு பல முக்கியமான விவாதங்கள் நடைபெரும்.
இந்த மரத்தடியில் 150+ உருப்பினர்கள் உண்டு ஆனால் 10 பேர்தான் பேசிக்கொண்டு இருப்பார்கள்!.
ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வார்கள், சிலர் பங்குகொள்வர்கள், பலர் வேடிக்கை பார்பார்கள்.
ஒரு சாம்பிள் - (முழுவதும் கற்பனை - நிஜமானால் நான் பொருப்பல்ல. )
நபர்1: கம்பராமாயணத்தை பற்றி discuss பண்ணலாமா ?
நபர்2: கம்பராமாயணம் பாடல்கள் சிலவற்றை தருவார்.
நபர்3: கம்பராமாயணமும் சிலப்பதிகாரமும் என்ற தலைப்பில் தகவல் தருவார்.
நபர்4: கம்பரும் இளங்கோவடிகளும் ஒருவர் தான் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்வார்.
நபர்1: கம்பர் வேறு இளங்கோ வேறு ( நான் நேற்றுதான் அவருடன் காப்பி சாப்பிட்டேன் என்பது போல் பேசுவார்)
நபர்2: கம்பராமாயணத்தில் "அது" என்று ஒரு இடத்திலும், சிலப்பதிகாரத்திலும் ஒரு
இடத்தில் "அது" வருவதால் இளங்கோவும் கம்பரும் ஒருவர்தான்.
நபர்4: நன்றி நபர்2.
நபர்5: நான் தமிழிலே weak, இருந்தாலும் எனக்கு எழுதவேண்டும் என்று தோன்றியது ( வீட்டில் வேறு வேலை கிடையாது) ...
நபர்1: நான் ராயர் காப்பி கிளப்பிர்க்கு ஒரு cc செய்கிறேன் ( அங்கு யாராவது வேலை இல்லாமல் இருக்கிரார்களா என்று பார்த்துவிடலாம்).
ராயர்நபர்1: வாத்தியார்(சுஜாதா) ஒருமுறை விகடனில் இதை பற்றி எழுதியதாக ஞாபகம்..
நபர்4: நபர்1 இப்பவது ஒத்துக்கொள்கிறாரா ?
நபர்1: Good Joke - இது போன்ற ஆசாமிகளை எங்கள் ஊரில் மக்கு என்று அழைப்பார்கள்.
நபர்4: போடா வெண்ண
நபர்6: Netiquette பற்றி விவரிப்பார். ( bore அடிக்குது இந்த topic, வேறபேசுங்கப்பா)
நபர்X: Boys திரைப்படம் நேற்று ரிலீஸ் - யாராவது பார்த்தீர்களா ? ( படம் "A" என்று கேள்வி )

Read More...

சண்டை நமது குணம்

"Vijay fan murdered in row over banners"
இந்த செய்தி நமக்கு புதிது அல்ல. சிவாஜி-எம்.ஜி.ர், கமல்-ரஜினி
இப்போ அஜித்-விஜய்.
நானா-நீயா என்பது தமிழர்களின் பிறவி குணம். ஜெயமொகன் - கலைஞர்.
மற்றும் பலர். இங்கு யாரெனும் விடுபட்டு இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்.
இவ்வளவு சண்டை இல்லாவிட்டால் நமக்கு - TSCII(1.6,1.7), TAM, TAB, Anjal, Mylai, Adhawin,
மற்றும் பல fonts கிடைத்திருக்குமா ?
எங்கே கிளம்பிட்டீங்க சண்டை போடவா ?

Read More...

(இனிமேல்) அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இந்த Blogகுக்கு ஏன் இட்லி வடை என்று பெயர் வைத்தேன் ?
தமிழர்கள் சாப்பாட்டு பிரியர்கள் - இட்லி வடை என்று பெயர் வைத்தால் கட்டாயம் இங்கு வருவார்கள்!

நான் யார் ?
இட்லி வடைக்குள் ஒளிந்து கொள்ள நான் சாம்பார் அல்ல - உங்களில் ஒருவன், உங்கள் நண்பன்,
உங்கள் பக்கத்து வீட்டுக்காரன் சில சமயம் உங்கள் மனசாட்சி.
(நான் யார் என்று சொன்னால், சட்னி ஆகிவிடுவது நிச்சயம்! அதனால் ....)

Read More...