Blog என்றால் என்ன ? இணையத்தில் தேடுகையில்.
"Blog -- (weB LOG) - A blog is basically a journal that is available on the web.
The activity of updating a blog is "blogging" and someone who keeps a blog is a "blogger."
Blogs are typically updated daily using software that allows people with little or no technical background to
update and maintain the blog.
Postings on a blog are almost always arranged in cronological order with the most recent additions featured
most prominantly."
தமிழில் இதை எப்படி அழைக்கலாம் என்று யோசிப்பதற்குள் நிறைய வார்த்தைகள் வந்துவிட்டது
- வலைக்குறிப்புகள், வலைப்பூக்கள், வலைப்பதிவுகள்.
என்னை கேட்டால் வலைகிறுக்கல் என்பேன்; Blogging - கிறுக்கிங் ( கிங்-ராஜா என்று தவறாக நினைத்துக்
கொள்ள வேண்டாம் - Blogging - கிருக்ing என்பதைதான் அப்படி குறிப்பிட்டேன்!); Blogger - கிறுக்கன்.
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Wednesday, October 29, 2003
Blog என்றால் என்ன ?
Posted by IdlyVadai at 10/29/2003 10:01:00 AM 2 comments
Tuesday, October 28, 2003
இன்று எதுவும் எழுதுவதாக இல்லை
இன்று எதுவும் எழுதுவதாக இல்லை
நன்றி ஆனந்த விகடன்
Posted by IdlyVadai at 10/28/2003 02:52:00 PM 0 comments
Monday, October 27, 2003
மரத்(அடி)தடி
மரத்தடி என்று சொன்னவுடன் என் நினைவுக்கு வருவது சினிமாவில் காட்டப்படும்
வெட்டி பஞ்சாயத்துதான்.
இணையத்திலும் ஒரு(சில) ( ஒருசில ?) மரத்(அடி)தடி உண்டு!. இங்கு பல முக்கியமான விவாதங்கள் நடைபெரும்.
இந்த மரத்தடியில் 150+ உருப்பினர்கள் உண்டு ஆனால் 10 பேர்தான் பேசிக்கொண்டு இருப்பார்கள்!.
ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வார்கள், சிலர் பங்குகொள்வர்கள், பலர் வேடிக்கை பார்பார்கள்.
ஒரு சாம்பிள் - (முழுவதும் கற்பனை - நிஜமானால் நான் பொருப்பல்ல. )
நபர்1: கம்பராமாயணத்தை பற்றி discuss பண்ணலாமா ?
நபர்2: கம்பராமாயணம் பாடல்கள் சிலவற்றை தருவார்.
நபர்3: கம்பராமாயணமும் சிலப்பதிகாரமும் என்ற தலைப்பில் தகவல் தருவார்.
நபர்4: கம்பரும் இளங்கோவடிகளும் ஒருவர் தான் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்வார்.
நபர்1: கம்பர் வேறு இளங்கோ வேறு ( நான் நேற்றுதான் அவருடன் காப்பி சாப்பிட்டேன் என்பது போல் பேசுவார்)
நபர்2: கம்பராமாயணத்தில் "அது" என்று ஒரு இடத்திலும், சிலப்பதிகாரத்திலும் ஒரு
இடத்தில் "அது" வருவதால் இளங்கோவும் கம்பரும் ஒருவர்தான்.
நபர்4: நன்றி நபர்2.
நபர்5: நான் தமிழிலே weak, இருந்தாலும் எனக்கு எழுதவேண்டும் என்று தோன்றியது ( வீட்டில் வேறு வேலை கிடையாது) ...
நபர்1: நான் ராயர் காப்பி கிளப்பிர்க்கு ஒரு cc செய்கிறேன் ( அங்கு யாராவது வேலை இல்லாமல் இருக்கிரார்களா என்று பார்த்துவிடலாம்).
ராயர்நபர்1: வாத்தியார்(சுஜாதா) ஒருமுறை விகடனில் இதை பற்றி எழுதியதாக ஞாபகம்..
நபர்4: நபர்1 இப்பவது ஒத்துக்கொள்கிறாரா ?
நபர்1: Good Joke - இது போன்ற ஆசாமிகளை எங்கள் ஊரில் மக்கு என்று அழைப்பார்கள்.
நபர்4: போடா வெண்ண
நபர்6: Netiquette பற்றி விவரிப்பார். ( bore அடிக்குது இந்த topic, வேறபேசுங்கப்பா)
நபர்X: Boys திரைப்படம் நேற்று ரிலீஸ் - யாராவது பார்த்தீர்களா ? ( படம் "A" என்று கேள்வி )
Posted by IdlyVadai at 10/27/2003 06:04:00 PM 0 comments
சண்டை நமது குணம்
"Vijay fan murdered in row over banners"
இந்த செய்தி நமக்கு புதிது அல்ல. சிவாஜி-எம்.ஜி.ர், கமல்-ரஜினி
இப்போ அஜித்-விஜய்.
நானா-நீயா என்பது தமிழர்களின் பிறவி குணம். ஜெயமொகன் - கலைஞர்.
மற்றும் பலர். இங்கு யாரெனும் விடுபட்டு இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்.
இவ்வளவு சண்டை இல்லாவிட்டால் நமக்கு - TSCII(1.6,1.7), TAM, TAB, Anjal, Mylai, Adhawin,
மற்றும் பல fonts கிடைத்திருக்குமா ?
எங்கே கிளம்பிட்டீங்க சண்டை போடவா ?
Posted by IdlyVadai at 10/27/2003 04:25:00 PM 2 comments
(இனிமேல்) அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்த Blogகுக்கு ஏன் இட்லி வடை என்று பெயர் வைத்தேன் ?
தமிழர்கள் சாப்பாட்டு பிரியர்கள் - இட்லி வடை என்று பெயர் வைத்தால் கட்டாயம் இங்கு வருவார்கள்!
நான் யார் ?
இட்லி வடைக்குள் ஒளிந்து கொள்ள நான் சாம்பார் அல்ல - உங்களில் ஒருவன், உங்கள் நண்பன்,
உங்கள் பக்கத்து வீட்டுக்காரன் சில சமயம் உங்கள் மனசாட்சி.
(நான் யார் என்று சொன்னால், சட்னி ஆகிவிடுவது நிச்சயம்! அதனால் ....)
Posted by IdlyVadai at 10/27/2003 12:30:00 PM