
சவுந்தர்யா ரஜினிகாந்தின் 3 க்குப் பிறகு நான் மிக ரசித்துப்பார்த்த தனுஷ் படம் வேலையில்லா பட்டதாரி.
வேலையில்லா பட்டதாரி படும் சிரமங்களையும், படித்த வேலைக்கே போகவேண்டும் என நினைக்கும் படித்தவர்களுக்கு இன்றிருக்கும் சிரமங்களையும் அருமையாக சொல்லி இருக்கிறார்கள். அத்துடன் அரசாங்க காண்ட்ராக்டுகளில் என்ன நடக்கிறது என்பதையும் சொல்லிச் சென்றிருக்கின்றனர் தனுஷ்
தயாரிப்பும் தனுஷ்தான். நடிப்பதற்கு சிரமப்பட்டதாகவே தெரியாத மிக இயல்பான நடிப்பு. கொஞ்சம்கூட அலட்டாத அதே சமயம் நம் வீடுகளில், நட்புகளில் நடக்கும் காமெடி என்பதால் சும்மா ஊதித்தள்ளுகிறார்.
வீட்டுல தண்டமாத்தான இருக்க எனச் சொல்லி அவருக்கு சொல்லப்படும் வேலைகளாக ஞாயிறு கறி வாங்கிவரச் சொல்வது, தம்பியின் வண்டியை துடைத்து வைக்க, இப்படியாக.
அவரின் அந்தக்கால சைக்கிள் மொபெட்டை வைத்துக்கொண்டு அவர் அடிக்கும் காமெடி
தம்பியுடன் ஒப்பிடும் அப்பாவிடம் சண்டைபோடும் இடத்தில் நடக்கும் காமெடிகள், அவனுக்கு மட்டும் ஹீரோ பேரு கார்த்திக்குனு வச்சீங்க, எனக்கு மட்டும் வில்லன் பேரு ரகுவரன்னுதான வச்சீங்க என சீரியஸாய் கேட்பதும் அடியாட்களிடம் அடி வாங்கிக்கொண்டு இருக்கும்போது அம்மா சரன்யா அப்பாவேற வீட்ல இல்லாத நேரத்துல இவனுக வந்திருக்காங்க எனச் சொன்னவுடன் ஏம்மா நீயெல்லாம் ஒரு அம்மாவா, அப்பா வீட்டுல இல்லைன்னு மொதல்லையே சொல்லக்கூடாதா எனச் சொல்லிவிட்டு பட்டையைக் கிளப்புவதும் என பல இடங்களில் காமெடியில் கலக்குகிறார்.
பின்னர் படித்த படிப்புக்கான வேலை கிடைப்பதும் அதில் ஒரு பெரிய ப்ராஜக்ட்டுக்கு அவரை பொறுப்பாக்குவதும் அதற்கு வரும் தடைகளை உடைத்து ஜெயிப்பதுமாக மிச்சப்பாதி படம்.
இசை அநிருத். ஒரு மாஸ் படத்துக்கான இசையை கலக்கலாக கொடுத்திருக்கிறார். பாடல்கள் எல்லாமே நன்றாய் இருந்தது.
அப்பாவாக சமுத்திரக்கனி, அம்மாவாக சரன்யாவும் கச்சிதமாக நடித்துள்ளனர். சரன்யாவுக்கு அம்மா கேரக்டர் என்பது தினசரி வாழ்க்கைபோல அவ்வளவு இயல்பான நடிப்பு.
அம்மா போன் செய்து எடுக்காமல் இருந்து அதனால் அம்மா இறப்பதற்கு காரனமாய் தான் இருந்ததை நினைத்து அழும் கேரக்டரில் அவர் அழுவதைக் காட்டுவதில்லை. ஆனால், வசனங்களிலேயே மனதைத் தொடுகிறார். அதற்கு அவர் அப்பாவாக வருபவர் தனுஷுக்கு சொல்லும் ஆறுதல் இன்னொரு நல்ல விஷயம்.
இரண்டாம் பாதியில் வரும் விவேக் ஓக்கே. அவரது காலமெல்லாம் முடிந்துவிட்டதற்கான அறிகுறியாகத்தான் தெரிகிறது அவர் நடிப்பெல்லாம்.
வேலையில்லா பட்டதாரிகள் ஃபேஸ்புக் குருப் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, அதில் படித்து வெளியாகும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்தும் அவர் பேசுவது இயல்பு மற்றும் நாட்டு நிலவரம். பொறியியல் படித்துவிட்டு கால்செண்டரிலும், சினிமாத்துறையிலுமாக இருப்பவர்கள் குறித்தும் சொல்கிறார்கள்.
வில்லனிடம் தான் சிறு குழந்தையில் இருந்து பட்டப்படிப்பு முடிப்பதுவரை நடந்ததை வரிசையாக சொல்வது கலக்கலான நகைச்சுவை.
வில்லனாக வருபவர் கணக்குக்கு மட்டுமே. மரணமாஸ் படத்தில் ஒரு சப்பை வில்லன். ஓகே ரகம்.
அமலாபால் வழக்கம்போல நல்ல நடிப்பு. அதே அழகான கண்கள். சொல்லிக்கொள்ளும்படி இல்லையெனினும் அவருக்கான பகுதியை நன்றாகவே செய்திருக்கிறார்.
சமுத்திரக்கனியின் நடிப்பும் மிக இயல்பு. வேலைல்லாத இளைஞர்கள் வீட்டில் இவ்வளவு கரிசனம் காட்டப்பட்டாலே நிறையப்பேர் மேலே வந்துவிடுவார்கள்.
சிகரெட்டின் கொடுமை மிக அழகாக காட்டப்படுகிறது. சரன்யாவின் நுரையீரலை எடுத்துப் பொருத்திய ஒரு பெண் அப்பாவுடன் வந்து நன்றி சொல்லும்போது பகீரென்றிருக்கிறது. சிகரெட் குடிக்கும் அனைவருக்கும் நிச்சயம் அந்த காட்சியில் வயிற்றை நிச்சயம் கலக்கி இருக்கும். அதேபோல இன்றைய கல்லூரி செல்லும் பெண்கள் செல்லும் பாதையும் சொல்லாமல் சொல்லப்படுகிறது. குடி, சிகரெட்டெல்லாம் ஆனுக்கு பெண் குறைந்தவர்களில்லை என இந்த விஷயத்தில் போட்டி இடுகிறார்கள்.
குறை என்றெல்லாம் ஏதும் சொல்லிவிட முடியவில்லை. படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மிக வேகமாகச் செல்கிறது. சிலர் இரண்டாம் பகுதி ஸ்லோ என்பதாக சொல்லி இருந்ததைப் பார்த்தேன். அப்படியெல்லாம் இல்லை. இதைவிட சிறப்பாக எப்படிச் சொல்வதோ?
நிச்சயம் பிஜிஎம்முக்காக தியேட்டரில் பார்க்கவேண்டிய படம்.
தனுஷின் நடிப்பில் இன்னொரு அருமையான படம் வேலையில்லா பட்டதாரி.
Parking at owner's risk மாதிரி இந்த விமர்சனத்தை பார்த்துவிட்டு படம் பார்ப்பது உங்க ரிஸ்க் :-)
5 Comments:
வாராந்திரி ராணியில் வர வேண்டிய விமர்சனம்.
வாராந்திரி ராணியில் வர வேண்டிய விமர்சனம் :)
சவுந்தர்யா ரஜினிகாந்தின் 3 க்குப் பிறகு நான் மிக ரசித்துப்பார்த்த தனுஷ் படம் வேலையில்லா பட்டதாரி.
You were wrong ,
Ishwarya Danush directed 3 movie.
Soundarya Rajnikanth has directed KOCHADAIYAN and not the movie 3, which is actually directed by Ishwarya Rajnikanth
So many spelling mistakes in tamil.
Post a Comment