
தமிழக அரசு நடத்தி வரும் இசைப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஆலோசகர் பதவிக்கு வேட்டை நடத்தப்பட்டதில், நடிகர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, விளையாட்டுத் துறை அமைச்சகத்தில் கபடி ஆலோசகர் பதவிக்கும் காலியிடம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை நியமனம் செய்யலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கில்லி படத்தில் விஜய் விளையாடிய கபடி விளையாட்டை சில வாரங்களுக்கு முன் ஜெ பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலாயுதம் படத்தில் அரசியல் கட்சி தலைவர் மீது ஓடு விழ "இது எதிர்கட்சி சதி" என்று கூற, அதற்கு விஜய் "நல்ல வேளை, நான் ஆளும் கட்சி" என்பார்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, November 02, 2011
இசை அரசி(யல்)
Posted by IdlyVadai at 11/02/2011 04:30:00 PM
Subscribe to:
Post Comments (Atom)











10 Comments:
Appo Vijay'ku sondhama katchi thodangi Mudhalvaraganum engira idea've illaya? Kaalam poora avarum avar appa-ammavum Jayalalitha kaal'laye pudichitu irukaporangala???!!!!
அடுத்த முதல்வர் விஜய் வாழ்க
முன் காலத்தில் விஜய் டி வி யிலும் இப்பொழுதெல்லாம் ஜெயா டி வி யிலும் ஷோ ச பாடுவதைக் கேட்க சகிக்காது. இப்போ இவருக்குப் பதவி வேறா? வெளங்கிடும்.
ஜெயலலிதா பிறந்ததேதி;24.2.1948
பிறந்த நேரம்;1.30 மாலை.
இவரது நட்சத்திரம் ;மகம்
ராசி;சிம்மம்
மகத்தில் பிறந்தவர் ஜகத்தை ஆளுவார் என்ற ஜோதிட பழமொழி..இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ இவருக்கு நன்றாகவே
பொருந்துகிறது....இரண்டு முறை தமிழக முதல்வராக இருந்தவர் அல்லவா..?
மகம் நட்சத்திரம் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை சிறப்பில்லை.
ஆனால் பொது வாழ்வு,மக்கள் தொண்டு மிக சிறப்பாக அமைந்துவிடுகிறது.
இவர்களது பலவீனம்;முன்கோபம்,பிடிவாதம்.
அறிவாற்றலை பொறுத்தவறை நிறைய உலக ஞானம் உண்டு.
மகம் கேதுவின் நட்சத்திரம் என்பதால் வாழ்வில் போராட்டம் நிகழ்த்தி,கசப்பானஅனுபவங்களை தந்து,வாழ்க்கை பற்றிய புரிதல்களை தரும் கிரகம் கேது.
சிம்மம் ராசி அதிபதி சூரியன்..நெருப்பு போல சுட்டெரிக்கும் கோபத்துக்கு இவரே காரணம்.
சிம்மம் என்றால் சிங்கம்..அதனால் யாரும் இவர்களை நெருங்க முடியாது..துணிச்சலும்,தன்னம்பிக்கையும் மிக அதிகம்...
சிறை சென்றாலும்,முகத்தில் ஒரு கம்பீரம் இருக்கும்..’’அய்யோ’’ என அலற மாட்டார்கள்.
மகம் நட்சத்திரம்,சிம்மம் ராசிக்கும் இதுவரை ஏழரை சனி நடந்து வந்தது..சாதராண மனிதர்கள் சிம்ம ராசியாக இருந்தால்,கடந்த 5 ஆண்டுகளில் பட்ட துன்பத்திற்கு மரணமே தேவலாம் என்ற நிலைக்கு வந்திருப்பார்கள்.அந்தளவு துன்பத்தை சிம்ம ராசிக்கு ஏழரை சனி கொடுத்து இருக்கிறார்.
என் வாடிக்கையாளர்கள் சிம்ம ராசிக்காரர்கள் ,இந்த காலகட்டத்தில்,பலர் தொழில் இழந்து,வருமானம் இழந்து,குடும்பத்தில் நிம்மதி இழந்து தவித்து,கண்ணீர் விட்டதை நான் கடந்த காலங்களில் பார்த்திருக்கிறேன்..அந்த வகையில் ஜெயலலிதா ஆட்சியை இழந்து,தன் சொந்த கட்சிக்காரர்கள் அணி மாறுவதை கண்டு,உடல் நலம் ஆரோக்கியம் குன்றியும்,செல்வாக்கு குறைந்தும் துன்பப்பட்டதை ..பார்த்தோம்,கேள்விப்பட்டோம்.
பாக்கியஸ்தானம் என்றாலே அது தெய்வஸ்தானம் மற்றும் பித்ருக்களின் ஆசி என்றுதான் பொருள்...தன் முயற்சிக்கு தெய்வம்,முன்னோர்கள்
துணை நிற்பார்கள்..இதனால் வெற்றி இவர்களுக்கு சுலபம்.
இதுவரை எண்ணி வந்த காரியங்கள் இவருக்கு கைகூடும் நாள் நெருங்கி விட்டது.
இதுவரை துன்பப்படுத்திய ஏழரை சனியும் வரும் ஐப்பசி மாதத்துடன் முடிகிறது..சனிபகவான் செல்லும்போது ஏதாவது நன்மையை செய்வார் என்ற முறையில்,
பெரிய அளவில் இவருக்கு நன்மைகள் கிடைக்கும்.
இதுவரை இவரை சூழ்ந்த எதிரிகளின் சூழ்ச்சி வலையில்,அவர்களே மாட்டிக்கொள்வார்கள்.
இழந்த செல்வாக்கு ,புகழ் மென்மேலும் வளரும்.
இவரது ஜாதகத்தில் குருச்சந்திர யோகம் உண்டு..குரு ஒன்பதாம் பார்வையாக சந்திரனைபார்வையிடுகிறார்..தற்சமயம் சந்திர புக்தி நடக்கிறது..அரசியல் கிரகம் செவ்வாயுடன் இணைந்திருக்கும்,
சந்திரனை குரு பார்க்கிறார்..குரு,சந்திரன்,செவ்வாய்..மூன்று தெய்வீக கிரகங்களும் இணையும் ஸ்தானத்தில் ,அக்கிரகங்களில் ஒன்றின் திசா புக்தியில் மாபெரும் வெற்றி கிடைக்கும் என்பது விதி.
ராகுதிசை நடக்கிறது.ராகுவைப்போல கொடுப்பார் இல்லை என்பார்கள்.அதன் அடிப்படையிலும்,ராகுவையும் குரு பார்க்கிறார்
என்ற அடிப்படையிலும் இவர் நீண்ட நாள் கனவு நிறைவேறும் காலகட்டம் இது.
ஜாதகத்தில் ஏழாம் பாவகத்தில் குரு தனித்து நின்றதாலும் ராசிக்கு ஏழாம் வீடு சனி வீடு என்பதாலும் குடும்பம் இவருக்கு அமையவில்லை..இவரே தோழியராக சசிகலாவை,தன்னுடன் தங்க வைத்து அவர் குடும்பத்துக்கு ஆதரவு அளித்தாலும் அவர்கள் மூலம் இவருக்கு பிரச்சனை வரும் என்பதும் இவர் ஜாதகம் சொல்கிறது...இவருக்கு சுக்கிரன் உச்சம் என்பதால்தான் சினிமாத்துறையில் புகழ் பெற்று இருந்தார்..முக ராசியால் மக்களை கவர்ந்தார்...ஆடம்பரமாக வாழ்கிறார்...ஹெலிகாப்டரில் பறந்து வந்து ஓட்டு கேட்கிறார் என்றால் உச்சம் பெற்ற சுக்கிரனே காரணம் ஆகும்...
வாக்கு ஸ்தானத்தில் சனி இருப்பதால் உறுதியான பேச்சு..எதிரிகளை துவம்சம் செய்யக்கூடிய ,நடுங்க செய்யும் குரல்,இரண்டில் உள்ள சனி தருகிறது..ஆனால் அதுவே இவரது பலவீனத்துக்கும் காரணமாகிறது...சனி சந்திரன் வீட்டில் இருப்பதால் அலட்சியம் மிக அதிகம்..மனக்குழப்பத்தால் முக்கிய நேரங்களில் பெரிய வாய்ப்புகளை இழந்து விடும் ஆபத்தும் உண்டு.
சூரியன்,புதன் இணைந்து நின்று...நிபுணத்துவ யோகம் தருகிறார்கள்..எதிலும் ஆய்வு செய்தே இறங்குவார்....இவர் என்ன செய்யப்போகிறாரோ என எதிரிகளை தினசரி தூங்க விடாமல் அச்சம் கொள்ள செய்வார்.
பத்தில் சுக்கிரன்..இவரது லக்கினத்துக்கு யோகாதிபதி சுக்கிரன் பத்தில் நின்றதால் உச்சம் பெற்றதால் ,இவர் ஆட்சி புரியும் காலம் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்..கலைத்துறைக்கு முன்னேற்றம்,வசதி வாய்ப்புகள் உண்டாகும்.
எட்டு,ஒன்பதாம் அதிபதி சனி இரண்டில் நின்று..இரண்டுக்கு உடையவன் மூன்றில் நிற்பதால் தான் கோடிக்கணக்கான தன் கட்சித்தொண்டர்களை தைரியமுடன்,உற்சாகத்துடன் வைத்திருக்க முடிகிறது...மக்கள் இவர் குரல் கேட்டதும் புத்துணர்ச்சி அடைகின்றனர்...ஹெலிகாப்டரில் வந்து இறங்கினாலும்,தலைக்கனம் பிடித்தவர் என்றேண்ணி இருப்பவர்களும் ஓடி வந்து இவர் பேச்சை கேட்கின்றனர்.இதற்கு சனி புதன் சாரம் பெற்றதும் ஒரு காரணம்.
ராகு திசை முடிந்து குரு திசை வரும் காலம்...இவர் இன்னும் பக்குவப்படுவார்.....
மக்களே, மக்களே என்று விஜயகாந்த்தும், பிரேமலதாவும் ஊர் ஊராகப் போய்க் பிரச்சாரம் செய்தும் மக்கள் வாக்களிக்காமல் போனதற்கு முக்கியக் காரணங்களை ஆராய்வோம்.
1. முதலில் தேமுதிகவை மக்களுக்கான கட்சியாக, அதாவது மக்கள் கட்சியாக இன்னும் விஜயகாந்த் மாற்றவில்லை.
2.மக்களுக்கான போராட்டங்களை தேமுதிக முறையாக சரியான நேரங்களில் நடத்தத் தவறி விட்டது.
3. தனக்கென்று வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றே விஜயகாந்த் செயல்பட்டது.
4. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வர வேண்டும் என்ற மக்களின் அடிப்படை எதிர்ப்பார்ப்பை அவர் மதிக்கத் தவறி விட்டார்.
5. அதிமுகவையும், திமுகவையும் கடுமையாக சாடி வந்த விஜயகாந்த், மறுபடியும் அதிமுகவிதாமே கூட்டணி வைத்தது மக்களுக்கு பிடிக்கவில்லை.
6. சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு அமோகமான வாக்குகள் கிடைக்க திமுக மீதான மக்களின் கடும் அதிருப்தியும், கோபமுமே காரணம். அதை சரியாக கணிக்காமல் தன்னுடைய கூட்டணிதான் இந்த வெற்றிக்கு காரணம் என நினைத்தது.
7. திமுகவை விட மேலான கட்சியாக தேமுதிக உருவெடுத்த போதிலும், சரியான எதிர் கட்சியாக சட்டமன்றத்தில் செயல் படாதது.
8. நடக்கும் ஜெ தலைமையிலான ஆட்சி குறித்து ஒரு வருடம் கழித்தே பேசுவேன் என்று தெனாவெட்டாக விஜயகாந்த் பேசியது.
9. ஒரு எதிர்க்கட்சியாக பொறுப்பாக நடந்து கொள்ளாமல் இருந்தது.
10. யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பாக ஒரு நல்ல அங்கீகாரத்தை மக்கள் கொடுத்தும் கூட அதை சற்றும் பொருட்படுத்தாமல் தேமுதிக செயல்பட்டதால் தான் மக்கள் ஒதுக்கிதள்ளியுள்ளனர்.
தேமுதிக ஒரு பொறுப்பான மக்கள் கட்சி, மக்களாகிய நம் குரலே தேமுதிகவின் குரல், நமக்கான கட்சிதான் தேமுதிக என்ற நிலை வரும் போதுதான் அந்தக் கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும். அந்த ஆதரவும் நிரந்தரமாகும், அப்போதுதான் தேமுதிக உண்மையான மாற்றுக் கட்சியாக மாற முடியும் என்பதை தேமுதிக தலைவர் விஜயகாந்த் உணர வேண்டும்.
படம் - இதயக் கோயில்
பாடலை எழுதி இசையமைத்து பாடியவர் இளையராஜா
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்...
(இதயம் ஒரு...)
ஆத்ம ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் 'ஜீவ' நாடிதான் ராகம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை
எனது 'ஜீவன்' ஒன்றுதான் என்றும் புதிது
(இதயம் ஒரு...)
காமம் தேடும் உலகிலே 'ஜீவன்' என்னும் கீதத்தால்
ராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா
அவர் பாடலின் 'ஜீவன்' அதுவே அவரானார்
என் பாடலின் 'ஜீவன்' எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது
(இதயம் ஒரு...)
நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் 'ஜீவன்' எனை ஆண்டாயே
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே
(இதயம் ஒரு...)
Josiyar analysis of JJ is interesting. Most of them are true. I am also makam. but sukkran neecham. Imagine my situation!!
''thottapatta rottuala muttai parota'' evvavalvu kavithai nayam parunghal
Post a Comment