தில்லி தினமணியில் என் கட்டுரை.
ஜூன் மாதம் 3-ம் தேதியிலிருந்து தினமணி நாளிதழின் தில்லிப்பதிப்பு வெளிவருகிறது. அதற்கான சிறப்பு மலரில் வெளியிட என்னிடம் ஒரு கட்டுரை கேட்டிருந்தார்கள். அந்தக்கட்டுரையை இங்கே நண்பர்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தில்லி தினமணி வாசகர்கள் தவிர, இட்லிவடை வாசகர்களும் படித்து ’அனுபவிக்கட்டுமே!’ என்ற நல்லெண்ணம் மட்டுமே காரணம்!
பாரதி மணி
bharatimani@hotmail.com
எனக்குத்தெரிந்த தில்லி!
பாரதி மணி
முதல் தடவையாக 1955-ல் சென்னையிலிருந்து ஜி.டி. எக்ஸ்பிரசில் என் அக்கா அத்தானுடன் புதிதாகக்கட்டியிருந்த புதுதில்லி ஸ்டேஷனில் போய் இறங்கியபோது, பதினெட்டு வயதான எனக்கு பிரமிப்பாக இருந்தது. புதிய மனிதர்கள், மொழி, உணவுப்பழக்கங்கள் எல்லாமே வேறாக இருந்தது. வந்தபுதிதில் ‘எப்படி நாம் நமது அரைகுறை ஆங்கிலத்தையும், கால்குறை ஹிந்தியையும் வைத்துக்கொண்டு இங்கே குப்பை கொட்டமுடியும்?........திரும்ப ஊருக்கே ஓடிவிடலாமா?’ என்று பலமுறை நினைத்ததுண்டு! ஆனால் தில்லி என்னை ஐம்பது வருடங்கள் வைத்திருந்து, கொஞ்சம் பக்குவமானவனாக மாற்றி அனுப்பிவைத்தது!
ஒரு குக்கிராமத்திலிருந்து திடீரென தில்லிக்கு உந்தித்தள்ளப்பட்ட எனக்கு அங்கே பார்த்த பல விஷயங்கள் புதிதாகவும், புதிராகவும் இருந்தன. ரகசியமொன்று சொல்கிறேன். வெளியில் யாரிடமும் சொல்லவேண்டாம். மானம் போய்விடும். நமக்குள்ளேயே இருக்கட்டும்! தில்லி போன மறுநாள் ஒரு முக்கிய விஷயமாக ஆபீசிலிருந்த என் அத்தானுக்கு போனில் தகவல் சொல்ல சரோஜினி நகர் மார்க்கெட் போனேன். ஒரு கடையில் என் வாழ்வில் முதல் தடவையாக நம்பர் சுழட்டும் டயல் போனை பார்த்தேன். என் பார்வதிபுரம் கிராமத்தில் எந்த வீட்டிலும் அப்போது தொலைபேசி கிடையாது. நாகர்கோவிலிலிருந்த என் உறவினர் வீட்டில் பத்து கிலோவுக்குக்குறையாத எடையுள்ள கருப்பு போன் டயல் இல்லாது சுழற்றும் கைப்பிடியுடன் இருக்கும். அதில் என் உறவினர் பேசக்கேட்டிருக்கிறேன். ரிசீவரை ’தொட்டிலில்’ இருந்து எடுக்காமலே கைப்பிடியை இரண்டு மூன்று முறை சுற்றுவார். பின் ரிசீவரை எடுத்து ‘யாரு!....சம்முகமா? லீவிலெருந்து எப்பம் வந்தே? சின்னவளுக்கு கல்யாணமெல்லாம் நல்லா நடந்திச்சா? குளந்தைகளெ வீட்டுக்கு வரச்சொல்லு. எம் பொஞ்சாதிக்கு பாக்கணுமாம். முன்னூத்தியெட்டு….ரெட்டியாருக்குப்போடு’ என்பார். எக்ஸ்சேஞ்சிலிருக்கும் ஆபரேட்டர் சம்முகம் தொங்கும் பிளக்கை எடுத்து 308 நம்பரில் செருகுவார் போல. இதையெல்லாம் பார்த்திருந்த எனக்கு, டயல் செய்யும் போன் புதிசு. என் ஆயுசிலேயே முதன்முறையாக டெலிபோனில் பேசப்போகிறேன்! என்னிடம் என் அத்தான் ஆபீஸ் ஐந்து டிஜிட் நம்பர் இருந்தது. இப்போது ஒரு சந்தேகம். ரிசீவரை கையிலெடுத்து பிறகு எண்களை சுழற்றவேண்டுமா….அல்லது எடுக்காமலே டயல் செய்யவேண்டுமா? யாரிடமாவது கேட்கலாமென்றால் முதலில் கூச்சம். பிறகு மொழிப்பிரச்னை. ஹிந்தி சுமாராக புரிந்துகொள்ளவும், எழுத்துக்கூட்டிப்படிக்கவும் தெரியுமே தவிர சரளமாகப் பேச வராது! திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அப்போது ஐந்தாம் வகுப்பிலிருந்து மெட்ரிக் வரை ஹிந்தி கட்டாயப்பாடம். கடையெதிரே கொஞ்சநேரம் காத்திருந்தேன். ஒருவர் வந்தார். ரிசீவரை எடுத்து காதில் வைத்துக்கொண்டு டயல் செய்தார். ஓரிரு வினாடிகளுக்குப்பிறகு ரிசீவரை வைத்துவிட்டார். (ஏன்? ஓஹோ…எங்கேஜ்டுனு சொல்வாங்களே….அதுவா?) மறுபடியும் எடுத்து டயல் செய்தார். பேசினார்….யாரையோ மாலை ஆறுமணிக்கு பார்க்கவரலாமா என்று கேட்கிறாரென்பது புரிகிறாற்போல இருந்தது. எனது அடுத்த பிரச்னை எங்கேஜ்டு டோனுக்கும் டயல் டோனுக்கும் வித்தியாசம் தெரியாது! பண்டும் செத்திருந்தாத்தானே சுடுகாட்டுக்கு வழி தெரியும்? அந்த பகவான் அதற்குமேல் என்னை சோதிக்கவில்லை. டயல் செய்தவுடனேயே ட்ரிங்,,,ட்ரிங்… என்றது. அடுத்த முனையிலிருந்து ‘யெஸ்….கணபதி ஹியர்” என்று அத்தானின் குரலும் கேட்டது தில்லியில் என் முதல் தொலைபேச்சு வெற்றிகரமாக நடந்தது! இது நமக்குள்ளியே இருக்கட்டும்!...... வெளீலெ தெரியாண்டாம்!
நினைத்துப்பார்த்தால் என் தலைமுறையினர் தான் டெக்னாலஜியின் பலப்பல மாற்றங்களை சந்தித்தவர்களெனத்தோன்றுகிறது தொலைபேசியையே எடுத்துக்கொள்ளுங்களேன். ஆரம்பத்தில் ஆபரேட்டர் மூலம் பேசும் சுழற்றும் கைப்பிடி கருவி, ஐந்து டிஜிட் டயல் போன், பின்னர் க்ராஸ் பார் எக்ஸ்சேஞ்ச், OYT (Own Your Telephone) மூலம் ரூ.3000 கட்டிவிட்டு ஆறுவருடம் கனெக்ஷனுக்காக காத்திருப்பு, வீடு மாறினால் டெலிபோன் மாற இரு வருடங்கள், ஆபரேட்டர் மூலம் Trunk Call Booking, அதிலும் Ordinary, Urgent Calls. நமக்கு நாள் நல்லதாக இருந்தால் காலையில் புக் பண்ணிய அர்ஜென்ட் கால் இரவுக்குள் பேசமுடிந்த அதிசயம், பின்னர் வந்த ஏரியா கோடுடனான S.T.D., தொண்ணூறுகளில் ஆரம்பித்த Twentyfive Rupees Only per minute for both Incoming and Outgoing Calls மொபைல் போன் படிப்படியாக ரூ. ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை விழுங்கிய 2G, Incoming Calls are also charged while Roaming. டாட்டா டோகோமோ அறிவித்த All Calls Local/National/Roaming One Paise per second! ரிஷி கபூர் மகன் அடிக்கடி டி.வி.யில் சொல்வது போல் "Keep it Simple! Silly!' அதன் பின்னர் 3G at no extra cost! அடிக்கடி விளம்பரங்களில் வரும் Vodafone 3G Zoozoo விர்விர்ரென்று பறந்து செய்யாத சாகசங்களே இல்லை! அப்படியே 2G ஊழல் மூலம் திஹாரிலிருக்கும் ஆண்டிமுத்து ராசாவையும், மகள் கனிமொழியையும் விர்ரென்று பறந்துபோய் தில்லி ஜெயிலிலிருந்து ககன மார்க்கத்தில் மீட்டுக்கொண்டுவந்து, கோபாலபுரத்தில் நிறுத்தினால், தமிழ்நாட்டின் மூத்த தலைவர் எவ்வளவு சந்தோஷப்படுவார்? அப்புறம் வந்தது Smart Phone, I-Phone. இப்படி கழுதை தேய்ந்து கட்டெறும்பாகியது! நானும் நேற்று மார்க்கெட் போய் ரூ. 27,000 கொடுத்து புதிதாக வந்திருக்கும் Android தடவிய Gingerbread இருக்கும் Samsung Nexus S Smart Phone வாங்கிவிட்டேன்! இதில் NHM Writer வேலை செய்யுமாவென்று கிழக்குப்பதிப்பகம் பத்ரியைத்தான் கேட்கவேண்டும்! பாருங்கள்… என் கண் முன்னாலேயே டெக்னாலஜி எப்படியெல்லாம் கன்னாபின்னாவென்று வளர்ந்திருக்கிறது என்று!
அப்போது நான் பார்த்த தில்லி வேறு. என்னைப்போன்ற ‘பெரிசு’களுக்கு மட்டுமே தெரிந்த தில்லி! இப்போதைய ராமகிருஷ்ணபுரம் நரிகள் நடமாடும் காடாக இருந்தது. மெஹ்ரோலி ரோடில் சப்தர்ஜங் மருத்துவமனையை விட்டால், மெஹ்ரோலி கிராமத்தில் தான் ஆள் நடமாட்டமிருக்கும் . தில்லி தமிழ்ச்சங்கம் கனாட்பிளேசில் இப்போதிருக்கும் பாலிகா பஸார் மேல் இருந்த தியேட்டர் கம்யூனிகேஷன் பில்டிங்கில் இருந்த மூன்று சிறிய அறைகளில் அரசியல், போட்டி பொறாமையில்லாமல் இயங்கிவந்தது. கோடை காலத்தில், குளிர்ந்த தண்ணீருக்காக வீட்டுக்கொரு புது சுராய் (Surahi) இடம் பிடிக்கும். தினக்கூலியில் நியமனம் பெற்ற ‘Watermen--தண்ணீர் மனிதர்கள்’ அரசாங்க அலுவலகங்களின் ஜன்னல்களை மூடியிருக்கும் விளாமிச்சவேர் (கஸ்கஸ்) தட்டிகளுக்கு அவ்வப்போது தோளில் மாட்டியிருக்கும் தோல்பையிலிருந்து தண்ணீர் தெளித்து, புழுக்கத்தை அதிகரித்துக்கொண்டிருந்தார்கள். வாரத்துக்கொருமுறை ராஜஸ்தான் பாலைவனத்திருந்து வரும் ’ஆந்தி’க்காற்று வீடு முழுக்க புழுதியையும், குளிர்ச்சியையும் கொண்டுவர மறக்காது. குளிர்காலம் வருமுன்பே, தெருக்களில் புது ரஜாய்கள் செய்யும் ‘நாரதர்கள்’ தங்கள் ஒற்றைநாண் தம்புராவை டொய்ங் டொய்ங் என்று மீட்டிக்கொண்டே போவார்கள். ஆட்டோக்கள் கண்டு பிடிக்குமுன்னர் இருந்த நாலு சீட் ‘பட்பட்டி’கள் பத்துப்பேரை அடைத்துக்கொண்டு விரைந்து போகும். நார்த் ப்ளாக் அருகே ட்ராபிக் சிக்னலில் காத்திருக்கும்போது பல தடவைகள் பக்கத்தில் திரும்பிப்பார்த்தால், பைலட், பந்தா ஏதுமில்லாமல், சிக்னலை மதித்து நிற்கும் கருப்புக்கண்ணாடியில்லாத அம்பாசிடர் காரில் பூனைத்தூக்கத்திலோ, அல்லது கோப்பு பார்த்துக்கொண்டோ போகும் பிரதமர் நேருவைப்பார்க்க முடிந்தது! தினமும் பாலுக்கு பாத்திரத்துடன் விடியற்காலை இருட்டில், ‘கந்தா நாலா’ அருகிலிருந்த செளத்திரி சுக்ராமின் பால்பண்ணையின் கிழிந்த கயிற்றுக்கட்டிலில் காத்திருக்கவேண்டும். காண்டாமிருகம் போல் கருகருவென வளர்ந்திருந்த ஐம்பது தில்லி எருமைகளின் சாண மூத்திர வாசனையை பொறுத்துக்கொள்ளும் மனத்திடம் அவசியம் தேவை! இல்லையென்றால் வீட்டுக்கு சைக்கிளில் கொண்டுவந்து கொடுக்கும் ’தூத்வாலா’க்களின் சரிபாதி தண்ணீர் கலந்த பா..ஆ..ல் தான் கதி! Delhi Milk Service, Mother Dairy, டோக்கன் பால் எல்லாம் வர ஆண்டுகள் பல காத்திருக்க நேர்ந்தது. தினமும் அதிகாலையில் நமக்குத்தேவையான தினசரிப்பேப்பர்களை சைக்கிள் ட்யூபிலிருந்து தயாரித்த கருப்பு ரப்பர் பாண்டில் சுருட்டி, சைக்கிளில் போய்க்கொண்டே, மேல்மாடியில் குடியிருக்கும் நம் வீட்டுக்கதவுகளில் குறி தவறாது வீசும் பேப்பர்வாலாக்கள் இன்னும் இருக்கிறார்களா? ஷாஜஹான் ரோடில் அரை நூற்றாண்டுக்கும் மேல் பிரசித்திபெற்ற பிரபுதயாள் கையேந்திபவன் கோல்கப்பா-தஹி பல்லா-பாப்டி அப்போது ஒரு பிளேட் எட்டணா தான். ஒரு ப்ளேட் சாப்பிட்டால், மதிய உணவை மறந்துவிடலாம்! தினமும் ஃப்ரெஷ்ஷாக அரைத்துச்சேர்க்கும் மசாலாக்கள், வேறெங்குமில்லாத ருசியைக்கொடுத்தன. அமைச்சர்கள் வீட்டிலிருந்தும் டிரைவர்கள் காத்திருந்து வாங்கிப்போவார்கள்.
தில்லியின் Wall Street என அறியப்பட்ட மதுரா ரோடு – பின்னர் பஹதூர் ஷா ஸஃபர் மார்க் என்று நாமகரணம் ஆனது – இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலிருந்து அப்போது வெளிவந்த சங்கர்ஸ் வீக்லி வரையிலான முக்கிய பத்திரிகை அலுவலகங்களைக்கொண்டது. ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஸ்டேட்ஸ்மன் மட்டும் கனாட்பிளேசில் இருந்தன. இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டடத்தின் மூன்றாவது மாடியில் நான் வேலை பார்த்த ஸ்டேட் டிரேடிங் கார்ப்பொரேஷன் இருந்தது. உணவு இடைவேளையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆபீஸ் போய் – அங்கே மட்டும் ஏர் கண்டிஷன் மிக நன்றாக வேலை செய்யும்! -- முந்தையநாள் டாக் எடிஷன் தினமணியை ஆரஅமர புரட்டுவேன். ஏ.என். சிவராமன் எழுதிய பொருளாதாரக்கட்டுரைகளையும் தினமணி கதிரையும் விரும்பிப்படிப்பேன். எப்போதாவது வழியில் தென்படும் வெள்ளை வெளேரென்று மார்வாடி
வேஷ்டி ஜிப்பாவிலிருக்கும் ஸ்ரீ ராம்நாத் கோயங்காவுக்கு வணக்கம் சொல்வேன். கோயங்காவை எனக்குத்தெரியும்….என்னைத்தான் அவருக்குத்தெரியாது! அவர் தில்லியிலிருக்கும்போது பல பிரமுகர்கள், சீனியர் அரசியல்வாதிகள் அவரைப்பார்க்க வருவார்கள்.
தில்லி மக்களிடம் பல விஷயங்கள் நாம் கற்றுக்கொள்ளும்படி இருந்தன. அதிகாலையில் தெருவில் சந்திக்கும் பழக்கமில்லாதவர்களோடும் ‘ராம்…ராம்….பாய்ஸாப்!’ என்று கடவுள் பெயராலேயே வணக்கம் சொல்லுவது எனக்கு புதிதாக இருந்தது. அடுத்தநாள் அவரைப்பார்த்தால், நானே முதலில் ‘ராம்…ராம்….சாச்சா!’ என்று என்னை அறிமுகப்படுத்திக்கொள்வேன். ஊரில் முத்து உதிர்வதுபோல சில பெரிசுகள் எதிரே வருபவர்களிடம் ‘என்ன….ஆத்தங்கரைக்கா?’ என்பது எப்போதாவது வரும். குட் ஈவினிங் என்பதை தமிழ்ப்படுத்தி ‘மாலை வணக்கம்’ சொல்வதெல்லாம் பரவலாக பிற்பாடு தான் வந்தது! மனதுக்கு திருப்தியாக சாப்பிட்டு முடிந்ததும், நமக்கெல்லாம் ‘ஆஆ…..வ்வ்’ என்றோ ‘ஏஏ..வ்வ்’ என்றோ தான் ஏப்பம் வரும். அது கேட்பவர்களை முகம் சுளிக்கவைக்கும். தில்லிப் பெரிசுகள் ஏப்பம் வந்தால் வாயைக்குவித்துக்கொண்டு, அதை ‘ஓ…ம்…..ஹரி ஓம்’ என்று மாற்றிவிடுவார்கள். ’ஐடியா நல்லா இருக்கே!’ என்று இதைப்பார்த்து நானும் என்னை மாற்றிக்கொண்டேன். இப்போது நானும் ‘ஓ…ம், ஹரி ஓம்!’ தான்! நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்! கோவில் மற்றும் பொதுவிடங்களில் லட்டு போன்ற பிரசாதங்கள் வினியோகிக்கும்போது, ஒவ்வொன்றாக எடுத்து நம் கைகளில் போடுவதற்குப்பதிலாக, பணிவாக தட்டை நம் முன் நீட்டி, நம்மையே எடுத்துக்கொள்ளச்செய்யும் ‘பெருந்தன்மை’ எனக்குப்பிடித்திருந்தது.
சென்னை திரும்பியபிறகு, நண்பர்கள் என்னை ‘தில்லி மணி’ என்று அழைக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் நடித்த ஓரிரு படங்களில் எனது பெயர் ‘தில்லி மணி’யென்றே டைட்டில் கார்டில் காட்டப்பட்டது. அந்த மாநகரம் என்னை 50 வருடங்கள் போஷித்து வளர்த்து ஆளாக்கியதென்றாலும் என் பெயரில் அதை ஒட்டிக்கொள்ள விரும்பவில்லை. எனக்கு முன்பே இங்கே டெல்லி கணேஷ், டெல்லி குமார், டெல்லி கண்ணன், டெல்லி ராஜா என்று பலபேர் இருந்தார்கள். அந்த ஜோதியில் கலந்துகொள்வதில் எனக்கு விருப்பமில்லை. 2000-ல் எனது முதல் தமிழ்ப்படம் ‘பாரதி’ வந்த புதிது. ஒருநாள் ராணி சீதை ஹால் கச்சேரியில் நீண்டநாள் நண்பர் வயலின் வித்தகர் லால்குடி ஜெயராமனை சந்தித்தேன். பாரதி படத்தை வெகுவாக சிலாகித்து பாராட்டிவிட்டு, ‘மணி! இனிமே உன்னை ‘பாரதி மணி’னு தான் கூப்பிடப்போறேன்’ என்று சொன்னார். சென்னையில் ஓர் அடையாளத்தை தேடிக்கொண்டிருந்த எனக்கு அது உவப்பாக இருந்தது. என்னால் அந்த முண்டாசுக்கவிஞனாக மாறமுடியாவிட்டாலும் அவன் பெயரை ஒட்டிக்கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது!
வெகுநாட்களுக்குப்பிறகு சமீபத்தில் தில்லி வந்தபோது, அந்த நகரமே மாறிப்போய் எனக்கு அந்நியமாகத்தெரிந்தது. வழவழவென சாலைகள், பார்க்குமிடமெல்லாம் ஃப்ளை ஓவர்கள், நகரை சுத்தமாகப்பராமரிப்பதில் அரசின் கவனம் எல்லாம் நகரத்தையே மாற்றிவிட்டன. எத்தனை கோடி ஊழல் நடந்திருந்தாலும், சமீபத்தில் நடந்துமுடிந்த காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் தில்லியின் அடிப்படைக் கட்டுமான வசதிகளை பெருக்கித்தான் இருக்கின்றன. தில்லியில் தரைக்கு கீழேயும், மேலேயும் சீராக ஓடும் மெட்ரோ ரயிலும் இதற்கு முக்கிய காரணம். தூங்கிக்கொண்டிருந்த ஹரியாணாவின் Gurgaon – குட்காவ்ன் ஒரு ஹாங்காங் போல மாறி, தில்லியோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. பதினாறாவது மாடியிலிருந்து தூரத்தில் புழுவைப்போல் ஊர்ந்து போகும் மெட்ரோ ரயிலைப்பார்க்கும்போது, நாம் ஹாங்காங்கில் தான் இருக்கிறோம் என்றே தோன்றியது. இரண்டுமணி நேரம் அவஸ்தைப் பட்டுக்கொண்டு போகும் ஆஸாத்பூர் மண்டிக்கு அலுங்காமல் நலுங்காமல் 37 நிமிடத்தில் போகமுடிகிறது. மெட்ரோ ரயில் தலைநகரத்தையே புரட்டிப்போட்டிருக்கிறதென்பதை மறுக்கவே முடியாது!
எனது ஒரே வருத்தம் எனக்குத்தெரிந்த பஞ்சாபி நண்பர்கள் யாரையும் தில்லியில் பார்க்கமுடியவில்லை என்பது தான், தெருவில் இறங்கினால் எல்லாமே புதிய தலைமுறை முகங்கள்! என்னைத்தெரிந்தவர்களெல்லாம் எங்கே போனார்கள்? வயதானால் இதெல்லாம் நடக்கும் போலிருக்கிறது. ஒருவர் கூட ‘மணி ஸாப்! கைஸே ஹோ? பஹுத் தின் ஸே திக்காயி நஹீ தியா?’ என்று என் கைகளைப்பற்றிக்கொள்ளவில்லை!
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, May 31, 2011
எனக்குத்தெரிந்த தில்லி! - பாரதி மணி
Posted by IdlyVadai at 5/31/2011 07:18:00 AM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










32 Comments:
segmenting the contents into paragraphs is easy for reading. will IV re-edit this article for easier reading
I can enjoy very much the satire of Amarar Editor SAVI'S STYLE IN THIS ARTICLE AFTER A LONG TIME; (ESPECIALLY WHEN REFERRED ABOUT GOENGA THAT I KNOW GOENGA BUT HE DOESNT KNOW ME)
sUPPAMANI
Very interesting....wondering when will I read enakku therindha chennai
//நினைத்துப்பார்த்தால் என் தலைமுறையினர் தான் டெக்னாலஜியின் பலப்பல மாற்றங்களை சந்தித்தவர்களெனத்தோன்றுகிறது //
ஐயா, எனக்கு முப்பத்திரெண்டு வயது! நானும் இப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
ஒருவேளை உங்களது முப்பாட்டனும், எதிர்காலத்தில் எனது பேரனும் இப்படித்தான் நினைப்பார்களோ.. என்னவோ!
அருமையான கட்டுரை. நன்றி
ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது!
//ரூ. 27,000 கொடுத்து புதிதாக வந்திருக்கும் Android தடவிய Gingerbread இருக்கும் Samsung Nexus S Smart Phone வாங்கிவிட்டேன்! இதில் NHM Writer வேலை செய்யுமா//
இன்னும் தமிழ் எழுத்துரு ஆன்ட்ராய்ட்/ஐஃபோன் மொபைல்களில் முழுதாக நிறுவப்படவில்லை. தற்போதைக்கு உலாவி எனப்படும் Browser க்குள் மட்டும் தமிழ்மொழி தெரியும்படி பார்த்துக்கொள்ள -
go to Android Market and Install Opera Mini browser. Then do the steps mentioned in this link:-
http://www.oneindia.in/sms/handsets-with-language-font.html
& after installing, do the below steps
1. Type 'about:config' in mini address bar. This opens configuration settings.
2. There is a option for use bitmap fonts. Change that to Yes.
This will help to view Tamil Fonts.
for typing in tamil, search 'tamil' in Android Market and isntall the available keypad tools like TamilVisai.
Android phones do not support Tamil characters at all. If one is interested in using Tamil Characters in Phone, stay out of Android phones. iPhones are the best for this.
-SR
ஹைய்யோ!!!!!!! எதைச் சொல்ல ? எதை விட?
செல்ஃபோன் வந்த புதிதில் தலையும் வாலும் புரியாமல் தவிச்சேன்:(
அம்பது ப்ளஸ் மக்களுக்கு நீங்க சொன்ன எல்லாமே.......ரொம்பப் பரிச்சயப்பட்டவை:-)
நான் சொல்வது வயசையாக்கும்!
இங்கே சண்டிகடில் பேப்பர்காரர் அனுதினமும். சுருட்டிக்கட்டிய தினசரியைக் குறி பார்த்து மாடிக்கு எய்கிறார்:-)
I spent 9 years in Delhi in the seventies and eighties. I indulged in a bit of nostalgia. Thanka Mani. It took me a long time to grt used to life in Madras after coming back. All my friends who have returned to Madras also felt the same/
===Giri
Dear Sir,
Please do write some interesting blogs about your Delhi Experience. It will help every one.
Regards
Ranga
HI IV,
One more Scam. Now from "Maran Brothers". I have got the following info from Business Standards. Please publish.
Regards
Ranga
Delhi, 31 May
GOVERNMENT today faced
fresh attack from the Opposition on corruption when the
Bharat iya Janata Par ty
(BJP) asked Textiles Minister Dayanidhi Maran to answer charges that his family-owned Sun TV Network
was a beneficiary of pay-offs
by a Malays ian company
which benefited from equity sold by Aircel.
“There are new scams in
the UPA government everyday. A new scandal is on the
verge of being exposed. The
cupboard of corruption of the
UPA is overflowing and more
skeletons are dying to come out,”
BJP chief
spokesperson Ravi
Shankar Prasad
said reacting to a
media report in
this regard.
However, the
Congress washed its hands of
the controversy surrounding
Maran, the former Telecom
Minister. “If a question has
been asked from the Textiles
Minister Dayanidhi Maran, obviously he will be the best person to answer it,” party
spokesman Manish Tewari told
reporters in reply to a volley of
questions on the issue.
Incidently, Maran had a
lengthy meeting with Prime
Minister Manmohan Singh last
night after the meeting of the
Cabinet Committee on Political Affairs. At the same time,
Tewari indicated that irregularities, if any, during Maran’s
tenure could be looked into by
the JPC which is looking into
the 2G spectrum allocation
scam. Tewari is also a member
of the JPC. Prasad alleged that
during Maran’s tenure as Telecom Minister, there were some
financial anomalies which
benefited companies owned
by his family.
“We know Maran’s family
owns Sun TV network which
also has Direct-to-Home
(DTH) service. During his
tenure as Telecom Minister the
FDI norm was changed and the
telecom sector FDI norm was
increased to 74 per cent. Aircel, a telecom company which
only had a licence for Tamil
Nadu, later got licence for 14
new areas,” Prasad said.
The BJP alleged that 74 per
cent stake in Aircel was purchased by a
Malaysian company Maxis Communication when
Maran was Telecom Minister.
“Mr Maran,
will you please
explain if Maxis
Communication
company has
made any investment in Sun
DTH company or any other of
your family-owned companies?
Secondly, was this investment
done through Astro Group
company, which is a subsidiary
of Maxis Communication?”
Prasad asked. BJP also sought
to know from Maran whether
the investment made in Sun
Network by Maxis Communication was done after the latter
had bought 74 per cent equity
of Ai rcel .
“He should also clarify if in
any way a foreign investor has
invested in Sun network when
Maran was a minister. Is there
a conflict of interest here or
not? As a responsible opposition party we are raising important questions purely in national interest,” Prasad said.
apple's are for end user such as -ar
and Android does not support but you can install opera mini then you can able use Unicode in your mobile
அருமையான அனுபவம் ஐயா! பழைய டெல்லியில் பயணத்த அனுபவம்.
Nice article.
Off topic-- It would be timely and interesting to think of the title as MK refelcting on his latest Delhi visit vis-a-vis his previous ones..
http://ibnlive.in.com/news/minister-steals-a-telephone-exchange-loots-bsnl/156127-60-118.html.
In tamil:
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=425875&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=
idlyvadai kainju kidakku - kolvar illai - dmk madhiri
Dear Mani Sir,
Your writing style is quite interesting and I enjoyed the article thoroughly. I just wish, you write more and more as well as frequently. I humbly suggest that you should write a detailed account of your experiences in Delhi in a book form. I am sure, it will be relished by more readers and also that it would remain as a document of record of all important events happened in Delhi in an ordinary man's - though, your writing makes you really extraordinary - point of view.
With respects,
M. Hariharan, Madurai.
யார் பாரதிமணி என்று தெரிந்திருந்தால் கட்டுரை இன்னும் சுவையாக இருந்திருக்கும்.
/*****Android phones do not support Tamil characters at all. If one is interested in using Tamil Characters in Phone, stay out of Android phones. iPhones are the best for this.
-SR******/
If you are just looking to read Tamil, it's possible on Android. Just do this - SK :)
1. Go to Market and search and download Opera Mini and Opera Mobile (browsers)
2. Install them
3. Open Opera Mini application
4. Type opera:config on the browser, it will take you to the settings page
5. Scroll down to the bottom of the page
6. There will be an option called Use bitmap fonts for complex scripts. Set it to yes and save.
7. Restart the browser
these days Idly is so dull ..
இ.வ
என்ன சரக்கு தீர்ந்துட்டாப்பல இருக்கே! ஸ்வாரஸ்யமா ஒரு போஸ்டிங்கும் இல்லியே. எங்கே போனார்கள் அந்த விஸ்வாமித்ரரும், க்ருஷ்ண பாகவதரும். சும்மா மொளகா பஜ்ஜி கடிச்சாப்பல அவங்க எழுதினா படிச்சிட்டு, நாங்க திட்டி நாலஞ்சு கமெண்ட்டு போடலாமில்லே! கையெல்லாம் நம நமக்குதுய்யா!
@Niroo
Yes one can install Opera mini and turn on complex fonts to read. but that only enables tamil on for browsing. I want the underlying tamil (unicode) supported across the board in the phone which google doesnt care to provide, which is completely supported in iPhone. iPhone certainly trumps hands down on this compared to Android phones.
-SR
இதுவரை தில்லி பார்த்ததில்லை. கேள்விப் பட்டதோடு சரி. சுவையான கட்டுரைக்கு நன்றி. கடைசி பாரா கலக்கல்.
மிக நல்ல பதிவு!
கடந்த சில மாதங்களாக இந்த தளம் அழுது வடிகிறது..
ஏதோ தலை எழுத்தே என நடத்தப்படுவது போல தெரிகிறது.
ஒரு பதிவேற்றம் அதிக பட்சம் 24 மணி நேரம் தான் இருக்கலாம்.அதற்கு மேல் வைக்கப்படவேண்டுமெனில் அதற்கு குறைந்த பட்சம் 24 பின்நூட்டங்களாவது வந்திருக்கவேண்டும் இல்லையெனில் புதிதாக ஒன்று போடப்படவேண்டும்..
Just a word of caution..No offense meant.After all it is free!!
Idly Vadai shutdown?!
இன்னாபா இட்லிவடை கடையை இழுத்து மூடியாச்சா? புது போஸ்ட் எதுவுமே ரெகுலரா வரலை.
-ஶ்ரீனி
இந்தாள் மூஞ்சியே எவ்ளோ நாள் பாக்கிறது? வேற பதிவே இல்லையா?
Kadai leave Ahh??????
Kadai Leave Ahh????
பாரதி மணி சார்
உங்கள் பழைய டெல்லி பஞ்சாபி நண்பர்கள் காணாமல் போனால் என்ன ஏராளமான இணைய நண்பர்கள் உங்களுக்கு இப்பொழுது கிடைத்திருக்கிறோமே. பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி. சுகமான பழைய நினைவுகள்.
அன்புடன்
ச.திருமலைராஜன்
Post a Comment