அம்மா ஜெயித்தால் ? ... வழக்கம் போல விபரீத கற்பனை இது உண்மையானால் எங்களால் ஒன்று செய்ய முடியாது... மதிமுக & அதிமுக கூட்டணி போல மலர் தயாரிப்பு அநங்கன் & இட்லிவடை கூட்டணி ....
ஸ்ரீ ரங்கத்தில் ஜெயலலிதா அமோக வெற்றிமே, 14. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆனந்தை எதிர்த்து 1,76,643 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ( கூட்டு தொகை 9 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி பற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஸ்ரீ ரங்கம் என் தாய் மண். அதன் மக்கள் என் சொந்த மக்கள். அதனால்தான் பெரும் வாக்கு வித்தியாசத்தில் என்னை அவர்கள் ஜெயிக்க வைத்துள்ளனர். இந்த வாக்கு ஸ்பெக்ட்ரம் வாக்கு. ஸ்ரீரங்கம் மக்களுக்கு என் நன்றி” என்றார்.
கவிஞர் தாமரைக்கு இரண்டாமிடம்
ஜெயலிதாவை எதிர்த்து "தமிழ் நேர்மையாளர் கூட்டமைப்பு" சார்பில் போட்டியிட்ட கவிஞர் தாமரை 31,181 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பெற்றார். திமுக வேட்பாளர் ஆனந்தை விட 21180 வாக்குகள் இவர் அதிகம் பெற்றார். ஆனந்த் 10001 வாக்குகள் பெற்றார்.
கருணாநிதி போராடி வெற்றிதிருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு. கருணாநிதி பெரும் போராட்டத்திற்குப் பின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பெற்றார். முதல் சுற்று எண்ணிக்கையின் போது அதிமுகவின் குடவாசல் ராஜேந்திரன் முன்னணியில் இருந்தார். அடுத்தடுத்த சுற்றுக்களிலும் அவரே முன்னணியில் இருந்தார். இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் கருணாநிதி 176 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பெற்றது. மறுவாக்கு எண்ணிக்கை வேண்டும் என்ற குடவாசல் ராஜேந்திரனின் கோரிக்கை தேர்தல் கமிஷனால் நிராகரிக்கப்பட்டது. அதுகுறித்து வருந்திய அவரிடம், தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜெயலிதா, “கவலைப்படாதீர்கள். நீங்கள் தான் உண்மையாகவே வெற்றி பெற்றிருக்கிறீர்கள். உங்கள் உழைப்பிற்கு சரியான பரிசு காத்திருக்கிறது. திருவாரூரே உங்களுக்குத்தான்” என்று ஆறுதல் கூறினார். இதனால் அவரும், அதிமுக தொண்டர்களுடம் உற்சாகத்தில் உள்ளனர்.
விஜயகாந்த் வெற்றிரிஷிவந்தியம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிவராஜை விட விட 93112 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். இது பற்றி அவர் நிருபர் சந்திப்பில் “போட்டியிட்ட 41 இடங்களில் 34 இடங்களில் தேமுதிக வென்று தான் ஒரு பலமான கட்சி என்பதை நிரூபித்துள்ளது. நாங்கள் தோழமைக் கட்சியாகவும் ஆக்கபூர்வமான எதிர்கட்சியாகவும் செயல்படுவோம்” என்றார். ”நீங்கள் துணை முதல்வர் பதவி ஏற்பீர்களா?” என்று நிருபர்கள் கேட்டதற்கு, “நான் மக்களுடன் கூட்டணி வைத்துள்ளேன். மக்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படிச் செய்வேன். தன்மானத்திற்காகப் பதவியை அடகு வைக்க மாட்டேன்” என்றார் கண்கள் சிவக்க, ஆவேசத்துடன். உடனிருந்த பண்ருட்டி ராமசந்திரன் ”அது குறித்து பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்” என்றார். நடிகர் அருண்பாண்டியன், மாஃபா பாண்டியராஜன் போன்ற தேமுதிகவின் வெற்றி வேட்பாளர்களும் உடன் இருந்தனர்.
”கூட்டணி கட்சிகளுக்கு மந்திரிசபையில் இடம் கிடையாது” - ஜெயலலிதா திட்டவட்ட அறிவிப்பு
மே,14. போட்டியிட்ட 160 தொகுதிகளில் 148 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் வெற்றி குறித்து நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜெயலலிதா ”கூட்டணிக் கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் கிடையாது” என திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது குறித்துப் பேசிய அவர், ”மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்பது எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து பின்பற்றப்படும் கழகக் கொள்கை. அதில் அணுவளவும் மாற்றமில்லை” என்றார்.
இது குறித்து தேமுதிக என்ன முடிவெடுக்கும் என தொண்டர்கள் ஆர்வத்துடன் கட்சி அலுவலகத்தில் குவிந்ததால் கோயம்பேட்டில் நேற்று பெரும் கிள்ளு முள்ளு ஏற்பட்டது. வெளியூருக்குச் செல்லும் பயணிகள் ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். அதனால் அவர்கள் விஜயகாந்தின் திருமண மண்டபத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு இலவசக் குடிநீரும், பிரியாணியும், தயிர்சாதப் பொட்டலமும், ஐஸ்க்ரீமும் வழங்கினார் விஜயகாந்த். இலவசமாக அதை வாங்கித் தின்றுவிட்டு சிலர் உற்சாக மிகுதியில் “வருங்கால முதல்வர், இலவச நாயகன் விஜயகாந்த் வாழ்க, வாழ்க” என கோஷம் எழுப்பினர். இலவச பிரியாணியோடு இலவச குவார்ட்டரும் தருவதாக வாந்தி பரவியதால் பெருங்குடி மக்கள் பலரும் திரண்டு வந்தனர். அதனால் கோயம்பேடு ஏரியாவே பரபரப்புடன் காணப்பட்டது.
வை.கோ. வாழ்த்துமே.14. தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதை அறிந்த வைகோ அவருக்கு ஃபேக்ஸ் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அமெரிக்காவில், தனது மகள் வீட்டில் இருக்கும் வைகோ, தான் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் ஜெயலிதாவின் வெற்றி அவரது துணிச்சலையும், தன்னம்பிக்கையையும் பறை சாற்றுவதாகவும், இந்த அன்புச் சகோதரனின் அன்பும், ஆதரவும் அவருக்கு எப்போதும் உண்டு என்றும், மக்களுக்கு இலவசங்கள் பல தந்து நீடித்த நல்லாட்டரி தர வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
சசிகலா துணை முதல்வர் ?
தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் சில சட்ட விதிகளின் படி சசிகலா துணை முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கிறார் என போயஸ் பட்சி கூறுகிறது. அரசியல் சட்ட விதி 82/ஏ14ன் படி சசிகலா துணை முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும் பின்னர் அவர் ஏதேனும் ஒரு சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்கிறார் நமது சிறப்பு நிருபர்.
இதுபற்றி விஜயகாந்தின் கருத்தை அறிய பல முறை நமது சிறப்பு நிருபர் தொடர்பு கொண்ட நிலையில், “இந்த எண் உபயோகத்திள் இல்ளை” என்ற கரகரப்பான ஆண்குரலே திரும்பத் திரும்பப் பதிலாக வந்ததால் நிருபர் குழம்பினார்.
”புரட்சித் தாய்” ஜெயலலிதாவுக்கு வீரமணி பாராட்டு
தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று ஜெயலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடந்த அந்தச் சந்திப்பில் பேசிய வீரமணி ”மணியம்மை போல் மாதர்குல மாணிக்கமாக ஜெயலலிதா திகழ்வதாகவும், பல்வேறு சதிகளையும், சிக்கல்களையும் எதிர் கொண்டு, சமூக நீதி காத்து வென்ற அவரைக் காணும் போது புறநானூற்றின் புரட்சித் தாய் தான் தனது நினைவுக்கு வருவதாகவும் குறிப்பிட்டார். பத்திரிகையாளர் சோ. ராமசாமி, இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகரன், ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, ச.ம.க. தலைவர் சரத்குமார், புதிய தமிழகம் கிருஷ்ணாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உடன் இருந்தனர்.
ராகுல் சந்திப்பு?
டெல்லியின் நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து வந்த தகவல்படி விரைவில் ஜெயலலிதாவை ராகுல் காந்தி சந்திப்பார் என்றும், மத்திய மந்திரி சபை விரிவாக்கம் குறித்து அவருடன் பேசுவார் என்றும் தெரிய வருகிறது. அதிமுகவை காங்கிரஸிற்கு இழுப்பதன் மூலம் தேர்தலில் சீட் ஒதுக்குவதில் தங்களுக்கு பலவிதங்களிலும் குடைச்சல் கொடுத்த திமுகவிற்கு ராகுல் செக் வைப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் புதிய கவர்னராக ஜெயலலிதாவின் அன்பிற்குரிய வடநாட்டு காங்கிரஸ் தலைவர் (அம்பிகா சோனி) யாரேனும் நியமிக்கப்படுவார் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
அழகிரி அமெரிக்கா பயணம்தான் நிறுத்திய வேட்பாளர்கள் பலரை தனது ’பல’த்தால் வெற்றி பெற வைத்த அழகிரி, ஓய்விற்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். புதிய தொழில் தொடங்குவதற்காகவே அவர் அமெரிக்கா சென்றுள்ளார் என்றும், ஓபாமாவைச் சந்தித்து மதுரைக்கு வர அழைப்பு விடுக்கவே அவர் அமெரிக்கா சென்றுள்ளார் என்றும், ஓய்வெடுக்கச் சென்றுள்ளார் என்றும் பலதரப்பட்ட தகவல்கள் கூறப்படுகின்றன.
கார்த்திக் எங்கே?
நா.ம.க. என்னும் புதிய கட்சியை உருவாக்கித் தேர்தலைச் சந்தித்த நடிகர் கார்த்திக் படு தோல்வி அடைந்தார். இந்நிலையில் தேர்தல் முடிவு பற்றி அவரது கருத்தை அறிய அவரைத் தொடபு கொண்ட போது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. வீட்டிலும் அவர் இல்லை. ஓய்வெடுப்பதற்காக கார்த்திக், காஷ்மீர் சென்றிருப்பதாக அவரது நண்பர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.
சாயிபாபாவிடம் ஸ்டாலின் ஆசிமே, 14. திமுக படு தோல்வியைச் சந்தித்தபோதும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், பி.ஏ. வெற்றி பெற்றார். அவர் நேற்றிரவு புட்டபர்த்தி சாயிபாபாவைச் சந்தித்து தனது வெற்றிக்காக ஆசி பெற்றார். அப்போது அவர் உடல்நலம் பற்றி விசாரித்ததாக தெரிகிறது.
தமிழன் ஒரு முட்டாள் - கருணாநிதி கடும் தாக்கு
மே.14. நடந்து முடிந்த தேர்தலில் கருணாநிதி தலைமையிலான திமுக படு தோல்வியைச் சந்தித்துள்ளது. 45 தொகுதிகளில் மட்டுமே அக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து நிருபர்களின் கேள்விக்கு கருணாநிதி அளித்த பதில்.
கே: திமுக கூட்டணி படு தோல்வியைச் சந்தித்துள்ளதே!
ப: தோல்வி ஒன்றும் கழகத்திற்குப் புதிதல்ல. அண்ணாவே ஒரு காலத்தில் தோற்றுப் போனவர்தான். காமராஜர் கூட தோற்றுப் போனவர் தான். இந்த தோல்வி கமா(ராஜர்) தான் புல்-ஸ்டாப் இல்லை. ஆனாலும் இதைத் தோல்வி என்பதை விட ஆரியச் சதி, நம்பிக்கைத் துரோகம் என்றுதான் சொல்ல வேண்டும். கழகத்துடன் கூட்டணி அமைத்திருந்த சில கட்சியினர் கடைசி நேரத்தில் ஆரிய, பார்ப்பன கைக்கூலிகளின் சதிக்கு இரையாகி கழகத்துக்கு எதிராகச் செயல்பட்டனர். அதனால் தான் தோல்வியுற நேர்ந்தது.
கே: அவர்கள் யார்?
“கை” புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா? ”களை”களை விடுத்து மரங்களை வெட்டுவது யார் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியுமே!
கே: பல இலவசத் திட்டங்கள் அறிவித்தும் மக்கள் திமுகவுக்கு ஆதரவளிக்காதது ஏன்?ப: (கடுகடுத்த முகத்துடன்) தமிழன் ஒரு சோற்றாலடித்த பிண்டம். மரமண்டை. அவனுக்கு என்னதான் தங்கத் தட்டில் உணவு பரிமாறினாலும், அந்த நன்றியை மறந்து ....... இலைச் சோற்றைத் தேடி ஓடும் முட்டாளாகத்தான் அவன் இருக்கிறான். மேனா மினுக்கிகளின் மின்னலங்காரப் பேச்சிற்கு மயங்கி ஏமாந்து விடுவதே அவனது வாடிக்கையாக இருக்கிறது. தமிழனையும், தமிழ்நாட்டையும் இனி எந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.
கே: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தினால் தான் இந்தத் தோல்வி என்று கருதுகிறீர்களா?
ப: (கோபத்துடன்) ’ஸ்பெக்ட்ரம்’ என்பதே ஒரு போலியான பிரச்சனை. கழகத்தை வீழ்த்த பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கிய மாயைதான் ஸ்பெக்ட்ரம். திமுகவை நிர்மூலம் செய்ய வடநாட்டு ஊடகங்களும், ஆரிய சக்திகளும் ஒன்று சேர்ந்து செய்த சதி. ஒருவேளை அப்படியே ஊழல் நடந்திருந்தாலும் ’ராசா’ ஒருவர் மட்டுமே அதனைச் செய்திருக்க முடியுமா? யார், யார் “கை”கள் எல்லாம் அதில் உள்ளன என்ற விவரங்களை, சிறையிலிருந்து மீண்டு வந்து விரைவில் ’ராசா’ உங்களுக்குத் தெரிவிப்பார்.
கே: யார் எதிர்கட்சி தலைவர் ?
கட்சி செயற்குழு கூடி என்னை எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்க உள்ளார்கள். ஸ்டாலின் துணை எதிர்கட்சி தலைவர்.
கே: தேர்தலில் வென்ற ஜெயலிதாவுக்கு உங்கள் செய்தி என்ன?
ப: ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும்; வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்பதைத் தவிர வேறு எதையும் சொல்ல நான் விரும்பவில்லை. நோ கமெண்ட்ஸ்
கே: இனி என்ன செய்ய இருக்கிறீர்கள்?
ப: (ஆத்திரத்துடன்) என்னவோ செய்யப் போகிறேன். உனக்கென்ன? நீ அந்தக் கட்சி ஆளா? உன் வீட்டிற்குச் சாப்பாட்டிற்கு வரமாட்டேன். போய்யா... சொல்லிவிட்டு கலைஞர் கடுகடுத்த முகத்துடன் காரில் ஏறிச் சென்றார்.
ராமதாஸ் வாழ்த்து மே.14. திமுக கட்சியில் 30 தொகுதிகளில் போட்டியிட்டு 21 தொகுதிகளில் வென்றிருக்கும் ராமதாஸ் அதிமுக வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இன்று மதியம் அவர் விடுத்த அறிக்கையில், “அதிமுக மகத்தான வெற்றி அடையும் என்பது நான் முன்னமே எதிர்பார்த்ததுதான். அதிமுவுடன் கூட்டணி அமைக்கவே பாமக பொதுக்குழு முடிவெடுத்திருந்தது. எத்தனை தொகுதிகள் என்று பேசியும் கூட முடித்து விட்டிருந்தோம். பொதுக்குழு பழைய டப்பாவில் ஓட்டு போட்டது ( என்று ஒரு டப்பாவை தூக்கி காண்பிக்கிறார்). ஆனால் பத்திரிகை கொடுக்கப் போன இடத்தில் எங்களை மிரட்டிக் கையெழுத்து வாங்கி விட்டனர். அதனால்தான் திமுக கூட்டணி அமைந்தது. அதிமுக கூட்டணிக்கு எங்கள் நிபந்தனையற்ற ஆதரவு எப்போதும் உண்டு. அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட், மந்திரி பதவி இது மட்டும் கிடைக்க ஏற்பாடு செய்தால் போதும். வேறு எந்த நிபந்தனையும் இல்லை. அன்பு சகோதரி ஜெயலலிதாவுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். உடன் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளனும் ராமதாஸ் கூற்றை ஆதரித்துப் பேசினார். கையில் மண்வெட்டியுடன் காடுவெட்டி குரு உடன் இருந்தார்.
ஜெ-எஸ்.வி.சேகர் சந்திப்பு
மே.14. ஜெயலலிதாவை நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று மாலை சந்தித்துப் பேசினார். மீண்டும் அதிமுகவில் இணையப் போகிறீர்களா என்ற கேள்விக்கு அவர், மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்பு இது என்றும், தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஜெயலலிதாவை வாழ்த்தவே தாம் வந்ததாகவும் குறிப்பிட்டார். தேர்தலில் காங்கிரஸ் கட்சி உங்களை ஏன் சரிவரப் பயன்படுத்தவில்லை, சீட் அளிக்கவில்லை என்ற கேள்விக்கு அவர், “காங்கிரஸ் பெரிய கட்சி. கோஷ்டிகள் நிறைய இருக்கின்றன. அந்தந்தக் கோஷ்டியைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்புத்தர வேண்டும் என்பதற்காகவே எனக்கு வாய்ப்புத்தரப்படவில்லை ” என்றார். நீங்கள் மயிலையில் தீவிரமாகப் பிரசாரம் செய்தும் காங்கிரஸ் ஏன் தோற்றது என்ற கேள்விக்கு, ”நான் பிரச்சாரம் செய்ததால்தான் தோற்றது என்கின்றீர்களா? ஒருவேளை எனக்கு சீட் கொடுக்காததினால் கூடத் தோற்றிருக்கலாம் இல்லையா?” என்றார் நகைச்சுவையாக. மேலும் கேள்விகள் கேட்க நிருபர் முற்பட்டதற்கு தான் அவசரமாக ‘அல்வா’ நாடகம் போட வாணி மஹால் செல்ல வேண்டி இருப்பதால் பிறகு போன் செய்யுமாறும், எப்போதும் நான் தான் போன் எடுப்பேன் என்றும் கூறினார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸின் தலைவர்?நடந்து முடிந்த தேர்தலில் திமுக + காங்கிரஸ் கூட்டணி பெருந்தோல்வியைச் சந்தித்துள்ளது. இதற்கு செயல்பட முடியாத தலைவராக இருந்த தங்கபாலுதான் காரணம் என்றும், தார்மீகப் பொறுபேற்று அவர் பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். ஃபேக்ஸ் மற்றும் தந்தி மூலம் அவர்கள் இத்தகவலை சோனியாவுக்குத் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தமிழக காங்கிரஸ் தலைமை மாற்றப்படலாம் என்றும் இளங்கோவனோ, வசந்த & கோ வசந்தகுமாரோ அல்லது வாசன் ஆதரவாளர் யாரேனுமோ தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் காங்கிரஸ் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்று காலை தங்கபாலு எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் என இருதரப்பினரும் சத்தியமூர்த்தி பவன் முன்பு ஒன்று கூடி ஒருவர் வேட்டியை ஒருவர் கிழித்துக் கொண்டு அங்கும் ஓடி, உரக்கக் கூச்சலிட்டனர். இதைப் படம் பிடிக்கச் சென்ற கேமரா மேனின் பேண்ட் அவிழ்ந்தது. அவர் தப்பித்தோம், பிழைத்தோம் என ஒரு கையில் கேமராவையும், மறுகையில் அண்டர் வேரையும் பிடித்துக் கொண்டு சாலையில் ஓடியது பார்க்கவே பரிதாபமாக இருந்தது. காங்கிரஸார் சிலர் அந்தக் கேமரா மேனைத் துரத்திக் கொண்டு ஓடினர். ஏதோ சினிமா ஷூட்டிங்தான் நடக்கிறது என நினைத்து மக்கள் வேடிக்கை பார்த்தனர்.
”நோ கமெண்ட்ஸ்” ரஜினி
மே.13. நேற்று திருவல்லிக்கேணி ராகவேந்திரா கோயிலுக்கு ரஜினி சாமி கும்பிட வந்திருந்தார். செய்தி அறிந்து ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் திரண்டனர். அவர்களிடம், நீண்ட நாளைக்குப் பிறகு இங்கு வந்து சாமி கும்பிடுவது மனதிற்கு மிகவும் நிறைவாக இருப்பதாக ரஜினி தெரிவித்தார். ”விருந்து எப்போது?” என்று ஒருபுறம் ரசிகர்களும், “ஜெயலலிதா வெற்றி குறித்து உங்கள் கருத்து என்ன?” என்று பத்திரிகையாளர்களும் ஒரே சமயத்தில் கேட்டனர். “வாழ்த்துக்கள்” என்று முதலில் கூறியவர், பின்னர் ”நோ கமெண்ட்ஸ்” என்று கூறி விட்டுக் காரில் பறந்து விட்டார். எதற்கு எந்த பதில் என்று தெரியாமல் பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் குழம்பி நின்றனர். ரஜினி இந்திய கிரிக்கெட் அணி அணியும் நீல நிற T-Shirtடன் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ - அஜீத், விஜய் சந்திப்பு
தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற ஜெயலலிதாவை நடிகர்கள் அஜீத் மற்றும் விஜய் குடும்பத்துடன் நேற்றுச் சந்தித்தனர். தங்கள் வெளிநாட்டுப் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு வந்த இருவரும் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்து கூறியதுடன், அவர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர். நடிகை குஷ்பு மற்றும் சுந்தர்.சி ஆகியோர் விரைவில் ஜெயலலிதாவைச் சந்திப்பார்கள் என சினிமா வட்டாரம் கூறுகிறது.
”கஜானா காலி?” தமிழக அரசின் கஜானா கிட்டத்தட்ட காலியாக இருப்பதாகவும் அதில் எலி புழுக்கை மட்டும் தான் இருக்கிறது எனவே தேர்தல் அறிக்கையில் கூறியபடி பல நலத்திட்ட உதவிகளை ஜெயலலிதா அரசு செயல்படுத்துவது மிகவும் கடினம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிதி ஆதாரத்தைப் பெருக்க என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என ஜெயலலிதா நேற்று முக்கிய அதிகாரிகளுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். சசிகலா, மகாதேவன், சகாதேவன், தினகரன், பாஸ்கரன், சுதாகாரன், ராமன், லட்சுமணன், கோவிந்த்ன், ராவணன், ராமச்சந்திரன், ராமசாமி, கோவிந்தசாமி, பெருமாள்சாமி, முத்துசாமி, முனியசாமி ஆகியோர் அதில் கலந்து கொண்டனர். இறுதியில் ஒவ்வொரு எம்.எல்.ஏக்களும் 100 ஆடுகள் மற்றும் 1000 கோழிகளை வளர்த்து மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றும், மந்திரிகளாக நியமிக்கப்படுவோர் நூறு மாடுகளை மேய்த்துப் பராமரித்து தங்கள் தொகுதி மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஒருவேளை ஆடு, மாடுகள் பற்றாக்குறை ஏற்பட்டால் அவற்றை பீகாரிலிருந்து இறக்குமதி செய்வோம் என அத்துறைக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட இருக்கும் பசுநேசன் நடிகர் ராமராஜன் தெரிவித்தார். பசு மாடு வளார்ப்பு திட்டம் பற்றி விரைவில் பி.ஜே.பி முக்கிய தலைவர் அத்வானியுடன் பேசுவார் என்று தெரிகிறது. பேசாமல் பசுவிற்கு பதில் வெள்ளை பன்றி கொடுத்துவிடலாம் என்ற முடிவிலும் இருக்கிறார் ஜெயலலிதா. இது குறித்து ஏற்கனவே கிழக்கு பதிப்பகம் உரிமையாளர் பத்ரியிடம் பேசவிருக்கிறார் என்கிறது கட்சி வட்டாரம்.
”முதல்வருக்குப் பாராட்டு” ராமநாராயணன் அறிவிப்புதிரைப்பட கலைஞர்கள் அடுத்த வாரம் ஒன்று கூடி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்கிறார்கள். எதற்கு என்ற விவரம் பிறகு அறிவிக்கப்படும். விஜய் தலைமை தாங்க, மற்ற நடிகர்கள், நடிகைகள் கலந்துக்கொள்கிறார்கள். விசு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று தெரிகிறது. குஷ்பு, விவேக் வடிவேலு கலந்துக்கொள்வார்களா ? என்று தெரியாத நிலையில் தமிழக மக்கள் குழம்பி போய் இருக்கிறார்கள். விஜய்காந்த் அடுத்த பட படப்பிடிப்பில் இருப்பதால் அவர் கலந்துக்கொள்ளுவதும் சந்தேகம் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். நிருபர்களிடம் பேசிய ராமநாராயணன் "தேதி அம்மா அனுமதி பெற்ற பின்னர் அறிவிக்கப்படும்" என்றார்.
வடிவேலு உணர்ச்சி பேட்டி:
நடிகர் வடிவேலு, தான் ஒரு நடிகர் என்ற முறையில் விஜயகாந்தை சும்மா எதிர்த்துப் பேசுவது போல நடித்துப் பிரசாரம் செய்ததாகவும், விஜயகாந்த் தனது அண்ணன் போன்றவர். "எங்கள் அண்ணன்" படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது என்றும் நாங்கள் ஒரே ஊர்க்காரர்கள் என்றும் சொன்னார். தண்ணி கமெண்ட் பற்றி எடக்கு மடக்கு நிருபர் கேட்ட் கேள்விக்கு "தண்ணி அடிப்பது என்ன தப்பா ? அரசே டாஸ்மார்க் கடைகளை நடத்துகிறார்கள். அப்படி என்றால் அது தப்பு இல்லை என்று தானே அர்த்தம் ?" விரைவில் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று சேர்ந்து தண்ணி அடிப்பேன் இதில் என்ன தப்பு ? இரண்டு நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் தண்ணி ஒரு அங்கம். ஏன் இந்தியா ஜெயித்த போது சச்சின் மைதானத்தில் குடித்தாரே ? அதனால் தண்ணி அடிப்பது தப்பில்லை. தனக்கும் விஜயகாந்திற்கும் பிரச்சனை ஏற்பட சிங்கமுத்துதான் காரணம் என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். ’அம்மா’ என்றைக்குமே தனக்கு “அம்மா” தான் என்றும், விரைவில் அம்மாவைச் சந்தித்து தாம் ஆசி பெற இருப்பதாகவும் கூறினார்.
இலக்கிய பயணம் தொடரும்.. கனிமொழி அறிவிப்பு
தான் அரசியலிலிருந்து விலகப் போவதாக கனிமொழி அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதிய 100 நூல்களின் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நேப்பியர் பாலம் அருகே நடந்தது. அதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய கனிமொழி, தான் அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் ஒருவித சலிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இனி அரசியலில் இருந்து விலகி, சாருவைப் போல தீவிர இலக்கியம் படைக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். ”சாருவைப் போல நானும் அடுத்த ஆண்டுக்குள் நூறு கவிதை நூல்களை, இல்லை... இல்லை... 108 கவிதை நூல்களை எழுதி வெளியிடப் போகிறேன்” என்று அவர் அறிவித்ததும், உடனிருந்த பதிப்பாளர் அதிர்ச்சி அடைந்தார் (அவருக்கு பேப்பர் கவலை.)உடனே அதைக் கரவொலி எழுப்பி ஆமோதித்த சாரு, “கனிமொழி சிறந்த கவிஞர் . எரிகா யங் கவிதைகளை விட கனிமொழியின் கவிதைகள் ஆயிரம் மடங்கு உயர்வானவை. அவருக்கு நிச்சயம் ஆஸ்கர் பரிசு கிடைக்கும்” என்று கூறினார். கடைசியாக நன்றியுரை கூற வந்த வந்த மிஷ்கின் தான் அடுத்து எடுக்க போகும் படம் பற்றி பேசிவிட்டு நன்றியுரையாற்றினார்.
”அயல்நாட்டு சதி” சுப்ரமண்ய சாமி பரபரப்புக் குற்றச்சாட்டு
ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமண்ய சாமி, பாரதிய ஜனதாக் கட்சியுன் கூட்டணி அமைத்து இத் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தலில் அவர் கட்சி தோல்வி அடைந்ததுடன், அவரது வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். நேற்று இரவு அமெரிக்கா புறப்படுமுன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ”இந்த எலக்ஷன் செல்லாது. அதிமுக, திமுக இரண்டு பேரும் ஒண்ணு சேந்து நிறைய தில்லுமுல்லு பண்ணிதான் ஜெயிச்சிருக்கா. இரண்டு பேருமே ரகசிய உடன்படிக்கை செஞ்சுண்டுதான் இந்தத் தேர்தலைச் சந்திச்சிருக்கா. காங்கிரஸை எப்படியாவது தமிழகத்தில் இருந்து விரட்டணும். இருந்த இடம் தெரியாமச் செய்யணும். அதே போல வைகோவையும் ஒண்ணுமில்லாமப் பண்ணிடனுங்கறதுதான் அவா திட்டம். அவா ரெண்டு பேரும் வளந்தா தங்களோட கட்சி எதிர்காலத்துக்கு பாதிப்புன்னுதான் இவா இப்படி பண்ணியிருக்கா. இதுபத்தி ஸ்டாலினும் ஜெயலலிதாவும் சந்திச்சிப் பேசுன ரகசிய வீடியோ என் கிட்ட இருக்கு. அந்த வீடீயோக்களை எல்லாம் என் பென் ட்ரைவில வச்சிருக்கேன். சமயம் வரும் போது அதை நா வெளியிடுவேன். இப்போ லிபியா பிரச்சனை பத்திப் பேச ஒபாமா என்ன அர்ஜெண்டா கூப்பிட்டிருக்கார். அதுக்காக அமெரிக்கா போறேன்” என்றார்.
கருணாநிதி கவிதை
தேர்தல் தோல்வி குறித்து கருணாநிதி உள்ளத்தை உருக்கும் கவிதை ஒன்றை முரசொலியில் எழுதியிருக்கிறார். முனிமலர் வாசகர்களுக்காக அந்தக் கவிதை இங்கே....
தமிழர்களே தமிழர்களே
தற்குறியான தமிழர்களே
ஆரிய சதிக்கு
அல்லக்கை ஆன
அறிவு மறந்த தமிழர்களே
அன்று பட்டதை மறந்து போனீரா...
மேனா மினுக்கிகளிடம் மயங்கிப் போனீரா...
டி.வி., கேஸ், அரிசி என்று
வேண்டிய மட்டும் இலவசம் பெற்றீரே...
வேளா வேளைக்குத் தின்று கொழுத்தீரே
வாக்களிக்க ஏன் மறந்தீர்..
உதய சூரியனை ஏன் துறந்தீர்...சோற்றாலடித்த பிண்டமே
சொரணை கெட்ட முண்டமே
பார்ப்பனச் ச(க)திகளுக்கு
பகடையாகிப் போன
பஞ்சப் பரதேசி தண்டமே
என்று திட்டுபவன் அல்ல
இந்தக் கருணாநிதி
அன்று முதல் இன்று வரை
யார் யாரோ முதுகில் குத்தினாலும்
குத்தியவர்களையும் முதுகில் சுமக்கும்
அதிர்ஷ்டக்கட்டைதான் இந்தக் கருணாநிதி
என் ராசி நல்ல ராசி
என் ஜாதகம் அப்படி ஒரு ஜாதகம்
நான் சாத்திரம் அறியா சூத்திரன்
ஆனாலும்
உன் குத்தும் எனக்குச் சொத்துதான்
நீயும் எனக்கு முத்துதான்
முதுகில் மட்டுமல்ல
இதயத்திலும் குத்து
எதையும் தாங்குபவன்
இதையும் தாங்குவேன்
இனிமையாய் வாழ்த்துவேன்
தமிழா.....
தமிழா.....
- என்று முடித்துள்ளார்.
இந்தக் கவிதையைப் படித்து விட்டு பிரபல பதிப்பாளர் ஒருவர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதது பார்க்கப் ப(த்)ரிதாபமாக இருந்தது, அவருக்கு இட்லி வடை வாங்கிக் கொடுத்துத் தேற்றினர்.
விரைவில் அடுத்த முனி மலர்.. :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, April 04, 2011
முனிமலர் 4-4-2011
Posted by IdlyVadai at 4/04/2011 11:00:00 AM
Labels: முனி மலர்
Subscribe to:
Post Comments (Atom)











42 Comments:
//இந்தக் கவிதையைப் படித்து விட்டு பிரபல பதிப்பாளர் ஒருவர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதது பார்க்கப் ப(த்)ரிதாபமாக இருந்தது, அவருக்கு இட்லி வடை வாங்கிக் கொடுத்துத் தேற்றினர்.//
இதுதான்யா மஞ்சள் கமெண்ட்.
:-))))
IV
Pinni pedal edukareenga!!!!!
சூப்பர் இட்லிவடை. சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனா சீட் கணக்கு கொஞ்சம் சரியா வரலையே.
Nice one
Great imagination with excellent humor. The comment from each person seems to reflect their character.
இந்த முழு முனி மலரும் அநங்கன் எழுதியது என் பங்கு வெறும் 10% தான். அதனால் எல்லா புகழும் அவருக்கே !
supeeeeeeeeeerrrr
"எலி புழுக்கையை மட்டும் எப்படி விட்டோம்? "
"கரண்ட் கட் ஆகி விட்டதால் கண்ணுக்கு தெரிய வில்லை!"
நிசமா நடந்தாலும் நடக்கும்!! :-))
நாட்டு நடப்பை இவ்வளவு துல்லியமாக எழுதியிருப்பதற்கு பாராட்டுகள்! - மே 15, 2011
அய்யோஓஓ அய்யோ ஓ ஓ. சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிருச்சி. ரொம்ப நாளைக்கு அப்புறம் மனசு விட்டுச் சிரிச்சேன். ஆபிஸால எல்லோரும் ஒரு மாதிரியா பார்க்குற அளவுக்கு.
சூப்பர் இவ. கலக்குங்க. அடுத்த முனிமலரை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
சுதா
யோவ் திமுக ஜால்ரா அநங்கன்,
வெட்கமாக இல்லை? இப்படி நகைச்சுவை என்ற பெயரில் திமுக அல்லக்கை ஆக மாறி அய்யாவுக்கு சொம்பு தூக்கியிருக்கிறாயே, கேவலமாக இருக்கிறது. முகமூடியைக் கலைத்து விட்டு வெளியே வா. லூஸு. அதுவும் அந்தக் கவிதை அப்படியே அய்யாவோட மனசைக்காமுக்குதாம். போய்யா
ஹா...ஹா...ஹா...
அசத்தல்...
அதிரடி....
சரவெடி...
தூள்ள்ள்...
இதுல எய்ட்டி பெர்சென்ட் அப்படியே நடக்கத்தான் போகுது பாருங்க.
// இந்நிலையில் நேற்று காலை தங்கபாலு எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் என இருதரப்பினரும் சத்தியமூர்த்தி பவன் முன்பு ஒன்று கூடி ஒருவர் வேட்டியை ஒருவர் கிழித்துக் கொண்டு அங்கும் ஓடி, உரக்கக் கூச்சலிட்டனர்.// இது நூறு பெர்சன்ட் நடக்கப் போகுது!
//பேசாமல் பசுவிற்கு பதில் வெள்ளை பன்றி கொடுத்துவிடலாம் என்ற முடிவிலும் இருக்கிறார் ஜெயலலிதா. இது குறித்து ஏற்கனவே கிழக்கு பதிப்பகம் உரிமையாளர் பத்ரியிடம் பேசவிருக்கிறார் என்கிறது கட்சி வட்டாரம்.//
வெள்ளை பன்றி -கும் கிழக்கு பதிப்பகம் அதிபர் பத்ரி-கும் என்ன கனெக்சன் இப்போ தெரீயோணும்? இல்லை ஆட்டோ வரும்
Super! super!! super!!!
கருணாநிதி அப்படியே முனிமலர் எழுதியுள்ள அறிக்கையை அச்சடிக்கக் கொடுத்து விட்டாராம்....
இந்த மாதிரி மொக்கை காமெடி பண்ற அநங்கனையும் இ.வ. யையும் விஜய்காந்தை விட்டு நாலு மொத்த வேண்டும். மகராஜாவாக ஆகாட்டியும் மொக்கராஜா வாகவாவது ஆகிவிடலாம்
இந்த குடிகார கோமாளி நல்லா ஒளருறான்.. அண்ணா தி மு க கொள்கை ஜெயில் ல இருக்குனு குடிச்சிட்டு ஒளறி நல்ல வாங்கி கட்டிகிட்டான் ..
If not all,most of what you have mentioned will happen in the event of AIADMK winning.Hats off to yet another piece of humorous writing.
Idlyvadai Always Rocks :)
நடிகர்கள் செய்யும் கீழ்த்தரமான பிரசாரங்களை பொதுமக்கள் ஏற்பதில்லை; எதிர்க்கிறார்கள், விஜயகாந்த் கொள்கைகளைப் பற்றிப் பேசாமல், பாட்டிலைப் பற்றியே பேசுகிறார் என்று ஊட்டியில் செய்தியாளரிடம் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.
ஊட்டியில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி செய்தியாளர்களின் சந்திப்பின் போது ,நடிகர் விஜயகாந்த் ஒரு ஜானிவாக்கர் என்றார் ,தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னத்துக்கு பதிலாக மதுபாட்டில் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றார்.
மேல்தட்டு மக்களின் அல்பாசை பட்டவர்த்தனமாக தெரிகிறது.
அவர்களின் முகத்தில் மக்கள் கரியை அப்ப போகிறார்கள்.
இந்த மாதிரி மொக்கை காமெடி பண்ற அநங்கனையும் இ.வ. யையும் விஜய்காந்தை விட்டு நாலு மொத்த வேண்டும். மகராஜாவாக ஆகாட்டியும் மொக்கராஜா வாகவாவது ஆகிவிடலாம்
well said...
kadi thaangala and stupid post
over mokkai
//மேல்தட்டு மக்களின் அல்பாசை பட்டவர்த்தனமாக தெரிகிறது.
அவர்களின் முகத்தில் மக்கள் கரியை அப்ப போகிறார்கள்.//
I thought web was anonymous?
பிரமாதம்.அனைத்தும் அருமை
இலவசத்தை நக்கல் அடித்து வறட்டு நகைச்சுவையாய் ஒரு நாடகத்தை எழுதிய ”அநங்கன்” எழுதியதா இது என்று நம்ப முடியிவில்லை.
பொதுவாவே சுப்பிரமணிய சாமி இப்படி பேசுவதால் அதில் சிறப்பேதுமில்லை.
சுவராஸ்யமான விஷயங்கள் கூட அதீத நீளத்தின் காரணமாக அதன் வீரியத்தை இழக்கலாம். கலைஞர் கவிதை , சு.சாமி போன்றவற்றை நீக்கியிருந்தால் நலம்.
Good one...hope this happens in reality. I didnt like Subramany Swamy's part. We should be thankful to him for his courage and hardwork in bringing out 2G scam. Let us atleast stop treating him like other jokers.
கல்கி 3.4.2011
கடந்த தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியால் பயன் பெற்றவர்களில் இளைஞர்கள் அதிகம் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை ஆராய்ந்ததில் தெரிந்த விஷயங்கள்:
5 ஆண்டுகளில் 12 புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு கல்லூரிகூட தொடங்கப்படவில்லை.
பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு சுமையான ஒரு விஷயமாகவும், வசதிகளும், வாய்ப்புகளும் இருப்பதால் நுழைவுத் தேர்வின் மதிப்பெண்கள் பெற்று நகர்ப்புற மாணவர்கள் அதிகம் பொறியியல் கல்லூரிகளில் இடம் பெற்றுவிடுகிறார்கள் என்பதால், 2007இல் நுழைவுத்தேர்வை ரத்து செய்தது தி.மு.க. அரசு. 2006இல் பொறியியல் படிக்கச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் 24,000 பேர்.
நுழைவுத் தேர்வு ரத்துக்குப் பின்னர் ஆண்டுதோறும் படிப்படியாக இந்த எண்ணிக்கை உயர்ந்து, கடந்த ஆண்டு 54,000-_அய் தொட்டிருக்கிறது. கிராமப்புற இளைஞர்களும், அவர்கள் பெற்றோர்களும் இந்த விஷயத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நுழைவுத்தேர்வு ரத்து செய்த பின்னர் பயின்ற முதல் பேட்ச் பொறியாளர்கள் இந்த ஆண்டு வெளிவரப்போகிறார்கள்.
சுயநிதிக் கல்லூரிகளில் அரசு அனுமதித்த கட்டணத்தில் சீட்டுகளை 50 சதவிகிதமாக உயர்த்தியதில் பல மத்திய தரக் குடும்ப இளைஞர்கள் பயன்பெற்றிருக்கின்றனர்.
பட்டதாரிகள் இல்லாத குடும்பத்திலிருந்து தொழிற்கல்வியில் சேர்பவர்களுக்கு முழு கட்டணச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சலுகை.
கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2500_க்கு மேல் ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். கல்வித் துறையை இரண்டாகப் பிரித்து இரண்டு அமைச்சர்களை நியமித்து, இளைஞர் களுக்குப் பயன்தரும் பல திட்டங்களை தி.மு.க. அரசு செய்திருக்கிறது.
இதன் பலன் தி.மு.கவுக்கு இளைஞர் களின் வோட்டாக மாறுமா? பொறுத் திருந்துதான் பார்க்கவேண்டும்.
இட்லி வடைன்னா ஆழ்வார்பேட்டை கிழக்கு சந்து இட்லிவடைதான் பேஷ் பேஷ் ரொம்ம்ப்ப்ப நன்னாருக்கு. .
ஜெ ஜெயித்து விட்டால் எனும் கற்பனையே... களேபரமா இருக்குது.
1991 ல் செயிச்சு அம்மா போட்ட ஆட்டம் எல்லாம் மறந்து போச்சா...
அன்னைக்கு இருந்ததுக்கும் இன்னைக்கும் என்ன மாறுதல் இருக்குது.
மதிமுகவ கழட்டி விட்டதும், கூட்டணிக்கு மரியாதை தராததும் எல்லாம் அப்படியே இருக்குது.
திமுக வும் மோசம் தான். இருந்தாலும் மோசத்தில திமுக பெட்டர்.
மக்களே இன்னொரு ஜெ ஆட்சி நமக்கு தாங்காது....
பேசாம கார்த்திக்கு, பிஜெபிக்கு, சான்ஸ் கொடுங்க...
வெள்ளை பன்றி -கும் கிழக்கு பதிப்பகம் அதிபர் பத்ரி-கும் என்ன கனெக்சன் இப்போ தெரீயோணும்? இல்லை ஆட்டோ வரும்//
ஹிந்து மட்டும் வாசிச்சா போதுமா, தினதந்தியும் படிக்கோணும் :-)))))))))
உங்களை நீங்களே கிண்டல் பண்ணிக்கிட்டா ’இட்லிவடை’ வேற யாரோன்னு நாங்க நினைச்சிடுவோமா என்ன?
நல்ல முனிமலர் நன்றி பத்ரி
உங்களை நீங்களே கிண்டல் பண்ணிக்கிட்டா ’இட்லிவடை’ வேற யாரோன்னு நாங்க நினைச்சிடுவோமா என்ன?
நல்ல முனிமலர் நன்றி பத்ரி
//வெள்ளை பன்றி -கும் கிழக்கு பதிப்பகம் அதிபர் பத்ரி-கும் என்ன கனெக்சன் இப்போ தெரீயோணும்? இல்லை ஆட்டோ வரும்//
ஹான் ப்ரசன்னாவின் ”நிழல்களை”ப் பாருங்க. விவரம் தெரியும். “இட்லி வடை” உண்மையிலேயே யாருன்னும் புரியும்.
//இலவசத்தை நக்கல் அடித்து வறட்டு நகைச்சுவையாய் ஒரு நாடகத்தை எழுதிய ”அநங்கன்” எழுதியதா இது என்று நம்ப முடியிவில்லை.//
நானும் நம்பலை. எனக்கென்னவோ அநங்கன்னு ஒரு ஆளே இல்லை. எல்லாம் இட்லிவடையின் பினாமி நண்பர்களின் கைங்கர்யம்தான் அது என்று சந்தேகிக்கிறேன்.
ஒருவேளை இட்லிவடையும் அநங்கனும் ஒரே ஆள் தானா? அது சரி அப்போ அது பாராவா, பத்ரியா, ப்ரசன்னாவா, தேசிகனா, பிரகாஷா இல்லை சத்யாவா? ஒரே குழப்பமா இருக்கே ரிஷபம்.
//இலவசத்தை நக்கல் அடித்து வறட்டு நகைச்சுவையாய் ஒரு நாடகத்தை எழுதிய ”அநங்கன்” எழுதியதா இது என்று நம்ப முடியிவில்லை.//
நானும் நம்பலை. எனக்கென்னவோ அநங்கன்னு ஒரு ஆளே இல்லை. எல்லாம் இட்லிவடையின் பினாமி நண்பர்களின் கைங்கர்யம்தான் அது என்று சந்தேகிக்கிறேன்.
ஒருவேளை இட்லிவடையும் அநங்கனும் ஒரே ஆள் தானா? அது சரி அப்போ அது பாராவா, பத்ரியா, ப்ரசன்னாவா, தேசிகனா, பிரகாஷா இல்லை சத்யாவா? ஒரே குழப்பமா இருக்கே ரிஷபம்.
//சுவராஸ்யமான விஷயங்கள் கூட அதீத நீளத்தின் காரணமாக அதன் வீரியத்தை இழக்கலாம். கலைஞர் கவிதை , சு.சாமி போன்றவற்றை நீக்கியிருந்தால் நலம்.//
இல்லை. கலைஞர் கவிதைதான் மலரின் டாப். அதிமுக ஜெயித்தால் இதே மாதிரி ஒரு கவிதை ஒலியில் எதிர்பார்க்கலாம்.
எனிவே குட் ட்ரை.
திருவாரூர் தாத்தா
திருடினது போதாதா?
தி மு க போச்சு
கு மு க வாச்சு!
(குடும்ப முன்னேற்றக் கழகம்)
பதிரியின் வெள்ளை பன்றி வளர்க்கும் திட்டம் வந்தது தினமலரில்- தகவல் உதவி ஹரன் பிரசன்னா
ஒரு சந்தேகம்:
http://koottanchoru.wordpress.com/
இந்தப் பதிவிற்கும் (ஒண்ணரை பக்க நாளேடு) முனிமலருக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா?
Post a Comment