ராஜீவ் காந்தியின் 66 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, தில்லியில் நடைபெற்ற ராஜீவ் காந்தி ஸத்பவன விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி வீரவுரையாற்றினார். இவ்வுரையின் ஹைலைட், "சாதி மத வேறுபாடுகளைத் தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் பெற முனையும் யாரையும் விட்டு வைக்க மாட்டோம்; இந்த ஒரு விஷயத்தில் மட்டும் சமாதானம் செய்து கொள்ளவே முடியாது" என்று எழுச்சியுரையாற்றினார். இவ்விழாவில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட மெளலானா வஹியுதீன் கான் பாராட்டப்பட்டு, பணமுடிப்பு பரிசளிக்கப்பெற்றார்.
இவ்விழாவில் அன்னையின் எழுச்சியுரை, பாரட்டப்படக் கூடியது மட்டுமல்லாமல், மிகவும் துணிச்சலானதுவும் கூட. எப்படியென்று கேட்டால், இவரது பேச்சின் முக்கிய சாராம்சம், சாதி, மத வேறுபாடுகளை தூண்டிவிட்டு, ஆதாயம் பெற முனைபவர்களை தண்டிக்காமல் விட மாட்டோம் என்கிறார். அதாவது ஹிந்துக்களைத் திருடன் என்றும், ஹிந்துக்கள் மங்கலத்திற்காக நெற்றியில் அணியும் திலகத்தை நெற்றியில் ரத்தம் வடிகிறது என்று எள்ளி நகையாடியும், அவ்வப்போது சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஹிந்துக்களின் நம்பிக்கைகளையும், ஹிந்துக்களின் ஆதர்ஸமான ராமன் குடிகாரன் என்றும், எந்த ஐஐடியில் பொறியியல் படித்தான் என்றும் குறிவைத்து சாடுவதையும் வழக்கமாகக் கொண்டிருப்பவர்களுடன் சமரசம் செய்து கொள்வது இயலாது என்று அர்த்தமாகிறது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனையே விஞ்சி விட்டார் என்றால் மிகையல்ல. அன்னையின் இப்பேற்பட்ட மதநல்லிணக்க உணர்வும், தேசிய சிந்தனையும் புல்லரிக்க வைக்கிறது.
இன்னும் சற்று யோசித்தால், சீக்கியக் கலவரத்தில் முக்கியப் பங்காற்றிய காங்கிரஸ் தலைவர்களான ஜகதீஷ் டைட்லர் மற்றும் சஜ்ஜன் குமார் போன்றவர்களுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தக் கூடும். நல்லவேளை, "ஒரு பெரிய மரம் வீழ்ந்தால், பூமி அதிர்வது இயற்கையே" என்று முத்துதிர்த்த தலைவர் இன்று இல்லை; இருந்திருந்தால் அவருடனும் இவ்விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று கூறியிருப்பார். இப்பேற்பட்ட துணிச்சலுடன் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்த பேச்சை பாராட்டாமல் என்ன செய்வது?
அநேகமாக இந்த எச்சரிக்கை கேரள முதல்வர் அச்சுதானந்தனுக்கும் பொருந்துமெனவே தெரிகிறது. கேரளாவை சீரழிக்கும் மத அடிப்படைவாதத்திற்கெதிராக சமீபகாலமாக கருத்து தெரிவித்து வரும் கேரள முதல்வரும், இடதுசாரித் தலைவருமான அச்சுதானந்தன், மற்றும் பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக மதானியைக் கைது செய்துள்ள கர்நாடக அரசு ஆகியவற்றிற்கும் இந்த எச்சரிக்கை செல்லுபடியாகும்.
இவ்வளவெல்லாம் ஏன்? ராமனும், ராமாயணமும் வெறும் கற்பனையே!! எல்லாம் கட்டுக்கதை என்று உச்சநீதி மன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து, ஹிந்துக்களைப் புண்படுத்திய தன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கே மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி செய்யாதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுவன்றோ தேச பக்தி? எத்தனை காந்தி வந்தாலும் இந்த தேச பக்திக்கு ஈடாகுமா?
கருணைகாகக் காத்திருக்கும் அஃப்ஸல் குரு, அஜ்மல் கஸாப் போன்று மனிதக் குருதியில் மதநல்லிணக்கத்திற்காக புனித வேள்வி நிகழ்த்திய தலைவர்களை தண்டிக்க வேண்டும் என கூக்குரலிடும் பண்டாரப் பரதேசிகளான பாஜக, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரீஷத் போன்றவர்களுக்கும், பெரும்பான்மையான ஹிந்துக்களைக் கொண்ட தீவிரவாதிகளான மாவோயிஸ்டுகளுக்கெதிராக கூக்குரலிடுபவர்களுக்கும் இந்த கடும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
தவிர, இனி தனிப்பட்ட ஒரு சாதியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு, தனிப்பட்ட ஒரு மதத்தினருக்கு மட்டும் சலுகைகள் மற்றும் புனிதப் பயணத்திற்கான படிகள், தேர்தலில் ஜாதியை முன்னிறுத்தி வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது, சிறுபான்மையினரை ரட்சிப்பதற்காகவே நாங்கள் அவதரித்துள்ளோம் என்ற வசனம் பேசும் கட்சிகள் போன்ற சமூக அவலங்கள் களையப்பட்டு, மத மற்றும் சமுதாய நல்லிணக்கம் புத்துணர்ச்சி பெறும் என்ற நம்பிக்கையை அன்னையின் வீரவுரை நமக்கெல்லாம் உணர்த்துகிறது.
எங்கோ இருக்கும் ஆர்பஸானோவில் பிறந்து, இந்தியாவில் இருக்கும் ஆண்டிப் பண்டாரங்களுக்காகவே தன்னை அர்பணித்துக் கொண்ட இந்த அற்புதத் தலைவியைப் பெற நாம் என்ன தவம் செய்தோமோ?
- யதிராஜ்
ஓணம் வாழ்த்துகள்!
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, August 23, 2010
மண்டேனா ஒன்று 23/08/2010
Posted by IdlyVadai at 8/23/2010 08:15:00 AM
Labels: அரசியல், யதிராஜ சம்பத் குமார்
Subscribe to:
Post Comments (Atom)











37 Comments:
ரொம்ப சூடா இருக்கு.
//எங்கோ இருக்கும் ஆர்பஸானோவில் பிறந்து, இந்தியாவில் இருக்கும் ஆண்டிப் பண்டாரங்களுக்காகவே தன்னை அர்பணித்துக் கொண்ட இந்த அற்புதத் தலைவியைப் பெற நாம் என்ன தவம் செய்தோமோ?
- யதிராஜ் //
கலக்கல் கேள்வி யதிராஜ் அவர்களே.. ஆனால், பதில் தான் கிடைக்காது...
யார் வந்து, என்ன சொன்னாலும், 2000 / 3000 என்று வாங்கிக்கொண்டு “திருக்குவளை தீய சக்தி”(பெயர் உபயம் ஜெ.ஜெ.) கூட்டணிக்கே எங்கள் ஓட்டு, வாங்கிய நோட்டை டாஸ்மாக்கில் நீட்டு என்றல்லவா எங்களை “அண்ணா” பழக்கி விட்டு விட்டார்... என் செய்வோம்....
வணக்கம். இன்னுமா இவுங்கள நம்பூறீங்க. இன்னும் சின்னப்புள்ளயாவே இருக்கீங்க..
//இந்த அற்புதத் தலைவியைப் பெற நாம் என்ன தவம் செய்தோமோ?// என்னொரு கிண்டல்! இதெல்லாம் கருணாவை மிஞ்சின நடிப்பு என்று தெரியாதா என்ன??
எதிர் கட்சி என்று எதுவுமே உருப்படியா இல்லை. பார்லிமெண்ட் லைவ் பார்த்தால் இவனுக தலைவர்களா என்கிற மாதிரி ஒரு கோமாளிக் கூட்டம். ”இதுவும் கடந்து போகும்” என்பார்களே அது நம்ம நாட்டில் மட்டும் பலிக்கவே பலிக்காதா
அந்தப் படம் எதுக்கு?
Very nice article.....
But ppl still believes her. And to the core they worship her. Plz create awareness to atleast idlyvadai readers. Matha nallinakkam = Anti hindu. Thats the motto.
Very nice article.....
But ppl still believes her. And to the core they worship her. Plz create awareness to atleast idlyvadai readers. Matha nallinakkam = Anti hindu. Thats the motto.
Good posting!!!Good layout designs...
என்னா துவேஷம்!
// ராஜ சுப்ரமணியன் said...
அந்தப் படம் எதுக்கு?//
சோனியா ஓணம் கொண்டாடமாட்டார் போலிருக்கு, அதனால ஓணம் மேக் அப்பில், அசின்(?) படம் போட்டு இட்லி வடை, ஓணம் வாழ்த்துகள் தெரிவித்து இருக்கின்றார்.
இட்லி வடை! எப்போது பெயரை மாற்றினீர்கள்? மலையாளத்தில் ‘இத்லி வத‘ என்றல்லவா இருக்கிறது? இப்படி இருக்கவேண்டும்: ‘ഇട്ലി വട!’
എല്ലാവര്കും എന്റെ ഓണ ആശംസകള്!
பாரதி மணி
ஓணம் வாழ்த்துக்கள்!
Can you please post this as a seperate one.
http://kousalya2010.blogspot.com/2010/08/blog-post_23.html
ஓணம் புடவையில் சோனியா காந்தியின் முகத்தை போட்டிருந்தால், அது மத நல்லிணக்கம். - ஜெ.
யதிராஜின் அப்பட்டமான மத துவேசம் இன்னும் ஒரு முறை இந்த பதிவின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. கோட்சே வுக்கு கொடி பிடித்தவர்தானே இவர்.
யதிராஜின் அப்பட்டமான மத துவேசம் இன்னும் ஒரு முறை இந்த பதிவின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. கோட்சே வுக்கு கொடி பிடித்தவர்தானே இவர்
’’கூட்டணிக்குத்தயார். ஆனால், திமுக-அதிமுக அல்லாத கூட்டணிக்கு தலைமை ஏற்கத்தயார்’’என்று விஜய் காந்த் சொல்லிட்டாரு. இவர் தலைமையை ஏத்துக்கணும்னா சுப்ரமணிய சாமி போன்றவங்க தான் ஒத்துக்குவாங்க. ஆக காங்கிரஸ் அவரோட கூட்டணி சேர வாய்ப்பே இல்லை.
விஜயகாந்தை அம்மாவால் இனியும் நம்பிக்கொண்டிருக்க முடியாது. ஆகவே அம்மாவோட சோனியா கூட்டு சேர்ந்தா தான் நமக்கு நல்லது. அதனால தயவுசெய்து சோனியாவை கிண்டலடிக்க வேண்டாம். அம்மா - சோனியா கூட்டை நீங்கள் விரும்பவில்லை என்றால் கருணாநிதியின் வெற்றியை நீங்கள் மறைமுகமாக வரவேற்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.
யதிராஜின் வழக்கமான பதிவு. அதாவது ஞானமும் சிந்தனையும் குறைவு. இவருடைய அகராதியில், நாத்திகம் பேசுவது அல்லது மத சம்பிரதாயங்களை கேள்வி கேட்பது என்பது மதத்துவேஷத்தைத் தூண்டுவது. கலிலியோக்களும் டார்வின்களும் மதத்துவேஷிகளே!!
//'இத்லி வத‘ என்றல்லவா இருக்கிறது?//
வதை தானே! சரியாகத் தான் சொல்லியிருக்கிறார்.
//கோட்சே வுக்கு கொடி பிடித்தவர்தானே இவர்//
இது யாருப்பா.. கசாப்புக்கு கோமணம் கட்டிவிட்ட கோஷ்டியா?!
//கோட்சே வுக்கு கொடி பிடித்தவர்தானே இவர்//
இது யாருப்பா.. கசாப்புக்கு கோமணம் கட்டிவிட்ட கோஷ்டியா?
இல்ல.. ஒரு சின்ன கரெக்சன் ...யான் கசாப்புக்கு கோமணம் அவிழ்த்த கும்பலின் தலை அனானி.
//இல்ல.. ஒரு சின்ன கரெக்சன் ...யான் கசாப்புக்கு கோமணம் அவிழ்த்த கும்பலின் தலை அனானி.//
அப்புறம் என்ன பண்ணீங்க தலை ?
//இது யாருப்பா.. கசாப்புக்கு கோமணம் கட்டிவிட்ட கோஷ்டியா?//
நீங்கள் சொன்னதை சமீபத்தில் மறைந்த நடிகர் ஏ. கே. வீராசாமி குரலில் கற்பனை செய்து பார்த்தேன்; சிரிப்பு தாங்க முடியவில்லை!
//எங்கோ இருக்கும் ஆர்பஸானோவில் பிறந்து, இந்தியாவில் இருக்கும் ஆண்டிப் பண்டாரங்களுக்காகவே தன்னை அர்பணித்துக் கொண்ட இந்த அற்புதத் தலைவியைப் பெற நாம் என்ன தவம் செய்தோமோ?//
யதிராஜ் சார், எங்கோ இருக்கும் மும்பையில் பிறந்து, மு. க. போன பிறகு தமிழகத்துக்கு முதல்வர் ஆகப்போகும் திரவிடத்தலைவி குஷ்பு போன்று தான் இதுவும்!
romba soniava thitathinga. vara electionla purai thalaivi avangaloda kaiya thaan aadharavuku edhir paakranga. rendu peru sendhaa neenga enga poi unga moonja vachupinga? hehehhehe
thanks for your articul
thanks for tour articule
அட இல்லப்பா! அது யாரு தெரியுமா?
முற்போக்கு பாப்பான் (அட பிற்போக்கு பாப்பான் எல்லாம் அப்டி தான் சொல்றாங்க!)
அவருக்கு அப்சலும், RSS-ம் ஒன்னுதானாமாம்! ரெண்டுபேருக்கும் ஒரே வெறி, ஜாதி வெறி!
யதிராஜ் சார், எங்கோ இருக்கும் மும்பையில் பிறந்து, மு. க. போன பிறகு தமிழகத்துக்கு முதல்வர் ஆகப்போகும் திரவிடத்தலைவி குஷ்பு போன்று தான் இதுவும்!///
குஷ்பு மேல உங்களுக்கு கோபம்னா அதை காண்பிக்கிறதுக்கு எவ்வளவோ வழி இருக்கே சார்? ஐயோ பாவம்.
articul... articule... என்னதான் சொல்ல வர்றார் செந்தில் சார் ?
அடடே, இது பிரமோத் முத்தலிக், சாத்வி பிரக்ஞ்யா ஆகியோருக்கான கண்டனம்னு நெனச்சேனே.
//குஷ்பு மேல உங்களுக்கு கோபம்னா அதை காண்பிக்கிறதுக்கு எவ்வளவோ வழி இருக்கே சார்? ஐயோ பாவம்//.
யதி சாரே!! தமிழக மக்கள் மேல உங்களுக்கு கோபம்னா....
என்றல்லவா இருக்க வேண்டும்??
கொஞ்சம் லேட்டா வந்துட்டேன். சோனியா பத்தி என் பங்குக்கு!! கொஞ்சம் பழைய article from Outlook!!
யதிராஜ் சார்,சோனியா மேல உங்களுக்கு கோபம்னா அதை காண்பிக்கிறதுக்கு எவ்வளவோ வழி இருக்கே சார்? ஐயோ பாவம்.
Dear freind,
Super. But our people will not get awarness about Kayavar Karunaa & Dubaakkoor soniya.
I have started a new blog recently. Please visit that blog. Because I would like to mingle with Tamil Blogger world.
http://www.periyakottai.blogspot.com/
Thanks.
/// சென்னை:"பிரபாகரனுக்கு எந்தக்காலத்திலும் நாங்கள் யோசனை கூறியது கிடையாது' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்.///
இப்பவாவது வைகோவின் செல்வாக்கு ( விடுதலை புலிகளிடம் ) புரிந்ததா ? வைகோவை - எதோ பிரபாஹரனின் உடன் பிறவா தம்பி என்று சொல்லிய பத்திரிகைகளின் முக திரை கிழிந்தது.
Chickened out about my comments?
Rama
Post a Comment