
ஜூவி பேட்டி, NDTV செய்தி...
மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் அழகிரி, அரசு முறைப் பயணமாக ஆஸ்திரேலியா கிளம்பும் அவசரத்தில் இருந்தார். விமானத்தில் பறக்க மூன்று மணி நேரமே இருந்த அந்த அவகாசத்திலும்கூட, பேட்டிக்கு ஒப்புக்கொண்ட அழகிரி, ''என்ன கேள்வி கேட்கப் போறீங்க?'' என்றார் முதலில்! அடுத்த கணமே, ''என்ன வேணும்னாலும் கேளுங்க... எப்படி வேணும்னாலும் கேளுங்க... எல்லா கேள்விகளுக்கும் என்னிடம் அதிரடி பதில் இருக்கு!'' என்றபடி கேள்விகளை எதிர்கொண்டார். குரலில் பிசிறில்லாத தீர்மான ரேகை!
? ''பென்னாகரம் இடைத்தேர்தல் களம் எப்படியிருக்கு?''
''தலைவர் கலைஞரின் நல்லாட்சியைப் பற்றி எங்களை நாங்களே எடை போட்டுக்கொள்ள இந்த இடைத்தேர்தல்கள் உதவுது. எங்கள் ஆட்சி குறித்த மக்களின் விமர்சனங்களும், சந்தோஷங்களும், கவலைகளும்தான் எங்களை வழிநடத்திக்கிட்டு இருக்கு. நேற்றைக்கு எம்.எல்.ஏ-வாக இருக்கறவங்க இன்றைக்கு எதுவும் செய்யாமல், நாளைக்கு தொகுதிக்குள் போக முடியாதுங்கறதுதான் இன்றைய ஜனநாயகத்தின் நிலைமை. அந்தப் பயமும், கவனமும் எப்பவுமே எங்ககிட்ட இருக்கு. எல்லா இடைத்தேர்தல்களிலுமே மக்களோட ஆரவாரமான வரவேற்பைப் பார்க்கும்போது, 'அப்பாடா, நம்ம தலைவர் செஞ்சிருக்கற நல்ல விஷயங்கள் மக்களைப் போய்ச் சேர்ந்திருக்கு'ன்னு நிம்மதி பெருமூச்சுவிட முடியுது. ஒரே ஒரு விஷயத்தை செஞ்சுட்டு, அதையே அஞ்சு வருஷமும் சாதனையா சொல்லிப் பெருமைப்பட்டுக்கிற ஆட்சியாளர்களுக்கு மத்தியில், தலைவர் தன்னோட சாதனைகளை சில மாதங்களுக்கு மேல் பேச விடறதில்லை. ஏன்னா, அதுக்குள்ள அடுத்த சாதனையை செஞ்சு அதைப் பத்தி பேச வச்சிடுறார்! தலைவரோட சாதனைகளால் பென்னாகரத்தில் கழகத்தோட வெற்றியைத் தடுக்க யாராலும் முடியாது!''
?''இடைத்தேர்தல் நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்புகிறீர்களே?''
''தேர்தல் களத்துக்குச் சென்றால்தான் அங்கு எனது செயல்பாடுகள் இருக்கும் என்று அர்த்தமில்லை. நான் அங்கு செல்லாமலேயே அமைச்சர்கள் பலரும் பம்பரமாய் தேர்தல் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்காவில் இருந்துகொண்டு வீடியோ கான்ஃபரன்ஸ் உதவியோடு சென்னையில் ஆபரேஷன் செய்வதில்லையா? அதேபோன்று ஆஸ்திரேலியாவில் இருந்துகொண்டும் பென்னாகரம் தேர்தல் களத்தை என்னால் கவனிக்க முடியும்.''
?''பா.ம.க. கடும் நெருக்கடி கொடுப்பதால்தான் முதல்வர் கருணாநிதியே நேரடியாகப் பிரசாரத்துக்குச் செல்கிறாராமே?''
''யாருக்கு யார் நெருக்கடி கொடுப்பது? இந்தமுறை தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனையோ இடைத்தேர்தல்களை சந்தித்து விட்டோம். இதில் ஒன்றிலாவது பா.ம.க-வினால் குறிப்பிடத்தக்க சாதனையை செய்ய முடிந்ததா? கடைசியாக நடந்த வந்தவாசி இடைத்தேர்தலில்கூட '49-ஓ பிரிவில் வாக்களித்து எங்கள் பலத்தை நிரூபிப்போம்' என சவால் விட்டார் ராமதாஸ். 49-ஓ பிரிவில் மொத்தமே 49 பேர்கூட வாக்களிக்கவில்லை. 'வன்னியர் சமுதாய மக்களுக்காக கட்சி நடத்துகிறோம்...' என்ற ஏமாற்று வார்த்தையை சொல்லி, இனிமேலும் அந்த சமுதாய மக்களை ராமதாஸால் ஏமாற்ற முடியாது. எத்தனையோ வன்னியர் சமுதாய மக்களின் தியாகத்தில் உருவான அந்தக் கட்சியின் மூலமாக சுகபோகம் அனுபவிப்பதென்னவோ ராமதாஸ் குடும்பம் மட்டும்தான். இதனால் பென்னாகரத்தில் பா.ம.க-வுக்குத்தான் நெருக்கடி!
மற்றபடி, தலைவர் பிரசாரத்துக்கு போவதென்பது, சாதாரணமான நிகழ்வுதான். தென் மாவட்டங்களில் இடைத்தேர்தல் நடக்கும்போதெல்லாம்கூட தலைவர் பிரசாரத்துக்கு வருவதாகத்தான் சொல்வார். நாங்கள்தான் அவரை வரவேண்டாம் என மறுத்து விடுவோம்.''
?''அ.தி.மு.க. எப்படியிருக்கிறது?''
''எப்படியிருக்குன்னு கேட்காதீங்க... எங்கே இருக்குன்னு கேளுங்க? ஜெயலலிதா எப்ப கட்சிக்கு லீவு விடுவாங்க, எப்ப கட்சி நடத்துவாங்க என்பதெல்லாம் யாருக்குமே தெரியாது. அந்தக் கட்சியோட தொண்டர்கள் பாவம்...''
?''தமிழகம் முழுவதும் தி.மு.க-வுக்கு எதிராக, தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறாரே வைகோ?''
''முல்லை பெரியாறு பிரச்னைக்காக கேரளாவுக்குச் செல்லும் வாகனங்களை மறிக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார் வைகோ. அவர் போராட்டம் அறிவித்த தினத்தன்று கேரளாவிலேயே பந்த் அறிவிக்கப்பட... ஒரு சைக்கிளைக்கூட மறிக்க முடியாமல் திண்டாடிப் போனார் வைகோ! ஏதாவது ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தியாவது மாற்றுக் கட்சிகளுக்குத் தாவும் தன் கட்சியினரைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைக்கிறார். ஆனாலும், அவரது கட்டுப்பாட்டில் அவரது கட்சியினர் இல்லை. கடந்த முறை உறுதியாக ஜெயிக்க முடியாது என தெரிந்து, பெரிய மனதோடு ஒரு ராஜ்ய சபா எம்.பி. ஸீட்டை வைகோவுக்கு ஜெயலலிதா வழங்க... அதை மீண்டும் அ.தி.மு.க-விடமே ஒப்படைத்தார் வைகோ. இந்த முறை மீண்டும் அ.தி.மு.க-விடம் ராஜ்ய சபா ஸீட் கேட்கும் ஆசையோடு ஜெ-வை சந்திப்பதற்காக மாதக் கணக்கில் காத்துக்கிடக்கிறார்...!''
?''டெல்லியில் கடந்த முறை நடந்த கேபினெட் கூட்டத்தில் பாதியிலேயே நீங்கள் வெளிநடப்பு செய்ததாக செய்திகள் வெளியானதே?''
''இப்படியரு கதை பரவியிருக்கறது எனக்குத் தெரியாதே..! உண்மையில் அந்த கேபினெட் கூட்டம் பல்வேறு துறைகளிலும் சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்காகக் கூட்டப்பட்டது. அதில், எனது உரத் துறை சார்பாகவும் உர இறக்குமதி, உர மானியம் மற்றும் உர விலை உயர்வு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. உர விலையை உடனடியாக உயர்த்தவேண்டும் என்ற விவாதங்கள் கிளம்பியபோது, நான் குறுக்கிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஏற்கெனவே, பருவ மழை பொய்த்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் நொந்து போயிருக்கும்போது, உர விலையை உயர்த்துவது என்பது விவசாயிகளை மேலும் துயரத்துக்கு உள்ளாக்கும். அதனால், உர விலையை உயர்த்தக் கூடாது என தலைவரின் சார்பாக ஒரு கோரிக்கையை வைத்தேன். அதன் பின்னரும் உர விலையை உயர்த்துவது குறித்து வாதங்கள் தொடர்ந்தபோது, விலையை உயர்த்தக் கூடாது என உறுதியாக எனது கோரிக்கையை எடுத்து வைத்தேன். உண்மையில் நடந்தது இதுதான்.''
?''ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனிக்கு கடந்த முறை அரசு முறைப் பயணமாகப் போக முடிவெடுத்தபோது, உங்களுடன் பயணம் செய்யவிருந்த குறிப்பிட்ட சிலரின் பின்னணியைப் பார்த்து பிரதமரே அந்தப் பயணத்துக்குத் தடை போட்டதாக செய்திகள் வெளியானதே?''
''இப்படி வேற கிளம்பியிருக்காங்களா..? கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப் பயணம் கிளம்ப முடிவெடுத்த சமயம், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவிருந்தது. அமைச்சர் என்ற முறையில் அந்த சமயத்தில் நான் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டியிருந்ததால், அந்தப் பயணத்தை சற்று தள்ளிப் போடும்படி பிரதமர் அலுவலகத்தில் இருந்து கேட்டுக்கொண்டனர். அப்போது தள்ளிப் போடப்பட்ட பயணத்தை இதோ இப்போது செயல்படுத்துகிறேன். இதுதான் உண்மை!''
?''டெல்லியிலிருந்து தமிழக அரசியலுக்கு வரும் உங்களின் ஆசை என்னவாயிற்று?''
''இப்பவும் நான் தமிழகத்தில்தானே இருக்கேன்! தமிழகத்திலிருந்துதானே டெல்லிக்கு போனேன்! பத்திரிகைகளில்தான் எதையாவது எழுதிக்கிட்டிருக்காங்க. அழகிரியை பொறுத்தவரைக்கும் உள்ளன்று வைத்துப் புறமொன்று பேசுபவன் அல்ல. டெல்லியைவிட்டு வர நான் ஆசைப்பட்டிருந்தால், நானே வெளிப்படையாகச் சொல்லி யிருப்பேன். என்னைப் பொறுத்த வரைக்கும் மதுரை எம்.பி-யாக மகிழ்ச்சியாக, திருப்தியாக இருக்கிறேன். அதேநேரத்தில் டெல்லியைவிட்டு தமிழக அரசியல் களத்துக்கு வர விரும்பினால், அதனை சந்தோஷமாக வரவேற்பது தலைவர் கலைஞராகத்தான் இருக்க முடியும்..!''
?''நாடாளுமன்றத்தில் உரத் துறை தொடர்பான விவாதங்களின்போது நீங்கள் மாயமாகி விடுவதாக எதிர்க்கட்சிகள் புகார்கிளப்புகின்றனவே?''
''இதுவரை எந்த அமைச்சரும் செய்யாத உர மானியத்தை விவசாயிகளிடமே நேரடியாகக் கொண்டு சேர்க்கும் மாபெரும் திட்டத்துக்கான ஆரம்ப வேலைகளைத் தொடங்கியிருக்கிறேன். இந்தியா முழுவதும் நலிவடைந்து மூடிக்கிடக்கும் எண்ணற்ற உரத் தொழிற்சாலைகளை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறேன். வெளிநாடுகளில் இருந்து உர இறக்குமதியை அதிகப்படுத்தி, உரத் தட்டுப்பாடுகளை முற்றிலும் தவிர்த்திருக்கிறேன். ஏழைஎளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதற்காக மருந்து கம்பெனிகளுடனும், மருத்துவ ரசாயன கம்பெனிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். இத்தகைய சாதனைகளை மறந்து விட்டு, 'அழகிரி பதில் சொல்லவில்லை' என்பது நியாயமா?''
?''திடுதிப்பென்று உங்கள் மகன் துரைதயாநிதிக்கு திருமண நிச்சயதார்த்தத்தை முடித்து விட்டீர்களே?''
''என்னதான் கட்சி, பதவி என சுத்திக்கிட்டிருந்தாலும் நானும் ஒரு தகப்பன்தானே... எனக்கும் சில கடமைகள் உண்டு. துரையை விரல்பிடித்து நடக்கவைத்த முதல் கடமையில் தொடங்கி, துரை விரும்பிய படிப்பைப் படிக்க வைத்தது, விரும்பிய தொழிலை செய்ய அனுமதித்தது வரைக்குமான எனது கடமைகளை சரியாகவே செய்திருக்கிறேன். ஒரு மகனுக்கு தந்தை செய்யும் முக்கிய கடமை, திருமணம் செய்து வைப்பதுதான். அந்தவகையில் நானும் எனது மனைவி காந்தியும் சேர்ந்து ஒரு நல்ல பெண்ணை துரைக்காகத் தேர்ந்தெடுத்தோம். துரையிடம் கேட்டு அவருக்குப் பிடித்து, அதன் பின்பு தற்போது நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. எனது கடமைகளைத் திருப்தியாக நிறைவேற்றிய மகிழ்ச்சியில் இருக்கிறேன்.''
?''ஒரு அண்ணனாக கனிமொழியின் எதிர்காலத்துக்கு எந்தவகையில் உதவியாக இருக்கப் போகிறீர்கள்?''
(பலமாகச் சிரிக்கிறார்) ''இந்த அழகிரியைப் பொறுத்தவரைக்கும் என்னுடைய எதிர்காலத்தையே நான் முடிவு செய்வதில்லை. காலம் விட்ட வழியில் போய்க் கொண்டிருக்கிறேன். இதில் மற்றவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் உரிமையும், அதிகாரமும் என் கையில் இல்லை. அவரவர் எதிர்காலத்தை அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும். அதேநேரத்தில் தனிப்பட்ட முறையில் ஓர் அண்ணனாக கனிமொழிக்கு எனது அன்பும், ஆதரவும் என்றைக்கும் இருக்கும்.''
?''கலைஞருக்குப் பிறகு தி.மு.க-வில் யாரைத் தலைவராக ஏற்றுக்கொள்வீர்கள்?''
''எனக்கு 10 வயதிருக்கும்... அப்போதுதான் திராவிட கலாசாரத்தைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் தலைவர் என்னிடம் விளக்கினார். அப்போது, பெரியார்தான் எனக்குத் தலைவராகத் தெரிந்தார். அதன் பிறகு அறிஞர் அண்ணாவின் பேச்சும், எழுத்தும் என்னைக் கவர, அண்ணாவைத் தலைவராக ஏற்றுக்கொண்டேன். அண்ணாவுக்குப் பிறகு அப்போதும் இப்போதும் எப்போதும் தலைவர் கலைஞர் மட்டுமே எனக்குத் தலைவர்! தலைவர் கலைஞர் இருக்கும்போது, மற்றவர்களைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. இருந்தாலும், தலைவர் கலைஞருக்குப் பிறகு தி.மு.க-வில் யாரையுமே நான் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன். தலைவர் கலைஞரின் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாக நான் நினைக்கவில்லை..!''
- பட்டென்று முடித்துக்கொள்கிறார் பேட்டியை!
( நன்றி: ஜூவி )
NTDV - செய்தி
( நன்றி: NDTV )
இரட்டை குழல் துப்பாக்கி மாதிரி இரண்டு நியூஸ் !
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, March 24, 2010
கலைஞருக்கு பின் ? - அழகிரி பேட்டி
Posted by IdlyVadai at 3/24/2010 02:39:00 PM
Subscribe to:
Post Comments (Atom)











39 Comments:
நீங்க ரொம்ப லேட்!!!
ஒரே ஒரு விஷயத்தை செஞ்சுட்டு, அதையே அஞ்சு வருஷமும் சாதனையா சொல்லிப் பெருமைப்பட்டுக்கிற ஆட்சியாளர்களுக்கு மத்தியில், தலைவர் தன்னோட சாதனைகளை சில மாதங்களுக்கு மேல் பேச விடறதில்லை. ஏன்னா, அதுக்குள்ள அடுத்த சாதனையை செஞ்சு அதைப் பத்தி பேச வச்சிடுறார்.
திருமங்கலம் தொகுதில ஒரு வோட்டுக்கு 1000.00 ரூபா. பென்னகரம் தொகுதிக்கு ஒரு ஓட்டுக்கு 2000.00 ரூபா.
வி. ஸ்ரீ குமார்............
//தலைவர் கலைஞருக்குப் பிறகு தி.மு.க-வில் யாரையுமே நான் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன். தலைவர் கலைஞரின் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாக நான் நினைக்கவில்லை..!''
Alagiri, What abt stalin as a next leader of DMK?
"கலைஞருக்கு பின் ? - அழகிரி பேட்டி"
ஒரு வேலை 'போட்டி', தப்பா 'பேட்டி'ன்னு பிரின்ட்டாயிடிச்சோ ?
கரெக்ட் பாஸ்... அதனால கலைஞர் இருக்குற வரைக்கும் கட்சி இருக்கட்டும், அப்பறம் கட்சிய இழுத்து மூடிடலாம். அது தான் கட்சிக்கும், தமிழுக்கும், தமிழ் நாட்டுக்கும் நல்லது... ஏன்னா நீங்க அடிச்சுக்கிட்டு தொண்டர்கள் ரத்தம் சிந்த வேண்டாம்பாருங்க...
ஐயையோ! அப்போ கலைஞருக்கு அப்புறம் கட்சி, தலை இல்லாத முன்டமா?
// தலைவர் கலைஞரின் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாக நான் நினைக்கவில்லை..!''
//
இதுக்குப்பேர் என்ன? கொளுத்திப்ப்போடுறது.
வடகறி நல்ல வாசனையா இருக்கு, வாய்ல சுட்டது தானே !!!! அப்படி தான் இருக்கும், ஊசிப்போகும் வரை
He has to agree with Stalin, no other way, other wise party will split TWO.... may be 3 not sure now.
Alagiri is emerging as a leader from a goondaa politician. It's good not only for madurai but also for him. I quite believe that they're all happy and united going together. This picture of rivalry is artificially created to evade the opposition from charting out new strategies and keeping them eternally waiting for the sibling rivalry to deepen. The media is just trying to create stories out of thin air and they're in turn helping the media for the free air time they get. If all of them publicly declare to stay united, they'll cease to be politicians.
// தலைவர் கலைஞரின் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாக நான் நினைக்கவில்லை..!''
//
""இதுக்குப்பேர் என்ன? கொளுத்திப்ப்போடுறது.""
no!.no...!இதுக்குபேர்தான் "பாப்பாரக்குசும்பு".குரங்கு ஆப்பம் பங்கிட்ட கதை.
இட்லி வடை நீங்க என்ன பத்தவெச்சாலும் 2010 ல் திமுகவே ஆட்சியை கைப்பற்றும்!!
Anjaa Nenjjan should become next tamilnadu CM.
After this tamilnadu will prosper unlike anytime before.
Raam Naam Sathya Hai!
ஜெயலலிதாக்கு அப்புறம் யார் அதிமுக தலைவர்னு எழுத தில் இருக்கா?
Congress guys will be lucky to get those votes. The Kumudam magazine reporter talks of slowly disappearing party of Vijaykanth. So Congress is waiting for the time beyond MK. DMK will split and one portion of the split will join with Cong. the it will be Cong Vs AiADMK.
கருணாநிதிக்கு பிறகு தி.மு.க அழியும். அந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்.
இந்த பதிவை நீ்ங்கள் வெளியிட்டதன் நோக்கமே இந்த அனாதைகள் எல்லாம் எப்படியும் திட்டிதீர்திடுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் என்பது தெரியும். எப்படியிருந்தாலும் திமுகவிற்கு அழகிரியின் உழைப்பு நிச்சயம் தேவை. நீங்கள் எப்படி நினைத்தாலும் சரி ஒரு சாதாரண தொண்டனும் அஞ்சாநெஞ்சரை பார்க்கலாம். பார்த்தவுடன் அவர் பிரச்சனை தீரும். இது 100 சதம் உண்மை. நாயகன் படத்தில் கமல் ஒரு ரவுடியாக இருக்கலாம். ஆனால் அவரால் பயனடைந்தோர் பலராக இருப்பர். அது போல் யார் என்ன சொன்னாலும் அழகிரியால் பயனடைந்தோர் பாமரர் முதல் பணக்காரர்வரை பலர் உண்டு. தூத்துக்குடி தொகுதியில் தொகுதியை பற்றி தெரியாத ஜெயத்துரை வெற்றிபெற்றதும் அதுவரை தூத்துகுடியின் மைந்தராக கலைஞரின் முரட்டுபக்தராக வலம் வந்த பெரியசாமி அண்ணாச்சியிடம் மோதினார். வாக்காளருக்கு நன்றி தெரிவிக்கும் மேடையிலேயே "பல நூறு கிமிக்கு அப்பால் இருந்து வந்து இங்கே வெற்றி பெற மாவட்ட செயலாளரின்(அண்ணாச்சி) சப்போர்ட் இல்லாமல் முடியாது. ஏதோ இன்று ஜெயித்துவிட்டோம் என்று ஆடக்கூடாது. பிறர் செய்த நன்றியை மறக்க கூடாது" என்று கூறி அப்பிரச்சனைக்கு அன்றே முடிவுகட்டினார். அழகிரியை நம்பிக் கெட்டவர்கள் யாரும் இருக்க முடியாது. இப்படி எழுதியதால் நான் திமுக காரன் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அழகிரி திமுக தலைவரானால் அன்று நான் திமுக காரனாகிவிடுவேன்.
V R indeed living in an interesting time. No 1 Rowdy of the state becoming an Union Minister and aspiring to be CM.
Reminds me of Idi-Amin Dada taking over Uganda.
Karuna got the party despite being 4th or 5th in line in the Party after Anna, Now the party wont go out of his family FOR EVER. Call it the Butterfly Effect !!! or Biggest Tragedy for TN.
//தலைவர் கலைஞருக்குப் பிறகு தி.மு.க-வில் யாரையுமே நான் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன்//
நான் கருணாநிதியையே தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன்
சேகர்
எதுக்கும் ஜூ. வி. அலுவலகத்தை ரெண்டு மூணு நாளைக்கு பூட்டியே வையுங்கப்பா. தீ வெச்சிர போறாங்க மறுபடியும்.
என்ன கொடுமை ஜீயார்.......
My status message in Facebook today:
Alagiri says, 'Only dad can be CM' because, Karuna says, 'only' son can be CM... :)
only son = one less-on = one lesson!
//""இதுக்குப்பேர் என்ன? கொளுத்திப்ப்போடுறது.""
no!.no...!இதுக்குபேர்தான் "பாப்பாரக்குசும்பு".குரங்கு ஆப்பம் பங்கிட்ட கதை.
இட்லி வடை நீங்க என்ன பத்தவெச்சாலும் 2010 ல் திமுகவே ஆட்சியை கைப்பற்றும்!!//
Yove sonathu Azagri not Idli vadai... So Azagri also having Papara Kusumbu.. Very bad ask Talavar to write a Madal to him..
//தலைவர் கலைஞரின் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாக நான் நினைக்கவில்லை..//
இவுளோ தன்னடக்கம் கூடாது. அழகிரிக்கு தகுதி இல்லைன்னு அவரே சொல்லிடாரு....
//நாயகன் படத்தில் கமல் ஒரு ரவுடியாக இருக்கலாம். ஆனால் அவரால் பயனடைந்தோர் பலராக இருப்பர்//
சரிங்க, ஆனா அவர் அந்த படத்தில் அரசியலுக்கு வரலே. நீங்க சொல்லுறத பார்த்த தாவூத், சோட்டா அடுத்த தலைவர்.
//அழகிரியை நம்பிக் கெட்டவர்கள் யாரும் இருக்க முடியாது. //
அது அப்படி அல்ல. அழகிரியை எதிர்த்து வாழ்தவர்கள் யாரும் இருக்க முடியாது.
எனக்கு ஒரு பாட்டு நியபாகதிருக்கு வருது... இந்த கட்டுரைக்கும் - பாட்டுக்கும் சம்பந்தமும் இல்லை.
"குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா "
.....
.....
"அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தைக் குரங்கு தாவும் - அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும்"
மதுரையில் தொழில் தொடங்க ஆசைப்படும் தொழிலதிபர்களைக் கேளுங்க....
மதுரையில் நெசவு செய்யும் தொழிலாளியைக் கேளுங்க...
ஜோய் ஆலுக்காஸ் மதுரை கிளை ஊழியர்களிடம் கேளுங்க...
தினகரன் அலுவலகத்தில் மூன்று பேர் இறந்தார்கள். அவர்களின் குடும்பத்தாரிடம் கேளுங்க...
2001ல் திமுக மதுரையில் வெற்றி பெறக் கூடாது என உள்ளடி
வேலை செய்து, அதனால் ஆதாயம் பெற்றவர்களைக் கேளுங்க...
ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை மதுரை பத்திர அலுவலகத்திற்குச் பதிய செல்பவரைக்
கேளுங்க....
தா. கிருட்டிணனின் ஆன்மாவிடம் கேளுங்க...
---------------------------
ஜீயார் - உங்களால் முடியுமா
---------------------------
எனக்குத் தெரிந்து ஆதாயம் பெறுபவர்கள் இடைத் தேர்தல்
வாக்காளர்களும் அவரிடம் இருக்கும் அல்லக்கைகளும் தான்.
இந்த மாதிரி ஏதும் பிரச்சினை வார கூடாதுன்னு தான கலைஞர் ரொம்ப மென கேடறார்..அழகிரியை டெல்லி அனுப்பி வைத்தால் இங்கு ஸ்டாலின் அவருக்கு பிரச்சினை இருக்காது என்று..ஆனாலும் கேள்விகுறி தான்..இன்னும் கனிமொழி என்ன சொல்ல போகிறாரோ......தயாநிதி மாறன் சும்மா இருக்கமாட்டார். பாவம் கலைஞர் தான் குடும்பத்தாரை அரசியலில் விட்டு அவருக்கும் அவர் கட்சிக்கும் அவரே பாதகம் தேடி கொண்டு விட்டார்..இனி தி.மு.க. வை யாரும் ஏதும் செய்ய தேவை இல்லை கொஞ்சம் பொறுமையா இருந்தாலே போதும்.தான நடக்கும்..கலைஞர் கு பின் கட்சி என்னவாக போகிறது என்று தெரியவில்லை.தி.மு.க என்று ஒரு கட்சியாவது இருக்கிறது ஆனால் எதிர்முனையில் அதுவும் இல்லை..
//Karuna got the party despite being 4th or 5th in line in the Party after Anna, //
wrong info anony.. he was second in the line next to navalar.. !
IV reflecting JV ? :)
---------------
www.myownscribblings.blogspot.com
"கருணாநிதிக்கு பின் " என்றால் , அது ஆங்கில pin னை குறிக்கும்... இப்போதுதான் தெரிகிறது ... இவர் மக்களை மட்டுமன்றி அப்பா வையும் "" குத்திக்கொண்டு" இருக்கிறார் என்று!! ... தான் மட்டும் லஞ்சம் வாங்குவது போதாது என்று மக்களையும்- ஓட்டுக்காக - மிரட்டி லஞ்சம் வாங்க வைத்து.. இதில் அஞ்சா நெஞ்சன் என்று பெயர் வேறு!!யாரோ ஒருவர் நாயகன் கமல் கூட compare பண்ணி..!!இந்த தேசம் எங்கே போய் கொண்டிருக்கிறது ???
Sir,
Why no posting for past 3 days? very busya? waiting for your posting!!! - Kovai
இப்படி நாக்கை தொங்க போட்டுகொண்டு அலைவது இட்லி வடை குடும்பத்தினருக்கு வாடிக்கை தான். என்ன வாழ்க்கை இது....
எவன் நம்மளை கேட்கமுடியும் என்று திமிர்தனத்துடன் நடந்துகொண்டிருக்கிறது ஓட்டுக்கு பிரியாணியையும் பணத்தையும் மதுவையும் கொடுத்து ஒரு கீழ்த்தரமான அரசியல் நெறியினை ஆரம்பித்துவைத்தது இந்டத முக அரசு. தமிழ்ச்சியின் கற்ப்பினை கேவலமாக பேசிய ஒரு கூத்தாடியினை தனது அந்தரங்க செய்லாளர்போல வைத்து அவர்கள் தொ.கா யில் மானாட மார்பாடவைத்தது இந்த முக அரசு. சில அரவேக்காடு மடையர்கள் காழ்ப்புணர்ச்சியிடன் இதை ஏற்க்க மறுக்கிறார்கள் அவர்களை பற்றி.
அரசு அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சானிகொம்பில்லிருக்க் தண்ணீர் தொட்டிகளுக்கும் பள்ளிசாலைகளுக்கும் பதிலாக மதுக்கடைகளை திறந்து வைத்து மக்களை மேலும் வறுமையில் தள்ளமுயன்றுகொண்டிருக்கிறது. மக்கள் இங்கே பல பொருளாதார பிரச்சனையில் சிக்கி தவித்துகொண்டிருக்க ஆளும் முக அரசு ரூ 800 கோடியில் சட்டசபை வளாகம் கட்டி மக்களை பற்றி எஙகளுக்கு கவலையில்லை அவர்களுக்கு தினமும் பக்கம்பக்கமாக அறிக்கை விட்டால் போதும் அவர்கள் வயிறு நிறைந்துவிடும் என்று முட்டாள்தனமான திட்டங்களை அறிவிக்கிறது.
நதிகளையெல்லாம் அண்டை மாநிலத்துக்கு தாரை வாத்து, மணல் கொள்ளை மூலம் நதிகளின் தடன் தெரியாமல் அளித்து வருகிறார், எங்கேயோ இருந்த (தன்) மக்கள் இன்று விரல் விட்டு என்னும் பணக்கார வரிசையில், தமிழ்நாடு பாலைவனமாக ஆனால் என்ன மின்சாரம் கூட இல்லாத இடுகாடு ஆனால் என்ன? தமிழன் எப்போதுமே அண்டை மாநிலங்களையும், அரபு நாடுகளையும் நம்பித் தான் இருக்கிறான்
சாதிக்
தொழில்அதிபரை பாருங்கள், கோழடீஸ்வரரை பாருங்கள், ஆலுக்காஸை பாருங்கள்......?????
பாமரனைப் பாருங்கள், அல்லக்கையோ அல்லாத கையோ சராசரி ஒரு தலைவிக்காக பேருந்தில் உயிரோடு மூன்று மாணவிகளை எரித்துவிட்டு இன்று என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் ர ர க்கள் எங்கே? அண்ணனுக்காக கொலையே செய்தாலும் கவர்மெண்ட் உத்தியோஸ்தர் போல மதுரையில்
உலா வரும் உபி க்கள் எங்கே? இதைத்தான் அஞ்சா நெஞ்சரை நம்பினார் கைவிடப்படார் என்று சொன்னேன்.
பதவியேற்ற மறுநாளே டில்லியில் தவித்த தமிழ் பயணிகளை பத்திரமாக தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்த அழகிரியை பற்றி அந்த பயணத்தில் தவித்த பயணிகளிடம் கேளுங்கள்.
"கருணாநிதிக்கு பிறகு தி.மு.க அழியும். அந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்."
நாய் நாக்க தொங்க போட்டுகொண்டு கசாப்பு வாசலில் நிற்பதுபோல நிற்க வேண்டியதுதான்.
//பதவியேற்ற மறுநாளே டில்லியில் தவித்த தமிழ் பயணிகளை பத்திரமாக தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்த அழகிரியை பற்றி அந்த பயணத்தில் தவித்த பயணிகளிடம் கேளுங்கள்.//
அதுக்கு பேரு தான் படம் போடுறது.
அப்போ எல்லா அமைச்சர்களையும் சென்ட்ரல்/எக்மோர் ஸ்டேஷன் நிக்க சொல்லி மக்களுக்கு உதவ சொல்லலாமா.? ஒரு மத்திய அமைச்சராக அவர் செய்ய வேண்டிய வேலை அது தானா? இதற்க்கு தான் இவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பினீங்களா?
அவர் என்ன தர்ம சத்திரம் எதுகாசும் தலைவராக போறாருனா சரியாக இருக்கும். இவரை போன்றவர்கள் கண்டிப்பாக தலைவர்களாக தேவையில்லை.
எனக்கு அழகிரி என்பவர்,
1. தனது அணைத்து செயல்களிலும் குறுக்கு வழியை பின்பற்றுபவர்.
2. தேவை இல்லாத பந்தா. கட்-அவுட் கலாசாரம். (ஜெ வை மிஞ்சிடுவார் போல தெரியுது)
3. நிர்வாக திறமை இன்மை , துறை சார்ந்த கல்வி அறிவு இல்லாமை. அட்டாக் பாண்டி போன்ற படித்த மேதாவிகளுக்கு பதவி கொடுக்குறது இவரோட நிர்வாகத்தின் அருமையான எடுத்துகாட்டு.
///ஒரு மத்திய அமைச்சராக அவர் செய்ய வேண்டிய வேலை அது தானா?////
குடுத்த வேலையை சரியா செய்கிற சில அமைச்சர்கள் லிஸ்ட் தரமுடியுமா?
என்னுடைய சிறிய லிஸ்ட்
1. நாட்டில் தண்ணீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்க, மழை பெய்ய இந்திரனை வலியுறுத்திவிட்டு பணக்காரர்களை எப்படி பெரும் பணக்காரர்களாக்க முடியும் என்று பட்ஜெட் போடுவது.
2. எப்படி மக்களை ஏமாற்றி பிடி கத்தரிக்காயை இந்தியாவிற்குள் கொண்டுவரலாம் என்று பிளான் பண்ணுவது.
3. அணு உலையில் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தரவேண்டுமா என்பன போன்ற அமேரிகாவை மகிழ்ச்சிகடலில் ஆழ்த்துவது எப்படி என வித்யாசமான யோசனைகளை தெரிவிப்பது.
4. பாகிஸ்தான் இந்தியாவை தாக்கும் ஒவ்வொறு முறையும் இதுதான் கடைசி, இனி தாக்கினால் திருப்பி தாக்குவோம் என திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பது.
5. பிற நாடுகளில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றால் "கடும்" கண்டனம் தெரிவிப்பது.
6. சோமாலிய கடற்கொள்ளையர்களை கட்டுபடுத்தும் திறன் இருந்தும், தமிழக மீனவர்கள் மீது அத்து மீறும் சிங்கள கடற்படையை வேடிக்கை பார்ப்பது.
சில உங்கள் கண்களுக்கு தெரியாத அல்லது திறமை யில்லாத செயல்கள்
1. மூடிக்கிடக்கும் ஸ்பிக் உரத்தொழிற்சாலையை மீண்டும் திறக்க செய்யும் முயற்சிகள்.
2. மதுரைக்கு தெற்கே புதிய இரசாய தொழிச்சாலை
3. மதுரையில் புதிய கல்லுரி
அனைத்திற்கும் மேல் தென்மாவட்ட திமுகவில் உட்கட்சி பிரச்சனைகளை வளரவிடாமல் ஆரம்பத்தில் களைவது.
//
1. மூடிக்கிடக்கும் ஸ்பிக் உரத்தொழிற்சாலையை மீண்டும் திறக்க செய்யும் முயற்சிகள்.
2. மதுரைக்கு தெற்கே புதிய இரசாய தொழிச்சாலை
3. மதுரையில் புதிய கல்லுரி
//
இதுல எத்தனை நிறைவேறியிருக்கு ?? அடிக்கல் நாட்டி போஸ் கொடுத்தால் மட்டும் திறமையானவர்/தகுதியானவர் என சொல்லிடமுடியுமா?
?
நிறைவேறனுமுல....
நீங்க ஒரு வியாபாரம் ஆரம்பித்தீர்கள் என்றால் அதற்க்கு படிக்காத ஆனால் பாசம்முள்ள உங்கள் பாட்டியை வேலைக்கு வைப்பீங்களா? இல்லை படித்த துறை சார்ந்த அறிவுள்ள ஒருவரை வேலைக்கு வைபீங்களா?
ஒரு கபினெட் அமைச்சராக அவர் வெளிநாடு போகும் போதும் அல்லது வெளிநாட்டு அமைச்சர்களிடத்தில் பேசும் போதும் ...
இந்த அசிங்கம் இவருக்கு இந்த வேலை கொடுத்த நம் அனைவருக்குமே.
"அறுக்க தெரியாதவனுக்கு ஆயிரத்தெட்டு அருவாளாம்"
//குடுத்த வேலையை சரியா செய்கிற சில அமைச்சர்கள் லிஸ்ட் தரமுடியுமா?//
அருமையான கேள்வி. அழகிரிக்கு தகுதி இருக்குதா? .. அதை மட்டும் பேசவும். இல்லாட்டி அவரும் ஒரு உருப்புடாத அமைச்சர்னு ஒத்துகோங்க.
என்னுடைய பார்வையில் கீழ்க்கண்ட அமைச்சர்கள் தேவலாம்...
. கபில் சிபில் - நம்ம நாட்டின் கல்வி திட்டத்தில் நல்ல மாற்றம் கொண்டு வர முனைபவர்.
. பிரணாப் முகர்ஜி. - நீங்க டாக்ஸ் கட்டுபவரா?
. தயாநிதி - ஸ்ரீபெரும்புதூர் பக்கம் இவரும், இவங்க அப்பாவும் நிறையே வேலைவாய்ப்பு உண்டு பண்ணினார்கள்.
. சிதம்பரம் - உள்துறை இவர் வசம் வந்ததும் 'இன்டெலிஜென்ஸ்' ஒருங்கிணைப்பு கொணர்ந்தவர்.
மாநில அளவில்.
. ஸ்டாலின். தி.மு.க. வின் ஒவ்வொரு சாதனையிலும் இவர் பங்களிப்பு உண்டு. இவர் அண்ணனைவிட எளிமையானவர். படித்தவர். ரௌடிகளை பதவியில் அமரவைக்காதவர்.
//பிற நாடுகளில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றால் "கடும்" கண்டனம் தெரிவிப்பது.//
நீங்க ஆஸ்திரேலிய பிரச்சனையை சொல்லுறீர்கள். இதுல வேறென்ன செய்ய முடியும். பால் தாக்கரே மாறி பேசணுமோ?
//அனைத்திற்கும் மேல் தென்மாவட்ட திமுகவில் உட்கட்சி பிரச்சனைகளை வளரவிடாமல் ஆரம்பத்தில் களைவது.//
அதான் தெரியுமே!.... இவரை எதிர்த்தால் சங்கு தான்... இவர் ஜால்ராக்கள் கட்சியில் பொறுப்பு வகிப்பார்கள். மற்றவர்கள் ஒடுக்கப்படுவார்கள் ... இல்லாட்டி........(?)
காசு-கொடுத்து/பயமுறுத்தி மத்த கட்சியில் இருந்து ஆள் புடிச்சிட்டு வாரார். ஆனால் கட்சியில் நல்ல நிலையில் இருப்பவர்களை ஓரம் கட்டுகிறார்.
இதற்க்கு பேர் நல்ல தலைமையோ? எதுக்கு சார் சும்மா வாயை கிளறுறீங்க.?
ஸ்டாலின் இளவயது முதல் அரசியலில் இருக்கிறார். தயாநிதிமாறன் மிகச்சிறந்த அமைச்சர். தகவல்தொழில்துறையை வளர்த்தவர். இப்பொழுது ஜவுளிதுறையை வளர்த்துக்கொண்டிருப்பவர். அவரை அடுத்தமுறை விவசாயதுறை அமைச்சராக்க வேண்டும். அப்பொழுதுதான் அழிவின் விளிம்பில் இருக்கும் விவசாயத்துறையை இஸ்ரேல் போன்று தொழில் சார்ந்த விவசாய முயற்சிகளை மேற்கொண்டு பல சாதனைகள் புரிவார். ஆனால் அழகிரியை பொருத்தவரை அவரது அரசியல் கடந்த மதுரை பாராளுமன்ற தேர்தலில் இருந்து தானே ஆரம்பித்திருக்கிறது. நிச்சயம் அவரும் சாதிப்பார்.
Post a Comment