இந்த வார செய்திகள்...ஆசிரமங்கள்(?) ஸ்பெஷல்.
செய்தி # 1
வயது வந்தோர் உடல் ரீதியாக உறவு வைத்து கொள்வது குற்றமல்ல என்கிறது இந்திய சட்டம். நித்யானந்தர் உடன் சி.டியில் இருந்த நடிகை உட்பட அவர் மீது யாரும் கற்பழிப்பு போன்ற குற்றங்களை சுமத்தவில்லை.
மேலும், அந்த நடிகை தான் சுவாமிகளுக்கு பணிவிடைகள் செய்ததாக பேட்டி அளித்து இருக்கிறார். என்னை பொறுத்தவரை நித்யானந்தருக்கு முன், முதன்மையான குற்றவாளிகள் மூன்று பேர் இருக்கிறார்கள். அவர் செய்தது குற்றம் என்கிற பட்சத்தில்.
முதல் குற்றவாளி, பத்திரிகைகள்தான். யாகவா முனிவர் என்று பெயர் வைத்து கொண்டு, ஒரு நபர் தண்ணியடித்து உளறியதை எல்லாம் ஆன்மிக தொடராக போட்டு, அவரை பிரபல படுத்தியது குங்குமம் இதழ்.இன்று அட்ரஸ் இல்லாமல் இருக்கும் நடன மகான் சிவசங்கர் பாபாவை வளர்த்துவிட்டதும் இந்த பத்திரிக்கையே.
இன்று 'மாட்டி' கொண்டு இருக்கும், கல்கி பகவான்மற்றும் அவரது மனைவி அம்மா பகவான்(?) பற்றி கட்டுரைகள் எழுதாத பத்திரிக்கைகளே இல்லை எனலாம். வாரம் தவராது பணம் வருகிறதே என்று குங்குமம் தொடர் விளம்பரம் செய்துக்கொண்டு இருக்கிறது.
நித்யானந்தரை பலதரப்பிடம் கொண்டு சேர்த்தது கதவை திற காற்று வரும் தொடரும், அதை வெளியிட்ட உலக தமிழர்களின் நாடிதுடிப்பு என கூறப்படும் குமுதம் இதழ்தான். சி.டி. விவகாரத்துக்கு பின் அவரை தற்சமயம் தனது ரிப்போர்டர் மூலம் கிழிகிழி என்று கிழிப்பதும் குமுதம் தான்.
உழைப்பால், தன்னபிக்கையால் வென்றவர்களின் கட்டுரைகளை விடுத்தது, சாமியார்களை தேடிபிடித்து, அவர்களிடம் தொடர்கள் வாங்கும் பத்திரிக்கைகளே முதல் குற்றவாளிகள். ('விகடன்' புகழ் ஜாக்கி வாசுதேவ், யோகா வகுப்புகளுக்கு ஆயிரக்கணக்கில் கேட்கிறாராம்). இவர் என்று மாட்டுவார் என்று தெரியாது.
இரண்டாவது குற்ற்றவாளி, டிவி சேனல்கள். இரவு குறிப்பிட்ட நேரத்தில் எல்லா சேனல்களிலும், யாரோ ஒரு வருங்கால சுவாமிகள், 'ரகுமான் ஆஸ்கார் விருது பெற்றதுக்கு இந்த கல்லே காரணம்' என்கிற ரீதியில் பேசிக்கொண்டு இருக்கிறார். தற்போது லேட்டஸ் வரவு ஆஞ்சநேயர் படம் முன் இருக்கும் சாமியார். இவர்கள் செய்வது டெலி-ஷாப்பிங்!
"மொபைல் மூலம் ஆபாச படங்களை பரிமாறி கொண்டால், அது ஐ.டி சட்டப்படி குற்றம் ஆகும். ஆனால், ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான வீடுகளை எட்டக்கூடிய ஒரு தொலைக்காட்சி, நித்யானந்தரின் பாலியல் உறவு சி.டியை, வர்ணனையுடன், திரும்ப திரும்ப ஒளிப்பரப்பியது நமது குடும்ப பண்பாட்டு சூழலையும், குழந்தைகளின் மனநிலையையும் பாதிக்க கூடிய கடும் குற்றம் " என்கிறார் இதழியல் நிபுணர் திரு.கோ. ரவீந்திரன். விழிப்புணர்வு தருவதை விட, சேனல்களின் வணிக நோக்கத்தையே இது தெளிவாக காட்டுகிறது. என்கிறார் அவர்.
"தனது ப்ரைவேசியில் தலையிட்டதற்கு, சன் டிவி மீது அந்த நடிகை , பல கோடி கேட்டு மன நஷ்ட வழக்கு போடலாம்" என்கிறார் ஞானி.
மூன்றாவது குற்றவாளி, வேறு யார்? நம்பி ஏமாறும் பொது மக்களே. சென்ற மாதம், நித்யானந்தர் புதுச்சேரி வந்து இருந்தார். பேருந்து நிலையம் அருகே இருந்த ஒரு திடலில் அமர்ந்து கொண்டு, தனது கையில் இருக்கும் மந்திர கோலினால், பக்தரின் தலையை தொட்டு ஆசிவாதம் செய்து விட்டு போனார். கட்டண டாய்லெட்டுக்கு 2/= ரூபாய் கொடுக்க யோசிக்கும் நாம், சாமியாரிடம் ஆசி வாங்க நீண்ட வரிசையில் நின்று ஒவ்வொரு பக்தரும் செலுத்திய தொகை ரூ. 2000.
முதல் மூன்று குற்றவாளிகளை யாரும் தண்டிக்க முடியாது என்பதாலும், பரமஹம்ச நித்யானந்தர் மீது எந்த பெண்களும் குற்றம் சுமத்த காரணத்தாலும், அவரை நிரபராதி என நாம் மன்னித்து விடலாம்தானே??
செய்தி # 2
திருவண்ணாமலையில் ஒரு நெல் மண்டி உரிமையாளரின் மகனான ராஜசேகர், 18 வயதிலியே 'பைத்தியம்' என்று விமர்சிக்க பட்டார். அதன் காரணம், அந்த வயதில், அவர் ஆன்மிகம் பேசியதுதான். பின், திருவண்ணாமலையில் சாமியார்களுடன், ஒரு பரதேசி போல சுற்றி திரிந்தவர், சில வருடங்களில் அங்கு 300 ஏக்கர் பரப்பிலான ஆசிரமம் கட்டும் நித்யானந்தராக உருவானது எப்படி?
விஜயகுமார் என்கிற சென்னையில் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஒரு நபர், இங்கிலாந்து அரண்மனைகளுக்கு ஒப்பான ஒரு ஆசிரமத்தை ஆந்திராவில், ஒரு பத்து வருடங்களுக்குள் உருவாக்கி கொள்ளும் கல்கி பகவானாக உருவானது எப்படி?
கோவில் கட்டுவதருக்கு வீடு வீடாக உண்டியல் குலுக்கி கொண்டு இருந்த ஒரு நபர், இன்று 1000 கோடி ருபாய் மதிப்பு உள்ள வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவில் கட்டியதின் மர்மம் என்ன?
இதன் காரணம் நீங்கள் அறியும் முன், ஒரு உதாரணம் சொல்கிறேன். ஆண்டு வருமானம், பத்து லட்சத்தை தாண்டினால், வருமான வரி கட்டவேண்டும் என்பது விதி. எனக்கு தெரிந்து ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தி வந்தவர், ஆண்டு வருமானம் கோடிக்கு மேல் சம்பாதித்து கொண்டு இருப்பவர், வரிகள் ஏதும் செலுத்தியதாக நான் அறியவில்லை. அதன் காரணம், அவர் தனது பள்ளியை ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து, அதன் கீழ் நடத்தியதுதான்.
ஆடிட்டராக இருக்கும் ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். "அறக்கட்டளை அல்லது டிரஸ்ட் என்கிற பெயரில் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். நிலம், சொத்து வாங்கினாலும், பல வரி சலுகைகள் உண்டு. கருப்பு பணத்தை கோடி கோடியாக சம்பாதித்து வைப்பவர்கள், தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைப்பதற்கு "அறக்கட்டளை" திட்டத்தை(!) பயன்படுத்தி கொள்கிறார்கள் " என்றார். ஆசிரமங்களும் இதை போல வரி விலக்கு பெறுவதால், சாமியார்களை தொழில் அதிபர்களும், அரசியல் புள்ளிகளும், பண முதலைகளும் பயன்படுத்தி கொள்கிறார்கள் என்றும் தெரிவித்தார் அவர். சாமியார்களும் ஆசிரம டிரஸ்ட் பெயரில் எல்லா வித வசதிகளையும் அனுபவிக்கிறார்கள்.
சுவாமிகள் அனைவரும் திடீர் கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் அல்லது ஆக்கபடுகிறார்கள்.
மக்கள் ஆசிரமங்களை தேடி போகும் காரணம் என்ன??
"அரசியல்வாதிகள் ஊழல் பேர்வழிகள். இவர்களால் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியாது எனும் விரக்தி நிலையில் மக்கள் சாமியார்களை தேடி போகிறார்கள். இரண்டும்,ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று பிரேமானந்தா, நித்தியானந்தா போன்றோர் உணர்த்தினாலும், மீண்டும் அடுத்த சாமியாருக்கு அவர்கள் தயாராகி விடுவார்கள். ஊடகங்களும், பத்திரிக்கைகளும் சாமியார்களின் எஜென்ட்டுகளாக வேலை பார்ப்பதே சிக்கலுக்கு காரணம்" என்று விளக்குகிறார் பத்திரிக்கையாளர் ஞானி.
"நம்மால் பதில் கண்டு பிடிக்க முடியாத, தீர்வு காண முடியாத விஷயங்களுக்கு, பிறரின் உதவியை நாட வேண்டி உள்ளது. இந்த வெற்றிடத்தைதான் சாமியார்கள் நிரப்புகிறார்கள்.காவி உடை தரித்தவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்னும் எண்ணம் நம் மனதில் இருக்கிறது. அவர்கள் சொல்வதை கண்ணை மூடி கொண்டு, ஏற்று கொள்வதில்தான் பிரச்சினை தொடங்குகிறது " என்கிறார் மன நல மருத்துவர் ஷாலினி.
நித்யானந்தர் விவகாரத்துக்கு பின் முதல்வர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் "இனி சாமியார்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஒரு தனி குழு அமைக்கபடும்" என்கிறார்.
அறநிலைய துறை அதிகாரிகளை கொண்டு அந்த குழு அமைக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார் முதல்வர்.
"ஒரு குற்றவாளியை இன்னொரு குற்றவாளி எப்படி விசாரிக்க முடியும். அறநிலைய துறையினரும், அரசியல்வாதிகளும் ஊழல் குற்றவாளிகளே " என்கிறார் திரு. ராம.கோபாலன்.
எனது சென்ற பதிவில், ஒரு வாசக நண்பர் குறிப்பிட்டது போல, கிறிஸ்துவ திருச்சபைகளிலும் பாதிரியார்களின் அத்துமீறல்கள் நடைபெறுவதாக நாம் பார்க்கிறோம். ஜமாஅத் என்கிற பெயரில் பள்ளிவாசல்கள், தங்களது பகுதிகளில் அடக்குமுறைகளில் ஈடுபட்டு வருவதும் நாம் அறிந்ததே. இவற்றை தடுக்க என்ன செய்ய போகிறார் நம் முதல்வர்??
[ சோ இந்த வார துக்ளக்கில் இவ்வாறு எழுதியிருக்கிறார் .....இந்த விவகாரமே ஹிந்து மதத்திற்கு எதிராகச் செய்யப்படுகிற சதி என்ற சிலருடைய பேச்சு, ஏற்கத்தக்கதாக இல்லை 'எத்தனையோ பாதிரியார்கள்ப் பற்றி இம்மாதிரி செய்திகள் வருகின்றன; ஆனால் பத்திரிகைகளும், டெலிவிஷன்களும் அவற்றை ஏன் பிரபலப்படுத்தவில்லை?" என்று சிலர் கேட்கிறார்கள். இதற்கு காரணம் இருக்கிறது
இந்த மாதிரி பாதிரியார்கள், மிகக் குறுகிய வட்டத்தில் இயங்குகிறவர்கள். ஆகையால் அவர்களைப் பற்றிய செய்திகள் பலரது கவனத்தை ஈர்க்காது. அதனால் அது மீடியா வர்த்தகத்துக்கு லாயக்கில்லை. லட்சக்கணக்கான மக்களை பக்த்தர்களாகக் கொண்ட சாமியாரைப் பற்றிய செய்தி என்றால், அதில் பலர் அக்கறை காட்டுவார்கள்; வர்த்தகம் நன்றாக இருக்கும். இது தான் காரணமே தவிர ஹிந்து மதத்தினருக்கு எதிரான சதி எதுவும் இல்லை"... ]
(நன்றி..இனி அடுத்த வாரம்).
- இன்பா
( சில பகுதிகளை இந்த வாரம் எடிட் செய்திருக்கிறேன் )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, March 14, 2010
சன்டேனா இரண்டு(14-3-10) செய்திவிமர்சனம்
Posted by IdlyVadai at 3/14/2010 08:30:00 AM
Labels: இன்பா, செய்திவிமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)











56 Comments:
Thanks for such a wonderful article. Nobody has rights to comment about nithy ta, as nobody is perfect. Don't think that hindu religion is getting affected..
What Mr.Cho said is correct.. Even in case of Mr.vasudev, if he get some problem in future, it is his problem. Just take the good thing, which is suitable to us. Why we have to concentrate on bad thing when we have good fruit?
விபச்சாரம் செய்த ஒரு ஸ்ரிதியை தண்டிக்க வேண்டும், அவளை கல் எரிந்து கொல்ல வேண்டும் என அனைவரும் கூரிய போது, இயேசு "உங்களில் பாவம் செய்யாதவன் எனனோ அவன் முதல் கல்லை எரியக்கடவன்" என்றார். அதன் பின்னும் அங்கே நிற்க தகுதியுள்ளவன் ஒருவனும் இல்லை. அது போல் உங்களில் பாவம் செய்யாதவன் எவனோ அவன் முதல் கல்லை எரியுங்கள்.
i feel its high time people come to their senses .dont u think the blogger world is also using these hot news to become popular?
எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் நாம் .தெளிவடையும் வரை இந்த விளையாட்டுகள் நிகழ்ந்த வண்ணமே இருக்கும்
And this type arakattalai exploitation is happening under the watch of a great economist Shri Manmohan, another great econimist Shri Chidambaram and long time finance minister Pranab Mukherjee. 3 Idiots.
நல்லகாலம் நித்யானந்தர் பார்ப்பனர் இல்லை.
அமுதப்ரியன்
இட்லி வடை டிரஸ்ட் - உடனே ஆரம்பியுங்க - நான் பொருளாளராக இருப்பதற்கு - ஆனந்தமாகச் சம்மதிக்கிறேன். விரைவில் இட்லி வடை டிரஸ்ட் உறுப்பினர் எண்ணிக்கை நான்கு இலக்கங்களை எட்டப்போகிறது. அப்புறம் என்ன? உலகப் பணக்காரர் பட்டியலில் (ஃபோர்பஸ்.காம்) - பாருங்க - நாமும் இடம் பெறலாம்.
நித்தியும் பி.ஜே.பி. காரர்களும் ஒருவகையில் ஒன்று, காமிராவை வச்சுக்கிட்டு தான் எல்லாத் தப்பையும் பண்னுவாங்க !!!! நித்தி என்ன தான் டிபென்ஸ் ஆடினாலும் அது இனி செல்லாது. அப்புறம் எதுக்கு தான் சமாதி கருமாதின்னு சொல்லிக்கிட்டு திரியுராருன்னு தெரியலை !!
இந்த விவகாரம் ஆரம்பித்தப்ப கூட தனி இருவரின் அந்தரங்கம் இப்படி சந்தி சிரிக்கிறதே என்ற பச்சாதபம் இருந்தது. அவர்(ன்) வீரப்பன்(ர்) பாணியில் சி.டி மூலமாக விளக்கம் தருவதை பார்த்தால் இவரை நைய புடைத்தால் என்ன என்றே தோணுது.
இது இந்து மதத்துக்கு எதிரான சதி என்று சொல்பவர்கள் இனிமேலாவது "நான் தான் கடவுள்" என்று அறிவிப்பவர்களை அந்த மேடையிலேயே உதைக்க ஆரம்பிக்கலாம்.
Yellow Comment ??!!!!!!!!!
1. ஆதவன் தயாரிப்பாளர்
2. காருண்யா கல்லூரி கோவை
3 பால் தினகரன்
4 பதிலுக்கு பெங்களூரில் எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் சரி, டபுள் மடங்கும் கூட ஒகே
5. அந்த பெங்களூர் நிலம் -> நித்யானந்தா
6. "உங்களால முடிஞ்சத பாத்துக்கோங்க, அந்த நிலத்தை நான் தரமாட்டேன்"
7. நடிகையுடன் சாமியார் சல்லாபம், பரபரப்பு விடியோ
8. தற்போதைய எல்லா கூத்துக்களும்
Well the only spiritual person I believe is Kumudam Jothidam A.M.R
His is not sannyasi or politician.He is married man. All his advises has been wonderful for me and for all youngsters. I strongly believe he is the only genuine spiritual person to believe now in Tamil Nadu.
He is the only reason why I buy a Kumudam magazine every week in the first place.
எடிட் செய்யப்பட்ட பகுதிகள் என்று தனியாக இன்பா எழுதுவாரா?
சிக்கலாபுரீஸ..... காவி ட்ரஸ் கப்ஸாய... ஆல்வேஸ் இன்கம்டேக்ஸ் ரெய்ட் சேஸ்தாய...
இது ஒரு எஸ்.வி.சேகர் நாடகத்தில் வரும் வசனம்...
(பின்குறிப்பு : கௌதமன் சார்... அப்படியே நானும் உங்க பக்கத்துல இப்போவே ஒரு ”துண்டு” போட்டுக்கறேன்...
//உழைப்பால், தன்னபிக்கையால் வென்றவர்களின் கட்டுரைகளை விடுத்தது, சாமியார்களை தேடிபிடித்து, அவர்களிடம் தொடர்கள் வாங்கும் பத்திரிக்கைகளே முதல் குற்றவாளிகள்.//
இது சரியான கருத்து. அதே போல், உழைப்பால், தன்னம்பிக்கையால் வென்றவர்களை விட்டு விட்டு, ஏமாற்றிய ஒரு சாமியாரை பற்றி, தினமும் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கும் உங்களை எந்த விதத்தில் சேர்ப்பது?
ஒரு முறை எழுதினீர்கள் சரி... அதை விட்டுவிட்டு பயனுள்ள வேறு விஷயங்களுக்கு நகரலாமே?
இட்லி வடை கவனிக்குமா?
//சில வருடங்களில் அங்கு 300 ஏக்கர் பரப்பிலான ஆசிரமம் கட்டும் நித்யானந்தராக உருவானது எப்படி?//
எல்லாம் குமுதம், ஆனந்த விகடன் உதவி தான்.
ரஜினி மாதிரி லூஸுங்க பாபா மாதிரி பைத்தியத்த சப்போட் பண்ணலியா?
//இட்லி வடை டிரஸ்ட் - உடனே ஆரம்பியுங்க - நான் பொருளாளராக இருப்பதற்கு - ஆனந்தமாகச் சம்மதிக்கிறேன். விரைவில் இட்லி வடை டிரஸ்ட் உறுப்பினர் எண்ணிக்கை நான்கு இலக்கங்களை எட்டப்போகிறது. அப்புறம் என்ன? உலகப் பணக்காரர் பட்டியலில் (ஃபோர்பஸ்.காம்) - பாருங்க - நாமும் இடம் பெறலாம்.
//
ஆசை,தோசை,அப்பளம் வடை
கோபி - நீங்க துண்டு போடுகிறேன் என்கிறீர்கள்; ஆனா இன்டர்நெட் பிச்சைக்காரர் - இன்று துண்டு விரிச்சிட்டாரே - பார்த்தீர்களா?
(நன்றி : ஜெய்சங்கர் ஜெகநாதன்.)
I agree, it's we salaried people who end up paying Income tax, while these people up the ladder find devious ways to escape it. It's a widely known fact that the money circulated in religious trusts will exceed even that of a banks, but till now there's been no laws to track them and the departments are silent about it. Is it possible to convince our employers to pay a trust to which we are members instead of directly to us? So that we can take home our pay as "miscellaneous" expenses from the trust.
செல்வாக்குப் படைத்தவர்களை வருடத்திற்கு ஒருமுறை பட்டியலிட்டு வரும் இந்தியா டுடே, 2010ம் ஆண்டுக்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பலம் படைத்தோர் பட்டியலில் நக்கீரன் ஆசிரியர் கோபால் இடம்பெற்றுள்ளார்.
2007ம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு கலாம் இதுவரை 20க்கும் அதிகமான முறை வெளியாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதில் தான் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கலாமின் வெளிநாட்டுப் பயணத்தின் போது அவருக்கு பாதுகாப்பு அளிக்க நாளொன்றுக்கு 1000 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 45 ஆயிரம்) செலவாகிறது. இந்தச் செலவைக் குறைக்க கலாமின் வெளிநாட்டு பயணத்தை வருடத்திற்கு ஆறு முறை என்று கட்டுப்படுத்த அரசு பரிசீலித்து வருகிறது.
பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவியதாக அறிவித்துள்ளார்.
தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
//ரஜினி மாதிரி லூஸுங்க பாபா மாதிரி பைத்தியத்த சப்போட் பண்ணலியா?//
யார் அங்கே...ஜெய்ஷங்கர் வீட்டுக்கு ஒரு ஆட்டோ அனுப்புங்கள்
IV,
The following link shows what's happening in Bareilly which our pseudo secular media has completely blacked out.
http://satyameva-jayate.org/2010/03/13/bareilly/
என்னாங்க இது ஒரவஞ்சனையா இருக்கு! ‘கதவை மூடு, காமம் வரும்’னு சாமிஜி ஒரு படம் எடுத்து post production முடியறதுக்குள்ள திருட்டு VCDல TV சானல்கள் ஒளிபரப்பிடுச்சே! அவிங்க மேல தமிழக அரசின் குண்டர் சட்டம் பாயாதா!
கட்டண டாய்லெட்டுக்கு 2/= ரூபாய் கொடுக்க யோசிக்கும் நாம், சாமியாரிடம் ஆசி வாங்க நீண்ட வரிசையில் நின்று ஒவ்வொரு பக்தரும் செலுத்திய தொகை ரூ. 200"//
Correct
இட்லி, கோபி மற்றும் ஏனைய ரசிக பெருங்குடி மக்களே.... என்னை "ஸ்ரீல ஸ்ரீ மஞ்சள் ஜட்டியானந்தர்" என்று அழைத்து பெரிய்ய ஆளாக்குங்கள்...வர்றதை பங்கு போட்டுக்கலாம்..
காவி கட்டிய போலி சாமியார்களின் பின் நம் கேடு கேட்ட ஜனங்கள் போய்க்கொண்டிருக்கும் வரை எத்தனை பெரியார்கள் வந்தாலும் நோ ரிபார்மசி...உருப்படாது. அரசியல் கட்சிகள் ஆதரவு இல்லாமல் இவர்கள் சாமியாரா இருக்க முடியுமா? சம்பாதிக்க முடியுமா? வேலூர் ஸ்ரீபுரம் உள்ளே நுழைய ஒரு ஆளுக்கு 250 ரூ டிக்கெட்?? 20 ~ 30 கவுண்டர் வைத்து, கிரெடிட் கார்டு வாங்கும் வசதியுடன் வசூல் பண்ணுகிறார்கள்? எந்த இன்கம் டக்ஸ் ஆளாவது உள்ளே நுழைய முடியுமா? (அவர்களும் தரிசனம் பண்ண கூட ௨௫௦ ரூ டிக்கெட் வாங்கினு தான் போகணும்) ரொம்ப ரொம்ப கேவலம்...அதான் நான் இந்தியா வை விட்டு போய் 15 வருடமாகிறது... திரும்ப வர மனசு இடம் குடுக்க மாட்டேங்குது...
’வாங்க பேசலாம் வாங்க’ நிகழ்ச்சியில நடிகை ஷகீலாவிடம் ஓவரா பெரியார்தாசன் வழியும்போதே நெனச்சேன், இது மாதிரி ஏடாகூடமா ஏதாவது நடக்குமுன்னு.
jaishankar,
இதுல எங்கேந்து ரஜினி வந்தார் ,அவர் நின்னாலும் குற்றம் ,பேசினாலும் குற்றம் ,சாமீ கும்பிட்டாலும் குற்றம் ,கை தட்டினாலும் குற்றம் ,கண்டுபிடிகிறீங்க ..,அவர் என்ன நீ போய் பாபா வை கும்பிடு என்று சொன்னாரா ,பதிவுல என்ன சொல்லியிருக்கு என்பதை மட்டும் விமர்சனம் செய்தா போதும் ,தேவையே இல்லாம ரஜினி யை ஏன் இழுகீரிங்க ,அவர போய் லூஸ் சொல்லிறீங்க ,அவர் ஒரு படத்துல நடிச்சா எத்தனை குடும்பம் சாப்பிடுது தெரியுமா ,போங்க போய் பதிவுல என்ன சொல்லியிருக்குது மட்டும் விமர்சனம் செய்யுங்க
Hi All,
A good blog called chenai based chinese national news paper (The Hindu)
http://cbcnn.blogspot.com/
I think Cho is wrong. There's indeed an Evangelist conspiracy behind all these "intelligence" operations and the related psy-ops to it by Vijay Tv TOI et al, which enables their final goal of conversion through a projected Hindu Guilt and aversion to Hinduism, more easier.
இதில் குமுதத்தையும், விகடனையும் குறை சொல்லும் நீங்கள் என்ன செய்கிறீர்கள். எவ்வளவோ செய்திகள் இருக்க, சாமியார் செய்தியை வைத்தே ஒரு 5, 6 பதிவை ஓட்டி வீட்டீர். பரபரப்பாய் பக்கத்தை நிரப்ப வேண்டும் என்ற விதியை பத்திரிகைகள் மட்டுமா செய்கிறது? நீங்களும்தான் செய்கிறீர்கள். எல்லாம் வியாபாரம், வயிற்று பிழைப்பு என்பதை தாண்டி தர்மமாவது நியாமாவது...இதில் ஒரு அளவிற்கு சோ பரவாயில்லை..பல விஷயங்களை தவிர்கிறார். சிலவற்றை வியாபாரம் என்பதை முன்னரே சொல்லிவிட்டு செய்கிறார்.
இதில் குமுதத்தையும், விகடனையும் குறை சொல்லும் நீங்கள் என்ன செய்கிறீர்கள். எவ்வளவோ செய்திகள் இருக்க, சாமியார் செய்தியை வைத்தே ஒரு 5, 6 பதிவை ஓட்டி வீட்டீர். பரபரப்பாய் பக்கத்தை நிரப்ப வேண்டும் என்ற விதியை பத்திரிகைகள் மட்டுமா செய்கிறது? நீங்களும்தான் செய்கிறீர்கள். எல்லாம் வியாபாரம், வயிற்று பிழைப்பு என்பதை தாண்டி தர்மமாவது நியாமாவது...இதில் ஒரு அளவிற்கு சோ பரவாயில்லை..பல விஷயங்களை தவிர்கிறார். சிலவற்றை வியாபாரம் என்பதை முன்னரே சொல்லிவிட்டு செய்கிறார்.
http://harish-sai.blogspot.com
இதில் குமுதத்தையும், விகடனையும் குறை சொல்லும் நீங்கள் என்ன செய்கிறீர்கள். எவ்வளவோ செய்திகள் இருக்க, சாமியார் செய்தியை வைத்தே ஒரு 5, 6 பதிவை ஓட்டி வீட்டீர். பரபரப்பாய் பக்கத்தை நிரப்ப வேண்டும் என்ற விதியை பத்திரிகைகள் மட்டுமா செய்கிறது? நீங்களும்தான் செய்கிறீர்கள். எல்லாம் வியாபாரம், வயிற்று பிழைப்பு என்பதை தாண்டி தர்மமாவது நியாமாவது...இதில் ஒரு அளவிற்கு சோ பரவாயில்லை..பல விஷயங்களை தவிர்கிறார். சிலவற்றை வியாபாரம் என்பதை முன்னரே சொல்லிவிட்டு செய்கிறார்.
http://harish-sai.blogspot.com
//அதான் நான் இந்தியா வை விட்டு போய் 15 வருடமாகிறது... திரும்ப வர மனசு இடம் குடுக்க மாட்டேங்குது...//
இந்த ஆனந்தா’ங்கிற வார்த்தை தான் பிர்ச்சனையோ. ஜட்டியானந்தா என்ற பெயர் வைத்ததும் ஏடாகூடமா பேசுறீங்க !!
எல்லா நாட்டிலும் எதாவது ஒரு ஏமாத்து வேல நடந்துகிட்டு தான் இருக்கு. இந்தியாவில ஆன்மீக போர்வை உங்க ஊர்ல வேற போர்வை அவ்வளவு தான்!
இதுக்கு போய் இப்படி கோச்சுக்கலாமா ?
நீங்க US-ல் இருக்கும் இந்தியரா ? எனெனில் வேற எந்த நாட்டில் வசிக்கும் இந்தியரும் உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் இந்த இந்தியா இப்படி தான் என அலுத்துக் கொள்வதில்லை.
//அதான் நான் இந்தியா வை விட்டு போய் 15 வருடமாகிறது... திரும்ப வர மனசு இடம் குடுக்க மாட்டேங்குது...//
Better come back and whiten your Jatty....
//நித்யானந்தர் மீது எந்த பெண்களும் குற்றம் சுமத்த காரணத்தாலும்//
குற்றம் சுமத்தாத!!!
//நீங்க US-ல் இருக்கும் இந்தியரா ? எனெனில் வேற எந்த நாட்டில் வசிக்கும் இந்தியரும் உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் இந்த இந்தியா இப்படி தான் என அலுத்துக் கொள்வதில்லை.//
ரிஷபன், மிக சரியாய் சொன்னீர்...US ல் இருப்பவர்களிடம் தான் அந்த வறட்டு பெருமை இருக்கிறது. ஓரு நல்ல விஷயம் என்னவென்றால் அப்பெருமை உள்ளவர்களின் எண்ணிக்கை சமீப வருடங்களில் வெகுவாய் குறைந்துவிட்டது
http://www.harish-sai.blogspot.com/
//அவர் ஒரு படத்துல நடிச்சா எத்தனை குடும்பம் சாப்பிடுது //
அந்த ஆளுக்கு ரசிகனா எத்தனை பேரு வீணா போனாங்க தெரியுமா?
//எல்லா நாட்டிலும் எதாவது ஒரு ஏமாத்து வேல நடந்துகிட்டு தான் இருக்கு. இந்தியாவில ஆன்மீக போர்வை உங்க ஊர்ல வேற போர்வை அவ்வளவு தான்!//
எங்க ஊரு ன்னு ஒன்னும் ஸ்பெஷல் ஆ இல்ல...இந்தியன் தான் நானும்... இங்கன நடக்குற மாதிரி ஏமாத்து, பம்மாத்து வேலை வேற எங்கேயாவது ரொம்ப ஹை லெவெல்ல வேற நாடுகள்ள நடக்குதா? ஒரு வாட்டி வேலூர், புட்டபர்த்தி, மேல் மருவத்தூர் போயி பாருங்க...எத்தினி டம்சானந்தாக்கள் இருக்காங்கன்னு புரியும்..இது போதாத ஸ்ரீ ல ஸ்ரீ ரவிசங்கர், ஜாக்கி வாசுதேவ்..இப்படி கார்பொரேட் சாமியார்கள் வேற....கூடவே திருந்தாத ஜனங்கள்...வேண்டாம் அய்யா...தாங்க முடியல...
//இதுக்கு போய் இப்படி கோச்சுக்கலாமா ?//
கோவிச்சுக்கலை...ஆதங்கத்தை சொன்னேன்..
//நீங்க US-ல் இருக்கும் இந்தியரா ? எனெனில் வேற எந்த நாட்டில் வசிக்கும் இந்தியரும் உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் இந்த இந்தியா இப்படி தான் என அலுத்துக் கொள்வதில்லை.//
எனக்கும் U.S க்கும் ரொம்ப தூரம்...நான் வசிப்பது ஆஸ்திரேலியாவில்... வீணா போன ஜாதியில் பொறந்து சொந்த நாட்டில் வேலை கிடைக்காமல், பஞ்சம் பொழைக்க வந்த பாவி நான்... அலுத்துக்கற அளவு நான் ஒன்னும் "அமெரிக்க போன கொல்ட்டி யோ அல்லது, சுயநலம் பிடித்த கன்னடா காரனோ அல்லது திமிர் பிடித்த வங்காலியோ" அல்ல.. சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு ஏழை வாத்தியார் மகன்...உழைப்பால், Scholarship மூலம் தன்னம்பிக்கையுடன் படித்து மேலே வந்தவர்கள்..சாமியார் நம்பிக்கையில் அல்ல..
KGG anna.. neer trust-la membara mattum irum.. michatha naanga paathukarom :)
@ அனானி.... மஞ்சள் ஜட்டி என்னைக்கும் கலர் மாறாது.. மொதல்ல தலைவரை மஞ்சள் துண்டை எடுக்க சொல்லுங்க..அப்பால நான் ஜட்டியை வெள்ளை ஆக்கிகுறேன்..
எனக்கு ஒரு டவுட்டு!!! நித்யானந்தா பீஜ் கலர் ஜட்டி இல்ல போட்டிருந்தாரு??
@ ஹரிஷ்?? என்ன ரிஷபனுக்கு ஜிங்-ஜாங்கா? நாங்க ஒன்னும் பெருமை பீத்துற என்.ஆர்.ஐ இல்ல...ஒரு முறை வேலூர் ஸ்த்றீபுரம் போயி வாங்க..உங்களுக்கே உள்ளூர்ல இருக்குறது வெறுத்துடும்...
""நடிகையின் பெயர் கொண்டு வந்த பின்னூட்டங்கள். அந்த நடிகையின் பெயர் எல்லா பத்திரிகை/டிவியிலும் வந்துவிட்டது ஆனால் இட்லிவடையில் அவரை பற்றி போட என் மனம் ஒத்துக்கொள்ளவில்லை""
சொன்னவ்ர் மறந்திருப்பாரோ என்று நினைவுப்டுத்த விரும்புகிறேன்!!
மீண்டும் மீண்டும் அதே விஷியத்தை பற்றிய பதிவு.இந்த மாதிரி பொழப்பு தேவையா? இதுக்கு பதிலா .....
ஒரு ஹிந்துத்துவ நாட்டில் இந்துகளின் சாமியார்களை தான் அதிகம் விமர்சிப்பார்கள்.இது இயற்கை..அதற்காக கிருஸ்தவ பாதிரியார்கள் செய்யும் அநியாயத்தை கேக்காமல் இருக்க கூடாது.அவர்கள் பள்ளிகூட பிஞ்சுகளை தான் நாசம் பண்ணுகிறார்கள்.குறிப்பாக இவர்களை உக்குவிப்பது அரசியல்வாதிகள் என்றால் இன்னொரு பக்கம் இந்த பதிரிகைகரர்கள் இவர்களை விளம்பர படுத்துகிறார்கள்.இன்றைய நிலையில் பத்திரிகைகள் அவர்களது வரைமுறைகளுக்கு உட்பட்டு இருப்பது இல்லை. தொலைகாட்சி முதல் எழுத்துலக பத்திரிகைகள் வரை அனைவரும் குற்றவாளிகள் .எங்காவது சிறு பிரச்சினை அகத என்று பார்த்து கொண்டு இருப்பவர்கள்..உதரணத்திற்கு ஒன்று சொல்கிறேன் சினிமா வெற்றி பெற்றது என்பது வேண்டுமானால் ஒரு செய்தியாக இருக்கலாம்.அப்படி செய்தியாக பட்டது எல்லா படங்களுக்கும் சம தானே.மற்ற படங்கள் நன்ற ஓடினால் அதையும் செய்தியில் ஒளிபரப்ப வேண்டியது தானே.இது கூட வேண்டாம்.சில படங்கள்(குறிப்பாக ரஜினி,கமல்,ஆமிர்கான்,ஸருக்ஹ khan,அமிதாப் பச்சன்) ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே பத்திரிகைகள் செய்தி வெளி இடுகிறார்கள்.அது என்னமோ இந்தியா நாட்டின் வருவாய் துறை அமைச்சர் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு சமமாக செய்தி வெளிடுகிரார்கள் .இன்று போட்டியாகி விட்டது.போட்டியில் பத்திரிகை தர்மம் மீர படுகிறது.தான் சொந்த காரணகாரியதுக்காக பத்திரிகையை பயன்படுத்துகிறார்கள்..ஒரு அரசியல்வாதி தான் அரசியலில் ஜெய்பதற்காக பத்திரிகை தொடங்கினால் தான் முடியும் என்று நினைக்கும் அளவுக்கு அதன் தர்மம் மீர படுகிறது.என்ன கேவலமான சூழ்நிலை.தமிழ் நாட்டில் எழுத்துலகிற்கு பெயர் போனா ஒருவர் ஆளுகையில் தான் இதனை மீறல்கள்.கண்டிபதற்கு உரிமை உண்டு கண்டியுங்கள்.தயவு செய்து..முன்னுதாரனமாக இருங்கள்.....
டாக்டர் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக இருந்தபோது, இந்தியத் தலைமை 2020 (Lead India 2020) இயக்கத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் சிலரை 28, ஆகஸ்ட் 2006 அன்று சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். கலாமின் வழக்கமான கேள்வி-பதில் பாணியில்தான் உரையாடல் நடந்துகொண்டிருந்தது.
மாணவர்களை நோக்கிக் கேட்டார். “நீங்களெல்லாம் என்னவாக விரும்புகிறீர்கள்?”
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடை சொல்ல, பார்வையற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவரான ஸ்ரீகாந்த் பட்டென்று சொன்னார். “நாட்டின் குடியரசுத் தலைவராக வர விரும்புகிறேன். என் விருப்பம் நிறைவேறினால் நான்தான் இந்தியாவின் முதல் பார்வையற்ற குடியரசுத் தலைவராக வரலாற்றில் பதிவு செய்யப்படுவேன்!”
“உங்களுடைய கனவு ஒருநாள் நனவாக ஆசைப்படுகிறேன். இதற்காக நீங்கள் மிகக்கடுமையாக உழைக்க வேண்டும்!” என்று ஸ்ரீகாந்திடம் கேட்டுக் கொண்டார் கலாம்.
கனவு நோக்கிய அவரது பயணம் எந்த நிலையில் இருக்கிறது?
இண்டர்மீடியட் வகுப்பில் அறிவியலை பாடமாக எடுத்துக்கொண்டு படித்த அவர் 96% மதிப்பெண் வாங்கி தேறினார். இப்போது எம்.ஐ.டி. ( Massachusetts Institute of Technology)பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்.
ஜெனரல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் பட்டம் முடிந்ததுமே எங்களிடம் பணிக்கு வாருங்கள்.
லட்சங்களை சம்பளமாக தருகிறோம் என்று இவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. “நான் இந்தியாவுக்கு திரும்பி குடியரசுத்தலைவர் ஆக முயற்சிக்கிறேன். அந்த முயற்சியில் வெற்றி கிட்டாவிட்டால் அடுத்த நிமிடமே அமெரிக்காவுக்கு திரும்பி உங்கள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துக் கொள்கிறேன்” என்று பதிலளித்திருக்கிறார்.
Source: புதிய தலைமுறை, எழுதியவர் யுவகிருஷ்ணா
http://simulationpadaippugal.blogspot.com/2010/03/blog-post_14.html
இதோடா - !! ஒரு பேச்சுக்குக் கூட பொருளாளர் னு சொல்லிக்க விட மாட்டேங்குறாங்க. அனானி - மிச்சத்த தான பாத்துக்கறேங்குறீங்க? நான் மிச்சம் மீதி இல்லாமப் பாத்துக்கறேன்.
media and ppl were all over the place terming M.F.Hussain's change of citizenship (since he could not operate here) as a "national shame" and went to extent of "offering apology".
But look at the following statement -
"....சொந்த நாட்டில் வேலை கிடைக்காமல், பஞ்சம் பொழைக்க வந்த பாவி நான்... "
What about these ppl - shudn't we be ashamed of this more - that ppl here do not find a way to "live" (let alone practice their art)?
Shudn't indian govt be apologizing to these citizens - that it hasn't provided enuf opportunities for ppl to "live" here?
(I am not talking abt ppl who leave india - for want of better lifestyle and/or more money)
Source: புதிய தலைமுறை, எழுதியவர் யுவகிருஷ்ணா
---------------------
ஏன் இந்த விளம்பரம்? நீ வாங்கற இந்த அஞ்சுக்கும் பத்துக்கும் இது தேவைதானா?
:-)
பாரு பண்ணுறதையும் பன்னிட்டு நயாபைசாக்கு பிரயோஜனம் இல்லாத மாதிரி..
Countdown: 33 more :D
http://www.youtube.com/watch?v=5Pqhnf6XKC8&feature=fvw
INBA...you forget to list Kanchi Mutt.,
How KANCHI MUTT has got huge wealth .....
Many of us know how nithyananda,jaggi vasudev, saibhaba procured wealth.
ANY ONE KNOW "HOW KANCHI MUTT BECAME RICH'??????.....
....
நல்லகாலம் நித்யானந்தர் பார்ப்பனர் இல்லை.
அமுதப்ரியன்
March 14, 2010 11:36 AM
IF HE IS A BRAHMIN CHO AND IDLYVADAI WILL DEFEND HIM...hahaha
Murali
நித்யானததை விட்டு விட்டு இந்த நியூசையும் பாருங்கள்..
http://in.news.yahoo.com/43/20100315/818/tnl-rs-5-crore-garland-for-mayawati.html
இந்த தேசம் உருப்படரா மாதிரி தெரியல....
//எனக்கு ஒரு டவுட்டு!!! நித்யானந்தா பீஜ் கலர் ஜட்டி இல்ல போட்டிருந்தாரு??//
மஞ்சள், உங்களை விட்டா வேற யாரால ஜட்டி கலரை கரெக்டா சொல்ல முடியும் ?? நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்.
//ஒரு முறை வேலூர் ஸ்த்றீபுரம் போயி வாங்க..உங்களுக்கே உள்ளூர்ல இருக்குறது வெறுத்துடும்...//
நானும் வெளிநாட்டில் தான் இருக்கிறேன்,இந்தியா வரும் போது நீங்க சொல்கிற இடங்களுக்கு எல்லாம் நான் போவதில்லை, நீங்க ஏன் அது மாதிரி எடத்துக்கெல்லாம் போனீங்க ! ரொம்ப அப்பாவியா !!!
கண்டதேவி கோவிலுக்கு செல்வதோடு சரி ..... பெரும்பாலும் ISO 9002(?!) மற்றும் கார்பரேட் கோவில்களைக் கூட தவிர்த்து விடுவேன்
நகரத்தில் நல்லதும் இருக்கு கேட்டதும் இருக்கு நாம எதுக்கு வேலியில போறதை எடுத்து ......................................
//ஏன் இந்த விளம்பரம்? நீ வாங்கற இந்த அஞ்சுக்கும் பத்துக்கும் இது தேவைதானா?
:-)
பாரு பண்ணுறதையும் பன்னிட்டு நயாபைசாக்கு பிரயோஜனம் இல்லாத மாதிரி..///
Hahahahahahahah.. LOL...
//அனானி - மிச்சத்த தான பாத்துக்கறேங்குறீங்க? நான் மிச்சம் மீதி இல்லாமப் பாத்துக்கறேன்.//
LOL... swamin.. full form-la irukeer pola
சன்டேனா இரண்டு.
மன்டேனா சைபர்.
டியுஸ்டேனா சைபர்.
வெட்னஸ் டேனா ???
Post a Comment