
இந்த வாரம் கொஞ்சம் ஆன்மிகம் பேசுவோம்.
செய்தி # 1
‘தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’
‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது எவ்வளவு உண்மை. சைவத்திருமுறைகள் பன்னிரண்டு. அதில் திருவாசகம் எட்டாம் திருமுறை. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகியோர் சமய குரவர்கள் என்று அழைக்க படுகிறார்கள். திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்கிறது மாணிக்கவாசகர் அகவல்.சமய குரவர்களின் காலமும் இதில் குறிப்பிடபட்டு உள்ளது.
"சித்திரையில் ஆதிரையில் திருஞானசம்பந்தர்
பக்திமிகும் அப்பர்பிரான் பங்குனி ரோகிணி
வித்துரிய ஐப்பசி விசாகத்தில் வாதவுரார்
உத்திரத்தில் ஆவணியில் உதித்தார் நம்சுந்தரரே".
என்கிறது அகவல். வாதவுரார் என்பது மாணிக்கவாசகரின் இயற்பெயர்.
ஓதுவார்கள் திருவாசகம் ஒலிக்க, மனதை தியான நிலைக்கு அழைத்து செல்லும் மணியோசைகள் முழங்க, சிதம்பரம் நடராஜர் சன்னதி முன் நின்று இருந்தேன். நீண்ட நாட்கள் ஆகிவிட்டது கோவிலுக்கு வந்து.
பல நூற்றாண்டுகளாக தீட்சிதர்கள் எனப்படும் தில்லைவாழ் அந்தணர்களிடம் இருந்து நடராஜர் கோவிலின் நிர்வாக உரிமை அரசு வசம் போய்விட்டதாக சொன்னாலும், பூஜை மற்றும் பள்ளியறையின் கட்டுப்பாடு இன்னும் தீட்சிதர்களிடமே இருக்கிறது. நடராஜர் கோவில் என்பது அவர்களின் வாழ்க்கை. உயிர்மூச்சு. இந்த நடராஜர் கோவில் காரியங்களை அவர்களை தவிர வேறு யாராலும் முறையாக செய்ய இயலாது என்பது என் கருத்து.
நிற்க. யாதும் ஊரே, யாவரும் கேளிர், இறைவன் எங்கும் இருக்கிறான் என்றெல்லாம் பேசினாலும், ஒரு சிறிய இடைவேளைக்கு பின் சொந்த ஊரில் காலடி எடுத்து வைக்கும் போது, ஒரு இனம் புரியாத சந்தோஷம் வருவதாக உணருகிறேன். நாடுகள், பல கோவில்கள் போனாலும், இந்த கோவிலில், நடராஜர் சன்னதியில் எனக்கு கிடைக்கும் நிம்மதியும், பரவசமும் வேறு எங்கும் கிடைக்கவில்லை என்பது அனுபவத்தில் நான் கண்ட உண்மை.
இதற்க்கான காரணத்தை, மிக அற்புதமாக விளக்கி இருக்கிறார் மறைந்த எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்கள்.
அவரது சொந்த ஊரான ஸ்ரீரங்கத்தில் ரங்கநாத பெருமாளை ஒவ்வொரு முறை சேவிக்கும் போதும், இத்தைகைய உணர்வு வருவதாக அவர் குறிப்பிடுகிறார்.
யாதும் ஊரே என்றாலும், சொந்த ஊர் ஏன் நம்மை நெகிழ வைக்கிறது? பிறப்பனுவிலையே சொந்த ஊர், மொழி உணர்வு வந்து விடுகிறதா? போன்ற கேள்விகளுக்கு சுஜாதா தந்த விளக்கம்,
"இந்த பெருமாளை சேவிக்கும்போது, நாம் தாய், தந்தை, பாட்டனார்,முப்பாட்டனர்களை இந்த பெருமாள் மூலம் நாம் பார்க்கிறோம்.
அவர்கள் பலப்பல வருடங்களாக இந்த பெருமாளின் முக விலாசத்தை பார்த்து பார்த்து இவனையே சிந்தித்து வாழ்ந்து இருக்கிறார்கள்.இவன் பாதங்களை சென்று அடைந்து இருக்கிறார்கள். நம் வாழ்வுக்கு இடைவெளி அற்ற தொடர்பை இவனே ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறான்".
ஸ்ரீரங்கம் பெருமாளை சேவிக்கும் போது, அந்த திவ்விய ரூபத்தில் தன் தாய் - தந்தையரை உணர்வதாக சுஜாதா கூறுகிறார்.
எத்தனை அழகான, நுட்பமான விளக்கம். நானும் பிறந்து,வளர்ந்த ஊரில், ஸ்ரீ நடராஜ பெருமான் சந்நிதியில், சூட்சுமமாக என் முன்னோர்களை தரிசிப்பதாக உணருகிறேன்.
செய்தி # 2
"கல்யாணத்துக்கு பெண் தேடறிங்களா, இன்பா. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போங்கோ. சுவாமி முன்னாடி அமர்ந்து, இதில் இருக்கும் சுலோகங்களை படிங்கோ. சீக்கிரம் நல்ல பெண் கிடைப்பா " என்று எனக்கு நன்கு தெரிந்த ஒரு பெண்மணி சொன்னார். அவர் ஒரு வழக்கறிஞரும் கூட.
அவ்வாறு சொல்லி, அவர் எனக்கு தந்த புத்தகம் "ஹனுமான் சாலிசா".
"ஸ்ரீ குரு சரந ஸரோஜ ரஜ நிஜ மனு முகுரு ஸுதாரி
பரநஉ ரகுபர பிமல ஜஸு ஜோ தாயகு பல சாரி
புத்திஹீந தநு ஜாநிகே. ஸுமிரௌம் பவந குமார
பல புதி பித்யா தேஹு மோஹி ஹரஹீ கலேஸ பிகார "
என தொடங்குகிறது ஹனுமான் சாலிசா. இந்த வரிகளின் அர்த்தம், ஸ்ரீ குருவின் பாதாரவிந்தத்தில் இருக்கும் மகரந்த பொடிகளால் என் மனம் என்ற கண்ணாடியை தூய்மை ஆக்கி தர்ம அர்த்த காம மோக்ஷ புருஷார்த்தங்களைக் கொடுக்கும் என்பதாக படித்தேன். (பார்க்க :http://meerambika.blogspot.com/2007/03/intuition-2-1-2.html).
இதை இயற்றியவர் ஸ்ரீ துளசி தாசர் என்னும் ஆஞ்சநேய ஸ்வாமியின் உபாஸகர். இது ஒரு ஆஞ்சிநேயர் ஸ்துதி என்று கூறாமல் 'ஸித்த க்ரந்தம்' என்று அழைக்கிறார்கள் சமஸ்கிரதத்தில்.
ஹனுமான் சாலிசாவை காலையும், மாலையும் முழு நம்பிக்கையுடன் அனுமார் சந்நிதியில் அல்லது அவரது திருவுருவ படத்திற்கு முன்னால் சொன்னால் எல்லாவித காரியங்களும் நல்லவிதமாக நடக்கும், தடைகள் நீங்கும் என்று நான் கண்டு இருக்கிறேன் என்று சொன்னார் அவர்.
ஆனால், அந்த புத்தகத்தை,சுலோகங்களை நான் முழுமையாக படிக்கவில்லை. சிறிது நேரம் புரட்டிவிட்டு, மூடிவிட்டேன். அதன் பின், ஒரு சனிக்கிழமையில் என்னை சந்தித்த அந்த பெண்மணி, "நீங்க ஹனுமான் சாலிசாவை திறந்து கூட பார்க்கலைன்னு நினைக்கிறேன் " என்றார் பளிச்சென்று. நான் ஆம் என்று தலை ஆட்டியபோது, உடனே நங்கநல்லூர் கோவிலுக்கு அழைத்து சென்று, ஸ்ரீ அனுமார் சன்னதி முன்னர், ஹனுமான் சாலிசாவை படிக்க வைத்தார். அது நடந்த சில மாதங்களுக்கு பின், தற்போது, எனக்கு பெண் கிடைத்து விட்டார். ஹனுமான் சாலிசா படித்த பின், இப்படி எனக்கு நேர்ந்து இருக்கிறது.
நமக்கும் மேல ஒரு சக்தி இருக்கிறது என்பதை பல சமயங்களில், நம் அன்றாட வாழ்க்கை உணர்த்தி வருவதை, நீங்கள் உணர்ந்து இருக்கிறிர்களா நண்பர்களே?
(நன்றி, இனி அடுத்த வாரம்).
-இன்பா
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, February 28, 2010
சன்டேனா இரண்டு (28-2-10) செய்திவிமர்சனம்
Posted by IdlyVadai at 2/28/2010 07:00:00 AM
Labels: ஆன்மிகம், இன்பா, செய்திவிமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










18 Comments:
வாழ்த்துக்கள் இன்பா.
இன்பா
”ஹனுமான் சாலிசா” படிச்சாரா, நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோவிலுக்கு போனாரா தெரியல.. ஆனா, கல்யாணத்துக்கு ரெடியாயிட்டார் போல இருக்கு...
அதான், ஒரே ஆன்மீகம் எல்லாம் பலமா எழுதறார்...
வாழ்த்துக்கள் இன்பா...
Ennappa Inba..
Started to preach hanuman salicha. But the reason you are giving been very cheap like now a days so called anmigavathigal giving to others..
Please stop and make yourself pure and surrender him.Dont do bussiness with GOD.
very nice writing.
congrats Inba
I disagree with your news-1, Dikshitars might be experts in puja, but I was stumped to see their arrogance and authoritarianism when I visited the temple. That made me seriously think why this holy site, associated with glorious past of Tamils, hasn't come under govt. It's fortunate that a old man has fought and helped preserve the sanctity of the temple, otherwise it would have become a kerala type temple, full of stupid rules. The old man(a champion) will as usual be forgotten, why not Idlyvadai cover him.
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் மட்டும் இல்லை. எந்தக் இந்துக் கடவுளும் நமக்கு நல்லன செய்வதற்கே இருக்கிறார்கள். கடவுளிடம் வேண்டுகோள் வைப்பதே கடவுளுக்கு நம் மைப்பற்றி எதுவும் தெரியாது எனச் சொல்வதற்குச் சமம். கடவுளுக்குத் தெரியாதா நமக்கு என்ன, எப்போது, எப்படித் தரவேண்டுமென?
இருப்பினும், வாழ்த்துக்கள் இன்பா..
இன்பகரமான வாழ்க்கை அமையட்டும்..
ஐய்யா,
அந்த எட்டாம் திருமுறையையோ ஒன்பதாம் திருமுறையையோ ஆறுமுக நாவலர் பாடி அந்த தில்லை நடராஜனை சேவிக்கும் போது தன் தந்தையையோ தாயையோ பார்க்கும் இன்பத்தை பெற்றால் அந்த தீட்சிதர்களுக்கோ எங்கே அரிக்கிறது?...
அந்த தில்லை நடராஜனை பார்க்க தீயில் கருகிய நந்த்னார் நுழைந்த வழியை “சூத்திரன் நுழைந்த வழி” என சுவர் எழுப்பி பார்பனீயத்தை கட்டிகாக்கும் தீட்சிதர்களிடமிருந்தால் அந்த தில்லை நடராஜ பார்பனனுக்கும் அவரின் குழந்தைகளான மற்ற பார்பனர்களுக்கும் நல்லதாக இருக்கும் அதனால் அவர்களின் உயிர்மூச்சு அவர்கள் நிர்வாகித்தில் இருப்பது தான் நலம் என்ற கருத்தை இட்லிவடை ஐய்யர்& ஐய்யங்கார்(வடகலை, தென்கலை) உடன் சேர்ந்து இந்த இட்லிவடை தாசனும் அமோதிக்கிறேன்
சொந்த ஊருக்குச் சென்று அங்கு இருக்கும் இறைவனை தரிசிப்பதில் இருக்கும் இன்பம், பிற புண்ணியத் தலங்களுக்குச் சென்று தரிசிப்பதை விட அதிகம்தான்.
நிற்க, திரு இன்பாவுக்கும் அவரின் திருமதி ஆகப் போகிறவருக்கும் வாழ்த்துகள்!
//அது நடந்த சில மாதங்களுக்கு பின், தற்போது, எனக்கு பெண் கிடைத்து விட்டார். ஹனுமான் சாலிசா படித்த பின், இப்படி எனக்கு நேர்ந்து இருக்கிறது//
இதைப் படிக்கிறப்போ எனக்கு விவேக் காமெடி தான் நினைவுக்கு வருது. அந்தப் பெண்மணி “நங்கநல்லூர் அனுமன் கோயில்ல ஒரு பையன் உட்கார்ந்து ஹனுமான் சாலிசா படிச்சிட்டு இருப்பான், அவன் தான் உங்க மாப்பிள்ளை”ன்னு பொண்ணு வீட்டுல சொல்லி இருக்கப் போறாங்க ;-)
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் மட்டும் இல்லை. எந்தக் இந்துக் கடவுளும் நமக்கு நல்லன செய்வதற்கே இருக்கிறார்கள். கடவுளிடம் வேண்டுகோள் வைப்பதே கடவுளுக்கு நம் மைப்பற்றி எதுவும் தெரியாது எனச் சொல்வதற்குச் சமம். கடவுளுக்குத் தெரியாதா நமக்கு என்ன, எப்போது, எப்படித் தரவேண்டுமென?
வாழ்த்துக்கள் இன்பா..
Thanks Jeyakumar :)
KVR :))))))))))
1.நல்ல கட்டுரை.ஆனால் மாருதியை கல்யாண தரகர் ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்களே? எனினும் வழ்த்துக்கள்!!
2சுஜாதா ப்ற்றிய செய்தி! அவ்ருடைய இர்ண்டாமாண்டு நினைவுதினத்தின்போது.என்ன ஒற்றுமை!கண்களில் நீர் !
3.இந்த கட்டுரையை படித்தவுடன் சில பகுத்தறிவு வா(ந்)திகள் பாப்பான்,பார்ப்ப்ணீய்ம் என்று ஜல்லியடிக்க கிள்ம்பிவிடுவார்கள்
1. ஆதிசிதம்பரத்தின் ஆலய வழிபாட்டு முறைகளை சமண, பௌத்த காலத்திற்குப் பின் வந்த பக்தியுக காலத்தில் நெறிப்படுத்தித் தந்தது ஆதி சங்கரர். அங்கே செய்யப்பட்டிருப்பது தாந்ரீக ரீதியிலான யந்திரப் ப்ரதிஷ்டை. ஆகவே அதற்கேற்றவாறு அங்கே வழிபாட்டு முறைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதன்படியே இன்றும் செய்து வருகிறார்கள்.
2. கேரள ஆலயங்களிலும் இதே வழிபாட்டு முறைதான் உள்ளது. அங்கே உள்ள மக்கள் யாரும் இதையெல்லாம் முட்டாள்தனம் என்று சொல்லவில்லை. (கேரளாவில் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகம்)
3. ஆறுமுகசாமி என்பவர் ஓதுவார் இனத்தைச் சேர்ந்தவர் அல்ல.
4. தீக்ஷிதர்கள் தமிழுக்கோ, தமிழ் வழிபாட்டு முறைக்கோ எதிரானவர்கள் அல்ல. அவர் வழி வழியாகச் செய்துவரும் வழிபாட்டு முறைகளையே தொன்று தொட்டுச் செய்து வருகிறார்கள். அது முட்டாள்தனம் என்றால், இறைவனுக்கு ஆடு, கோழி, மான், மாடு, எருமை, பன்றி என பலியிட்டு வணங்குவதும் முட்டாள்தனமாகி விடும்.
5. பார்ப்பனர்கள் வேறு. அந்தணர்கள் வேறு. தீக்ஷிதர்கள் வேறு; இப்போது உள்ள ஐயர், ஐயங்கார் வேறு. இதைப்பற்றி எல்லாம் விரிவாக அறிய சமய/இலக்கிய அறிவு கொஞ்சமாவது வேண்டும்.
6. சிதம்பரம் ஆலயத்தில் சபைக்கு உள்ளே சென்று தமிழில் பாடவோ, வணங்கவோ எந்தத் தடையும் இல்லை. இப்போதும், எப்போதும் தமிழில் பாடியே வருகின்றனர். ஆனால் பூஜை நேரத்தில் வெளியார் யாருக்கும் வெளிக்கருவறையாகக் கருதப்படும் சபையில் நுழைய அனுமதி இல்லை. வாயிலில் நின்று தரிசிக்கலாம். தமிழ்நாடு மட்டுமல்ல பெரும்பாலான எல்லாக்கோயிலிலுமே இவ்விதிமுறை தான் உள்ளது. கருவறைக்குள்ளே பூசாரி மட்டுமே செல்ல முடியும். (விதிவிலக்கு - மேல்வருத்தூர் ஆலயம். காரணம் அது சித்தர் பீடம். பெண் சித்தரின் ஜீவசமாதி ஆலயம் அது. சித்தர்களுக்கு சாதி, மதமோ, சடங்குகளோ இல்லை. ஆண், பெண், சுத்தம், அசுத்தம் பாகுபாடும் இல்லை)
7. கடவுளே இல்லை என்று சொல்பவர்கள் இதுபோன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவதும், தமிழைக் காக்க வழிபாடு செய்கிறேன், தமிழைக் காக்கிறேன் என்று சொல்வதும் அபத்தமானது. முதலில் அரசியல் வியாதிகளிலிருந்தும் கல்வி வியாபாரிகளிடமிருந்தும் தமிழையும், தமிழ்நாட்டையும் காப்பாற்ற இவர்கள் முயலட்டும்.
8. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆண்கள் மேலாடை இல்லாமல் சபைக்குள் நுழைய வேண்டும் என்பது மட்டுமே விதியாக உள்ளது. அதற்கு சூட்சும ரீதியாக பல காரணங்களும் உள்ளது. இந்த வழிமுறைகள் எல்லாம் வழிபடுபவரின் நன்மை கருதித் தானேயன்றி பிறிதொரு காரணம் கருதி அல்ல. அது ஏன் என்பதை வயதான பெரியவர்கள் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.
9. ஆலயத்திற்குச் செல்லாமலேயே பத்திரிகை மற்றும் இணையத்தில் வரும் செய்திகளை மட்டுமே நம்பி ஒரு கூட்டம் கருத்து சொல்லி வருவது பரிதாபகரமானது.
10. நந்தனார் வாயிலை சுவர் வைத்து மறைத்தது மடத்தனமானது. வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. அந்தச் சுவரை உடனடியாக அகற்றி, அந்த வாயில் வழியாகவும் மக்கள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இப்போது நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் இந்துசமய அறநிலையத்திறை இதைச் செய்ய முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள். காரணம், எல்லாம் அரசியல் தான்.
அன்புடன்
அறவாழி
"இந்த நடராஜர் கோவில் காரியங்களை அவர்களை தவிர வேறு யாராலும் முறையாக செய்ய இயலாது என்பது என் கருத்து."
உண்மை! வேறு எவரையும் செய்ய அனுமதித்தார்களா இந்த வந்தேறி பாப்பான்கள்?
பாப்பானால் உடல் வியர்வை சிந்த உழைக்க முடியுமா? முடியுமென்றால்,இதையும் வேறு எவராலும் முறையாக செய்ய இயலும் என்பது என் கருத்து
"திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’"
இதை சிவானந்த தீட்ஷதரும் சொல்லலாம்.குப்பனும் சொல்லலாம்.குப்பனை அனுமதிக்குமா இந்த பண்டாரங்கள்?
ஐய்யா அக்னிப்பார்வை! உங்கள் கருத்தை ஒன்றி ஆமோதிக்கிறேண்!
"அது நடந்த சில மாதங்களுக்கு பின், தற்போது, எனக்கு பெண் கிடைத்து விட்டார். ஹனுமான் சாலிசா படித்த பின், இப்படி எனக்கு நேர்ந்து இருக்கிறது"
ஆயிரம் பெரியார் ,ஆயிரம் மார்க்ஸ் வந்து பிறந்தாலும் கூட உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!!
க்ல்யாண்ம் கொஞ்ச்ம் தள்ளி போற்து ஒரு சதாரண விஷியம்.ஏன் நீங்களே கூட முதலில் ஆர்வமில்லாமல் இருந்திருக்கலாம்.
எல்லாமே (இல்லத!)கடவுள் செயல் என்றால்,நாட்ல உள்ள கோயிலை கண்க்கு பாத்தா நம்ப நாடு ரொம்ப சுபிக்க்ஷமா இல்ல இருக்கணும்? மு.க,ஜெ ..போன்றவர்களை ஆட்சி செய்ய அனுமதிப்பாரா?
ப்ளீஸ் கொஞ்சம் யோசிங்க சார்!!
எனக்கு உள்ள வருத்தம் என்னன்னா,நீங்களும் ஏமாந்து மற்றவர்களையும் முட்டாளாக்குகிறீர்கள் என்பதே!!
வாழ்த்துக்கள் இன்பா
இன்பா , திருமுருகு ஆற்றுப்படை படிச்சா இரண்டு பொண்டாட்டி அமையுமாமே. தெரியுமா?
ஏன் சார் மத்த ஜாதி பத்தி எழுதினா தணிக்கை பண்ணறீங்க , பார்பனரை பற்றி வண்ட வண்டையா எழுதினா ஒடனே போட்டுரீங்க, என்னமோ போங்க...
// பாப்பானால் உடல் வியர்வை சிந்த உழைக்க முடியுமா? முடியுமென்றால்,இதையும் வேறு எவராலும் முறையாக செய்ய இயலும் என்பது என் கருத்து //
உன் கருத்து இருக்கட்டும் வெங்காயம்.. நீ என்ன புடுங்கிட்ட பெருசா கருத்து சொலவந்துட்ட. உழைப்பை பத்தி உன் கிட்ட தான் சர்டிபிகேட் வாங்கனும்மா..
thiru pukazli "VIRAL MAARANAINTHU" yeana thuvangum paadalum neenda varudangalaga thirumanam thadaipattu varum nanbarkalukku palan tharum.ithil nakkaladikka yeathum illai nanbarkalay.
kadavul nambikkai yeanbathu ondrum muttal thanamanathu illay iyya.
Post a Comment