பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Saturday, January 31, 2009
நாகேஷ் காலமானார்
Posted by IdlyVadai at 1/31/2009 12:13:00 PM 28 comments Links to this post
Labels: அஞ்சலி
Friday, January 30, 2009
ஜெயலலிதா கேட்கும் சில கேள்விகள், கருணாநிதி பதில்கள்
ஜெயலலிதா கருணாநிதியிடம் கேட்கும் சில கேள்விகள்..
கருணாநிதி பதில்கள்..
ஜெ- கேள்விகள்
இலங்கையில் சமஉரிமைக்காக போராடும் தமிழர்களுக்கு அ.இ.அ.தி.மு.க. முழு ஆதரவு அளிக்கும் அதே சமயத்தில் ஆயுதம் ஏந்தி கட்டுக்கடங்காத வன்முறையில் ஈடுபடுவதை கடுமையாக எதிர்ப்பதாக அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்கள் குறித்து கபட நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் கருணாநிதி, தமது மண்ணில் ராஜீவ்காந்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை ஆதரிக்கிறாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்கள் குறித்த தமது கருத்தை திரித்துக் கூறி, ஒட்டுமொத்த தமிழர்களின் நலனுக்கு எதிராக தாம் இருப்பது போன்று ஒரு மாய தோற்றத்தை உருவாக்க கருணாநிதி மெத்த சிரமப்பட்டு முயற்சிப்பது வேடிக்கையாக இருப்பதாகவும், இதுகுறித்து, தமது நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபட சுட்டிக்காட்ட விரும்புவதாகவும், தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பு மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழம் புரட்சிகர அமைப்பு போன்ற அமைப்புகளை இலங்கைத் தமிழர்களின் காவலர்கள் என்று ஒரு காலத்தில் அ.இ.அ.தி.மு.க. கருதியதை தாம் மறுக்கவில்லை என்றும் ஆனால் அடிப்படையில் தமிழ் சகோதரர்கள் என்பதை மறந்து மிதவாத அரசியல் அமைப்புகளான தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் இதர அமைப்புகளின் தலைவர்களை விடுதலைப்புலிகள் ஒழித்துக்கட்ட ஆரம்பித்ததிலிருந்து தமிழர்களின் பிரதிநிதி, தமிழர்களின் நலனுக்காக போராடும் அமைப்பு என்று ஏற்கப்படும் உரிமையை விடுதலைப்புலிகள் இழந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்த குற்றத்தின் மூலம் விடுதலைப்புலிகள் அமைப்பு நம்பத்தகுதியற்ற முதிர்ச்சியில்லாத ஆபத்தான அமைப்பு என்பது நிரூபணமானது - முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட அந்த துரதிருஷ்டவசமான நாளிலிருந்து அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கை சீராகவும், தெளிவாகவும் இருந்து வருகிறது. இலங்கையில் வாழும் இலங்கைத் தமிழர்களை அந்த நாட்டின் இரண்டாம் தர குடி மக்களாக நடத்த இலங்கை அரசு எந்த முயற்சி எடுத்தாலும் அதனை அ.இ.அ.தி.மு.க. முழுமையாக எதிர்க்கும்- சுய நிர்ணயத்திற்காகவும், சம உரிமைக்காகவும் போராடும் இலங்கைத் தமிழர்களுக்கு அ.இ.அ.தி.மு.க. வின் முழு ஆதரவு உண்டு- அதே சமயத்தில் இந்த இலக்கை எய்துவதற்காக ஆயுதம் ஏந்தி போராடுவதையும் கட்டுக்கடங்காத கண்மூடித்தனமான வன்முறையில் ஈடுபடுவதையும் அ.இ.அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது- பேச்சுவார்த்தை மூலம் அமைதியான வழியில் அரசியல் தீர்வு காணப்படுவதே இந்த பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க உதவும் என அ.இ.அ.தி.மு.க. நம்புகிறது என்றும் செல்வி. ஜெயலலிதா விளக்கமாக எடுத்துக்கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்காக தனி நாடு உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக, போராடுவது சாத்தியம் இல்லாத ஒன்று என்றும் தமிழர்கள் வாழும் பகுதிகளை உள்ளடக்கிய கூட்டுப்பேராட்சிக்குட்பட்ட சுயாட்சி கோருவதே நியாயமானது என்றும் அ.இ.அ.தி.மு.க. கருதுவதாகவும் செல்வி. ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்போது அது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு மட்டும் என்றில்லாமல், தோட்டத் தொழிலாளர்களாக உள்ள தமிழர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இதர சிறுபான்மை அமைப்பினர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. கருதுகிறது- முதிர்ந்த பேச்சுவார்த்தை மூலம் அரசியல் ரீதியாக தீர்வு காணக்கூடிய முயற்சியில் அனைத்து தமிழ்மிதவாதிகளும், தமிழ் அரசியல் அமைப்புகளும் இடம்பெற வேண்டும்- இந்த பொறுப்பை தீவிரவாதிகளிடம் ஒப்படைப்பது தற்போதுள்ள சூழ்நிலையை மேலும் சீர்குலைப்பதோடு, மட்டுமல்லாமல் நீண்ட நாட்களாக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மக்களின் மத்தியில் ஒற்றுமையின்மையை வளர்த்து அவர்களது துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும்- சர்வாதிகாரத்தை அடைய வேண்டும் என்ற குறுகிய நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தங்களது தலைவனின் வழியில் குறுக்கிடுபவர்கள் என யாரை நினைத்தாலும் அவர்களை கொல்வது, பிற அரசியல் மற்றும் தீவிரவாத குழுக்களைச் சேர்ந்த மிதவாத தமிழ் சகோதரர்களையும், தலைவர்களையும் அழிப்பது போன்ற தீயச் செயல்களில் ஈடுபடுவதன் மூலம் தமிழர்களின் பிரதிநிதியாக செயல்படும் தார்மீக உரிமையை இழந்துவிட்ட எதேச்சாதிகார விடுதலைப்புலிகள் அமைப்பு இந்த அரசியல் தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட முடியாது- ஈடுபடக்கூடாது என அ.இ.அ.தி.மு.க. கருதுகிறது-
விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது தங்களையும் தங்கள் தலைவனையும் பாதுகாப்பதற்காக வெட்கமில்லாமல் இளம் சிறுவர்களை தங்கள் படையில் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொண்டு, அப்பாவி இலங்கைத் தமிழர்களை மனித கேடயமாக பயன்படுத்திவரும் ஒரு தீவிரவாத அமைப்பாகும் என செல்வி. ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
தம்முடைய நிலைப்பாட்டை தெளிவாக விளக்கி விட்டதால், நிலையற்ற மற்றும் சஞ்சலமான நடவடிக்கைகளின் மூலம் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் குறித்து கபட நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் கருணாநிதியிடமிருந்து சில கேள்விகளுக்கு விளக்கம் கோருவதாகவும் செல்வி. ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழ் மண்ணில் ராஜீவ்காந்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை கருணாநிதி ஆதரிக்கிறாரா? அப்படியானால் ராஜீவ்காந்தியின் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மைனாரிட்டி அரசின் முதலமைச்சராக பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது கருணாநிதிக்கு வெட்கமாக இல்லையா? மனவுறுத்தலாக இல்லையா?
இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இன்றளவிலும் இலங்கை ராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஆயுதங்களையும், நவீன சாதனங்களையும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு கொடுத்தபோது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்? தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் மத்திய அமைச்சரவையில் பங்கு வகிக்கின்றன- தி.மு.க. கூட்டணியில் உள்ள எந்த மத்திய அமைச்சருக்கும் அங்கு என்ன நடக்கிறது? என்பது தெரியாதா? ஏன் அவர்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை? எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தங்களுடைய பதவியை ஏன் அவர்கள் ராஜினாமா செய்யவில்லை? இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்திய அரசு சிறப்பு பயிற்சி அளித்தபோது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்- இலங்கை ராணுவ வீரர்கள் வருகை புரிந்ததையும் பயிற்சி பெற்று திரும்பியதையும் ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டின- இருந்தபோதிலும், இலங்கைத் தமிழர்கள் குறித்து மிகுந்த வருத்தப்படுவதாக நாடகம் ஆடும் கருணாநிதியும், அவருடைய கட்சியின் முக்கியஸ்தர்களும், கூட்டணிக் கட்சியினரும் மௌனம் காத்தனர் - காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் நிலவும் பிரிவினை கோரிக்கை குறித்து- அதாவது தனிநாடு கோரிக்கை குறித்து கருணாநிதி மற்றும் தி.மு.க. வின் நிலைப்பாடு என்ன? இலங்கையில் உள்ள தனித்தமிழ் ஈழம் குறித்து கருணாநிதி என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளாரோ, அதே நிலையை இந்தியாவின் பிரச்னைக்குரிய மாநிலங்களுக்கும் அறிவுறுத்த விரும்புகிறாரா? என்றும் செல்வி. ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக மக்கள் மட்டுமில்லாமல் இந்தியாவிலுள்ள அனைத்து தரப்பு மக்களும் இந்த கேள்விகளுக்கு கருணாநிதியின் பதில் என்ன என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் - ஏனெனில் கருணாநிதியின் பதிலிலிருந்து அவர் ஓர் உண்மையான இந்தியரா, உண்மையான தமிழரா அல்லது மனைவிகள், குழந்தைகள், பேரக்குழந்தைகள் ஆகியோர் மீது அசாதாரணமான பற்றுள்ள வெறும் குடும்பத் தலைவரா என்ற உண்மை வெளிப்படுத்தப்பட்டுவிடும் என்றும் செல்வி. ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
திரும்பவும் கேள்விகளாக கருணாநிதி பதில்கள்
கடுமையான முதுகுவலி, விலாப்புற வலிகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் என்னிடம் முன் னாள் முதல்வரும், இந் நாள் எதிர்க்கட்சித்தலைவருமான ஜெயலலிதா சில கேள்விகளை கேட்டு, அதனை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்.
அவர் கேட்டுள்ள கேள்வி களும், அவற்றுக்கு என் பதில்களும் விவரம் வருமாறு:-
கேள்வி:- தமிழ் மண்ணில் ராஜீவ்காந்தி கொடூர மான முறையில் கொலை செய்யப்பட்டதை கருணா நிதி ஆதரிக்கிறாராப அப்படி யானால் ராஜீவ்காந்தியின் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அரசின் முதல்-அமைச்சராக பதவியில் ஒட்டிக் கொண்டி ருப்பது கருணாநிதிக்கு வெட்கமாக இல்லையா? மன வுறுத்தலாக இல்லையா?
கருணாநிதி:- 1991 பொதுத் தேர்தல் நேரத்தில் மே 21-ஆம் தேதி ராஜீவ் காந்தி கொலை, நடந்த போது அமைக்கப்பட்டிருந்த தேர்தல் கூட்டணியின் தலை வராக ராஜீவ்காந்தி இருந்தார். காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காகத் தான் சென்னைக்கு விமானம் மூலம் அவர் வந்தார்.
அப்போது அந்த கூட்டணிக் கட்சிகளின் தலைவரும், இந்தியப் பிரதமருமான ராஜீவ் காந்தியை வரவேற்க அந்த கூட்டணியிலே உள்ள கட்சிகளில் ஒன்றான அ.தி. மு.க. சார்பில் யாருமே சென்னை விமான நிலையத்துக்குப் போகவில்லை என்பது உண்மையா? பொய்யா? உண்மை என்றால் "ராஜீவின் படுகொலை'' முன் கூட்டியே அ.தி.மு.க. வினருக்கு தெரிந்திருக்கிறது என்று தானே நினைக்க வேண்டியுள்ளது? இது பற்றிய சந்தேகத்தை சுப்பிரமணிய சுவாமி அப்போதே எழுப்பியது உண்டா? இல்லையா?
அரசின் முதல்-அமைச்சராக பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது எனக்கு வெட்கமாக இல்லையா? என்று ஜெயலலிதா கேட்டுள்ளார். "மைனாரிட்டி'' சமூக மக்களின் முன்னேற்றத்தையும் கருத்திலே கொண்டு ஓர் அரசு நடத்து வதில் வெட்கம் என்ன வந்து கிடக்கிறது.
மாறாக "மைனாரிட்டி'' மக்களுக்கு தொண்டாற்று வதைப் பெருமையாக கருதுபவன் நான். தேர்தல் ஆணையத்தாலேயே பொதுத் தேர்தலில் போட்டியிடதகுதியற்று, பின்னர் ஆளுநரின் ஒத்துழைப்போடு முதல்-அமைச்சராக இந்திய அரசியலமைப்புச் சட்டத் திற்கு முரணாகப் பதவி ஏற்று பிறகு நீதி மன்றம், `இவர் பதவியேற்றது செல்லாது' என்று தீர்ப்பு கொடுத்த போது இவருக்கு வெட்கம் வரவில்லை?
மனவுறுத்தல் ஏற்படவில்லையா? இளந் தலைவர் ராஜீவ் காந்தியின் துணைவியார் அன்னை சோனியா காந்தியை "வெளிநாட்டுக் காரி'' என்று விமர்சனம் செய்து விட்டு பிறகு அவருடன் தோழமை கொள்வதற்காக டெல்லியில் தேநீர் விருந்து வைத்த போது இவரது வெட்கம் எங்கே போயிற்று? என்ன இருந்தாலும் வெட்கம், மானம் பற்றி அவர் பேசக் கூடாது. அது ஏன் என்பது நாட்டுக்கே நன்றாகத் தெரியுமே?
கேள்வி:-இலங்கை தமிழர்களுக்கு எதிராக இன்றளவும் இலங்கை ராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டுக் கொண் டிருக்கும், ஆயுதங்களையும், நவீன சாதனங்களையும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு கொடுத்த போது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார். தி.மு.க.வும் அதன் கூட்டணிக்கட்சிகளும் மத்திய அமைச்சரவையில் பங்கு வகிக்கின்றன. தி.மு.க. கூட்டணியில் உள்ள எந்த மத்திய அமைச்சருக்கும் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாதா? ஏன் அவர்கள் ஆடம்சேபணை தெரிவிக்கவில்லைப தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தங்களுடைய பதவியை ஏன் அவர்கள் ராஜினாமா செய்யவில்லை?
கருணாநிதி: மத்திய அரசின் சார்பில் வெளிநாடுகளுக்கு ராணுவ உதவிகள் அனுப்புவதைப் பற்றி மாநில அரசுகளைக் கலந்து கொண்டோ, அல்லது மத்திய அமைச்சர்கள் அனை வரையும் கலந்து கொண்டோ செய்யப்படுவதில்லை என்ற சிறு விஷயம் கூட பத்தாண்டு காலம் முதலமைச்சராக இருந்த ஒருவருக்கு தெரியாமல் இருப்பது வேதனை தான். பாதுகாப்பு போன்ற துறைகளின் நடவடிக்கைகள் வெளிப்படையாக அனைவருக்கும் தெரிய நியாயமில்லை. இன்னும் சொல்லப் போனால், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி ஆனா லும், பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி ஆனாலும் இலங்கைக்கு இந்திய அரசு ஆயுதங்களை அனுப்பியதாகத் தெரிவிக்கவில்லை. மாறாக அதை மறுத்தும் இருக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா என்னைப் பார்த்து என்ன செய்து கொண்டிருந்தேன் என்கிறார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது தான் இலங்கைக்கு மத்திய அரசு மூலம் ராணுவ உதவிகள் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது இவர் முதலமைச்சராக இருந்து கொண்டு என்ன செய்து கொண்டிருந்தார் என்று நான் திருப்பிக் கேட்க மாட்டேன். காரணம் ராணுவ உதவியெல்லாம் மாநில அரசுகளைக் கேட்டு கொண்டு செய்யப்படுவதில்லை என்பதை நான் அறிவேன்.
கேள்வி: இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்திய அரசு சிறப்புப் பயிற்சி அளித்த போது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார் என்ற "ஜே'' கேள்விக்கு என்ன பதில்?
கருணாநிதி: இரண்டாவது கேள்விக்கு அளித்துள்ள பதில் தான் இந்த கேள் விக்கும்! நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று திரும்பத் திரும்ப ஜெயலலிதா கேட்கிறார். கொட நாடு எஸ்டேட்டில் மாதக்கணக்கில் ஓய்வு, சிறுதாவூர் பங்களாவிலே வாரக் கணக்கில் ஓய்வு, பையனூர் மாளிகையிலே நாட்கணக்கிலே ஓய்வு, இதற்கிடையே ஐதராபாத் திராட்சை தோட்டத்திலே ஓய்வு என்று நான் எப்போதும் ஓய்வு எடுத்துக் கொண்டதில்லை. நான் என்ன செய்து கொண்டி ருந்தேன் என்று கேட்பதற்கு அவருக்கு எவ்வித அரு கதையும் எப்போதும் கிடை யாது. ஏனென்றால் நான் உழைக்கப் பிறந்த பிறவி. அவர் ஓய்வெடுக்கப் பிறந்த உல்லாசி!
கேள்வி: காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் நிலவும் பிரிவினை கோரிக்கை குறித்து, அதாவது தனி நாடு கோரிக்கை குறித்து, கருணாநிதி மற்றும் தி.மு.க.வின். நிலைப்பாடு என்ன?
கருணாநிதி: தி.மு.கழகத்தின் பிரிவினைக் கொள்கை குறித்து பேரறிஞர் அண்ணா தன் கைப்படவே "எண்ணித் துணிக கருமம்'' என்ற தலைப்பில் நூலாகவே எழுதி வைத்துள்ளார். ஜெயலலிதாவிற்கு அதையெல்லாம் படித்திட நேரம் இருந்திருக்காது. மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை ஜெயலலிதா தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், கழக சட்ட திட்டப்புத்தகத்தில் விதி 2 மற்றும் விதி 3 ஆகியவற்றை படித்துப் பார்க்கட்டும்.
விதி2: `குறிக்கோள்' என்ற தலைப்பில் `இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தில் முழு நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்டு சமதர்மம், சமயச் சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய லட்சியங்களில் முழு ஈடுபாடும் பற்றும் கொண்டு இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றைக் கட்டிக் காப்பது என்பது தி.மு.கழகத்தின் குறிக்கோள் ஆகும்.
விதி3: `கோட்பாடு' என்ற தலைப்பில் "அறிஞர் அண்ணா அறிவுறுத்திய கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு அடிப்படையில், அரசியலில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து, ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும், பகுத்தறிவு அடிப்படையில் மறு மலர்ச்சிக்கான சீர்த் திருத்தப்பணி ஆற்றிடவும், பொருளாதாரத் துறையில் வறுமையை வென்று, சமதர்ம அடிப்படையில் எல்லோரும் நல்வாழ்வு பெற வழிவகை கண்டிடவும். பிறமொழி ஆதிக்கத்திற்கு இடங்கொடாமல் அந்தந்த மாநில மொழிகளை வளர்த்திடவும் அவைகளுக் கான உரிய இடத்தைப் பெற்றுத்தரவும். மத்திய அரசில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு, மாநிலங்களில் சுயாட் சியும் - மத்தியில் கூட்டாட்சியும் உருவாகிடவும் தொண்டாற்றுவது.
ஜெ - பதில்கள்
இலங்கைத் தமிழர்கள் குறித்து நான் வினவிய வினாக்களுக்கு பதில் அளிக்காமல், தன்னைத் தானே உழைப்பாளி என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு தான் ஓர் அசாதாரண பற்றுள்ள குடும்பத்த தலைவர் என்பதை தனது கடிதத்தின் மூலம் நிரூபித்துவிட்டார் கருணாநிதி.
என்னுடைய புகழுக்குக் களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற தீய எண்ணத்தில், என்மீது சில அவதூறு குற்றச்சாட்டுக்களை கருணாநிதி சுமத்தியுள்ளார். கருணாநிதியின் கடிதத்தில் எள்ளளவும் உண்மையில்லை என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
1991_ல் " அப்போதைய'' பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியை வரவேற்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் யாரும் சென்னை விமான நிலையத்திற்குப் போகவில்லை என்றும், எனவே ராஜீவ் காந்தியின் படுகொலை அ.தி.மு.க.வினருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் கருணாநிதி. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. 1991_ம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இல்லை என்பதை முதலில் கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன். 1991_ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது அ.தி.மு.க._ காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் பொதுக்கூட்டம் சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நானும், ராஜீவ் காந்தியும் கலந்து கொண்டோம். அதற்கு முன்னதாக ராஜீவ் காந்தியை நானே நேரில் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றேன். பின்னர் அகில இந்திய அளவில் ராஜீவ் காந்தியும் தமிழகத்தில் நானும் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டோம். வேறு எந்தக் கூட்டத்திலும் நானும், ராஜீவ் காந்தியும் கலந்து கொள்வதாக திட்டம் எதும் இல்லை. ஆனால் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மரகதம் சந்திரசேகரின் வற்புறுத்தலின் பேரில் 21_5.1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராஜீவ் காந்தி கலந்து கொண்டார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் தான் ராஜீவ் காந்தி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த ஸ்ரீபெரும்புதூர் கூட்டம் குறித்து எந்தவிதமான தகவலும் முன்கூட்டி எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இந்தக் கொடூரச் சம்பவம் நடைபெற்ற போது நான் பர்கூரில் ஏற்கனவே திட்டமிட்டபடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தேன். இப்படிப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்ததற்குக் காரணம் 1989 ஜனவரி முதல் 1991 ஜனவரி வரை நடைபெற்ற தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் ஊடுருவல் அதிகமாக இருந்ததுதான். பத்மநாபா உட்பட 13 பேர் சென்னையில் நெரிசல் மிகுந்த பகுதியில் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக ரகசிய தகவல்களை கருணாநிதி விடுதலைப் புலிகளுக்கு அளித்தார் என்பதற்காக தி.மு.க. அரசு 1991_ம் ஆண்டு கலைக்கப்பட்டது. இவற்றை எல்லாம் கருணாநிதி மறந்து விட்டாரா என்று தெரியவில்லை.
ராஜீவ் காந்தி கொலையில் எனக்கு தொடர்பு இருப்பதாக டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தாக கருணாநிதி கூறி இருக்கிறார். ஆனால், ராஜீவ் காந்தி கொலையை விசாரித்த ஜெயின் கமிஷன் இதை மறுத்துள்ளதோடு மட்டுமல்லாமல், கருணாநிதியின் மீது சந்தேகத்தின் நிழல் படிந்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதைக் காரணம் காட்டித் தானே 1997_ம் ஆண்டு மத்திய அரசுக்குக் கொடுத்த ஆதரவை காங்கிரஸ் திரும்பப் பெற்றது? இது கருணாநிதிக்குத்தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நாடகம் ஆடுகிறாரா?
மதுரையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1977_ல் விஜயம் செய்தபோது அவருக்கு கருப்புக் கொடி காட்டி, கல்லால் அடித்துவிட்டு, பின்னர் பதவி சுகத்திற்காக 1980_ம் ஆண்டு `நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என்று சொன்ன கருணாநிதி: "பண்டாரம் பரதேசி'' என்று 1998_ல் பாரதிய ஜனதா கட்சியினரை திட்டிவிட்டு, பின்னர் 1999_ல் அதே பாரதிய ஜனதா அமைச்சரவையில் இணைந்து, ஐந்து ஆண்டு காலம் பதவி சுகத்தை அனுபவித்த கருணாநிதி, வெட்கத்தைப் பற்றிப் பேசுவது கேலிக்கூத்தானது.
இரண்டாவதாக, வெளி நாடுகளுக்கு ராணுவ உதவிகள் அளிப்பது குறித்து மாநில அரசுகளைக் கலந்து கொண்டோ, மத்திய அமைச்சர்கள் அனைவரையும் கலந்து கொண்டோ செய்யப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.
மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு எந்த எந்த இலாக்காக்கள் என்று அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அதை தெரிந்து கொண்டு மத்திய அரசை மிரட்டிய கருணாநிதிக்கு, தமிழர்களுக்கு எதிரான தீங்குகள் நிகழும் போது அதை தெரிந்து கொள்ளத் தெரியாதா? ஊடகங்களுக்குத் தெரியும் போது, மத்திய அரசை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் கருணாநிதிக்கு தெரியாதா? தெரிந்தும் தெரியாதது போல் நாடகம் ஆடிவிட்டு யார் காதில் பூ சுற்றப் பார்க்கிறார் கருணாநிதி?
யார் யாருக்கு என்னென்ன தெரியும் என்பது, ஐந்து ஆண்டு காலம் மாநிலங்களவை உறுப்பினராகவும், பத்து ஆண்டு காலம் தமிழகத்தின் முதலமைச்சராகவும் இருந்த எனக்கு நன்றாகத் தெரியும். எது எப்படியோ, இலங்கைக்கு நவீன ஆயுதங்கள் வழங்குவதிலும், இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதிலும் தனக்கு பங்கு இருக்கிறது என்பதை கருணாநிதி மறைமுகமாக தன்னுடைய கடிதத்தின் மூலம் ஒப்புக் கொண்டிருக்கிறார். அவருடைய சுயரூபம் தெரிந்துவிட்டது.
மூன்றாவதாக, நான் முதலமைச்சராக இருந்தபோது தான் இலங்கைக்கு மத்திய அரசு மூலம் ராணுவ உதவிகள் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார். இதிலிருந்தே கருணாநிதிக்கு எதுவும் விளங்கவில்லை என்பது நன்றாகத் தெளிவாகிறது. நவீன ஆயுதங்கள் வழங்குதல், ராணுவப் பயிற்சி எல்லாம் கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாகத் தான் நிகழ்ந்து வருகின்றன என்பது அனைவரும் அறிந்த ஒன்று, மேலும், தமிழ்நாட்டில் நான் முதலமைச்சராக இருந்தபோதும், மத்திய அரசில் அங்கம் வகித்தது தி.மு.க.தான். எனவே, அதற்கும் கருணாநிதி தான் பொறுப்பு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அடுத்ததாக நான் கோடநாடு, சிறுதாவூர், பையனூர், ஐதராபாத் ஆகிய இடங்களுக்குச் சென்று ஓய்வெடுப்பதாகக் கூறியிருக்கிறார் கருணாநிதி. நான் பையனூர், ஐதராபாத் ஆகிய இடங்களுக்குச் சென்று பல வருடங்கள் ஆகிவிட்டன. கோடாநாடு, சிறுதாவூர் ஆகிய இடங்களுக்கு நான் சென்றாலும், அங்கு கட்சியினரை சந்தித்துக் கொண்டும், கட்சிப் பணிகளை கவனித்துக் கொண்டும், மைனாரிட்டி தி.மு.க அரசின் மக்கள் விரோதப் பணிகளை கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும் தான் இருந்தேனே தவிர, ஓய்வு எடுப்பதற்காக நான் அங்கு செல்லவில்லை என்பதை சுட்டிக்காட்ட விழைகிறேன்.
ஆனால், முதலமைச்சராகப் பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கும் கருணாநிதி, மக்கள் நலப் பணிகளில் நாட்டம் செலுத்தாமல், மகாபலிபுரத்தில் ஓய்வு, பெங்களூரில் ஓய்வு, மருத்துவமனையில் ஓய்வு, புதுப் புது படங்களை பார்ப்பது, அருவருக்கத்தக்க தன்னுடைய கதைகளை எல்லாம் படமாக்கி பணம் சம்பாதிப்பது, புகழ் பாடுபவர்கள் மத்தியில் உலா வருவது, குறுந்தகடு வெளியீட்டு விழா என்று உல்லாசமாக நாட்களை வீணடித்துக் கொண்டிருக்கிறார். நான் முதலமைச்சராக இருந்தபோதும் சரி, தற்போதும் சரி என்னையும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் புதுப் படங்களை பார்க்கச் சொல்லி அழைப்பு விடுவார்கள், விடுகிறார்கள். ஆனால், நான் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நாட்டு மக்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தேன். தற்போதும் அப்படித்தான் இருக்கிறேன். நான் ஆட்சியில் இருந்தபோது எனது இல்லத்தில் இரவு ஒரு மணி வரை அரசாங்க வேலைகள் நடக்கும், உயர் அதிகாரிகள் என்னுடன் தொடர்பு கொண்டு தேவையான அறிவுரைகளை பெற்றுச் செல்வார்கள். அதனால் தான் எனது ஆட்சிக் காலத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருந்தது. விலைவாசி கட்டுக்குள் இருந்தது. மின்சாரம் தடங்கலின்றி வழங்கப்பட்டது. மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இதிலிருந்தே உழைப்பாளி யார்? உல்லாசி யார்? என்பது தெள்ளத் தெளிவாகிறது.
பிரிவினைக் கொள்கை குறித்து நான் கேட்ட கேள்விக்கு, தொடர்பே இல்லாமல் பேரறிஞர் அண்ணா எழுதிய நூலை மேற்கோள் காட்டி அதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் பாசறையில் வளர்ந்தவன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதைத் தவிர, அண்ணாவின் எந்தக் கொள்கையும் கருணாநிதியால் பின்பற்றப்படுவதில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. "கழகமே குடும்பம்'' என்ற அண்ணாவின் கொள்கையை, "குடும்பமே கழகம்'' என்று மாற்றிக் காட்டியவர் தான் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி. பேரறிஞர் அண்ணா தன்னலமற்றவர். ஆனால் கருணாநிதியோ தனது குடும்ப உறுப்பினர்களுக்கு மாநிலத்தை பல பகுதிகளாக பிரித்துக் கொடுத்து தமிழகத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ஒரு சுயநலவாதி. மக்களின் ஜனநாயக உரிமைகளை பறித்து, ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்துள்ள கருணாநிதி, பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை சுட்டிக்காட்டுவது வேடிக்கையாகவும், நகைப்புக்கு உரியதாகவும் உள்ளது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு, அ.தி.மு.க தலைமை பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த 21 வருட காலமாக நாட்டு நலன், மக்கள் நலன், கட்சிப் பணி ஆகியவற்றில் முழுக் கவனம் செலுத்தி, ஒரு பற்றற்ற சன்னியாசி போல் நான் வாழ்ந்து வருகிறேன். இவ்வாறு தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் என்னைப் பற்றி குறை கூற, உல்லாச உலகத்தில் உலா வந்து கொண்டிருக்கும் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதிக்கு எந்தத் தகுதியும் அறவே கிடையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருணாநிதி இதற்கு பதில் சொன்னல்( அல்லது திரும்பவும் கேள்வி கேட்டால் ) இங்கே அப்டேட் செய்கிறேன்...
Posted by IdlyVadai at 1/30/2009 12:31:00 PM 23 comments Links to this post
முத்துக்குமரன் தீக்குளிக்க யார் காரணம் ?
இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் இலங்கையில் நடந்து வரும் ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த முத்துக்குமார் என்ற வாலிபர் சென்னையில் இன்று காலை தீக்குளித்தார்.
எல்லா ஊடகங்களும் அரசியல் தலைவர்கள் வழக்கம் போல் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் கண்டனங்கள் தெரிவித்த வண்ணம் உள்ளார்கள். இவர்களின் அறிக்கையில், ’தமிழ் ஈழம், போர் நிறுத்தம், இழந்து தவிக்கும்’ போன்ற வார்த்தைகளை எடுத்துவிட்டால், மீதம் இரண்டு வரி கூட மிஞ்சாது
முத்துக்குமரன் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் போது பா.ம.க எம்.எல்.ஏ வேல்முருகன் இன்று சட்டசபையில் இவ்வாறு பேசியுள்ளார்முத்துக்குமார் என்பவர் சென்னையில் இன்று தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. முத்துக்குமாரை காப்பாற்றுவதற்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும். ஒரு வேளை காப்பாற்ற முடியாமல் இறந்து போனால் அவருடைய குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்
ஆக முத்துகுமார் என்ற இளைஞரின் உயிர் 10 லட்சம் ரூபாய்.ஈழத்தமிழரின் தியாக வரலாற்றில், முத்துக்குமாரின் தியாகமும், புகழும் நிலைத்து நிற்கும். தாய்த் தமிழகத்தின் இளந்தமிழ் மனங்கள் எரிமலையாக சீறத் தொடங்கிவிட்டதை இப்போதாவது தமிழருக்கு துரோகம் செய்யும் மத்திய அரசு உணரட்டும்
என்று உளறி கொட்டியுள்ளார் வைகோ. இதை எப்படி தியாகம் என்று இவர் சொல்லுகிறார் ? அப்படியே இதை தியாகம் என்றால் ஏன் இவர் இதை செய்யவில்லை. இதை தியாகம் என்றால் மற்ற இளைஞர்கள் இதை பின்பற்ற வேண்டும் என்கிறார் போல
எல்லாவற்றிருக்கும் மேலே திருமாவளவன் ஈழத்தமிழர்களுக்காக முத்துக்குமார் தீக்குளித்திருக்கிறார். இதற்கு மேலேயும் இந்திய அரசு ஈழத்தமிழர்களை காக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகத்தில் பல முத்துக்குமரன் உருவாகுவதைத் தடுக்க முடியாது. முத்துக்குமரனின் மரணத்துக்கு இந்திய அரசே காரணம்
என்று சொல்லியிருக்கிறார்.
முத்துக்குமரன் தீக்குளிக்க யார் காரணம் ?
சும்மா சீரியல் பார்த்துக்கொண்டிருந்தவர்களை அரசியல்வாதிகள் ஓட்டுக்காக மனித சங்கலி, பந்த், உண்ணாவிரதம், பேரணி, ரஜினாமா நாடகம், என்று ஆரம்பித்து உசுப்பிவிட்டது தான் காரணம்.
இவ்வளவு வாய்கிழிய பேசும் தமிழக தலைவர்கள் திருமங்கலம் இடைத்தேர்தலில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு பற்றி ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ? கவியரங்கத்தில் மட்டும் தான் பேச வேண்டுமா ? இலங்கை தமிழர் பிரச்சனை ப்ற்றி பிரச்சாரம் செய்ய தைரியமில்லாத தலைவர்களுக்கு பிரியாணி மட்டும் தான் போட தெரியுமா ?
இலங்கையில் விடுதலைப்புலிகள் வீழ்ச்சி அடைந்தால் தான் இவர்களுக்கு ஈழ தமிழர்கள் மீது பரிவு ஏற்படுமா ? இரண்டு வருஷம் முன்பு எங்கே போனது இந்த பாசம் ?
நடிகர் சத்யராஜ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, போன்றவர்கள் செங்கல்பட்டு மணவர்களின் உண்ணாவிரத பந்தலில் மாணவர்களை உசுப்பிவிடுகிறார்கள். ஏன் இவர் பையன் “ஸ்டுடண்ட் நம்பர் ஒன்” சிபி இதில் கலந்துக்கொள்ள கூடாது ? தமிழ் சினிமா துறையினருக்கு பெரும் அளவு பணம் விடுதலைப்புலிகளிடமிருந்து வருகிறது என்ற குற்றச்சாட்டை நான் சொல்லவில்லை, காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் சொல்லுகிறார். இதில் நிச்சயம் உண்மை இருக்கும் என்று நம்புகிறேன்.
முத்துக்குமரன் சாவுக்கு அரசியல் வாதிகளை போல் மீடியாவுக்கும் பங்கு உள்ளது, அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாமல், இங்கே தங்கள் வியாபாரத்துக்கு கவர் ஸ்டோரி, exclusive என்று தமிழ் மக்களின் கஷ்டத்தை வியாபாரம் செய்கிறார்கள்.
ஹேமந்த் கர்க்கரே என்பவரை எத்தனை பேருக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது? முத்துக்குமரன் இன்னும் எவ்வளவு நாள் மானாட மயிலாடவை மீறி நிற்கப்போகிறான் ?
முத்துக்குமரன் போல் இன்னும் எவ்வளவு முட்டாள்குமரன் உள்ளார்களோ ?
முத்துக்குமரனை இழந்து தவிக்கும் அவர் குடும்பத்துக்கு இட்லிவடையின் ஆழ்ந்த அனுதாபங்கள்
Posted by IdlyVadai at 1/30/2009 12:41:00 AM 110 comments Links to this post
Labels: செய்திவிமர்சனம்
Thursday, January 29, 2009
டைஜஸ்ட் செய்ய முடியாத (ஜல்லிக்கட்டு) டைஜஸ்ட்
ஜல்லிக்கட்டு பற்றி ஞாநி எழுதிய கட்டுரையின் சில பகுதிகள் ( விகடனிலிருந்து குமுதத்துக்கு அனுப்பிய அவரது கட்டுரை), திமுக எம்.எல்.ஏ மூர்த்தியின் கருத்துக்கள், செய்திகள், படங்கள் கூடிய தொகுப்பு....
சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய இடத்தில் சொன்னதால் ஜல்லிக்கட்டு தடை நீங்கியது - கருணாநிதி தகவல்
....இங்கே விருது பெற்ற குன்றக்குடி ஆதீனத்தின் மூத்தவரும், நானும் சந்தித்து பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆன்மிகத்துக்கும், அறிவு இயக்கத்திற்கும் இடையே ஏற்பட்ட உறவாக அதனை கருதுகிறேன். இந்த இரு இயக்கங்களும் இணைந்து நாட்டு மக்களை வாழ்விக்க அந்தச் சந்திப்பு உதவியாய் இருந்தது. தற்போது விருது பெற்றுள்ள பொன்னம்பல அடிகளார் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, இரு நாட்களாக என்னை படாத பாடு படுத்திவிட்டார். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'ஏறு தழுவுதல்' என்ற பெயரில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு இருந்ததை ஐராவதம் மகாதேவன் போன்ற வரலாற்று அறிஞர்கள் சுட்டிக் காட்டினர். இது போன்ற விவரங்களை எடுத்து சொல்லி தடையை நீக்கப் பெற்றோம். சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டியவைகளை சொன்னால் நல்லவை நடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ( 2008, ஜனவரி அன்று விருது வழங்கும் விழாவில் முதல்வர் கருணாநிதி )
ஞாநி கட்டுரையிலிருந்துஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு என்று தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சிகள் பலவும் முழங்கிக்கொண்டிருக்கின்றன. ஒரு சில தென் மாவட்டங்களின் ஓட்டு வங்கிக்காக குரு பூஜைக்கு எல்லாக் கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு போவது
போன்ற அதே அணுகுமுறைதான் ஜல்லிக்கட்டு விஷயத்திலும் பிரதிபலிக்கிறது.
அரசியல்வாதிகளின் உரத்த கூச்சலின் நிர்ப்பந்தத்துக்கு பயந்து உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு விதித்த நியாயமான தடையைத் தளர்த்தினால்கூட அது வருத்தத்துக்குரியதுதான். நான்சென்ஸுக்கு எதிராக பெரியார் வலியுறுத்திய காமன்சென்ஸ் எனப்படும் பகுத்தறிவின்படிப் பார்த்தால் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டே அல்ல. அதில் வீரமும் இல்லை. விளையாட்டும் இல்லை. விளையாட்டு என்பது உடலையும் உள்ளத்தையும் உரமூட்டி வலுப்படுத்துவதாகும். சடுகுடு முதல் டென்னிஸ் வரை விளையாட்டுகளின் வடிவமைப்பு இத்தகையதுதான்.
ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டே அல்ல. விபரீதம். முரட்டுத்தனமான ஒரு மாட்டையும் சில மனிதர்களையும் வெறியைத் தூண்டிவிட்டு மோதவிடுவது விளையாட்டின் எந்த இலக்கணத்தின் கீழும் வராது.
முதல்வர் பிறந்த நாள் ஜல்லிக்கட்டு-ஒருவர் பலி, 165 பேர் காயம்திருச்சியில் முதல்வர் கருணாநிதியின் 85 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் ஒருவர் பலியானார், 165 பேர் படு காயம் அடைந்தனர்.
( ஜூன் 2008 செய்தி )
மத உணர்வுகளை இழுப்பதா - உச்ச நீதிமன்றம் கண்டனம்தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது, 11ம் தேதி வழங்கிய தீர்ப்பை மாற்றி ஜல்லிக்கட்டுக்கு விதிக்க தடையை நீக்க தமிழக அரசு கூறும் காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த வழக்கில் மத உணர்வை தமிழக அரசு இழுப்பது ஏன் என்று தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இன்னொரு வழக்கில் (சேது சமுத்திரத் திட்டம்) தமிழக அரசின் நிலை என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
பொன்னம்பல அடிகளார் சித்திரை மாதம் தான் தமிழ் வருடப்பிறப்பு என்று சொன்னால் கலைஞ்ர் என்ன சொல்வார் ? ஜல்லிக்கட்டு வழக்கில் மத உணர்வு ஜல்லியடித்தவர்கள் ஏன் சித்திரை வருடப்பிறகுக்கு அந்த ஜல்லியை அடிக்கவில்லை ?
ஞாநி கட்டுரையிலிருந்து.. வீரம் இதில் எங்கே இருக்கிறது ? ஆறறிவுள்ள மனிதனின் வெற்றி என்பது தன்னைவிட அறிவு குறைந்த விலங்குகளைப் பழக்கிக்கட்டுப்படுத்தி தனக்குப் பயன்படுத்துவதில்தான் இருக்கிறது. தன்னைவிட உடல் வலிமையுடைய மாடுகளை ஏரில் பூட்டவும், வண்டி இழுக்கவும், யானைகளை மரம் சுமக்க-வும் பழக்கப்-
படுத்திய விவேகம்தான் மனிதனின் சிறப்பே ஒழிய, அவற்றுடன் மோதி இருவருக்கும் சேதங்களை ஏற்படுத்திக் கொள்வதில் வீரமும் இல்லை. விவேகமும் இல்லை.
எது மிருகவதை ? காட்டுல வளர வேண்டிய விலங்கு யானை. அது ஒரு நாளைக்கு 12 மணி நேரம் நடக்கணும்னு சொல்வாங்க. அதைப் பிடிச்சு ஊர் முழுக்கப் பல இடங்கள்ல கட்டிப் போட்டிருக்கோம். அப்படிக் கட்டிப்போட்டதுனால கால்ல புண்ணு வந்து சில யானைகள் இறக்குது. இதுதான் மிருகவதை. எல்லாருக்கும் ஒவ்வொரு பழக்கவழக்கம் இருக்கும். நீங்க சைவம்னா, நான் அசைவம். இதுல எப்படிச் சரி, தப்பு சொல்லுவீங்க? இந்த விவகாரத்தைக் கொஞ்சம் கவனிச்சுப் பார்த்தோம்னா, ஜல்லிக்கட்டை எதிர்க்கிறவங்க அம்புட்டு பேரும் மேல உள்ள ஆளுகளா இருக்காங்க. ஆதரிக்கிறவங்க சாதாரண ஆளுகளா இருக்காங்க. அவ்வளவுதான் விஷயம்!''
( மூர்த்தி (தி.மு.கழக எம்.எல்.ஏ., சோழவந்தான், விகடன் ஜனவரி 2009 )
கழுதை ரேஸ் - செய்திமதுரை வண்டியூர் பகுதியில் மாட்டுப் பொங்கலையொட்டி கழுதை ரேஸ் நடந்தது. 20க்கும் மேற்பட்ட கழுதைகள் இதில் கலந்து கொண்டன. அண்ணா நகர் மெயின் ரோட்டில் நடந்த இந்த ரேஸில் கலந்து கொண்ட கழுதைகளின் முதுகில் பொதி ஏற்றப்பட்டது.
பின்னர் அனைத்து கழுதைகளும் விரட்டி விடப்பட்டன. கழுதைகளுடன் அவற்றின் உரிமையாளர்களும் கூடவே ஓடினர். முதலில் வந்த கழுதைக்கு பலவிதமான பரிசுகள் தரப்பட்டன.
( ஜவனரி 2008 செய்தி )
தமிழனுக்கு உண்மையிலேயே வீரம் என்றால் புலியையோ, சிங்கத்தையோ தழுவிப்பார்க்கட்டும்.
ஞாநி கட்டுரையிலிருந்து..ஜல்லிக்கட்டுகளில் மதுவும் சாதி வெறியும் மேலோங்கி இருப்பதுதான் நடைமுறை யதார்த்தம். உள்ளூர் வட்டார ஜாதி ஆதிக்கங்களும் ஜாதிப் பகைகளும் குடும்ப விரோதங்களும் ஜல்லிக்கட்டு விழா நேரங்களில் அடி இழையாக இயங்கிக் கொண்டே இருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
கிராமத்தினருடையே மோதல்ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக இரு கிராமத்தினருடையே மோதல் ஏற்பட்டது. கும்பலைக் கலைக்க போலீஸார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதோடு, கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசினர்.
( ஜனவரி 2009 செய்தி )
ஜல்லிக்கட்டில் எங்கே வன்முறை ? ஜல்லிக்கட்டே வேண்டாம்னு சொல்றது, கலாசாரத்தையே காலால உதைக்குற மாதிரி. ஸ்பெயின் நாட்டுல எருது பிடிக்கிற நிகழ்ச்சியில் மாட்டை ஈட்டியால குத்திக் கொல்றாங்க. அதுதான் வன்முறை. நம்ம பழக்கம், கொண்டாட்டம்... திருவிழா. போன வருஷம் ஜல்லிக்கட்டுல பிடிபட்ட ஒரு மாடு, அதுக்குப் பிறகு சாப்பிடாம கொள்ளாம பட்டினி கெடந்தே செத்துப்போச்சு. அதைப் பார்த்துட்டு, அந்த மாட்டை வளர்த்தவரும் செத்துப்போனாரு. அந்த அளவுக்கு ஜல்லிக்கட்டு மக்களோட மனசுல பதிஞ்சிருக்கு. ஒரு மாட்டு மேல ஏகப்பட்ட ஆளுங்க ஏறிக் குதிக்கிறதா பொதுவா புகார் சொல்லுவாங்க. வாடிவாசல்ல இருந்து மாடு வெளியில வரும்போது மட்டும்தான் நிறைய பேர் முண்டிக்கிட்டு அணையப் பாப்பாங்க. ரெண்டு அடி வெளில வந்துருச்சுன்னா ஒருத்தர், ரெண்டு பேர்தான் திமிலைப் பிடிச்சுக்கிட்டு ஓடுவாங்க. ஏன்னா, மாட்டை ஒருத்தர் அடக்கினாதான் பரிசு. ரெண்டு பேர் அடக்கினாக்கூட பரிசு கிடையாது.
( மூர்த்தி (தி.மு.கழக எம்.எல்.ஏ., சோழவந்தான், விகடன் ஜனவரி 2009 )
ஞாநி கட்டுரையிலிருந்து....ஜல்லிக்கட்டுக்குச் சார்பான குரல்களில் திரும்பத் திரும்ப இரு வாதங்கள்தான் ஒலிக்கின்றன. ஸ்பெயின் தேசத்து ‘புல் ஃபைட்’டுடன் ஒப்பிட்டால், ஜல்லிக்கட்டில் மிருக வதை என்பதே இல்லை என்கிறார்கள். அங்கே மிருகத்துடன் மோதும் மனிதன் வேல் கொண்டு அதைக் குத்திக்கொல்வதுதான் ‘விளையாட்டின்’ வடிவமாகும். இங்கு
மனிதர்கள் கையில் ஆயுதங்கள் இல்லை. மிருகம் வதைப்படுவது இல்லை. அதுதான் மனிதர்களைக் காயப்படுத்தும் கூரான கொம்புகளுடன் இருக்கிறது என்றெல்லாம் வாதிடப்படுகிறது. விலங்கினால் மனிதன் பாதிக்கப்பட்டாலும் தவறுதான்;
மனிதனால் விலங்கு பாதிக்கப்பட்டாலும் தவறுதான். அர்த்தமற்ற முரட்டுத்தனம் எங்கே இருந்தாலும் அது விமர்சிக்கப்படவேண்டியதுதான். ஸ்பெயினின் தவறு அலங்கா
நல்லூரை நியாயப்படுத்திவிடாது. கடவுள் நம்பிக்கையைக் கடுமையாக எதிர்த்த பெரியாரிடம் ஒரு முறை கேட்டார்கள்:
‘வெளி நாட்டில்கூட சாமி கும்பிடுகிறார்களே?’
பெரியார் சொன்னார்: ‘முட்டாள்தனம் உனக்கென்ன ஏகபோகச் சொத்தா?
உலகத்தில் எல்லா ஊரிலும் முட்டாள்கள் இருப்பார்கள்.’
பழக்கத்தை எல்லாம் பொசுக்குனு மூட்டை கட்டிட முடியாது.இந்த வருஷம் அலங்காநல்லூர்ல 600 மாடுகளும், பாலமேட்டுல 450 மாடுகளும் ஜல்லிக்கட்டுல மல்லுக்கட்டுச்சு. ஒவ்வொரு வருஷமும் எண்ணிக்கை கூடிக்கிட்டேதான் போகுது. விலங்குகள் சித்ரவதைன்னு நினைச்சிருந்தா, ஆயிரக்கணக்குல காசு போட்டு வாங்கின மாட்டை அணையவிடுவாகளா? 'இந்த 21-ம் நூற்றாண்டுலயும் இப்படிச் செய்யலாமா?'ன்னு கேக்குறவங்க, கோயிலுக்குப் போறதையும், மொட்டை அடிக்கிறதையும், நல்ல நேரம் பார்க்குறதையும் விட்டுடலையே! அது போலத்தான் இதுவும். 400, 500 வருஷப் பழக்கத்தை எல்லாம் பொசுக்குனு மூட்டை கட்டிட முடியாது.
( மூர்த்தி (தி.மு.கழக எம்.எல்.ஏ., சோழவந்தான், விகடன் ஜனவரி 2009 )
மூர்த்தி அவர்களுக்கு ஒரு கேள்வி: உங்கள் தலைவர் தமிழ்ப்புத்தாண்டை அவர் விருப்பத்துக்கு மாற்றினாரே. அப்போது எங்கெ போனது இந்த பகுத்தறிவு ?
ஞாநி கட்டுரையிலிருந்து....இரண்டாவது வாதம் இது நம் தமிழ் மரபு என்பது. பாரம்பரியக் கலை. மரபுக் கலை. சாராயமும் மிளகாய்ப் பொடியும் சாதித்திமிரும் குடும்பத் திமிரும் கலந்து வெறியூட்டப்பட்ட மாடுகளும் மனிதர்களும் ரத்தக் களரியில் விழுவதுதான் பாரம்பரியம்
என்றால் அந்த பாரம்பரியம் நமக்குத் தேவையற்றது. சாதி ஏற்றத்தாழ்வுகளும் நம் மரபுதான்; பெண்ணடிமைத்தனமும் நம் மரபுதான்; உடன்கட்டை ஏறுவது முதல் மத விரோதிகளைக் கழுவில் ஏற்றுவது வரை எல்லாமே நம் மரபுகள்தான். நாகரிக
வளர்ச்சி அடையும் ஒரு சமூகம், எல்லா மரபுகளையும் கண்மூடித்தனமாக அப்படியே வைத்துக்கொள்ளாது. உதிர்க்க வேண்டியதை உதிர்க்கும். சேர்க்கவேண்டியதைச் சேர்க்கும்.
‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்பதே தமிழ் இலக்கணம். அதாவது பழையவற்றில் கழிக்கப்படவேண்டியவை கழிக்கப்பட்டுத்தான் ஆகவேண்டும். பழையன என்பதற்காக எல்லாவற்றையும் காலம் காலமாகச்
சுமந்து நசுங்க முடியாது. படிப்பறிவற்ற பாமரர்களாக இருக்கும் மக்கள் ஜல்லிக்கட்டு
போன்றவற்றுக்காக உணர்ச்சிவசப்படுவதைக்கூடப் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால், அவர்களுக்கு வழிகாட்டி அடுத்த கட்டத்துக்கு விரல் பிடித்து இட்டுச் செல்லும் கடமை உடைய அரசியல் தலைவர்கள் எல்லாம், கேவலம் ஓட்டுக்காகத் தாங்-
களும் உணர்ச்சிகரமான அறிக்கைகள் வெளியிட்டு, மக்களைத் தொடர் அறியாமையில் ஆழ்த்துவதுதான் எரிச்சலூட்டுகிறது.
மாட்டுக்கு நன்றி செலுத்துவது தான் ஜல்லிக்கட்டு''கலித்தொகையிலேயே 'ஏறு தழுவுதல்' என்ற பெயரில் ஜல்லிக்கட்டுக்கான குறிப்புகள் கிடைக்கின்றன. முல்லை நிலத்தில் வாழ்ந்த இடையர்களின் வாழ்வு கால்நடைகளை மையமாக வைத்தே பின்னப்பட்டிருந்தது. மாட்டை அடக்கிப் பெண்ணை மணப்பது என்ற இனக் குழு நிலையில் இருந்த ஏறு தழுவுதல், நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அரங்க விளையாட்டாக, ஜல்லிக்கட்டாக உருப்பெற்றது. பிரிட்டிஷ் ஆட்சியில்கூட இதைத் தடை செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றன. ஆனாலும், மக்களின் உணர்வே அப்போதும் வென்றது. உண்மையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் பாமர மக்கள் அளவுக்கு மாட்டின் மீதும், விலங்குகள் மீதும் அக்கறை செலுத்துபவர்கள் வேறு எவரும் இருக்க மாட்டார்கள். தினசரி வாழ்க்கையும் அவர்களுக்கு மாடுகளுடன்தான் பின்னிப் பிணைந்திருக்கிறது. மாட்டுக்கு நன்றி செலுத்தி மாட்டுப் பொங்கல் நடத்தும் எளிய மனிதர்கள், ஜல்லிக்கட்டு என்ற பெயரில் அவற்றுடன் விளையாடி மகிழ்கின்றனர். திண்டுக்கல் உள்ளிட்ட சில இடங்களில் புனித சவேரியார் ஆலயங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. கவனித்துப் பார்த்தால், ஜல்லிக்கட்டில் மாடு பிடிப்பவர்கள் பெரும்பாலும் இறப்பதில்லை. பார்வையாளர்கள்தான் இறந்துபோகின்றனர். இவற்றை முறைப்படுத்தி, பார்வையாளர்களையும் மாடுபிடி வீரர்களையும் தனித்தனியாகப் பிரித்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் எந்த உயிரிழப்பும் இல்லை!'
'
( உதயச்சந்திரன், ஐ.ஏ.எஸ்., (மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர்)
ஞாநி கட்டுரையிலிருந்து... என்றோ ஒரு காலத்தில் முரட்டு மாட்டை அடக்கும் இளைஞனுக்கு அந்த மாட்டின் உரிமையாளர் தன் மகளை மணம் முடித்து வைக்கும் வழக்கம் இருந்தது என்று பெருமை பேசுவதும் அர்த்தமற்றது. மாட்டைப் போலவே பெண்ணும் உடமைப்
பொருளாக மட்டுமே நடத்தப்பட்ட பெண்ணடிமைக் காலத்தின் அடையாளமாகவே இந்தச் சடங்கு இருக்கிறது. ஒரு பெண்ணை மணப்பதற்காக முரட்டுக் காளையை அடக்கி வெல்ல ஒருவன் முன்வருவதை வீரம் என்று வாதத்துக்காக வைத்துக்கொண்டு
பார்த்தாலும், இன்றைய ஜல்லிக்கட்டுகள் அப்படிப்பட்டவை அல்ல. பெண்ணைப் பரிசாகத் தரும் நிலையும் இல்லை.
அப்படியே புத்தி கெட்டு எவரேனும் ஒருவர் தன் பெண்ணைப் பரிசாக அறிவித்தால், அவளுக்குப் பாஞ்சாலியின் கதிதான் ஏற்படும். தனியொருவனாக மாட்டை வெல்லும் வாய்ப்பு இன்று எவருக்கும் இல்லை. கூட்டம் கூட்டமாகச் சென்று மாட்டை அடக்கவே திணறி உடல் சேதமும் உயிர்ச் சேதமும் அடையும் நிலைதான் இருக்கிறது.
உச்சநீதிமன்றம் விதிமுறைகள்ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் நல்ல உடல் நிலையில் தான் உள்ளது என்று கால்நடைத்துறை அதிகாரிகள் சான்றிதழ் வழங்க வேண்டும்.
ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் கொகாடுமைப்படுத்தப்படவில்லை என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து விதிமுறைகள் நிபந்தனைகள் கடைபிடிக்கப்படும் பட்சத்தில் இதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மாடுகளை ஓட ஓட துரத்தக் கூடாது. அவை மைதானத்துக்கு நடந்து தான் வர வேண்டும்.
காளைகள், பார்வையாளர்கள் காயமடைவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
ஞாநி கட்டுரையிலிருந்து...ஜல்லிக்கட்டைப் பாதுகாப்பாக நடத்தியே தீரவேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கும் அறிக்கை வீரர்கள் திருமாவளவன், விஜய்காந்த், வைகோ, சரத்குமார், பழ.நெடுமாறன் ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து அந்தப் பாதுகாப்பான
ஜல்லிக்கட்டில் நீங்கள் களம் இறங்கி ஒரே ஒரு மாட்டின் வாலையாவது பிடித்துக் காட்டி தமிழ் மக்களுக்கு வழி காட்டுங்கள். உங்கள் குடும்பத்தினரும் உறவினர்களும் நெருக்கமான நண்பர்களும் ஐ.டி, இண்டர்நெட் என்று புது யுக நவீன வாழ்க்கையில் திளைக்கும்போது, அப்பாவி ஏழைத் தமிழ் இளைஞர்கள் மட்டும் மாடுகளுடன் மோதி, கை கால் உயிர் இழந்து பரிதவிக்கட்டும் என்று அறிக்கை வீரம் காட்டுவது என்ன
அரசியல்?
இன்றைய வீரம் மாட்டுடன் மோதுவதில் இல்லை. இரட்டை டம்ளர் டீக்கடைகளுடன் மோதுவதுதான் அசல் வீரம்.
ஜனவரி 2009 செய்திகள்
தஞ்சை மாதாக்கோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்த 2 பேர் மாடுமுட்டி இறந்தனர். குடல் சரிந்த நிலையில் 2 பேரையும் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். 4 பேரின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் உள்ளது. 47 பேர் படுகாயம் அடைந்தனர்.
தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் நேற்றுமுன்தினம் நடந்த ஜல்லிக்கட்டில் மாடுமுட்டியதில் 3 பேர் பலியாகினர். 17 பேர் படுகாயம்
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 123 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் வேடிக்கை பார்க்க வந்த அரசலூரை சேர்ந்த தங்கராஜ் (55) என்பவர் காளை முட்டி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செம்படமுத்தூரில் நேற்று நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு விழாவில் மாடுகளை வேடிக்கை பார்த்த கருப்பண்ணன் என்ற விவசாயி காளை முட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தீராம்பட்டியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 65 பேர் காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் கண்டுபட்டியில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு விழாவில் 80 பேர் காயமடைந்தார்கள்.
தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் மொத்தம் 265 பேர் காயமடைந்தார்கள்.
சிவகங்கை மாவட்டம் வாராப்பூர், சடையம்பட்டியைச் சேர்ந்த கொத்தனார் செல்வராஜ் ஒரு முரட்டு காளையை அவர் பாய்ந்து அடக்கிய போது அவரது நெஞ்சில் மாடு முட்டியது. இதில் செல்வராஜ் அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து செத்தார்.
மற்றொரு காளையை அடக்கும் போது கழுத்தில் மாட்டின் கொம்பு குத்தியதில் பாலக்குறிச்சி அருகே உள்ள குறவக்குறிச்சிபட்டியை சேர்ந்த பாலு செத்தார்.
சீரங்கம்பட்டியைச் சேர்ந்த பெரியய்யா என்பவர், மாடு பிடிக்கும் போது நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்து கீழே விழுந்து பலியானார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 78 பேர் காயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக இரு கிராமத்தினருடையே மோதல் ஏற்பட்டது. கும்பலைக் கலைக்க போலீஸார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதோடு, கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசினர். கல்வீச்சு சம்பவத்தில் 3 போலீஸார் உள்பட 5 பேர் காயமடைந்தனர். இரு வீடுகள் சேதமடைந்தன.
தன்னை கைது செய்ய வந்த போலீஸாரை ஜல்லிக்கட்டு காளையை ஏவி விட்டு விரட்டியடித்தார் கேரளத்தைச் சேர்ந்த ரெளடி ஒருவர். காளை விரட்டியதால் தலைதெறிக்க ஓட்டம் பிடித்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இரு கான்ஸ்டபிள்கள் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டனர். இதில் அவர்கள் லேசான காயமடைந்தனர்.
நான் என்ன சொல்ல, மாட்டுக்கு புல்லுக்கட்டு, மனிதனுக்கு ஜல்லிக்கட்டு
( நன்றி: ஞாநி கட்டுரை ஓ-பக்கங்கள், கிழக்கு )
Posted by IdlyVadai at 1/29/2009 03:47:00 PM 17 comments Links to this post
Labels: கட்டுரை, செய்தி விமர்சனம், பத்திரிக்கை
நோ கமெண்ட்ஸ் !
Posted by IdlyVadai at 1/29/2009 07:55:00 AM 18 comments Links to this post
Labels: பத்திரிக்கை, விளம்பரம்
Tuesday, January 27, 2009
முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் காலமானார்
Posted by IdlyVadai at 1/27/2009 03:48:00 PM 16 comments Links to this post
Labels: அஞ்சலி
ஸ்லம் டாக் மில்லியனர் - விமர்சனம்
ஸ்லம் டாக் மில்லியனர்.இந்தப் படம் இவ்வளவு பிரபலம் ஆகியிருக்கவில்லை என்றால் இந்தப் பதிவு எழுதியிருப்பேனா என்பது சந்தேகம். பிரபலம் என்றாலே பிராபலம்தான். புத்தகக் கண்காட்சி பற்றிய பதிவுகளுக்கு அடுத்து இது தான் அதிகம் பேரால் எழுதப்படும் பதிவு என்று நினைக்கிறேன். நமது போனி...
போன புதன் கிழமை அமெரிக்க கான்ஃபிரன்ஸ் கால் ஒன்றில் கடைசியாக ஸ்லம்டாக் பற்றி பேச்சு வந்தது. அமெரிக்கர் ஒருவர், “ஸ்லம்டாக் பார்த்தேன், நல்ல படம். இந்தியா பற்றி நிறைய தெரிந்துகொண்டேன்,” என்றார். இந்த ஒரு வரி என்னை இந்தப் படத்தை பார்க்க தூண்டியது. நானும் தெரிந்துகொள்ள வேண்டாமா?
கதை: மும்பைக் குப்பத்தில் வளர்ந்த ஜமால் மாலிக் என்ற சிறுவன் எப்படி கோன்பனேகா க்ரோர்பதியில் கோடி அள்ளுகிறான் என்பதுதான் கதை. நிகழ்ச்சியின் ஒவ்வொரு கேள்விக்கும் தன் வாழ்க்கை அனுபவத்தை வைத்து மிகச் சரியான பதில் சொல்லி இறுதிச் சுற்றை அடைகிறான்.
திரைக்கதை: கே.பாலச்சந்தர் மாதிரி தற்போது நிகழும் சம்பவங்களும், சின்ன வயதில் நடந்த சம்பவங்களும் மாறிமாறிக் காண்பித்து திரைக்கதையை அழகாக அமைத்துள்ளார்கள். இந்தியவில் எடுத்த படம் என்பதாலோ என்னவோ திரைக்கதையில், பாடல், காதல், சண்டை, காமெடி, துரோகம், நட்பு, கொலை, கொள்ளை என்று வழமையான எல்லாவற்றையும் எதையும் விட்டுவிடாமல் எப்படியோ புத்திசாலித்தனமாகச் சேர்த்திருக்கிறார்கள்.
இசை: நம் டைரக்டர்கள் போல், கொடுத்த காசுக்கு எல்லா சீன்களிலும் இசை அமையுங்கள் என்று சொல்லவில்லை போலும்; தேவையான இடங்களில் மட்டும் இசை அமைத்திருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். ஆஸ்கருக்குச் செல்லும் அளவு பெரிய இசையா என்றால்..., எனக்கு அப்படித் தோன்றவில்லை. பல பிட்டுகள் முன்பே நாம் கேட்டதுதான்.
ஒளிப்பதிவு: எப்படிச் செய்ய வேண்டும் என்று இந்தப் படத்தை பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். சேரியை தத்ரூபமாக காண்பித்திருக்கிறார்கள். இந்த படத்தின் கிங் - ரீரெக்கார்டிங். அடுத்தது சலீம், ஜமாலாக வரும் அந்த சின்ன குழந்தைகளின் நடிப்பு.
மற்றவை: அமிதாப் பச்சனைப் பார்க்க சிறுவன் மாலிக் மலத்தில் விழுந்து எழுந்திருப்பது மிகைப்படுத்தப்பட்ட காட்சி.
குப்பத்து ஜமால், சலீம் சின்ன வயசில் இந்தி பேசும் சிறுவர்களாகவும் பெரியவர்களாக ஆன பின் படத்தில் புத்திசாலித்தனமாக ஆங்கிலம் பேசுகிறார்கள். புத்திசாலித்தனத்துக்கு எடுத்துக்காட்டு 'அல்லா, ராமர் இல்லை என்றால் என் அம்மா பிழைத்திருப்பர்’ வசனம். ஆனால் அதே புத்திசாலித்தனம் காந்தி யார் என்று தெரியாது என்று சொல்லுவதிலும் இருக்கிறது. ( 1000 ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தியைக் காண்பித்து இது யார் என்று கேட்கிறார் இன்ஸ்பெக்டர். அதற்கு ஜமால் நக்கலாக, “I fagged with him" என்பது எல்லாம் கொஞ்சம் ஓவர்).
எந்த குப்பத்து முனிசிபல் ஸ்கூலில் த்ரீ மஸ்கிடீர்ஸ்(3 musketeers) பாடமாக இருக்கிறது என்று தெரியவில்லை. தெரிந்தால் நம்ம பசங்களையும் அங்கே போய் படிக்க வைக்கலாம்.
ஜமால் பேல் பூரி என்ன விலை என்று கேட்கும் இடத்தில் தஹி பூரி காமிக்கிறார்கள். இந்த தப்பை மன்னித்துவிடலாம். ஆனால் பிள்ளை கடத்தல் ஆசாமி சூர்தாஸ் எழுதிய “Darshan Do Ghanshyam Naath” என்ற பாடலை பாடுமாறு சொல்வதை மன்னிக்க முடியாது. Darshan Do Ghanshyam Naath என்ற பாடலை 1957ல் ’கோபால் சிங் நேப்பாலி’ என்ற கவிஞர் இந்தி படத்துக்கு எழுதியது. பெண்கள் சேலைக்கு மேட்சிங்காக பிளவுஸ் போடுவதில்லையா ? அதே போல் குருட்டு பிச்சைகார சிறுவனுக்கு கண் தெரியாத சூர்தாஸ் பாடல் தேவைப்பட்டிருக்கிறது.
படம் முடிந்து வெளியே வரும் போது இந்தியா ஒரு பிச்சைக்கார, எல்லா இடங்களும் சேரியாக இருக்கும் அழுக்கு தேசம் போன்ற உணர்வு நமக்கே ஏற்படுகிறது. இதைத்தான் என்னுடன் பேசிய அமெரிக்கரும் இந்தியா பற்றி தெரிந்துகொண்டிருப்பார் என நினைக்கிறேன்.
நிச்சயம் இந்த படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும். பரிசு பெற்றவர்கள் எல்லோரும் 5 ஸ்டார் ஹோட்டலில் கொண்டாட, குப்பத்து ஜனங்க அதை டிவியில் பார்த்து கைகொட்டி சிரிப்பார்கள்.
”ஸ்ல்டம் டாக்” என்று சொல்லிவிட்டு நாய் படம் இல்லை என்றால் எப்படி ? அதனால் மில்லியனர் ஆன ஸ்லம் டாக் படம் சைடில் ;-)
Posted by IdlyVadai at 1/27/2009 03:35:00 PM 15 comments Links to this post
குரங்குக் கவிதைக்குப் பரிசு
நமது மீடியாவிற்கு சினிமா, அரசியல் தவிர வேறு ஒன்றும் தெரியாது( நானும் இதில் அடக்கம்). நடிகர் விவேக், எழுத்தாளர் ஜெயகாந்தன்(சில நேரங்களில் சில மனிதர்கள், மற்றும் அவரது அரசியல் விமர்சனம் ஆகிவற்றால் பிரபலம் ஆனவர்) ஆகியோருக்கு பத்ம விருதுகள் கிடைத்த பத்தாவது நிமிஷம் இவர்கள் வீட்டு கதவு தட்டப்பட்டு, தூக்கத்திலிரிந்து எழுப்பி “உங்களுக்கு விருது கிடைத்திருக்கு, அதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க” என்ற பேட்டியை ஒளிபரப்பினார்கள். கே.டிவியில் சிரிப்பு வெடிகளில் வாத்துன்னு நினைத்து பின்பக்கம் சுட்டதாக வழக்கு, விவேக்: ஏண்டா வாத்துக்கும் -த்துக்கும் வித்தியாசம் தெரியாதா?
குரங்குக் கவிதைக்குப் பரிசு கிடைத்திருக்கிறது...
வரலாறு-னு ஒரு துறை இருக்காம், தெரியுமா? அதையும் ஒரு துறை-னு மதிச்சு, பணத்தைக் கொட்டி, குடும்பத்தைப் பார்க்காம, தள்ளாத வயசுலையும் கல்வெட்டு, குகைக் கோயில், கட்டுமானம், சிற்பம்-னு அலையற பிழைக்கத் தெரியாத கூட்டம் பல வருஷமா, மைனாரிட்டியா அலையுது (without reservation, of course). அவங்களளயும் ஒரு ஆளா மதிச்சு ஜனாதிபதி விருது கொடுக்கறது....சுஜாதா சொல்லுவாரே...... குரங்கு தவறி டைப்ரேட்டர் மேல குதிச்சதுல, அது உடம்பு பட்ட கீ-யெல்லாம் பேப்பர்-ல தட்டச்சாகி, அது ஒரு கவிதையா இருந்து, அந்த கவிதையைப் போட்டிக்கு அனுப்பி, அந்தக் கவிதைக்கு முதல் பரிசும் கிடைச்க்கிற மாதிரி....எத்தனையோ வருடங்கள் முன்னால 'தொல்லியல் இமயம்' கே.ஆர்.சீனிவாஸனுக்கு பத்ம பூஷண் கொடுத்தாங்க, அதுக்கு அப்புறம், தவறாம இரண்டாவது ரவுண்டுல தோற்கும் சானியா (பேசாம சூனியா-னு பேரை வெச்சா சரியா இருக்கும்), ஸ்ருதியே சேராம பாடறவங்க, சிரிப்பே வராம நடிக்கும் காமெடி கிங்ஸ், சீரியசா செய்யறதையெல்லாம் பார்த்தா சிரிப்பா வர மாதிரி நடிக்கும் ஹீரோகள், டாக்டராக பல பேர் உயிரைக் கொல்லாம இருக்க வேண்டு திரையுலகம் தத்தெடுத்துக் கொண்ட கதாநாயகிகள்...இப்படி பல ரக மக்களைத் தாண்டி, இந்த வருஷம் குரங்குக் கவிதைக்கு பரிசு கிடடச்சாச்சு!
ஐராவதம் மகாதேவனுக்கு பத்மஸ்ரீ விருது.
அவரைப் பற்றி: http://varalaaru.com/Default.asp?articleid=739
எல்லோரும் பார்க்க வேண்டிய ஆல்பம்: http://varalaaru.com/Default.asp?articleid=745
( நன்றி: இட்லிவடையில் போட சொல்லி அனுப்பிய லலிதா ராமுக்கு )
ஐராவதம் அவர்களின் Tel : 044 2253 3230.
Email ID : iravatham@vsnl.net இது. சின்னதா ஒரு வாழ்த்து சொல்லுங்க
Posted by IdlyVadai at 1/27/2009 12:46:00 PM 7 comments Links to this post
Labels: செய்தி
Monday, January 26, 2009
டைனமிக் கல்யாணம் - டைனமைட் கலாசாரம்!
மக்களே இது தான் தமிழர்களின் உண்மையான தமிழர் கலாச்சாரம் முறை... சந்தேகம் இருந்தா கீழே விடியோவை பாருங்க... ( கொஞ்சம் பழைய வீடியோ தான். இருந்தாலும ஒரு அன்பர் இதை இட்லிவடையில் போட சொன்னதால்... )
இவர்களுக்கு தேவை வைத்தியம். கட்டிப்பிடி வைத்தியம் கட்டுப்படி ஆகாது. அதனால் மாதிரி வேற வைத்தியம் தேவை
Posted by IdlyVadai at 1/26/2009 09:58:00 PM 15 comments Links to this post
குடியரசு தின போட்டி - முடிவுகள்
இரண்டு நாட்களுக்கு முன் குடியரசு தின போட்டி அறிவித்திருந்தோம்.
நாங்கள் எதிர்பாத்த படியே நிறைய பேர் கலந்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் குடியரசு தினத்தில் பத்து பேர் காந்தி பற்றி இணையத்தில் தேடினார்கள் என்ற திருப்தியுடன் முடிவுகள்...
மகாத்மா காந்திக்கு ‘கதர்’ என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்கள் ‘அலி சகோதரர்கள்’ என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ‘முகமது அலி, சவுக்கத் அலி’ என்ற பெயர் கொண்ட அவர்கள், கையால் நூற்று நூலில் செய்த துண்டை காந்தியடிகளுக்கு போர்த்தினார்கள்.
“இதை ‘கதர்’ ஆக ஏற்றுக்கொள்ளுங்கள்” எனக் கூறினார்கள். ‘கதர்’ என்பது அரபுச்சொல். இதற்கு ‘கவுரவம்’ என்று பொருள். அது முதல் ‘கதர்’ என்ற சொல் வழங்கலாயிற்று.
பரிசு பெற்றவர்: விக்கி ( தங்கள் முகவரியை idlyvadai2007@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள் )
பரிசு : எட்டு முழம் கதர் வேட்டி உங்கள் வீடு தேடி வரும் ;-)
போட்டி தொடரும்...
Posted by IdlyVadai at 1/26/2009 06:36:00 PM 6 comments Links to this post
Labels: போட்டி
கலைஞருக்கு வாலி - வாலிக்கு ?
பாவம் வாலி கலைஞரை எவ்வளவு நாள் தான் புகழ்ந்துக்கொண்டே இருப்பார். என்றாவது ஒரு நாள் அவரை யாராவது புகழ்ந்து பாடியிருப்பார்களா ?
வாலிக்கு ஈடாக கவிதை படைக்க வேண்டும என்றதும் பினாத்துவதுதான் நினைவுக்கு வந்தது. அதனால் பினாத்தலைப் பிடித்தேன் அவரின் கவிதை கிழே...
வாலி கவிதை பச்சை
பினாத்தலார் கவிதை சிகப்பு
தமிழ் வணக்கம், தமிழின தலைவர் வணக்கம்.
எதற்கு தனித்தனியாய் இரு வணக்கம்.
வைப்பேன் என் தலைவனுக்கு மட்டும் ஒரு வணக்கம்.
சந்தத் தமிழே வணக்கம், ஆங்கிலம் கலந்து நொந்த தமிழே வணக்கம்.
எதற்கு தனித்தனியாய் இரு வணக்கம்
கூட்டிச் சொன்னால்தான் என் பை கனக்கும்.
எவரேனும் என்னுவரோ தலைவன் வேறாக, தமிழ் வேறாக. தலைவரல்லவா இருக்கிறார் தமிழுக்கு வேராக.
கலைஞர் பெருமானே உன் வருகை, கண்டதும் தூக்குவேன் என் இருகை.
எவரேனும் எண்ணுவரோ ஜால்ரா வேறாக, வாலி வேறாக. காக்கய் பிடித்தே வாழுகிறார் க்விஞர் ஜோராக.. எங்களுக்கு பேஜாராக!
கவிஞர் பெருமானே உம் இருகை, கூப்பியதும் தொடங்கும் பண வருகை.
உயரிய தலைவா உனக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு வாயை திறந்தால் தான் என் வாய்க்கும் கவிதை வாய்க்கும்.
உயரிய தலைவர்களை வணக்கம் போட்டால்தான் உன் பைக்கும் செல்வம் கிடைக்கும்.
என் பாட்டுக்கு நீதான் பிள்ளையார் சுழி.
உன்னை முன் வைக்காமல் என்ன எழுதினாலும்,
என் பாட்டு வாங்கும் பெரிய சுழி.
என் பாட்டு உன்பாட்டின் உல்டா.
உன்பாட்டு இல்லையெனில் என் பாட்டு வாங்கும் பெரும் கல்தா.
அருமை தலைவா,
ஆண்டு 2007-ல் எமனிடம் இருந்து நீ என்னை மீட்டாய். அதற்கு முன் ஆண்டு 2006-ல் ஓர் 'உமனிடம்' இருந்து தமிழ் மண்ணை மீட்டாய்.
தேர்தலுக்கு தேர்தல் 5 விரல்களை அகலக்காட்டி,
அஞ்சு அஞ்சு என்று அயலாரை ஓட்டி,
5 முறை அரியணை ஏறிய அஞ்சுக செல்வா.
அருமை கவிஞா,
2007ல் எமனிடம் நீ போர் போட்டாய்.. 60 களிலேயே எம் என் னோடு எம்ஜியாரின் போருக்கு ஆணை போட்டாய்.
தேர்தலுக்கு முன்னிருந்தே ஒலிக்குது உன் சத்தம்.. கவியரசு ஆனபின்னும் நிற்கவில்லை என் கழுத்து ரத்தம்.
தேர்தல் வரலாற்றில் உன்னை வெகுவாக விமர்சனம் செய்ய டில்லியில் ஒரு கோபால்சாமி,
திருமங்கலத்தில் ஒரு கோபால்சாமி.
நீயோ இந்த 2 கோபால்சாமிகளையும் புறம் தள்ளிய கோபாலபுரத்து சாமி.
எனவேதான் கும்மாளமிட்டு உன்னை கொண்டாடுகிறது இந்த பூமி.
கவிதை வரலாற்றில் அன்று ஒரு கண்ணதாசன்,
இன்று ஒரு கலைஞர்தாசன்..
நீயோ எல்லாரையும் புறம் தள்ளிய தாசானுதாசன்..
பிழைக்க விரும்புவோர்க்கு நீ ஒரு ஆசானுக்கு ஆசன்.
அய்யா,
50 ஆண்டு காலம் உன் சேவடிபட்ட சபை சென்னை சட்டசபை.
நாவில் தமிழ் ஏந்தி நீ நற்றமிழ் இட்ட சபை.
முதல் முதல் தேர்தல் குளத்தில் குளிக்க நீ தொடங்கிய ஊர்தான் குளித்தலை.
குளித்தலைக்கு பிறகு இதுவரை குனியா தலை உன் தலை. இனியும் குனியாது வெற்றியை குவிக்கும் என்பதும் உன் தலை.
அய்யா..
50 ஆண்டாய் உன் சேவை பெறுகிறது திரைத்துறை..
பே நாவில் விஷம் சுமந்து நீ நற்றமிழ் கொன்ற துறை.
ஆற்றை அறுத்த ஊராம் நீ பிறந்த திருவரங்கம்
கவிதையை அறுத்து அரங்கம் படைத்தாய் - அறுத்தறுத்தே ஏறுவாய் ஆயிரம் அரங்கம்.
சாதாரணமாய் இருந்து சரித்திரம் படைத்தாய்.
அய்யா அந்த வகையில் நீ ஒரு ஒபாமா.
சரித்திரம் படைத்த பின்பும் சாதாரணமாக இருக்கிறாய். அந்த வகையில் உனக்கு ஒபாமா ஒப்பாகுமா?.
சமைந்ததைக் கேட்டு சாகாவரம் பெற்றாய்.
அய்யா அந்த வகையில் நீ ஒரு உப்புமா..
சமைந்ததைக் கேட்டும் சமையாமல் இருக்கிறாய்.. அந்த வகையில் உன் உப்புமாவில் உப்பிருக்குமா?
உன்னை விட்டு வலது போனால் என்ன, இடது போனால் என்ன.
மேலே விழுந்த நரி பிடுங்காமல் போனால் சரி.
நீ எப்போதும் போல் சிரி.
உன்னிடம் உள்ளது நடு நிலைமை.
நடுநிலைமை தான் நல்ல தலைமை.
கலைஞர்கோனே,
கருப்பு கண்ணாடி அணிந்த கவி வெண்பாவே.
நீயே உனக்கு நிகர்.
நீ நகர்ந்தால் உன் பின்னே நகர்கிறது நகர்.
நிஜம் சொன்னால், ரஜினியை விட நீயொரு வசீகரமான 'பிகர்'.
நாவினிக்க நாவினிக்க உன்னை பாடியே என் உடம்பில் ஏறிபோனது சுகர்.
உன்னை மீறி வைரம் போனால் என்ன, முத்து போனால் என்ன?
மேலே விழுந்த நரி பிடுங்காமல் போனால் சரி.
நீ எப்போதும் போல் சொறி.
உன்னிடம் உள்ளது ஜால்ரா வலிமை.
அந்த வலிமைக்கு இல்லையே ஒரு உவமை.
நீயே உனக்கு ஒப்பு,
உன்னைக் குறை சொன்னால் அது தப்பு..
உன் தமிழை மிஞ்சுமா நமீதா தரும் மப்பு?
நானும்தான் காக்கை பிடிக்க முனைந்தேன், வேகவில்லையே பப்பு!
நீ எங்கள் கிழக்கு, உனக்கு என்றும் இல்லை மேற்கு.
நீ வடக்கு வழிபடும் தெற்கு.
நம்மொழி செம்மொழி, அதனை அங்கீகரிக்காது நாள் கடத்தியது நடுவண் அரசு.
நீ குட்டினாய் உடனே குனிந்தது அதன் சிரசு.
அதுபோல் தமிழனின் அடையாளங்களை வட்டியும், முதலும் சேர்த்து வள்ளலே நீதான் மீட்டாய்.
தரை மீனை திரும்ப தண்ணீரில் போட்டாய்.
அதனால் தான் அய்யா உன்னை அவருக்கு நிகர் அவர், தமிழனை துன்பம் தீண்டாது மீட்கும் தடுப்பு சுவர்.
மையம் ஏற்கும் வண்ணம் உன்னிடம் உள்ளது பவர்.
அத்தகு பவர் உன்போல் படைத்தவர் எவர்.
நீ எங்கள் பாட்டு, உனக்கு யார் வைப்பார் வேட்டு..
உன் ஜால்ரா தாட்(thought) டு போடும் நோட்டு!
நம் மொழி செம்மொழி, அதில் இருந்தது நயம், பயம்.. நீ தந்தாய் ஜயம் - விஜயம் - கிருஷ்ண விஜயம்!
தமிழின் கவியழகை சேட்டுக்கடையில் வள்ளலே நீதான் அடகு வைத்தாய்..
இன்ச் இன்ச் ஆக ஆணியை வைத்தாய்.
அதுதானய்ய உன் பவர். அதனால்தான் அழைக்கிறார் உன்னை அவர்..
உன் குடும்பம் முன்னேற அவர்தானே தரவேண்டும் கவர்?
அத்தகு கவர் கொடுப்பது வேறு எவர்?
அமைச்சர் பெருந்தகை ஆற்காட்டாரிடம் உள்ள பவரால், வீட்டு விளக்கு எரியும், நடுரோட்டு விளக்கு எரியும்.
உயரிய தலைவா உன்னிடம் உள்ள பவரால் தான் நாட்டு விளக்கு எரியும், நற்றமிழ் பாட்டு விளக்கு எரியும்.
ஆல்வா எடிசன் கண்டிபிடித்த பவரால் வீட்டு விளக்கு எரியும், ரோட்டு விளக்கு எரியும்..
உயரிய கவிஞா உன்னிடம் உள்ள பவரால்தான் ஜிங்சக் ஒலி சொறியும், தமிழ்க்கவிதை வயிறு எரியும்,
குப்பன், சுப்பன் வாழும் குப்பங்கள் ஓயாமல் உன்னால் தான் ஒளிர்கிறது, அடுப்பு விளக்கு, அன்பு விளக்கு, அமைதி விளக்கு, அறிவு விளக்கு என பல்விளக்கை இன்று, உன்னை பணித்து வாழ்த்தி சொல்வேன் போய் நீ பல் விலக்கு என்று.
தமிழா என் நண்பா, உனக்கு தருவேன் கேள் ஒரு வெண்பா.
பழனிக்கும் விஜய்க்கும் இன்று உன்னாலே பாட்டு வருகிறது.. பாசக்கிறுக்கு நேசக்கிறுக்கு என்ற பலக்கிறுக்கை வாழ்த்திச் சொல்வேன் நீ ஒடு தமிழ்க்கிறுக்கு என்று..
என் தலைவா, நீ ஒரு ஆளுகை, பிடிப்பேன் உன் காலுகை!
(நன்றி: பினாத்தல் வாலி, கவிஞர் பினாத்தலார் )
Posted by IdlyVadai at 1/26/2009 03:50:00 PM 21 comments Links to this post
Labels: நகைச்சுவை
கலைஞர் செய்திகள் - நேற்று, இன்று
நேற்று வந்த செய்தியும், இன்று வந்த செய்தியும்.
நேற்று வந்த செய்தி
சாதாரணமாய் இருந்து சரித்திரம் படைத்தாய். அய்யா அந்த வகையில் நீ ஒரு ஒபாமா. சரித்திரம் படைத்த பின்பும் சாதாரணமாக இருக்கிறாய். அந்த வகையில் உனக்கு ஒபாமா ஒப்பாகுமா? இதை சொன்னவர் வாலி(இது கூட எங்களுக்கு தெரியாதா).
தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று தமிழர் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
காலை 11 மணிக்கு வந்த முதல்வர் கருணாநிதி, இரண்டரை மணி நேரம் நிகழ்ச்சியை ரசித்து பார்த்தார்.
இன்றைய செய்தி
முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு முதுகுப் புறத்தில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காணரமாக, அதிக அளவிற்கு வலி ஏற்பட்டதால், மருத்துவர்கள் குறைந்த ஒரு வாரத் காலவத்திற்காவது ஓய்வெடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியதின் பேரில் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல் நிலை குறைவு காரணமாக குடியரசு தின விழாவில் முதல்வர் கருணாநிதியால் பங்கேற்க முடியவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு குருவி படம் பார்த்த பின்பும் இதே மாதிரி தான் மருத்துவமனை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by IdlyVadai at 1/26/2009 11:29:00 AM 4 comments Links to this post
Labels: செய்தி
வாழ்த்துகள் ஜெயகாந்தன், விவேக்
மத்திய அரசின் `பத்ம' விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சினிமாவுக்கு போன சித்தாளு என்று இவர் எழுதிய புத்தகம் பெருதும் சர்ச்சைக்குள்ளானது. சர்ச்சைகளைப் பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளாதவர் ஜெயகாந்தன். ஜெயகாந்தனின் தோற்றத்தைப் போலவே அவரது படைப்புகளும் (முன்பு) கம்பீரமானவை.
நகைச்சுவையில் சமூக சிந்தனைகளையும் கலந்து கொடுத்ததால் சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக்கிற்கு பத்மஸ்ரீ. வேட்டியை ,கோடு போட்ட அண்டர்வேர் தெரிய, எப்படி கட்ட வேண்டும் என்று இவர் செய்த காமெடி பிரபலம்.
( நாகேஷுக்கு இந்த விருது இன்னும் கிடைக்கவில்லை . அரசியலில் யாரையும் அவருக்கு தெரியாது போல. பாலசந்தர் ஒரு விழாவில் (2006) அடுத்த வருடமாவது இவருக்கு பத்மஸ்ரீ கிடைக்க வேண்டும் என்று சொன்னார். )
இவர்களுக்கு இட்லிவடையின் வாழ்த்துகள்!
Posted by IdlyVadai at 1/26/2009 08:35:00 AM 8 comments Links to this post
Labels: செய்தி
Sunday, January 25, 2009
மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்குக்கு ஆபரேஷன் வெற்றி. பிரதமர் சீக்கிரம் குணமடைய இட்லிவடையின் வாழ்த்துகள்.
( மேலே உள்ள படத்தில் இருப்பவர் யார் ? )
பிரதமருக்கு ஆபரேஷன் செய்த 11 டாக்டர்கள் `எய்ம்ஸ்' ஆஸ்பத்திரியில் முதல் முறையாக தனியார் டாக்டர்களுக்கு அனுமதி. சில கருத்துகள்....
`எய்ம்ஸ்' மருத்துவமனையில் பணிபுரிபவர்கள். அரசு மருத்துவமனையான `எய்ம்ஸ்'சுக்குள் தனியார் டாக்டர்களை சிகிச்சை அளிக்க அனுமதித்தது இதுவே முதல் முறையாகும். `எய்ம்ஸ்'சில் தனியார் டாக்டர்களை அனுமதிப்பது இல்லை என்பது ஒரு கொள்கையாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பதவியில் இருந்தபோது, அவருக்கு மூட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதை அமெரிக்கா வாழ் இந்தியரான டாக்டர் சித்தரஞ்சன் என்பவர் செய்தார். அவர் தனியார் டாக்டர் என்பதால் `எய்ம்ஸ்' மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வாஜ்பாய்க்கு அறுவை சிகிச்சை நடந்தது"எய்ம்ஸ் மருத்துவமனையில் தனியார் டாக்டர்களை அனுமதித்து இருப்பது பிரதமருக்கு மட்டுமா மற்றவர்களுக்கும் பொருந்துமா என்பதை விளக்க வேண்டும். பிற அரசியல்வாதிகளும், அவர்களுடைய உறவினர்களும் இந்த சலுகையை பயன் படுத்த ஆரம்பித்து விடுவார்கள். எனவே, சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் தனியார் சிறப்பு டாக்டர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்கும் வகையில் `எய்ம்ஸ்' கொள்கைகளை மாற்ற வேண்டும்''
- இந்திய டாக்டர்கள் சங்க தலைவரும், இந்திய இதய பாதுகாப்பு அறக்கட்டளை துணை தலைவருமான டாக்டர் கே.கே.அகர்வால்.
படம்: பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இருதய ஆபரேஷன் நடந்த டெல்லி `எய்ம்ஸ்' ஆஸ்பத்திரிக்கு அவரை பார்ப்பதற்காக நேற்று ஒருவர் வந்தார். மன்மோகன் சிங் போலவே தோற்றம் கொண்ட அவர் பிரதமரைப் போலவே வெள்ளை நிற குர்தா, பைஜாமாவும் தலையில் நீல நிற டர்பனும் அணிந்து இருந்தார். அவர் பிரதமரைப் போலவே இருந்ததால் அங்கிருந்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். மேலும் ஆஸ்பத்திரி கேமரா மூலம் டி.வி.யில் அவரது உருவத்தை பார்த்தவர்களுக்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அவர் பெயர் - குர்மீத் சிங்
Posted by IdlyVadai at 1/25/2009 07:17:00 AM 12 comments Links to this post
Labels: செய்தி
Saturday, January 24, 2009
இறுதியாக இரண்டு செய்தி
"அய்யகோ, இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது- இந்திய பேரரசுக்கு இறுதி வேண்டுகோள்'' என்பதை டெல்லியிலே உள்ளவர்களுடைய செவிகளிலே விழ ஓங்கி ஒலித்து இந்த தீர்மானத்தை இந்த மாபெரும் அவையிலே முன்மொழிகிறேன். - நேற்று கலைஞர் சட்டசபையில்
முல்லைத்தீவில் விடுதலைப்புலிகள் மீது இறுதி தாக்குதல் - இலங்கை ராணுவம் அறிவிப்பு - செய்தி
Posted by IdlyVadai at 1/24/2009 02:00:00 PM 9 comments Links to this post
Labels: செய்தி
Friday, January 23, 2009
குடியரசு தின போட்டி !

ரொம்ப சிம்பிளான போட்டி:
மகாத்மா காந்திக்கு ‘கதர்’ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர்(கள்) யார் ?
’கதர்’ என்றால் என்ன ?
இந்த போட்டிக்கும் நிச்சயம் பரிசு உண்டு ( இந்த முறை புத்தகம் இல்லை, கவலைப்படாதீர்கள் )
விதிமுறைகள்:
1. விடைகளை பின்னூட்டதில் சொல்லவும்.
2. போட்டி ஜனவரி 25, இந்திய நேரம் மாலை ஐந்து மணி வரை
3. பின்னூட்டங்கள் உடனே பிரசுரிக்க இயலாது. 26 அன்று எல்லா பின்னூட்டங்களும் பிரசுரிக்கப்படும்.
4. ஒருவர் இரண்டு(அல்லது அதற்கு மேல்) பின்னூட்டம் போடலாம். அவர் போட்ட கடைசி பின்னூட்டம் தான் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும். ( முதல் பின்னூட்டம் சரியாக இருந்தாலும் அது எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது )
5. முதலில் யார் சரியான விடை சொல்லுகிறார்களோ அவர்கள் வெற்றி வெற்றிப்பெற்றர்களாக அறிவிக்கப்படுவர்.
6. வழக்கம் போல் போட்டி முடிந்த பின்பு தான் பரிசு அறிவிக்கப்படும்.
7. விதிமுறைகளில் மாற்றம் ஏற்படலாம். அதனால் அடிக்கடி இங்கே வந்து பாருங்க :-)
இதுவரை வந்த பின்னூட்டங்கள்: 10
Posted by IdlyVadai at 1/23/2009 09:26:00 PM 14 comments Links to this post
Labels: போட்டி
அவியல்.இன்போ
ஒர் அறிமுகம்...
அறிவியல் என்றால் பலர் தலைதெரிக்க ஓடும் இந்த காலத்தில். தமிழில் அறிவியல் பற்றி எழுத தொடங்கியிருக்கிறார்கள் இவர்கள். நல்ல முயற்சி வாழ்த்துகள்!சில வருடங்களுக்கு முன், நான் முதுகலை மாணவியாக இருந்தபோது சில நண்பர்களுடன் ஒரு தாய்லாந்து உணவகம் சென்றிருந்தேன். உண்ணத் தொடங்கிய இரண்டு நிமிடங்களுக்குள் முதுகு தண்டுக்குள் பூரான் ஊறும் அவஸ்தை. எனக்கு மட்டும்தான் ஏதோ அலர்ஜி என்று முதலில் நினைத்தேன். ஆனால், என் அருகில் உட்கார்ந்திருந்த தோழியின் முகம் சென்ற விகாரம், இல்லை என்றது.
மேலும் பூரான் ஊறும் கதை பற்றி தெரிந்துக்கொள்ள இங்கே போங்க சமையலில் எண்ணெய் அதிகம் பயன்படுத்துகிறோம். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை உரித்து, நான்கு நான்காகத் துண்டு போட்டு, உலோக வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, மஞ்சள் பொடி, காரப்பொடி போட்டு, வாசனையாக வதக்கி, இறக்கி முடித்ததும், சாப்பிடுபவருக்குச் சுகமாக இருக்கும். அந்த வாணலியைத் தேய்ப்பவருக்கு?
எப்படி பாத்திரம் தேய்ப்பது என்று தெரிந்துக்கொள்ள இங்கே செல்லவும்
அறிவியல் ஒரு சமுத்திரம். அறிவியல் சார்ந்த விஷயங்களில் எங்களுக்கு ஓரளவிற்கு புரிந்தவற்றை உங்களுடன் தமிழில் பகிர்ந்துகொள்ளும் முயற்சி இது என்று சொல்லுகிறார்கள்.
இதில் (தற்போது) எழுதுபவர்கள் - வெங்கடரமணன், அருண் நரசிம்மன், பத்ரி, அருள்செல்வன். இட்லிவடை அறிவியல் பற்றி எழுதினால் போடுவார்களா என்று தெரியலை.
மாட்டுப்பொங்கலன்று சோ - ஜெ. சந்திப்பு போன்ற செய்திகளுக்கு இட்லிவடை இருக்கவே இருக்கு, இது மாதிரி அறிவியல் சம்பந்தமான விஷயத்துக்கு தான் தளங்கள் கம்மி. அடிக்கடி போய் பாருங்க
பிகு: டைட்டிலில் ‘றி’யை விட்டுவிட்டீர்களே என்று இந்தியன் படத்தில் கவுண்டமணி போல் பின்னூட்டம் இட வேண்டாம். அறிவியல் என்று தலைப்பு வைக்க தான் ஆசை ஆனால் இட்லிவடை போல் ஏதாவது சாப்பாட்டு டைட்டில் வைத்தால் தான் கூட்டம் வருகிறது என்ன செய்ய :-)
Posted by IdlyVadai at 1/23/2009 03:47:00 PM 2 comments Links to this post
சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிக்கு தடை செல்லாது - கோர்ட்
சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிக்கு தடை விதித்தது செல்லாது: டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு
சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகளை காட்டக் கூடாது என்று தடை விதித்து மத்திய அரசு உத்தர விட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதித்தது சட்ட விரோதம். பேச்சு சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளை இது மீறுவதாகும். இது சம்பந்தமாக 2006 அக்டோபர் மாதம் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றும் கூறி உள்ளது.
Posted by IdlyVadai at 1/23/2009 02:44:00 PM 3 comments Links to this post
Labels: செய்தி
ஸ்லம்டாக் மில்லியனர் - வாழ்த்தும், சபாஷும்
Posted by IdlyVadai at 1/23/2009 01:24:00 PM 10 comments Links to this post
Thursday, January 22, 2009
மைக் டெஸ்டிங் ஒன், டூ, த்ரீ
வழக்கம் போல் என் கருத்தை சொன்னேன்.
பலருக்கு அது தர்மசங்கடமாக இருக்கிறது
வழக்கம் போல் பதிவை எடுத்துவிட்டேன்.
நண்பர்களுக்கு நன்றி
இட்லிவடை
( என்ன நடந்தது என்று வந்தவர்கள் ஏமாற கூடாதே என்று இந்த படம் :-)
Posted by IdlyVadai at 1/22/2009 02:17:00 PM 12 comments Links to this post
Labels: எழுத்தாளர்கள், கருத்து, நகைச்சுவை
Wednesday, January 21, 2009
அவசர சிகிச்சை போட்டி - முடிவுகள்
அவசர சிகிச்சை போட்டி முடிவுகள்!
பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி ( நாங்க எதிர்பார்த்ததை விட நல்ல ரெஸ்பான்ஸ் )
பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். ( நடுவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி )விவரம் கீழே...
முதல் பரிசு :
டாக்டர் ராமதாஸ் (மனதுக்குள்) : "ஐயோ! மெடிக்கல் காலேஜில் படிக்கும்போது இதையெல்லாம் choice ல உட்டுட்டேனே! இப்ப என்ன சொல்லி சமாளிக்கறதுன்னு தெரியலையே! "
( சினிமா விரும்பி : http://cinemavirumbi.tamilblogs.com/ )
இரண்டாம் பரிசு:
திருமா: இத கலைஞருக்கு வெச்சு பாத்திருக்கிங்களா ?
மருத்துவர் ஐயா : அவருக்கு இதயம் இனிச்சத நான் தான் பாத்து சொன்னேன் .
( பாஸ்கி - http://www.blogger.com/profile/13663583648956741182 )
பரிசு பெற்றவர்கள், கீழே உள்ள லிஸ்டில் ஏதாவது ஒன்றை செலக்ட் செய்து உங்கள் முகவரியை ஈ-மெயில் மூலம் எனக்கு( idlyvadai2007@gmail.com) தெரியப் படுத்தினால் பரிசு அனுப்பப்படும்.
முதல் பரிசு-லிஸ்ட்
1. அரசூர் வம்சம் இரா.முருகன் ( கிழக்கு )
2. கொலையுதிர் காலம் - சுஜாதா ( உயிர்மை )
3. வந்தார்கள் வென்றார்கள் - மதன் ( விகடன் )
இரண்டாம் பரிசு-லிஸ்ட்
1. பி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) ( எனி இந்தியன்)
2. தேசாந்திரி எஸ்.ராமகிருஷ்ணன் ( விகடன் )
3. ஒபாமா, பராக்! முத்துக்குமார் ( கிழக்கு )
போட்டிகள் தொடரும்...
Posted by IdlyVadai at 1/21/2009 06:09:00 PM 14 comments Links to this post
Labels: போட்டி
Tuesday, January 20, 2009
ஓபாமா பைத்தியம் பிடித்து அலையும் மீடியா
நேற்று இரவு ஆரம்பித்துவிட்டார்கள் 'கவுண்ட் டவுன்' செய்ய. இன்னும் 10 மணி 30 நிமிட நேரம் தான் இருக்கு ஓபாமா பதவி ஏற்க என்று. இந்திய மீடியாவா அல்லது அமெரிக்க மீடியாவா என்று சந்தேகமே வந்துவிட்டது.
ஜார்ஜ் புஷ்ஷால் நியமிக்கப்பட்ட வெள்ளை மாளிகை சமையல்காரரே தொடர்ந்து அப்பொறுப்பி்ல் நீடிக்கலாம் என அதிபர் பதவியேற்கவுள்ள பாரக் ஓபாமா ஒப்புதல் அளித்துள்ளார்; பதவியேற்பு விழாவுக்கான டிக்கெட்கள் 60 விநாடிகளில் விற்றுத் தீர்ந்து விட்டது போன்ற முக்கியமான செய்திகளை மீடியா சொல்லத்தொடங்கிவிட்டது.
நாளை கலைஞர் ”வெள்ளை மாளிகையில் கருப்புப் புயல்” என்று கவிதை எழுதிவிடுவார். ராமதாஸ், விஜயகாந்த் ஏன் சரத்குமார் கூட வாழ்த்து அறிக்கை விடுவார்கள். ஓபாமாவா படிப்பார் என்று நினைக்கிறீர்கள் ? தலையெழுத்து நாம் தான் அதை படிக்கணும்.
ஓபாமா வந்தால் இந்தியாவிற்கு என்ன நன்மை ? ஒன்றும் இல்லை. கருப்போ வெளுப்போ எந்த அமெரிக்கா அதிபர் வந்தாலும் இந்தியாவிடம் தனது ‘பிக் பாஸ்’ மேதாவி தனத்தை காமித்துக்கொண்டே தான் இருப்பார்கள்.
மன்மோகன் சிங் ஓபாமா போன் வருமா என்று காத்துக்கொண்டிருப்பார். அப்படியே போன் வந்தாலும் ராங் நம்பர் என்று சொல்லிவிட்டு சோனியாவிடம் தான் பேசுவார். இந்தியா பாக்கிஸ்தான் உறவுகள் மேன்பட வேண்டும் என்று அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருப்பார்கள்.
நான்கு வருடம் கழித்து ஓபாமா தாஜ்மஹாலை பார்க்க வருவார். போட்டோ எடுத்துக்கொள்வார் தீவிரவாதம் பெரிய சவால் என்று எதாவது பேத்தலாக பேசிவிட்டு போவார். கம்யூனிஸ்ட் கருப்பு கொடி காமிப்பார்கள்.
மீடியா இந்தியா வந்த ஓபாமா பேல் பூரி சாப்பிட்டார் என்று கதை எழுதி கவர் ஸ்டோரி போடுவார்கள்.
நமது வலை மக்கள் இதற்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை. ”நான் ஓபாமாவை ஆதரிக்கிறேன்”; “ஓபாமா சுத்த வேஸ்ட்” என்று சைடு பாரில் போட்டு தங்கள் ஆசையை தீர்த்துக்கொள்கிறார்கள்.
அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு நாள் லீவு கிடைத்தால் போதும், ஓபாமா இதை செய்வார், அதை செய்வார் என்று ஏதாவது எழுதி பிதற்றுகிறார்கள். எனக்கு இன்று ஓபாமா பர்த் சர்டிபிகேட் கூட மெயிலில் அனுப்பிவிட்டார்கள். ( பார்க்க படம் )
இட்லிவடையில் ”ஏன் ஓபாமா பற்றி எழுதவில்லை?” என்று சாட்டில் 15 நிமிஷம் முன்பு கேட்ட ஆசாமிக்கு இந்த பதிவு சமர்பணம்.
Posted by IdlyVadai at 1/20/2009 05:08:00 PM 32 comments Links to this post
Labels: அரசியல்
Monday, January 19, 2009
இலங்கை கிமு - கிபி
சந்திரமௌளீஸ்வரன் கிறிஸ்துவுக்கு முன் முதல் இன்று வரை இலங்கை பற்றி எழுதி அனுப்பியுள்ளார்...
கிறிஸ்துவுக்கு முன் 5 ஆம் நூற்றாண்டு இந்தோ ஆரிய வகைப் புலம் பெயர்ந்தோர் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர்
கிறிஸ்துவுக்கு முன் 3 ஆம் நூற்றாண்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மக்கள் புலம் பெயர்வது தொடங்கியது எனலாம்
1658- டச்சு ஆதிக்கம் இலங்கையில் தொடக்கம். கண்டி நீங்கலாக எங்கும் அவர்கள் ஆதிக்கம் பரவியது.
1796 – பிரிட்டிஷாரின் பார்வை இலங்கை மேல். அவர்கள் இலங்கையினை ஆக்கிரமிக்க தொடங்கினார்கள்
1815- கண்டி பிரிட்டிஷார் வசமாகியது. இலங்கைக்கு டீ, காபி, தேங்காய்த் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்த தென் இந்தியாவிலிருந்து தமிழர்களை கொண்டு செல்லுதல் தொடங்கியது.
1833- இலங்கை மொத்த்த் தீவும் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில்
1931- சிங்களரின் இடைக்கால காபினட்.
1948- பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலிருந்து இலங்கை விடுதலை
1949- இந்தியாவிலிருந்து தோட்ட்த் தொழிலாளர்களாகப் போன தமிழர்கள் பலருக்கு குடியுரிமை பறிக்கப்பட்ட்து.
1956-இலங்கை ஒரு சிங்கள தேசம் என்று ஓர் அலை பரவியது. பாரதியார் கூட சிங்களத் தீவினுக்கோர் பாலமைப்போம் என ரொம்ப நாளைக்கு முன்பே சிங்களத் தீவு என்ற பிரயோகத்தினைக் கையாண்டார் என்பதனைக் கவனிக்க. சாலமன் பண்டாரநாயகே ஆதிக்கம். சிங்களம் ஆட்சி மொழியாக அறிவிப்பு. தமிழர்கள் இதனை எதிர்த்தனர். சுமார் 100 தமிழர்கள் அப்போது நடந்த வன்முறையில் உயிரிழந்தனர். இலங்கையில் தமிழர்கள் உரிமை பறிக்கப்பட்டு உயிரிழப்பது அன்று தொடங்கியது. இன்று வரை தொடர்கிறது
1958- தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் 200 தமிழர்கள் பலி
1959- சாலமன் பண்டார நாயகே கொலை. அவரின் விதவை சிரிமாவோ பண்டாரநாயகே ஆட்சிப் பொறுப்பு ஏற்பு
1965- சிரிமாவோ தோல்வி . எதிர்கட்சியான ஒருங்கிணைந்த தேசியக் கட்சி ஆட்சி. தமிழர்கள் இழந்த்தைப் பெற சில முயற்சிகள்
1970- சிரிமாவோ மீண்டும் ஆட்சியில். தமிழர்களுக்கு எதிரான போக்கு மீண்டும்
1971- இலங்கையில் மார்க்சீய புரட்சி உதயம். மாணவர் புரட்சி உதயம்
1972- சிலோன் என்ற பெயர் ஸ்ரீலங்கா என மாற்றம். புத்த மதம் மிகுந்த செல்வாக்கு பெற தொடங்குகிறது, இதனால் தமிழர்கள் அதிருப்தி
1976- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உதயம்
1977 தேர்தலில் Tamil United Liberation Front (TULF) கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களில் எல்லா இடங்களிலும் வெற்றி- தமிழர்களுக்கு எதிரான வன்முறை பலர் பலி
1981- புகழ்வாய்ந்த யாழ்பாணம் நூலகம் எரிப்பு. பதட்டம் அதிகமாகிறது
1983- எல்டிடிஈ தாக்குதல் 13 சிங்களர் பலி. இதுவே விடுதலைப் புலிகள் தங்களின் முதல் போர் எனக் கூறுவர்
1985- விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் நடந்த முதல் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிகிறது
1987- விடுதலைப் புலிகளை ஒடுக்க இலங்கை அரசு முயற்சி. யாழ்ப்பாணத்தில் புலிகள். தமிழர் பகுதிகளுக்கு தனி கௌன்சில்கள் அமைக்க இலங்கை அரசு தீர்மானம். இந்திய அமைதிப் படையினை வரவழைக்க இலங்கை அரசு ஒப்பந்தம்
1988- ஜேவிபி என்ற இயக்கமும் இன்னும் சிலரும் இந்திய இலங்கை ஒப்பந்த்த்தை எதிர்த்தனர்
1990- இந்திய அமைதிப் படை இலங்கையிலிருந்து விலகியது. பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வடக்கு இலங்கையிலிருந்து விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்டனர்
1991- இராஜீவ் காந்தி படுகொலை. விடுதலைப் புலிகளே காரணம் என முதல் கட்ட விசாரணையிலேயே தெளிவு
1993- பிரேமதாசா கொலை
1994- குமாரதுங்க பதவியேற்பு. அமைதிப் பேச்சுவார்த்தை தொடக்கம்
1995- இலங்கை அரசின் கடற்படை கப்பலை விடுதலைப் புலிகள் மூழ்கடித்தனர். மீண்டும் போர் தொடக்கம்
1995-2001 வரை இரண்டு தரப்புக்கும் ஆயுதப் போர். இலங்கையின் வடக்கு கிழக்கு மாகணங்கள் விடுதலைப் புலிகளின் கேந்திரங்கள் ஆயின
2002 பிப்ரவரியில் நார்வே தூதுக் குழுவின் ஒத்துழைப்பில் இரண்டு தரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தம். தனி ஈழக் கோரிக்கையை புலிகள் கைவிட்டனர். யாழ்ப்பாணம் சாலை திறக்கப்பட்ட்து. விடுதலைப் புலிகள் மீதான தடையும் கைவிடப்பட்ட்து
2003- விடுதலை புலிகள் போர் நிறுத்த்த்தைக் கைவிட்டனர்
2003 மே பெரும் வெள்ளம்
2004- கருணா விடுதலைப் புலிகள் இயக்கதிலிருந்து விலகி தனி அமைப்பு தோற்றுவிப்பு. தலைமறைவு
2004 ஜூலை புலிகள் கொழும்பு நகரை தற்கொலைப் படை கொண்டு தாக்குதல்
2004- டிசம்பர்- சுனாமி- இலங்கையின் வடக்கு கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடும் சேதம்
2002005 ஆக்ஸ்டு இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் கொலை- நாடெங்கும் பரபரப்பு
2005 நவம்பர் – பிரதமரகாக இருந்த மஹிந்த ராஜ பக்ஷே அதிபர் தேர்தலில் வெற்றி
2006 ல் புலிகள் தொடர் தாக்குதல். மே மாதம் கடற்படைக் கப்பலைத் தாக்கினர்.
2006 ஜெனிவாவில் நடை பெற்ற அமைதிப் பேச்சு வார்த்தை தோல்வி
2007 பல தமிழர்கள் கொழும்பு நகரை விட்டு வெளியேற்றியது அரசு. நீதி ம்னறத் தலையீட்டால் நிலை மாற்றம்
2008 மார்ச். சர்வதேச அமைப்புகளை வந்து பார்வையிட இலங்கை அரசு வேண்டுகோள். அதனை ஏற்று குழு வருகை. குழு உறுப்பினார் நெகில் ராட்லி தன்னால் வேலை செய்ய இயலவில்லை. அரசின் குறுக்கீடு உள்ளது எனக் கூறி வெளியேற்றம்
2008 ஜூலையிலிருந்து இன்று வரை இலங்கை அரசு தாக்குதல்களை தீவிரப் படுத்தியுள்ளது
Posted by IdlyVadai at 1/19/2009 06:01:00 PM 37 comments Links to this post
Labels: விருந்தினர்
Sunday, January 18, 2009
அவசர சிகிச்சை போட்டி

செய்தி: நேற்று உண்ணாவிரத மேடையில் திருமாவளவனை சந்தித்து பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவருடைய உடல் நிலையை பரிசோதித்தார். ரத்தம் மற்றும் சர்க்கரை அளவு குறைந்து வருவதால், உடல் நலம் கருதி உண்ணாவிரதத்தை கைவிடும்படி திருமாவளவனுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
போட்டி விவரம் கீழே...
நீங்க செய்ய வேண்டியது இது தான். மேலே உள்ள படத்தை உற்று பாருங்கள். உங்களுக்கு என்ன் கமெண்ட் தோன்றுகிறதோ அதை பின்னூட்டதில் போடவும்.
இந்த முறை வழக்கத்துக்கு மாறாக சிறந்த கமெண்டுக்கு பரிசு உண்டு. என்ன பரிசு என்பது சர்ப்ரைஸ் :-)
விதிமுறைகள்
1. ஒருவர் எவ்வளவு கமெண்ட் வேண்டும் என்றாலும் போடலாம்.
2. அனானியாக கமெண்ட் போடுவதென்றால், கீழே குறிப்பிடப்பட்ட முறையை பின்பற்றவும்.
இரண்டு பின்னூட்டங்கள் தரவும். ஒன்றில் கமெண்ட் தனியாகவும், மற்றொன்றில் அதே கமெண்டுடன் உங்கள் மின்னஞ்சல் முகவரியும் இருக்க வேண்டும். (மின்னஞ்சல் முகவரியுடன் உடையது பிரசுரிக்கப்பட மாட்டாது)
3. போட்டி இந்திய நேரப்படி புதன் கிழமை மாலை 5 மணி வரை.
4. போட்டி முடிந்த பின்பு பரிசு என்ன என்று அறிவிக்கப்படும்.
5. விதிமுறைகளில் மாற்றம் ஏற்படலாம். அதனால் அடிக்கடி இங்கே வந்து பாருங்க :-)
Posted by IdlyVadai at 1/18/2009 12:18:00 PM 90 comments Links to this post
Labels: போட்டி
டாப்-10 வலைப்பதிவுகள் - குமுதம்
சமீபகால புரட்சி பிளாக்குகள் ( புரட்சி என்பதை கவனிக்கவும் ) என்று 21.1.09 குமுதத்தில் வந்த டாப்-10 வலைப்பதிவில் இட்லிவடைக்கு முதல் இடம் தந்துள்ளார்கள்.
சர்வே மூலம் இதை முடிவு செய்திருக்கிறார்கள். கடைசி ஒரு மணி நேரத்தில் 30% ஓட்டு பதிவு செய்ய அழகிரி போல் யாரும் இல்லாமல் இட்லிவடை முதல் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
குமுதத்துக்கும், இட்லிவடைக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் என் நன்றிகள். டாப்-10ல் இடம்பெற்ற மற்ற வலைப்பதிவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
விவரம் கீழே...
தமிழ் எழுத்துலகில் நிகழ்ந்துள்ள சமீபகால புரட்சி பிளாக்குகள். ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழில் பிளாக் எழுதுகிறார்கள். இதில் பிரபலமானவை எது என பிளாக்கர்கள் மத்தியில் எடுக்கப்ட்ட ஒரு குட்டி சர்வே.
1. இட்லிவடை
www.idlyvadai.blogspot.com
`பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா, பன்ச் வெச்சா இட்லி தாண்டா' என பன்ச் டயலாக்குடன் அறிமுகமாகும் இந்த பிளாக்குக்கு சொந்தக்காரர் யார் என்பது தெரியவில்லை. ஆனால், அதுதான் இதன் பலமும்கூட. முகம் தெரியாததால் தைரியமாக கருத்துச் சொல்கிறார்கள்.
2. திணை இசை சமிக்ஞை
www.nagarjunan.blogspot.com
சிறுபத்திரிகை எழுத்தாளர், ஆம்னஸ்டிக் இண்டர்நேஷனல் மனித உரிமை ஆர்வலர் என பன்முகம் கொண்ட நாகார்ஜுனின் பிளாக். இந்த பரந்த அனுபவம் இவரது பலம். அதிகம் சீரியஸான விஷயங்களைத்தான் எழுதுகிறார்.
3. பிகேபிஇன்
www.pkp.blogspot.com
அமெரிக்கா சாஃப்ட்வேர்காரரான பி.கே.சிவகுமாரின் பிளாக். பிரசித்திப் பெற்ற அலெக்ஸா டாட் காம் சர்வேயில் நிறைய பேர் படிக்கும் தமிழ் பிளாக்காக தேர்வு செய்திருந்தார்கள். பொது அறிவு விஷயங்களைத் தேடித்தேடித் தந்திருக்கிறார்.
4. எண்ணங்கள்
www.thoughtsintamil.blogspot.com
பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியின் பிளாக். எல்லாவற்றைப் பற்றியும் தன் எண்ணங்களை எழுதியுள்ளார். எப்படி தமிழிலேயே டைப் செய்வது, ஃபாண்டுகளை மாற்றுவது என்பது உட்பட தமிழ் மென்பொருள்கள் பற்றியும் அறிவியல் விஷயங்களையும் எளிமையாக எழுதியுள்ளார்.
5. யுவகிருஷ்ணா
www.luckylookonline.com
தி.மு.க.வின் கொள்கைகளைப் பரப்புவதற்காகத்தான் பிளாக் தொடங்கியுள்ளதாக சொல்கிறார் இவர். படுசீரியஸாகவும் இல்லாமல் மொக்கையாகவும் இல்லாமல் நடுவாந்திரமாக எழுதுவதால் அனைத்து தரப்பினராலும் படிக்கப்படுகிறார்.
6. பரிசல்காரன்
www.parisalkaaran.com
திருப்பூரைச் சேர்ந்த கே.பி.கிருஷ்ணகுமார் பிளாக். மே 2008ல்தான் தொடங்கியிருக்கிறார். நிறைய எழுதுவதால் குறுகிய காலத்திலேயே ஹிட் ஆகிவிட்டார். யூத் பிளாக்கர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு.
7. அதிஷாவின் எண்ண அலைகள்
www.athishaonline.com
பிளாக்கர்களின் பலமான மொக்கைத்தனமும், சகட்டுமேனிக்கு அடிக்கும் கிண்டலும்தான் இவரது பலமும். எந்த புது சினிமா வெளியானாலும் முதல் காட்சி முடிந்து இரண்டாவது காட்சி ஆரம்பிப்பதற்குள் இவர் விமர்சனம் வெளியாகிவிடும்.
8. மொழிவிளையாட்டு
www.jyovramsundar.blogspot.com
சென்னையைச் சேர்ந்த ஜ்யோவ்ராம் சுந்தர் பிளாக். சிறுபத்திரிகை வட்டாரத்தில் பின்நவீனத்துவம் பேசுபவர்கள் குறைந்துவிட்டாலும், பிளாக்கில் ஒரு பெரிய அணியே இருக்கிறது. அவர்களில் இந்த பிளாக் பிரசித்தமானது.
9. சத்தியக்கடுதாசி
www.satiyakadatasi.com
ஈழத்து எழுத்தாளரான ஷோபாசக்தியின் பிளாக். இலங்கைப் பிரச்னை பற்றி இவர் அபிப்ராயத்தைத் தெரிந்துகொள்ள பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அ.மார்க்ஸ், ராஜன்குறை போன்ற சிறுபத்திரிகை பிரபலங்களும் எழுதுகிறார்கள்.
10. ஸ்மைல் பக்கம்
www.livingsmile.blogspot.com
திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யாவின் பிளாக். இலக்கியமும் சினிமா-வும் அதிகம். சினிமாகாரர்கள் திருநங்கைகளை சித்திரிக்கும் விதம் பற்றி காட்டமாக விமர்சித்திருக்கிறார்.
- தளவாய் சுந்தரம்
( நன்றி: குமுதம் )
Posted by IdlyVadai at 1/18/2009 08:32:00 AM 22 comments Links to this post
Labels: இட்லிவடை ஸ்பெஷல், பத்திரிக்கை
Saturday, January 17, 2009
காணும் பொங்கலா குப்பை பொங்கலா ?
நேற்று மெரினாவில் வீசப்பட்ட 120 டன் குப்பைகள் இன்று அகற்றம். செய்தி கீழே...
காணும் பொங்கல் தினமான நேற்று மட்டும் சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 4 லட்சம் பேர் கூடினார்கள். கடற்கரையில் அவர்கள் கொண்டுவந்த உணவையும், அங்கு கடையில் விற்கப்பட்ட உணவு வகைகளை வாங்கியும் சாப்பிட்டு, குடும்பத்துடன் குதூகலித்தனர். பின்னர், சாப்பாடு பொருட்கள் எடுத்துவந்த பாத்திரங்கள் தவிர ஏனைய குப்பைகளை கடற்கரையில் வீசிச்சென்றனர். இதனால், இன்று காலை சென்னை மெரினா கடற்கரை பிளாஸ்டிக் கப், பேப்பர் கப், குடிநீர் பாட்டில்கள், பாலீத்தின் கவர், இலை என குப்பைகளாக காட்சி அளித்தது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கடற்கரையின் ஒருமுனையில் இருந்து மற்றொரு பகுதிவரை குப்பை அள்ளும் வாகனமும் மூலமும், கைகளாலும் குப்பைகளை அகற்றினார்கள். வழக்கமாக சில டன்கள் குப்பைகள் மட்டுமே இருக்கும் மெரினா கடற்கரையில், இன்று மட்டும் 120 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இந்த குப்பைகள் அனைத்தும் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன.
1 டன் என்பது சுமார் 900 கிலோ
Posted by IdlyVadai at 1/17/2009 10:40:00 PM 6 comments Links to this post
Friday, January 16, 2009
ஊழல்கள் பலவிதம்
நேற்று பத்ரியுடன் சாட் செய்துக்கொண்டிருந்த போது ஊழல் பற்றி சில கருத்துக்களை சொன்னார். சாட் முடிவில் இதையே ஒரு பதிவாக எழுதி அனுப்புங்கள் என்ற சொன்ன பத்தாவது நிமிஷம் அனுப்பினார். அவருக்கு என் நன்றி.
கட்டுரை கீழே...
ஊழல்கள் பலவிதம் - பத்ரி.
அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்கள்: இவை அனைத்தும் பெரும்பாலும் 1960-களின் கடைசியில் தொடங்கின. தமிழகத்தைப் பொருத்தமட்டில் நிச்சயமாக தி.மு.க.வின் கைங்கரியமாக இதனைப் பார்க்கலாம். அதன்பின், இன்று, ஊழல் செய்யாத கட்சிகளே இல்லை என்று சொல்லிவிடலாம். கம்யூனிஸ்டுகள் நீங்கலாக என்று தோன்றுகிறது. அடிப்படை நோக்கம், கட்சிக்குப் பணம் தேவை, தேர்தலுக்குப் பணம் தேவை என்பதிலிருந்து ஆரம்பித்து, சொந்த வாழ்க்கை நடத்தவே பணம் தேவை என்ற அளவுக்குப் போய்விட்டது. கட்சியில் முக்கியஸ்தர்கள் ஆகும் பலரும் வெகு சில நாள்களுக்குள்ளாகவே கார், தோட்ட பங்களா, ஆங்காங்கே நிலபுலம், நாலைந்து கம்பெனிகள், கடைகள், கையிலும் கழுத்திலும் தங்க ஆபரணங்கள் என்று ‘செட்டில்’ ஆவது எப்படி? ஊழல், ஊழல், ஊழல் மட்டுமே.
எந்தெந்த வகையில் எல்லாம் இந்த ஊழல் நடக்கிறது, திருடப்படுவது எத்தனை கோடிகள் என்பது முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கான மெடீரியல்.
இதற்கு, அரசியல்வாதிகளோடு சேர்ந்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், அதற்கு அடியில் இருப்பவர்கள் என்று பெரும் கூட்டம் துணைபோகிறது. கூடவே அவர்களுக்கு ‘புல்லுக்கு ஆங்கே பொசியுமாம்’ என்பதுபோல பொசியப்படுகிறது.
தொழில்துறை ஊழல்: அரசியல் ஊழலைச் செய்வது படிக்காத மேதைகள் என்றால், தொழில்துறை ஊழல், மெத்தப் படித்த மேதாவிகள் செய்வது. சமீபத்திய உதாரணம் சத்யம் கம்ப்யூட்டர்ஸ். அரசியல்வாதிகள் ஊழல், அப்பட்டமானது. “அட போய்யா, அப்படித்தான். இல்லாட்டி என் <கட்சி, சாதி, இனம்> எப்படி முன்னுக்கு வரது?” என்று தெளிவாகச் சொல்லிவிட்டுச் செய்தாலும், தான் செய்வது சரியல்ல என்ற எண்ணமும், மரியோ புஸோவின் மைக்கேல் கார்லியோன் போல, திருடிய பணத்தை ‘லெஜிட்’ செய்ய முற்படுவதும் அரசியல்வாதிகளிடம் உண்டு.
ஆனால் தொழில்துறை ஊழல், அப்படியல்ல. முதலில் ஊழல் செய்பவர்கள் தங்களைத் தாங்களே பிரெயின்வாஷ் செய்துகொள்கிறார்கள். தாங்கள் செய்வது ஒன்றும் தவறல்ல; ஒட்டுமொத்தமாகச் சரியே என்று தங்களைத் தாங்களே மந்திரித்துக்கொண்டு, முற்றிலும் அதில் மூழ்கியபின், தெளிவான, அழகான முறையை உருவாக்கிக்கொள்கிறார்கள். அதில் மேடாஃப் செய்த பான்ஸி வகை திருட்டும் அடக்கம்; சஞ்சய் அகர்வால், ராமலிங்க ராஜு வகை கிரியேட்டிவ் அக்கவுண்டிங்கும் அடக்கம்; ஹர்ஷத் மேத்தா, கேத்தன் பாரீக் வகை பங்க்குச்சந்தை தில்லுமுல்லும் அடக்கம்.
மத ஊழல்: சாமியார்கள் தங்களுடைய சொந்த பிராண்ட் திருட்டில் கைதேர்ந்துள்ளனர். இது மேலே சொன்ன இரண்டிலிருந்தும் வேறுபடுகிறது. முதலிரண்டில் பொதுமக்களால் இது தவறு, தடுத்து நிறுத்தவேண்டியது என்ற எண்ணம் மேலோங்குகிறது. ஆனால் மத ஊழலில் மேலோட்டமாகப் பார்த்தால் இந்த எண்ணமே தோன்றாது. “அவர்கிட்ட அருள் கொட்டிக் கிடக்கு; அதனால பணமும் குவியுது” என்றுதான் மக்கள் சொல்வார்கள். “அதுவும், சாமியார்க்கு எதுக்கு பணம்? அவர் ஒரு பைசா தொடறதில்ல. எல்லாத்தையும் அப்படியே மக்களுக்கே நல்லது செய்யக் கொடுத்துடராறு” என்று வெறு சான்றிதழ் தருகிறார்கள். ஆனால் சாமியார்கள் நில பேரத்திலிருந்து, கட்டப் பஞ்சாயத்திலிருந்து, ஹவாலா, கொலை என்று நீக்கமற நிறைந்துள்ளனர்.
பல நேரங்களில் அரசியல்வாதிகளே வெட்கிப்போகும்படி சாமியார்கள் புகுந்து விளையாடுகிறார்கள்.
இந்த மூவருமே ‘ரூம் போட்டு யோசித்தே’ திருவிளையாடல் செய்கிறார்கள் என்றாலும், இதில் அதிகமாக மூளையையும், குறைவாக உடல் வலுவையும் உபயோகிக்கும் தொழில்துறை ஊழலுக்கு ‘பிராமண ஊழல்’ என்று பெயரிடுகிறேன். அரசியல்வாதிகள் ஊழலுக்கு பெரும்பாலும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதால் அதற்கு ‘சத்திரிய ஊழல்’ என்று பெயர் வைக்கலாம். சாமியார்கள் திறமையான ‘தொழில் முனைவோராக’ தமது ஊழலை நிறுவியிருப்பதால் அது ‘வைசிய ஊழல்’ ஆகிறது.நாம் அனைவரும் சில்லறையாகச் செய்யும் ஊழல், தெருவோரத்தில் டிராஃபிக் கான்ஸ்டபிள் வாங்கும் 50 ரூபாய், இன்கம் டாக்ஸில் ஏமாற்றுவது, பிளாக்கில் பணம் கொடுத்து ஸ்டாம்ப் டியூட்டியைக் குறைப்பது முதற்கொண்டு, வரிசையில் நிற்காமல் அடுத்தவனுக்கு வேட்டுவைப்பது போன்றவற்றை, வேறு வழியின்றி ‘சூத்திர ஊழல்’ என்று பெயரிடுகிறேன்.
(கொஞ்சம் செயற்கையாக உள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன். கஷ்டம்தான்; ஆனால் வேறு வழியின்றி, இந்து தத்துவ மரபுக்குள் வரவேண்டியுள்ளதே!)
வாழ்க வளமுடன்!
- பத்ரி
(இட்லிவடை கேட்டுக்கொண்டதற்கு இணங்க எழுதப்பட்டது)
Posted by IdlyVadai at 1/16/2009 09:30:00 AM 30 comments Links to this post
Labels: அரசியல், ஆன்மிகம், கட்டுரை, விருந்தினர்
Thursday, January 15, 2009
துக்ளக் 39 - பகுதி-3, 4
கடைசி இரண்டு பகுதிகள்
பகுதி - 3
பகுதி-4
Posted by IdlyVadai at 1/15/2009 07:11:00 PM 6 comments Links to this post
Labels: ஆடியோ, இட்லிவடை ஸ்பெஷல்






நன்றி: தினமணி









