நண்பர் அமுதப்ரியன் சில வாரங்களுக்கு முன் திருவண்ணா மலை சென்ற போது ஒரு மனிதரை அவர் சந்தித்திருக்கிறார். அவரை பற்றி இட்லிவடைக்கு எழுதியும் அனுப்பினார். அந்த மனிதரின் போட்டோ கிடைத்தால் நல்லா இருக்கும் என்றேன். உடனே அவர் போன வாரம் திரும்பவும் திருவண்ணாமலைக்கு சென்று அந்த மனிதரை தேடியிருக்கிறார். கிடைக்கவில்லை. இந்த மாதிரி சித்தர்களை கண்டுபிடிக்கும் திறமை உள்ளவர்களான 'விஜய் டிவி நடந்தது என்ன' குழுவிடம் சொல்லியிருக்கோம். நிச்சயம் படம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
2012 என்ன என்ன நடக்கும் என்பதை விரிவாக விளக்கியுள்ள பதிவு...
அனைவருக்கும் வணக்கம்.
கடந்த மாதக் கடைசியில் திருவண்ணாமலை சென்றிருந்தேன். அது ஒரு பௌர்ணமி இல்லாத, பிரதோஷம் இல்லாத நாள். கிரிவலம் செல்லும் வழியில் மலையின் நேர் பின்னால் மேற்கு திசையில் வாயு லிங்கம் அருகில் ஒரு மனிதரை (அவருடன் சில சீடர்கள்) சந்திக்க நேர்ந்தது. அவருக்கு வயது கூடிப்போனால் 32 முதல் 35 வயது வரை இருக்கும். ஆனால் அவருடைய சீடர்கள்(அவருடன் இருந்தவர்கள்) அவருக்கு வயது 5000 என்றனர். அவருக்கு அஷ்டமாசித்திகளும் தெரியும் என்றனர். அவருடன் நடந்த ஒரு கலந்துரையாடலை இட்லிவடை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள கொடுக்கிறேன். “பாரடா வான்மதியிலே பார்தான் பாதியாகிடுமே” என்று ஒரு பாடலை எடுத்து விட்டு அதற்கு அர்த்தம் சொல்ல ஆரம்பித்தார். எனது இதயம் பகீர் என்றது.
அவர் சொன்ன பகீர் தகவல்களில் சில:
[1] 2012 உலகம் அழிவு ஆரம்பம்.
[2] கழுகு தற்போது 40 முட்டைகள் இடுகின்றனவாம், கழுகுகள் அதிகரித்தால் மனிதனைக் கொல்லுமாம்.(இதை ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றார்)
[3] கிலோ அரிசி 1000ரூபாயைத் தொடுமாம்.
[4] 1பவுன் தங்கம் 50000ரூபாயைத் தொடுமாம்.
[5] ஐரோப்பிய கண்டத்தில் இந்தியாவிற்கு கண்டம் கொடுக்க ஒருவன் உதித்து விட்டானாம். அவனுடைய ஆட்கள் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்கள், நகரங்கள் அனைத்திலும் ஊடுருவி உள்ளார்களாம். அனைத்து மக்களுடைய அங்க அடையாளங்கள் ஆவனங்கள் அவனிடத்தில் உள்ளதாம்.
[6] 2012ல் இந்தியாவை வெற்றி கொள்வானாம்.
[7] இந்தியாவில் இருக்கும் அனைத்து CALLCENTER களையும் அந்த ஐரோப்பிய மனிதன் வாங்கிவிட்டான்.
[8] உலகத்தின் மொத்த மக்கள் தொகை 100கோடியாகி விடும்.
[9] மின்சார உற்பத்தி முழுமையாக பாதிக்கப்படும். பின் மின்சாரமே இல்லாமல் போகும்.
[10] சூரியனிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படும். சூரியன் ஒளி பாதியாக குறையும்.
[11] 30கோடி பேர்தான் இந்தியாவில் இருப்பார்களாம்.
[12] ஒரே நேரத்தில் சூரியனும் சந்திரனும் தெரியும்.
[13] மக்கள் சாப்பாட்டிற்காக ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வார்கள்.
[14] இந்தியாவில் இப்போதிருக்கும் அரசியல் அமைப்பு மாறும்.
[15] இந்தியாவில் அதிபர் தேர்தல் நடக்கும்.
[16] இப்போதிருக்கும் பல நகரங்கள் இந்தியாவில் மூழ்கிப் போகும்.
[17] கடலுக்குள் இருக்கும் நகரங்கள் பல வெளிவரும்.
[18] புதிய புதிய விலங்குகள் உருவாகும்.
[19] புதிது புதிதாக நோய்கள் பிறக்கும்.
[20] உலகமெங்கும் வறட்சியின் பிடியில் இருக்கும்.
என்று நீண்டு கொண்டே செல்கிறது அவரது வாக்கு.
சரி எப்போது இதுவெல்லாம் சரியாகும் என்றேன். 2016ல் முழு உலகம் அழிந்து பின் 2019ல் புது உலகம் பிறக்கும் என்றார் புன்முறுவல் பூத்தபடி. மேலும் உண்மையான ஜோதிடர்களுக்கு இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்றார். (ஐயா ஜோதிடர் ராமகிருஷ்ணன் அவர்களே பதில் தெரியுமா)
இட்லிவடையும் அதன் வாசகர்களும் என்ன நினைக்கிறீர்கள்...
- அமுதப்ரியன்
அடுத்த முறை பார்க்கும் போது இட்லிவடை என்ன ஆகும் என்று கேட்டு சொல்லுங்க :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, November 16, 2009
பகீர் சித்தர்
Posted by IdlyVadai at 11/16/2009 02:30:00 PM
Labels: அனுபவம், நகைச்சுவை, விருந்தினர்
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










49 Comments:
சகிக்கலை
ஒரு வரி மிஸ்ஸிங்?
ஆகவே சீக்கிரம் மனம் திரும்புங்கள்.
ஆமென்.
கோலங்கள் தொடர் எப்ப முடியும்ங்கறத பத்தி அந்த சாமியார் ஏதாவது சொல்லிருக்காரா??
அமுதப்ரியன் அடுத்த முறை திருவண்ணாமலை செல்லும்போது கேட்டு சொல்லவும்.
யதிராஜ்..
கோலங்கள் தொடர் எப்ப முடியும்ங்கறத பத்தி அந்த சாமியார் ஏதாவது சொல்லிருக்காரா??
அமுதப்ரியன் அடுத்த முறை திருவண்ணாமலை செல்லும்போது கேட்டு சொல்லவும்.
(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்..)
ஸ்ஸ்ஸ்அப்ப்ப்ப்பாபாபா. இப்பவேக் கண்ணக்கட்டுதே!
அமுதப்ரியன்.
நக்கல் நாரதர் இட்லிவடை! நீர் உம்ம குசும்ப சித்தர் கிட்ட காட்டினா, நேத்திக்கு நீயா நானா-ல "நாலும் தெரிஞ்ச அதி மேதாவி" சாபம் குடுக்க சொன்னதப் போல ஆயிடப் போகுது!!
பாத்து சூதனமா நடந்துக்கங்கப்பூ!
:>
எப்படியெல்லாம் பீதிய கிளப்புறாங்கய்யா?
suthakar.r_eee@yahoo.co.in
கலைஞர் குடுத்த ஓசி டிவில 2012 படத்தோட ட்ரெய்லர பாத்துட்டு சித்தர் இப்படியெல்லாம் பேசறார்.
இந்தியாவுல தேர்தல் வரும்ங்கறத கூட ஒரு அசித்து சொல்லித்தான் தெரிஞ்சுக்கணுமா? கஷ்டம்!!
மயன் காலண்டர் உண்மையோ இல்லையோ, ஆனா அந்த புண்ணியவான் இன்னி தேதிக்கு நிறைய பேரோட கல்லாவ ரொப்பிட்டார்.
அந்த சாமியார் எப்போ எங்கே தியான கிளாஸ் எடுக்க போறார்? எப்போ உலகமெங்கும் கிளைகள் திறக்க போறார்?
// Anonymous said...
ஒரு வரி மிஸ்ஸிங்?
ஆகவே சீக்கிரம் மனம் திரும்புங்கள்.
ஆமென்.//
அட, இட்லிவடை மக்களுக்கும் அட்டமா சித்திகளும் இருக்கும் போலிருக்கே..
ஆமாம் ஆமாம் - டிசம்பர் இருபத்துமூன்று இரண்டாயிரத்துப் பன்னிரண்டு - அத்தோட எல்லாம் ஓவர் என்று யாரோ இருவர் பெங்களூரிலிருந்து கூறியிருப்பதாக எங்கியோ படித்தேன். அடுத்த ஆறு மாதங்களுக்குள் - சுவிஸ் வங்கிகளில் தீ பிடிச்சுக்குமாமே! அரசியல்வாதிகளே - இப்பவே எல்லாத்தையும் இந்தியாவுக்குக் கொண்டுவந்துடுங்க.
மொதல்ல அந்த சித்தரை ரெண்டு விஜயகாந்த் படமும் (நரசிம்மா, பேரரசு), விஜய் படமும் (குருவி, வில்லு) பார்க்க சொல்லுங்க. சித்தம் தானாக தெளிஞ்சிடும்.
gmail.com//[8] உலகத்தின் மொத்த மக்கள் தொகை 100கோடியாகி விடும்.//
8வது பாயிண்ட் பெரிய டகால்டியா இருக்கே...
முரசொலியில் எதிர்ப்பு கடிதம் வருமா??
[3] கிலோ அரிசி 1000ரூபாயைத் தொடுமாம்.
@@@@@
ஒரு ஆண்மகன் விவசாயம் பார்த்தால், அவனைத் திருமணம் செய்ய(விவசாயம் செய்ய) ஒரு பெண்ணும் முன்வருவது இல்லை. இப்படியே சென்றால் இன்னும் 5 வருடங்களில் கிலோ அரிசி 1000ரூபாயைத் தொடும்.விவசாயம் செய்வதை இழிவாக கருதி இன்று இருக்கும் இளைஞன் கைவிடுவான். இது சத்தியம். எனது குடும்பம் விவசாயம் சார்ந்தது. கிராமத்தில் உள்ள சூழ்நிலை இது. அப்போது 100 + கோடி மக்களுக்கு உணவுக்கு எந்த நாடும் படிஅளக்க முடியாது.
@@@@@
[5] ஐரோப்பிய கண்டத்தில் இந்தியாவிற்கு கண்டம் கொடுக்க ஒருவன் உதித்து விட்டானாம். அவனுடைய ஆட்கள் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்கள், நகரங்கள் அனைத்திலும் ஊடுருவி உள்ளார்களாம். அனைத்து மக்களுடைய அங்க அடையாளங்கள் ஆவனங்கள் அவனிடத்தில் உள்ளதாம்.
@@@@@
Spreading Christianity - That Lady born in Italy Named So...
@@@@@
[13] மக்கள் சாப்பாட்டிற்காக ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வார்கள்.
@@@@@
If no agriculture in Villages, what to eat ?
@@@@@
[14] இந்தியாவில் இப்போதிருக்கும் அரசியல் அமைப்பு மாறும்.
@@@@@
It will happen because no election needed, if any candidate who spends more in election, then can declare his winning !!!
@@@@@
[16] இப்போதிருக்கும் பல நகரங்கள் இந்தியாவில் மூழ்கிப் போகும்.
@@@@@
Global Warming
@@@@@
[19] புதிது புதிதாக நோய்கள் பிறக்கும்.
@@@@@
சிக்கன் குனியா
பண்ணி காய்ச்சல்
குரங்கு காய்ச்சல்( AIDS)
.....
மட்டன் காய்ச்சல்
மாட்டு காய்ச்சல்
கழுதை காய்ச்சல்
@@@@@
[20] உலகமெங்கும் வறட்சியின் பிடியில் இருக்கும்.
@@@@@
Global Warming
@@@@@
BY
WORLD CITIZEN
//[1] 2012 உலகம் அழிவு ஆரம்பம்.//
அட...ஆமாம்... இப்போதான் படம் ரிலீஸ் ஆச்சு... க்ராஃபிக்ஸ் பட்டைய கெளப்புதாம்...
//[3] கிலோ அரிசி 1000ரூபாயைத் தொடுமாம்.//
இல்லை... அரிசி இன்றும் ஒரு கிலோ ஒரு ரூபாய்தான்... ஆனால், எப்போதும் போல, ஸ்டாக் இல்லை... இது கழக ஆட்சியின் சாதனை...
//[5] ஐரோப்பிய கண்டத்தில் இந்தியாவிற்கு கண்டம் கொடுக்க ஒருவன் உதித்து விட்டானாம். அவனுடைய ஆட்கள் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்கள், நகரங்கள் அனைத்திலும் ஊடுருவி உள்ளார்களாம். அனைத்து மக்களுடைய அங்க அடையாளங்கள் ஆவனங்கள் அவனிடத்தில் உள்ளதாம்.//
எனக்குள் ஒருவன், நமக்குள் ஒருவன், உன்னை போல் ஒருவன், என்னை போல் ஒருவன்
//[8] உலகத்தின் மொத்த மக்கள் தொகை 100கோடியாகி விடும்.//
இது ஆல் டைம் டகால்டி டயலாக்...
//[9] மின்சார உற்பத்தி முழுமையாக பாதிக்கப்படும். பின் மின்சாரமே இல்லாமல் போகும்.//
இது ஆல்ரெடி அருமை அண்ணன் ஆற்காட்டார் புண்ணியத்தில் நடந்து விட்டது...
//11] 30கோடி பேர்தான் இந்தியாவில் இருப்பார்களாம்.//
இப்போவே பாதி பேரு வெளில தான் இருக்காங்க....
//[14] இந்தியாவில் இப்போதிருக்கும் அரசியல் அமைப்பு மாறும்.//
எந்த அமைப்பு எப்படி மாறினாலும், "தல" தலைமை தான்...
//[18] புதிய புதிய விலங்குகள் உருவாகும்.//
ஏற்கனவே நிறைய விலங்குகள் மனிதர்கள் போர்வையில் உலா வருகிறது...
//அடுத்த முறை பார்க்கும் போது இட்லிவடை என்ன ஆகும் என்று கேட்டு சொல்லுங்க :-)//
கொஞ்சம் பெருசானா பழைய "குஷ்பு", புதுசா "நமீதா"ன்னு பேர் மாறும்...
//மஞ்சள் ஜட்டி said...
மொதல்ல அந்த சித்தரை ரெண்டு விஜயகாந்த் படமும் (நரசிம்மா, பேரரசு), விஜய் படமும் (குருவி, வில்லு) பார்க்க சொல்லுங்க. சித்தம் தானாக தெளிஞ்சிடும்.//
சமீபத்துல நான் படிச்சதுல பெரிய டெர்ரர் கமெண்ட் இதுதான்... அப்ப்ப்போ வந்து சிக்ஸர் அடிச்சுட்டு போயிடறாரு மஞ்சள் ஜட்டி...
எப்படி எல்லாம் யோச்சிக்கிராய்ங்க.,room rent கொடுக்க காசு இருக்கா கேட்டு சொல்லுங்க
Earlier "arul vakku" was that the world will face dooms day in year 2000.
Some body in Madurai believedtook heavy bank loans that he cannot repay hoping that there would be no need of any repayment as world will end within year 2000. Later he defaulted his loan and got arrested and in prison.
My dear makka take care.
http://ulagamahauthamar.blogspot.com/2009/11/2012.html
Will World will destroy in 2012 ?
வாழ்க வளமுடன்.
இயற்கையை ஒட்டியே இருக்கும் எந்த நிலையும், நமக்கு இயற்கை சம்பந்தமாக அறிவிலே பிரதிபலிக்கும்.
ஐந்தறிவு விலங்குகளும், பறவைகள் போன்ற ஜீவராசிகளும் கூட பூகம்பம் உள்ளிட்ட இயற்கை விளைவுகளை அறிந்து கொள்ள முடிகின்றது...
இயற்கையை ஒட்டிய ஒன்று தான் இறை நிலை தவமும். தவத்திலே ஆழ்ந்து செல்ல செல்ல, இயற்கையை ஒத்து ஏற்படும் சில மாற்றங்களை நுண்ணிய அளவிலே நின்று புரிந்து கொள்ள முடியும்.
கோரக்க சித்தரின் ஜீவ சமாதி பீடம் இருப்பது வடக்கு பொய்கை நல்லூர் என்ற கிராமம்... இது நாகப்பட்டினத்திற்கும், வேளாங்கண்ணி தலத்திற்கும் நடுவிலே உள்ளது. நாகப்பட்டினம், வேளாங்கண்ணி எல்லாம், சுனாமியினால் கடல் நீர் சூழ்ந்து கோர தாண்டவம் ஆடிய போது, இந்த வடக்கு பொய்கை நல்லூர் பகுதியில் மட்டும், கடல் நீர் உள் வாங்கியது....
அப்போது, சுற்றி உள்ள கிராம மக்களை எல்லாம் அந்த கோயிலை சுற்றி வைக்கப்பட்டிருந்தார்களாம்...
கடலை ஒட்டிய பல கிராமங்கள் அழிந்த போது, ஜீவசமாதி அருகில் கடல் நீர் கூட போக வில்லை... ஏன்? இயற்கையை ஒட்டிய சித்தருக்கு தெரியாதா இயற்கையை பற்றி? அதற்கேற்றார் போல அமைப்பாக அந்த இடம் அமைந்துள்ளது.
சமீபத்திலே, கோதாவரி நதி வெள்ளத்திலே சூழப்பட்ட ராகவேந்திரர் பிருந்தாவன ஆலயம் பற்றி செய்தியில் படித்த போது, ஆச்சரியமான தகவல் வந்தது... என்னவென்றால், சமாதி ஒட்டிய இடத்திற்கு மட்டும் நீர் உள்ளே செல்லாத வகையிலே வெள்ளத்தின் அளவு இருந்தது தான். 9 அடி நீர் இருந்ததால் சுற்றுச்சுவர் எல்லாம் இடிந்தது... ஆனால், சமாதிக்கு ஒரு சிறு கீரல் கூட ஏற்பட முடியாத வகையிலே தான் வெள்ளத்தின் அளவும், நீர் உள்ளே புகுந்ததன் அளவும் என அனைத்தும் இயற்கை அமைத்தது...
இறை நிலையிலே இருக்கிற போது, இயற்கையின் எந்த விளைவையும் ஏற்கும் மனோ நிலையில் நாம் இருப்போம். அதே போல இயற்கையாக நமக்கு என்ன செய்ய வேண்டுமோ அதுவே நிகழும் என்ற சரணாகதி கூட இருப்பதால், நிகழும் எதையும் எதிர்ப்பின்றி நாம் ஏற்போம். ஆனால், நமது குரு சொல்வது போல,
எவர் ஒருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
தப்பாது குரு உயர்வு மதிப்போர் தம்மை
தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்.
அதாவது, இறை தரிசனம் என்ற தவத்தின் பலனானது, நாம் சராசரியான, இப்போது புரியாத அளவிலே இருப்பது போல இருக்க மாட்டோம். இயற்கையோடு ஒட்டி மன அலையும் விரிந்து இருக்கும்.. அதே போல, இயற்கையை புரிந்து கொள்கிற அளவிலே இருப்போம்.
வாழ்க வளமுடன்.
More about this topic
http://vethathiri.org/SpiritualDiscussion/index.php?topic=724.msg1609;topicseen#msg1609
//[1] 2012 உலகம் அழிவு ஆரம்பம்.//
எடுத்ததுமே பிதற்றலா இருக்கே. உலக அழிவு எப்பவோ ஆரம்பம் ஆயிடுச்சே!
//அவருக்கு வயது கூடிப்போனால் 32 முதல் 35 வயது வரை இருக்கும். ஆனால் அவருடைய சீடர்கள்(அவருடன் இருந்தவர்கள்) அவருக்கு வயது 5000 என்றனர்.//
5000 ஆண்டுகள் என்பது உண்மையாகத்தான் இருக்கவேண்டும்; ஐயம் கொள்ளத் தேவையில்லை.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கொள்ளிவாய்ப் பேயைச் சந்தித்தேன். தன் அகவை ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் என்று என்னிடம் சொன்னது.
ஒரு பேயின் அகவை ஆயிரம் ஆண்டு என்றால் அந்தச் சித்தருக்கு ஏன் ஐயாயிரம் ஆண்டு இருக்காது?
கொள்ளிவாய்ப் பேயுடன் என் சந்திப்பு இங்கு:
http://nanavuhal.wordpress.com/
I remember 'Yaakava Munivar' told (around later 90's) that by 2000 'Ulagam Azhiyum' -- infact he died before 2000.
Take this as a comedy. If u r not convinced.. please read atleast http://ulagamahauthamar.blogspot.com/2009/11/2012.html (I am sure everyone will stamp this as Comedy)
//அவருக்கு வயது கூடிப்போனால் 32 முதல் 35 வயது வரை இருக்கும். ஆனால் அவருடைய சீடர்கள்(அவருடன் இருந்தவர்கள்) அவருக்கு வயது 5000 என்றனர்.//
ஒருவேளை அது ஸ்வாமி ஓம்காராக இருக்குமோ?
இந்த மாதி்ரி பித்து பிடிச்சு சித்தர்ங்கற பேரில வதந்தி கிளப்பற ஆசாமிகள பிடிச்சி உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டினா என்ன?
இட்லிவடை அவர்களே,
இந்த சித்தர் சொல்லியிருப்பதில் மூன்று நான்கு category இருக்கிறது.
அரிசி விலை, தங்கம் விலை எல்லாம் நடக்கக் கூடியதுதான். (எந்த வருடம் என்பது முக்கியம்). ஆனாலும் ஒன்றும் குடி முழுகி விடாது.
அரசியல் மாற்றம் , அதிபர் தேர்தல் முறை போன்றவையும் நடக்கக் கூடியவைதான். புதுப் புது வியாதிகள் தோன்றுமென்று நமக்கே தெரியும்.
சில நகரங்கள் முழுகலாம். ஆனால் ஏற்கனவே முழுகியவை வெளியே வருவது சந்தேகம்தான்!
உலகில் வறட்சி அதிகமாவது, மக்கள் சாப்பாட்டுக்காக அடித்துக் கொள்வது போன்றவை நடக்கலாம். சாத்தியக் கூறு உள்ளது.
கழுகு மனிதனைக் கொல்வது , புது விலங்குகள் உருவாகுவது, உலகத்தின் மொத்த மக்கள் தொகை 100 கோடியாகி விடுவது, அதில் முப்பது கோடி பேர் மட்டுமே இந்தியாவில் இருப்பது , மின்சாரம் இல்லாமல் போவது, சூரிய ஒளி பாதியாவது, சூரியன், சந்திரன் இரண்டும் சேர்ந்து தெரிவது எல்லாம்
அப்பட்டமான புருடா ரகம்! சுஜாதா பாணியில் சொல்வதென்றால் உட்டாலக்கடி!
யாகவா முனிவர் போலத்தான்!
எவனாவது ஒருவன் இந்தியாவில் உள்ள எல்லா கால் சென்டர்களையும் வாங்கி விட்டாலும் பெரிதாக ஒன்றும் ஆபத்து வந்து விடாது. அவனுக்குத்தான் அது சரியாக சிந்திக்காமல் செய்த முதலீடு! மற்றபடி அனைத்து மக்களுடைய அங்க அடையாளங்கள் ஆவணங்களை வச்சிக்கிட்டு நாக்கு வழிக்கக் கூட முடியாது!
நன்றி!
சினிமா விரும்பி
Dont worry, be happy because in 2012 there will be no idlyvadai blog.Tolerate IV for two more years.
You should tell writers like Charu,Jeyamohan and S.Ramakrishnan about this. I am sure that next month Kizahaku will publish six
books on this prediction with different titles.
சூப்பரப்பு!
ஒரே வரியில முடிச்சிருக்கலாம்.
இரண்டாவது தடவையும் தலையைத் தடவ ஒப்புக்கொண்டு தேடப்போன அமுதப்ரியனுக்கு டுபாக்கூர் சித்தனாகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது!
அல்லது
வேலை மெனக்கெட்டு பீதியைக் கிளப்ப முயன்று தோற்றுப்போன இட்லிவடை மஞ்சள்துண்டில் முகத்தைத் துடைத்ததும் துண்டு சிகப்பாகிப் போய் விட்டது.
//சினிமா விரும்பி//
இவ்வளவு சீரியஸாக் கூடவா இந்தப் பதிவைப் பார்ப்பாங்க ? அய்யோ அய்யோ !!! நீங்க ரொம்ப நல்லவருங்க
As usual Indian astrologers and idiotic followers are trying to cash in on some hot news.
Actuallly 2012 is gettting popular because of a new hollywood movie. A tribe by named Mayas who were living in Central America (below current Mexico) have written in their stone manuscripts that the earth gets destroyed and re-created in a definite cycle of 5215 years (Not sure about the correct number but around 5000 years). One such cycle ends in 2012 but nobody knows whether the message written in those manuscripts thousands of years ago can be deciphered properly. Even the present day Mayas who mostly live in Mexico does not believe this beyond an extent.
These astrologers and hollywood guys have borrowed this statement and cashing in money.
May be somebody will start telling that one has to buy and present blue color silk saree to your sister to avert the world from being destroyed. (I am omitting yellow and green since that has been used before). This will at least help the textile industry folks to shelve out their old stock
:)
இதை பற்றி பகுத்தறிவு சித்தனிடம் கேட்டபோது அவர் சொல்லியது ::
போடா உங்கப்பா father உங்கம்மா mother.
இது காமெடிப் பதிவா?!?!
//மொதல்ல அந்த சித்தரை ரெண்டு விஜயகாந்த் படமும் (நரசிம்மா, பேரரசு), விஜய் படமும் (குருவி, வில்லு) பார்க்க சொல்லுங்க. சித்தம் தானாக தெளிஞ்சிடும்.//
//
appadiyey enthiran padam parkka sollunga gopi . suthama sariyakidum
ithai solla pitthargle pothum. adutha yagava munivar...
ithu sitthar alla, etho oru pithhar, adutha yagava muni....
ithu etho pithar, ivarukku thevai Ingi marappa...(adutha Yagava muni ready)
//jaisankar jaganathan said...
//மொதல்ல அந்த சித்தரை ரெண்டு விஜயகாந்த் படமும் (நரசிம்மா, பேரரசு), விஜய் படமும் (குருவி, வில்லு) பார்க்க சொல்லுங்க. சித்தம் தானாக தெளிஞ்சிடும்.//
//
appadiyey enthiran padam parkka sollunga gopi . suthama sariyakiduம்//
இது யாரு இந்த புது டகால்டி... கீழ்ப்பாக்கத்துல இருந்து டைரக்ட் ரிலீஸா?? விஜய், விஜயகாந்து ரசிகர் மன்ற தலைவரா? ரெண்டு பேரையும் விட இவரு பெரிய அதிரடி டகால்டி போல இருக்கே...
//jaisankar jaganathan said...
//மொதல்ல அந்த சித்தரை ரெண்டு விஜயகாந்த் படமும் (நரசிம்மா, பேரரசு), விஜய் படமும் (குருவி, வில்லு) பார்க்க சொல்லுங்க. சித்தம் தானாக தெளிஞ்சிடும்.//
//
appadiyey enthiran padam parkka sollunga gopi . suthama sariyakiduம்//
அய்யோ... கொஞ்ச நாள் கொசு தொல்லை இல்லாம இருந்தது... இப்போ மறுபடியும் மொதல்ல இருந்தா?? போதும்யா...
In order that mankind, particularly
in Tamil Nadu, may benefit from the
immense spirituality from that
Siddhar, I suggest that some TV
Channels contact Amudapriyan and
get this ageless Sidhar for a direct interview, preferably another such prophet juxtaposed so
that one may provoke the other and
one of them might show his physical
prowess a la Yagava Munivar with
Siva Sankar Baba about a decade
and half back, when the private
channels were just sprouting. We
can hear some wonderful words of
wisdom and watch some sparks flying too.
பெயர் சொல்ல விருப்பமில்லை said
/////[1] 2012 உலகம் அழிவு ஆரம்பம்.//
எடுத்ததுமே பிதற்றலா இருக்கே. உலக அழிவு எப்பவோ ஆரம்பம் ஆயிடுச்சே////
Again, beg to differ.
Applying the principle that you would be going out of forest only after reaching the centre and similarly you would be going down the hill only after reaching the summit.
We are (I hope you believe in chatur yug and manvantarams) in the first half of Vaivaswara Manvantaram. Therefore your theory may become correct only at the stage when the Second Half of the said Manvantaram starts.
அட போங்க சார், உலக அழிவு எப்பவோ ஆரம்பம் ஆயிடுச்சே! ...குறிப்பாக, விவசாய நிலத்தையெல்லாம் அழிச்சிட்டு வராங்க...
ithellam idlyin summa dakil velai....
//அய்யோ... கொஞ்ச நாள் கொசு தொல்லை இல்லாம இருந்தது... இப்போ மறுபடியும் மொதல்ல இருந்தா?? போதும்யா...//
veetula net connection problem. within a week la arambikkalam
அந்த சாமியார் இருக்கும் இடம் திருவண்ணாமலை இல்லை, கீழ்பாக்கம்
// I am sure that next month Kizahaku will publish six
books on this prediction with different titles.//
:-)
"இந்தியாவில் இருக்கும் அனைத்து CALLCENTER களையும் அந்த ஐரோப்பிய மனிதன் வாங்கிவிட்டான்"
ஆகவே இது கால் சென்டரில் வேலை பார்க்கும் எதோ ஒரு சின்ன சித்தர் சீரியசாக சிந்தித்து சிதறவிட்டிருக்கிறார்..........
சும்மா சொல்லக்குடாதப்பு...... சூப்பெரப்பு ................
ஜோதிடர் ராமகிருஷ்ணன் அவர்களுக்கே ஜோதிடம் பார்க்க கூடிய திறமை, இந்தப்பதிவருக்கு உண்டென்று உணர்வோமாக !!!!
திருவண்ணாமலை போன்ற உன்னத தலத்தை அசிங்க படுத்த யாரோ கிளம்பிருகாங்கனு தோணுது.
கேக்குறவன் கேனையா இருந்தா கேப்பைல நெய் வடியுதுன்னு சொல்லுவாங்களாம்.
இதெல்லாம் சொன்ன நம்ப மாட்டீங்க.
அதான் மனுஷப் பய கூட பேசறதே இல்ல.
பறவ பன்னி ரெண்டு கூடதான் பேசறது.....
எனக்கு இந்த காமெடி தான் ஞாபகம் வருது..
http://www.youtube.com/watch?v=HxRU9T-jVNU
// cho visiri said...
பெயர் சொல்ல விருப்பமில்லை said
/////[1] 2012 உலகம் அழிவு ஆரம்பம்.//
எடுத்ததுமே பிதற்றலா இருக்கே. உலக அழிவு எப்பவோ ஆரம்பம் ஆயிடுச்சே////
Again, beg to differ.
Applying the principle that you would be going out of forest only after reaching the centre and similarly you would be going down the hill only after reaching the summit.
We are (I hope you believe in chatur yug and manvantarams) in the first half of Vaivaswara Manvantaram. Therefore your theory may become correct only at the stage when the Second Half of the said Manvantaram starts
//
Then we may have to start telling about the three types of pralayams one among them is "naimithika pralayam" which is different from "Maha Pralayam" you are referring about. so,
கருத்து சொல்ல விருப்பமில்லை.
(பின் குறிப்பு : நகைச்சுவைன்னு lable லேயே போட்டிருக்கு, அப்புறம் ஏன் சார், ஸ்.ஸ்.ஸ்.ஸ்.ஸ்.ஸ்.ஸ்..... அப்பா.......இப்பவே கண்ணக் கட்டுதே....
Amuta priyan paartha aalu than '2012-Rudran" padam indiale release pannirupparo? Padathukku sema advt. kodukkuraaru.Kalla nirachuduvaaru.
Post a Comment