
"விய்ங்...." என்று பறந்துவந்து அமர்ந்தார் காக்கையார். நாம் வள்ளலார் நினைவில் நெகிழ்ந்து இருந்ததால் கவனிக்கவில்லை. தானே அழைப்புமணியை அழுத்தி வடை, சுடச் சூட டீக்கு ஆர்டர் செய்துகொண்ட அடாவடியில் சிந்தனை கலைந்தோம்.
"என்ன காக்கையாரே, சுடச் சுட செய்தி உண்டா? உட்காருகிற தோரணையே கொஞ்சம் ஓவரா இருக்கே!"
"இல்லையா பின்னே, மேட்டர் அப்படியாக்கும்!"
"ரொம்ப பில்டப் கொடுக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுங்கள்."
"விஷயம் தெரியுமா, அந்த ஆனந்தமான வாரப் பத்திரிகை போட்ட குட்டிகளில்..."
"என்ன சொல்ல வருகிறீர்? பத்திரிகையில் குட்டிகள் படம்தானே போடுவார்கள்"
வடையையில் இருந்த பச்சை மிளகாயைக் கடித்ததுபோல் ரியாக்ஷன் காண்பித்தார் காக்கையார்.
"ஐயோ நான் சொல்லவருவது வேறு. அந்தப் பத்திரிகை அடுத்தடுத்து போட்டு பத்திரிகைக் குட்டிகளில்....."
"ஓ, சரி. சரி. குட்டி என்ற வார்த்தையைக் கேட்டதும் சிந்தனையும் குட்டிக்கரணம் அடித்துவிடுகிறது. ஓகே விஷயத்துக்கு வாரும்."
"அந்தப் பத்திரிகை போட்ட குட்டிகளில் மூத்த குட்டியின் முதன்மை ஆசிரியர் நேற்று அதிரடியாக வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிராராம்."
"அதிர்ச்சியாக இருக்கிறதே."
"அதிர்ச்சி உமக்கு மட்டும் இல்லை. ஆனந்த முதலாளிக்கும் அதிர்ச்சியாம். காரணம், முதன்மை ஆசிரியர், பலகோடி சொத்துகளுக்கு இப்போது அதிபதி என்பது தெரியவந்துள்ளதாம்"
"அப்படியா? எப்படி? பத்திரிகை ஆபிசில் என்னத்தை சம்பாதித்துக் கிழித்துவிட முடியும்?"
"அதுதான் தெரியவில்லை. முதன்மை ஆசிரியர், பல அரசியல்வாதிகளின் ஊழல்களையெல்லாம் எழுதி எழுதி போரடித்துவிட்டதால் தானும் செயலில் இறங்கிவிட்டாரோ என்னவோ? அதான் சீட்டைக் கிழித்துவிட்டார்கள்"
"ஹா ஹா இதுக்கு அடுத்த வாரம் ஒரு திகில் இலவச இணைப்பு தரலாம் போல, பேஷ் பேஷ்"
நாம் சொன்ன வழவழ ஜோக்கை காதில் வாங்காமல் டீயையையும் சூட்டோடு சூடாகக் உறுஞ்சி... வாய் பொரிந்தார்.
"சுடப் போகிறது, பார்த்து..."
"அண்ணாசாலை, பெட்ரோல் பங்க்கே பற்றி எரிகிற மாதிரி சூடாக அல்லவா இருக்கிறது, அதற்கு இது ஒன்றுமில்லை" கிளாஸை டொக்கென்று வைத்துவிட்டுப் பறந்தார் காக்கையார்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, August 25, 2009
காக்கையார் சொன்ன ஃப்ளாஷ் கிசுகிசு!
Posted by IdlyVadai at 8/25/2009 04:14:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










28 Comments:
//"காக்கையார் சொன்ன ஃப்ளாஷ் கிசுகிசு!"//
னான் சும்மாதான் இருக்கேன் . அந்த போஸ்டுக்கு என்ன அனுப்புங்க
எனக்கு புரியில, அதனால நான் அப்பீட்டு :((
இதுக்கும் Rs 10000/- அபராதம் கேசுக்கும் சம்பந்தம் உண்டா?
நாராயண; நாராயண !
அந்த ஆசிரியர்
பெயரையும் - டீக்கடை பெஞ்சு பாணியில் எழுதறது!
http://imsai.blogspot.com/2009/08/blog-post_25.html
இட்லிவடை தளத்தின் மூலம் அன்னியலோகம் என்ற தளத்தின் குக்கி என்னுடைய கணினியில் இறங்குகிறது.
ஏன் இப்படி செய்கிறீர்கள் ?
இங்கேயும் சுவிஸ் வங்கிப் புயல் ஏதாவது வீசுகிறதோ?
சுவிஸ் வங்கி அதிகாரிகள் - பழி வாங்க வேண்டியவர்களின்
பண விவரங்கள் மட்டும் கொடுத்துள்ளனரோ -- ?
பாதுகாக்கப் பட வேண்டியவர்கள் பட்டியல் - தனியாக உள்ளதோ?
//இட்லிவடை தளத்தின் மூலம் அன்னியலோகம் என்ற தளத்தின் குக்கி என்னுடைய கணினியில் இறங்குகிறது.
ஏன் இப்படி செய்கிறீர்கள் ?//
எனக்கு தெரியாது. எப்படி எடுக்க வேண்டும் என்று சொன்னால் அதை செய்கிறேன்.
என்னுடைய கணனியில் கூட - internet explorer பயன் படுத்திய காலத்தில்,
இட்லி வடை சாப்பிடும் பொழுதெல்லாம்,
some tracking cookie வேலை செய்து, சிஸ்டத்தை hang செய்து கொண்டு இருந்தது.
நான் google chrome க்கு மாறிய பிறகு தொந்தரவு இல்லாமல் இருக்கிறேன்.
செந்தழல் ரவி::
பொதுவாக மைக்ரோசாப்டின்
மென்பொருட்களில் வசதிகள் உள்ள அளவுக்கு இம்சைகளும் இலவச இணைப்புகளாக வரும். நீங்கள் Internet Explorer உபயோகிப்பாளராக இருப்பின் இதுபோன்ற தொந்தரவுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் பெரிய அளவில் பிரச்சனைகள் ஏதும் ஏற்பட்டுவிடாது.
Mozilla Firefox உபயோகப்படுத்திப் பாருங்கள் இதற்கு மாற்றாக. கூடவே AVG anti-spyware நிறுவிக் கொள்ளுங்கள். இலவச மென்பொருள்தான்.
இட்லிவடை பாவம் அப்பிராணி.
Anonymous said...
இந்தக் cookies இட்லிவடை வழியாகத்தான் வந்தது என்று எவ்வாறு கூறுகிறீர்கள்? கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்.
Tuesday, 25 August, 2009
செந்தழல் ரவி said...
இந்தக் cookies இட்லிவடை வழியாகத்தான் வந்தது என்று எவ்வாறு கூறுகிறீர்கள்? கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்.
Tuesday, 25 August, 2009
நல்ல கேள்வி.
முதலில் கூகிள் க்ரோம் ஓப்பன் செய்யுங்கள். அதில் செட்டிங்ஸ் ஆப்ஷன்ஸ் சென்று அனைத்து குக்கிகளையும் ரிமூவ் செய்துவிடுங்கள்.
இப்போது இட்லிவடை பதிவை ஒரு முறை ஓப்பன் செய்துவிட்டு, மீண்டும் சென்று உங்கள் கணினியில் எத்தனை குக்கிகள் வந்துள்ளன, அவை எங்கிருந்து வந்தன என்பதை பாருங்கள்.
Tuesday, 25 August, 2009
Anonymous said...
நன்றி திரு ரவி.
Tuesday, 25 August, 2009
Anonymous said...
செக் பண்ணினேன். அவ்வாறு ஒன்றும் வரவில்லையே!!!!
Tuesday, 25 August, 2009
ஜேம்ஸ் said...
எனக்கு அது மாதிரி எதுவும் வரவில்லையே.
ஒ.. இது உம்ம அக்கபோர் என்பது லேட்ட தானே புரியுது. நீரும் உம்ம இருப்ப அப்பப்ப காட்டிக்க ஏதேதோ டகால்டி வேலையெல்லாம் செய்யரீர். ஆனா உம்மோட பீத்தலை இமேஜ் போகவே போகாது.
Tuesday, 25 August, 2009
செந்தழல் ரவி said...
ஒருவேளை உளவாளி சாம்பார் வாளியை தூக்கிக்கொண்டு சென்றுவிட்டாரா ?
பாயும் வேகம் குக்கீ தாண்டா.
பஞ்சு வெச்சா பக்கீதாண்டா.
Tuesday, 25 August, 2009
செந்தழல் ரவி said...
அன்புள்ள ஜேம்ஸ்.
ஐ பீ எல்லாம் பார்க்காமல் ஆய் பீ என்று சொல்லும் அளவில் இருக்கும் உமது பின்னூட்டம் ஒரு புண்ணூட்டம் என்றால் அது மிகையல்ல.
Tuesday, 25 August, 2009
செந்தழல் ரவி said...
மறந்துவிட்டேன் ஜேம்ஸ். அல்லேலூயா. அல்லேலூயா. முடவன் நடக்க, குருடன் பார்க்க. உடனே விஜயம் செய்வீர். காருண்யா பல்கலை. கோவை.
Tuesday, 25 August, 2009
******************************
என்னதான் நடக்குது நாட்டுல. என்ன வேணா (ரவி) பேசலாம் blog-ல.
மஞ்சள் கமெண்ட்ல ஏதோ ஒரு பஞ்ச் குறையுதே... உங்கள் டி மற்றும் வடையில் இருந்த சூடு மிஸ்ஸிங்...
Anonymous said...
பழைய cookies history-ல 6-7 இட்லிவடை cookies இருந்தது. அழித்து பின் reload செய்து பார்த்ததில் இப்போது வரவில்லை.
Tuesday, 25 August, 2009
செந்தழல் ரவி said...
ஆக என்னுடைய வரலாற்று சிறப்பு மிகுந்த இந்த சைபர் கிரைம் பதிவின் மூலம் இட்லிவடை குக்கிகளை நிறுவுவதை நிறுத்திவிட்டார் என்று சொல்கிறீர்களா அனானி ?
Tuesday, 25 August, 2009
***************************
பின்னூட்டங்களை மின்னஞ்சலில் பெற..
தற்பொழுது வந்த தகவல் படி, அண்ணார் பலருக்கு வேலை உத்திரவாத வாக்குறுதி கொடுத்திருந்தாராம்!
அண்ணாருக்கே சீட்டு பணால் ஆனதால் பலர் கன்னத்தில் கையோடு!
// "விய்ங்...." என்று பறந்துவந்து அமர்ந்தார் காக்கையார். //
"விய்ங்...." ன்னு பறந்து வரமாட்டாரு...... " விங்க்ஸ் "லுதான் பரந்து வருவாரு......
// "என்ன காக்கையாரே, சுடச் சுட செய்தி உண்டா? //
ஆமா... ஆமா... இட்லி வடாதான் சூடா இல்ல .... நீயாவது சூடா ஏதாவது சொல்லு.....
// உட்காருகிற தோரணையே கொஞ்சம் ஓவரா இருக்கே!" //
அடங்கொன்னியா... கக்கா எப்பையா... கோந்துச்சு.....?
// ரொம்ப பில்டப் கொடுக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுங்கள்." //
சைடுக்கா வந்தா விசியத்த கேக்க மாட்டீங்களோ.....?
// விஷயம் தெரியுமா, அந்த ஆனந்தமான வாரப் பத்திரிகை போட்ட குட்டிகளில்..." //
பத்த வெக்கிறியே பரட்ட............
// "என்ன சொல்ல வருகிறீர்? பத்திரிகையில் குட்டிகள் படம்தானே போடுவார்கள்" //
உங்க போட்டோ வரலையேன்னு ஆதங்கமா....?
// வடையையில் இருந்த பச்சை மிளகாயைக் கடித்ததுபோல் ரியாக்ஷன் காண்பித்தார் காக்கையார். //
ஏனுங்கோ..... வட.... ஊசி போச்சா.....?
// "ஐயோ நான் சொல்லவருவது வேறு. அந்தப் பத்திரிகை அடுத்தடுத்து போட்டு பத்திரிகைக் குட்டிகளில்....." //
யோவ் காகையாரே.... ஷகிலா குட்டியா...??? இல்ல ஓமன குட்டியா...?? சீக்கிரம் சொல்லி தொலைய்யா.....!!
ஷகிலா குட்டிய பத்தி மட்டும் ஏதாவது ஏடாகூடமா சொன்ன .... ங்கொய்யால அப்பறம் நீ 5 ரூவா பிரியாணிதான்....!!
// "அந்தப் பத்திரிகை போட்ட குட்டிகளில் மூத்த குட்டியின் முதன்மை ஆசிரியர் நேற்று அதிரடியாக வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிராராம்." //
ஏனுங்... கம்பனி பல கோடி லாஸ்ஸா......?
// அதிர்ச்சியாக இருக்கிறதே." //
எதுக்கு இந்த ஓவர் பில்டப்பு ......
" ஒன்னும் தெரியாத பாப்பா... போட்டாளாம் தாப்பா......"
// காரணம், முதன்மை ஆசிரியர், பலகோடி சொத்துகளுக்கு இப்போது அதிபதி என்பது தெரியவந்துள்ளதாம்" //
ஒருவேல முன்னாடி சத்யம் கம்பெனி ராமலிங்க ராஜுவோட ப்பெத்த டையப்பு வெச்சிருந்திருப்பாரோ .......?
// "அப்படியா? எப்படி? பத்திரிகை ஆபிசில் என்னத்தை சம்பாதித்துக் கிழித்துவிட முடியும்?" //
சம்பாரிக்க முடியுமான்னு தெரியல.... ஆனா நெறையா கிழிக்கலாம்....
// அதான் சீட்டைக் கிழித்துவிட்டார்கள்" //
பஞ்சு வெச்ச செட்டா....? னாருல தேச்ச சீட்டா...?
// "ஹா ஹா இதுக்கு அடுத்த வாரம் ஒரு திகில் இலவச இணைப்பு தரலாம் போல, பேஷ் பேஷ்" //
அடங்கொன்னியா....!! நம்ம ஆளுங்க .... ஓசியில பெனாயில் குடுத்தாகொட குடிப்பாங்களே.... !!
// "சுடப் போகிறது, பார்த்து..." //
மேட்டர் அபுடியோன்னும் பெரிய சூடு இல்ல....!! அதுனால ... காக்கா கத்துனாலும் .... இன்னொரு ஊசிப்போன வடைய வாயில துனுச்சுருலாம்...!!
// "விய்ங்...." என்று பறந்துவந்து அமர்ந்தார் காக்கையார். //
"விய்ங்...." ன்னு பறந்து வரமாட்டாரு...... " விங்க்ஸ் "லுதான் பரந்து வருவாரு......
// "என்ன காக்கையாரே, சுடச் சுட செய்தி உண்டா? //
ஆமா... ஆமா... இட்லி வடாதான் சூடா இல்ல .... நீயாவது சூடா ஏதாவது சொல்லு.....
// உட்காருகிற தோரணையே கொஞ்சம் ஓவரா இருக்கே!" //
அடங்கொன்னியா... கக்கா எப்பையா... கோந்துச்சு.....?
// ரொம்ப பில்டப் கொடுக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுங்கள்." //
சைடுக்கா வந்தா விசியத்த கேக்க மாட்டீங்களோ.....?
// விஷயம் தெரியுமா, அந்த ஆனந்தமான வாரப் பத்திரிகை போட்ட குட்டிகளில்..." //
பத்த வெக்கிறியே பரட்ட............
// "என்ன சொல்ல வருகிறீர்? பத்திரிகையில் குட்டிகள் படம்தானே போடுவார்கள்" //
உங்க போட்டோ வரலையேன்னு ஆதங்கமா....?
// வடையையில் இருந்த பச்சை மிளகாயைக் கடித்ததுபோல் ரியாக்ஷன் காண்பித்தார் காக்கையார். //
ஏனுங்கோ..... வட.... ஊசி போச்சா.....?
// "ஐயோ நான் சொல்லவருவது வேறு. அந்தப் பத்திரிகை அடுத்தடுத்து போட்டு பத்திரிகைக் குட்டிகளில்....." //
யோவ் காகையாரே.... ஷகிலா குட்டியா...??? இல்ல ஓமன குட்டியா...?? சீக்கிரம் சொல்லி தொலைய்யா.....!!
ஷகிலா குட்டிய பத்தி மட்டும் ஏதாவது ஏடாகூடமா சொன்ன .... ங்கொய்யால அப்பறம் நீ 5 ரூவா பிரியாணிதான்....!!
// "அந்தப் பத்திரிகை போட்ட குட்டிகளில் மூத்த குட்டியின் முதன்மை ஆசிரியர் நேற்று அதிரடியாக வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிராராம்." //
ஏனுங்... கம்பனி பல கோடி லாஸ்ஸா......?
// அதிர்ச்சியாக இருக்கிறதே." //
எதுக்கு இந்த ஓவர் பில்டப்பு ......
" ஒன்னும் தெரியாத பாப்பா... போட்டாளாம் தாப்பா......"
// காரணம், முதன்மை ஆசிரியர், பலகோடி சொத்துகளுக்கு இப்போது அதிபதி என்பது தெரியவந்துள்ளதாம்" //
ஒருவேல முன்னாடி சத்யம் கம்பெனி ராமலிங்க ராஜுவோட ப்பெத்த டையப்பு வெச்சிருந்திருப்பாரோ .......?
// "அப்படியா? எப்படி? பத்திரிகை ஆபிசில் என்னத்தை சம்பாதித்துக் கிழித்துவிட முடியும்?" //
சம்பாரிக்க முடியுமான்னு தெரியல.... ஆனா நெறையா கிழிக்கலாம்....
// அதான் சீட்டைக் கிழித்துவிட்டார்கள்" //
பஞ்சு வெச்ச செட்டா....? னாருல தேச்ச சீட்டா...?
// "ஹா ஹா இதுக்கு அடுத்த வாரம் ஒரு திகில் இலவச இணைப்பு தரலாம் போல, பேஷ் பேஷ்" //
அடங்கொன்னியா....!! நம்ம ஆளுங்க .... ஓசியில பெனாயில் குடுத்தாகொட குடிப்பாங்களே.... !!
// "சுடப் போகிறது, பார்த்து..." //
மேட்டர் அபுடியோன்னும் பெரிய சூடு இல்ல....!! அதுனால ... காக்கா கத்துனாலும் .... இன்னொரு ஊசிப்போன வடைய வாயில துனுச்சுருலாம்...!!
//அடங்கொன்னியா....!! நம்ம ஆளுங்க .... ஓசியில பெனாயில் குடுத்தாகொட குடிப்பாங்களே.... !!
//
எனக்கு 5 பெனாயில் பாட்டில் தர முடியுமா
அன்புள்ள இட்லிவடை,
பார்க்க: வைரஸ் கழுகு உட்காரவும், ஆசிரியப் பழம் ஒன்று விழவும் ...!
http://losangelesram.blogspot.com
இட்லிவடை அவர்களே. என்னுடைய பதிவில் அனானி கமெண்டு போடவும், அதில் உள்ள கமெண்டுகளை இங்கே கொண்டுவந்து போஸ்ட் செய்யவும் யாரையோ ரெக்ரூட் செய்துள்ளீர் போலிருக்கிறதே கி கி கி...
//இட்லிவடை அவர்களே. என்னுடைய பதிவில் அனானி கமெண்டு போடவும், அதில் உள்ள கமெண்டுகளை இங்கே கொண்டுவந்து போஸ்ட் செய்யவும் யாரையோ ரெக்ரூட் செய்துள்ளீர் போலிருக்கிறதே கி கி கி...//
I have better things to do in life !
//அன்புள்ள இட்லிவடை,
பார்க்க: வைரஸ் கழுகு உட்காரவும், ஆசிரியப் பழம் ஒன்று விழவும் ...!
http://losangelesram.blogspot.com//
நகைச்சுவை அருமை. முன்பு மாதிரி ஃபார்முக்கு வந்துட்டீங்க போல!. ஜெயமோகனை பார்த்த effectக இருக்குமோ ?
ada ithu thana matteru ennda mootha kutti adikadi summa ora jung jung jalra adikkuthunu yosichutu irunthan. editer kasu vangitu thattiana ok ok kakkaiku thanks.
"http://imsai.blogspot.com/2009/08/blog-post_25.html
இட்லிவடை தளத்தின் மூலம் அன்னியலோகம் என்ற தளத்தின் குக்கி என்னுடைய கணினியில் இறங்குகிறது.
ஏன் இப்படி செய்கிறீர்கள் ?"
Ravi and others use firefox with extensions noscript and adblock. No more nasty cookies and you can choose to allow what scripts and what not to very easy and the best. Also secure in using internet can avoid phissing, hijakking through browser and all
ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லே!
ரூ.10,000 மொய்ப்பணம் வாங்கி தந்தாலும், globalphpjobs சொன்ன மாதிரி "ராஜா கைய வச்சா, அது ராங்கா போனதில்ல"
///மூன்றாம் முறை அனுப்பிய பரிசுக்கள் வந்து சேர்ந்தால் எனக்கு ஒரு மெயில் தட்டிவிடுங்கள்.
நன்றி
இவ////
அறிவிப்பு நன்றாக உள்ளது. மூன்றாம் பரிசு என்பது எது என்பததை புரியும் படி சொன்னால் நன்றாக இருக்கும்.
அப்படியே, அச்சமுண்டு அச்சமுண்டு போட்டிக்கு (ஜூலை 3, 10) பரிசு உண்டா??????
இல்லை எந்தக் கேள்வியும் பரிசு அளிக்கும் அளவிற்கு தகுதி பெறவில்லை என்று இட்லிவடையும் - அருண் வைத்யநாதனும் அறிவிப்பார்களா?
//..... தற்பொழுது வந்த தகவல் படி, அண்ணார் பலருக்கு வேலை உத்திரவாத வாக்குறுதி கொடுத்திருந்தாராம்!
அண்ணாருக்கே சீட்டு பணால் ஆனதால் பலர் கன்னத்தில் கையோடு!...//
We should appreciate அண்ணார், if his action is completely volunteer and is with serving the society.
If such an அண்ணார் do not have a job now, then the punya karmas that he did will certainly save him and grow him out of any bad situation.
It is also our dharmic duty to respect and help him in turn.
This is the understanding of hinduism.
Any update on this?
Post a Comment