மீண்டும் நேசமுடன் மடல் இதழ்.. விவரம் கீழே...
மேலை நாடுகளில், பல எழுத்தாளர்கள் தம் பெயரிலேயே தமக்கான சொந்த
அச்சிதழைத் தயாரித்து, வாசகர்களுக்கு அனுப்பும் வழக்கம் உண்டு. நேரடியாக
தம் வாசகர்களைச் சென்று சேருவது இதன் நோக்கம். இந்தக் கருத்தை மனத்தில்
வாங்கிக்கொண்டு, ஐந்தாண்டுகளுக்கு முன்பு நேசமுடன் என்ற மடல் இதழைத்
தொடர்ந்து எழுதி, நண்பர்களுக்கு மின்னஞ்சலில் ஒவ்வொரு புதன்கிழமை அன்றும்
அனுப்பிவந்தேன். 34 இதழ்கள் வரை நடத்தினேன். ஒவ்வொரு இதழிலும் 3, 4
இலக்கிய மற்றும் பல்துறைக் கட்டுரைகள் எழுதி, என் கருத்துகளை,
எதிர்பார்ப்புகளை, எண்ணங்களை நண்பர்களோடு பகிர்ந்துகொண்டேன். மூத்த
எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் அப்போது
மிகவும் அனுசரணையான மின்னஞ்சல் அனுப்பி என்னை ஊக்கப்படுத்தினர். அதில்
இருந்து தொகுத்த கட்டுரைகளையே பின்னர், ‘நேசமுடன்’ என்ற புத்தகமாக
கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டது.
இப்போது மீண்டும் நேசமுடன் மடல் இதழைத் தொடங்கியிருக்கிறேன். சென்ற
வெள்ளியன்று (14.08.09) முதல் இதழ் அனுப்பி வைக்கப்பட்டது. இனி ஒவ்வொரு
வாரமும் புதன் அன்று அடுத்து வரும் இதழ்களை அனுப்ப உத்தேசம். இந்த மடல்
இதழைப் பெற, எனக்கு உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க,
venkatesh.nesamudan@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு, ஒரு மெயில்
தட்டிவிடுங்கள் போதும். என் மெயிலிங் லிஸ்ட்டில் உங்களைச்
சேர்த்துக்கொள்வது சுலபமாக இருக்கும்.
இதனைத் தொடர்ந்து, என் எழுத்துகளைப் வலைத்தளத்திலும் மீண்டும் பிரசுரிக்க
ஆரம்பித்திருக்கிறேன். என் வலைத்தளம்: http://www.nesamudan.com. வந்து
பாருங்கள்.
நேசமுடன்
வெங்கடேஷ்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, August 16, 2009
மீண்டும் நேசமுடன் மடல் இதழ்
Posted by IdlyVadai at 8/16/2009 02:22:00 PM
Labels: அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










2 Comments:
வருக வருக வெங்கடேஷ். வாழ்த்துக்கள்....
இப்போதான் மெயில் அனுப்பினேன்...
//மீண்டும் நேசமுடன் மடல் இதழ்//
இது nesakumar(இஸ்லாமிய எதிரி ) பதிவு இல்லையே.
பதில் தாருங்கள்
Post a Comment