இட்லிவடை முனிக்கு எழுதும் கடிதம்...
ஹலோ முனி,
தமிழ் நாட்டில் மட்டும் தான் ஆடித் தள்ளுபடி என்று நினைத்திருந்தேன், ஆனால் பிரான்ஸ் நாட்டிலும் உண்டு போல. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு இதழுக்கு டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்து கலக்கியுள்ளார் ஷரோன் ஸ்டோன்!. ஆக அங்குதான் 80% வரை தள்ளுபடி. அந்தப் புத்தகத்தின் பேட்டியில் "I'm 50 years old, so what!" என்கிறார். அந்த அட்டைப் படத்தை இங்கே போட ஆசைதான்; என்ன செய்ய, இட்லிவடையை சில ஆண்களும் படிக்கிறார்களே. சில சமயம் இட்லிவடையால் கிழிச்ச கோட்டை தாண்ட முடியாமல் போய்விடுகிறது.
"The Other End of the Line" என்ற படத்தில் கடைசி காட்சியில் ஸ்ரேயா அதில் வரும் சாதாரண ஹீரோவுக்கு ஃபிரன்ச் கிஸ் தருகிறார். ஏன் சிவாஜியில் ரஜினிக்கு அது போலத் தரவில்லை என்று யாராவது கேட்பார்களா? இத்தனைக்கும் இந்த ஹீரோவை போல ரஜினியும் வெளிநாட்டிலிருந்து தான் வருவார். வெளிநாட்டு ஹீரோவுக்குத் தான் அந்தச் சலுகை எல்லாம் போல. நேற்று ரஜினி சொன்ன மெசேஜ் - மாடு மாதிரி உழைப்பதை விட அறிவைப் பயன்படுத்தி புத்திசாலித்தனமாக உழைத்தால் வெற்றிபெறலாம். அவர் சொல்லுவது எவ்வளவு நிஜம்!. நம்ம ஹீரோயின்களும் சும்மா இல்லை, படம் முடிந்தவுடன் ராக்கி கட்டி 'அண்ணா' என்று சொல்லிவிடுகிறார்களாம். அண்ணா 'நாமம்' வாழ்க!.
ரஜினி பற்றிய குறும்படத்தின் பெயர் 'தலைவர்'. இதை இயக்கியுள்ளவர் கவின் கார்த்திக். நம் ரஜினி ராம்கி மாதிரி ஒரு தீவிர ரஜினி ரசிகராம். தலைவர் டைட்டிலுக்குக் கீழே 'தலைமைப் பதவி வகிப்பவர்கள் எல்லாம் தலைவர்கள் அல்ல. தலைமைப் பண்புகள் கொண்டவர்களே தலைவர்கள்' என்று பஞ்ச் வைத்துள்ளார். பிழைக்கத் தெரிந்தவர்.
ரஜினியைச் சொல்லிவிட்டு கமலைச் சொல்லாவிட்டால் கமல் ரசிகர்கள் ரசிகைகள் கோபிப்பார்கள். கமல் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து(1959) ஐம்பதாவது ஆண்டையொட்டிய அவரது திரை வாழ்வைக் கொண்டாட விஜய் டிவி முடிவு செய்திருந்தது. பிரபலங்களின் பேட்டி, ஸ்பான்ஸர் எல்லாம் ரெடி. ஆனால் தீடீர் என்று இப்போது கலைஞர் டிவி அந்தப் பெருமையைச் செய்யப் போகிறதாம். இதைப் படித்துக்கொண்டிருக்கும்போதே சாட்டில் வந்த நண்பர் வீ.சேகரின் இயக்கத்தில் வந்த "பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்" படத்தின் ஒரு ஜோக்கை சொன்னார்.
"முனியம்மாவுக்கு சம்பளத்தை ஏத்திட்டயா, ஏன்?"
"என் கணவரோட கையில ஒரு ராக்கி கட்டினாளே, அதுக்குத்தான்."
இந்த ராக்கி ஜோக்கைவிட 'ராக்கி கா சுயம்வர்' என்று என்.டி.டி.வி. இமேஜின் சேனலில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பெரிய ஜோக். ரொம்ப காலத்துக்கு பிறகு டி.ஆர்.பி-யில் செம ஹிட்டாம்.. 'ரியாலிட்டி ஷோ மொத்தமும் போங்கு என்றும் சொல்லுகிறார்கள், அதில் தோற்றவர்கள். மக்களும் டிவியின் ரிமோட்டை வைத்துக்கொண்டு சேனல் மாற்றாமல் பார்த்துவிட்டு, 'என்ன எழவு கலாசாரம்' என்று பொங்கி எழுகிறார்கள். எவ்வளவு சம்பாதித்த பிறகும் ஸ்டார் ஓட்டலுக்குப் போனாலும் தயிர்சாதம் சாப்பிடுகிற நம்ப மக்கள் வேறு என்னதான் செய்வார்கள்.
ஆனால் தயிர் சாதம் சாப்பிடும் ஒரு சாமியார் செய்த கூத்தைக் கேளு. சஹி கோபால் ஆலயத்துக்கு ஷில்பா சாமி கும்பிட சென்றார். சிறப்பு பூஜைகள் செய்து பயபக்தியோடு கடவுளை வழிபட்டுக் கொண்டு நின்றார். அப்போதுதான் இந்தச் சம்பவம் நடந்தது. கோவிலில் பூஜைகள் செய்து வரும் சாமியார் அங்கு வந்த ஷில்பா ஷெட்டியின் முகத்தைப் பிடித்து இழுத்தார். நெற்றியில் விபூதி குங்குமம் பிரசாதம் வைத்திருப்பர் என்றுதானே நினனக்கிறாய், அதுதான் இல்லை. யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று அவர் கன்னத்தில் முத்தமிட்டார். கோவிலுக்குள் நடந்த இந்த முத்தக்காட்சி பக்தர்களைப் பரவசப்படுத்தியது. பரவசத்துடன் பார்த்துவிட்டு சாமிக்கு நன்றியும், சாமியாரை திட்டிவிட்டும் சென்றார்கள். பொறாமை தான் வேறு என்ன? நம்மூரில் சாமியார்களுக்கு எல்லா நாளும் ஆகஸ்டு பதினைந்துதான்; சுதந்திர தினம்தான்.
இங்கே இப்படி என்றால் ஆனந்த விகடனில் பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற பெயரில் "பிகினி போட்டு நடிக்க முடியுமா?' என்ற தலைப்பில் சினேகாவின் படத்தை கிராஃபிக்ஸ் மூலம் மாற்றி சும்மா உல்லுல்லாயி என்று அசிங்கப்படுத்தியிருக்கார்கள். ரீசண்ட்டா குமுதத்திலிருந்து யாரோ விகடனுக்கு புதிதாகச் சேர்ந்திருக்கிறார்கள். யார் அந்தப் புண்ணியவான் என்றுதான் தெரியவில்லை.
கும்பகோணம் குழந்தைகள் தீ விபத்தில் 94 குடும்பங்களுக்கும் நிதி அளிப்பதாக தமிழ்த் திரையுலகம் விளம்பரம் செய்துகொண்டதைத் தவிர வேறு என்ன செய்தார்கள் ? யாரும் இதுவரை ஒருபைசா தரவில்லை. நடிகர் சங்க முன்னாள் செயலாளர் சரத்குமார் மொத்தமாக 86 லட்ச ரூபாய் வசூலாகி இருப்பதாகவும், ஒரு கோடி வசூலானதும் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு ஓரொரு லட்சம் தருவோம் என்றும் சொன்னார். அதற்குப் பிறகு இன்றுவரை ஒன்றும் நடக்கவில்லை. சென்னைக்குச் சென்றாலும் அவரைப் பார்க்கவும் முடியவில்லை என்று சொல்லியுள்ளார்கள். சரத்குமாரிடமிருந்து பணமோ, மறுப்போ இன்னும் வரவில்லை. பி.ஜே.பியுடன் அவர் ரொம்ப பிஸி. ஆனால் நம்ப கேப்டன் மட்டுமே ஒவ்வொரு குடும்பத்துக்கும் 9 ஆயிரத்து சொச்சம் தந்திருக்கிறார்.
1960களில் ஒரு குடும்பத்தின் பருப்பு நுகர்வு ஓராண்டில் சராசரியாக 27 கிலோவாக இருந்தது. 2009 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் ஆய்வு செய்தபோது இதே அளவு 11 கிலோவுக்கும் கீழே போய்விட்டது. இது கேப்டனின் பட வசனமில்லை. நிஜம். பருப்பு விலை தான் அதற்குக் காரணம் என்கிறார்கள்.
புள்ளிவிபரத்தோடு புள்ளி(ராஜா) விவகாரம் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள். எய்ட்ஸ் கட்டுப்பாடு பிரசார பேனர்களில் எனது படத்தையும், எனது மகள் படத்தையும் வெளியிட்டுள்ளதற்கு என்னிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்று ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு ஒரு பெண் கோர்ட்டுக்குப் போய் உள்ளார். அரசு வக்கீல், "இணையதளத்தில் புகைப்படம் வெளியிடப்பட்டால் அதை யார் வேண்டுமானாலும் `டவுன்லோடு' செய்யலாம். அப்படி செய்து நாங்கள் உபயோகித்தோம் என்று வாதிட்டுள்ளார்கள். என்ன அறிவு!. இவர் குடும்பப் பெண்களின் அல்லது மந்திரிவீட்டு படங்களும் தான் இணையத்தில் இருக்கிறது. அதைப் போட்டால் சும்மா இருப்பார்களா ? அதற்கும் இதே போல் வாதம் செய்வார்களா?
இந்தியாவில் விரைவில் 33 சதவிகிதம் பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிப்படைவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. 33% பெண்கள் மசோதா கிடைக்கிறதோ இல்லையோ இது நிச்சயம் போல. பன்றிக் காய்ச்சலுக்கும் பன்றிக்கும் உள்ள சம்பந்தம் பசுக்களுக்கும் இணையப் புனிதப்பசுக்களுக்கும் உள்ள சம்பந்தம் போன்றதுதான் என்று இங்கே எத்தனை பேருக்குத் தெரியும்?
பசுவின் கழிவிலிருந்து உரம், கொசுவத்தி போன்றவை தயாரிக்கிறார்கள் என்று தெரியும், ஆனால் தற்போது 'aftershave lotion, முக கிரீம், பினாயில் என்று பலவற்றைத் தயாரித்துள்ளார்கள். கடைசி தயாரிப்பு கோலா பானம். ஒரு பாட்டிலில் 5% மேல் இருக்காது! கவலைப்படாதீர்கள். Coca Cola கேள்விப்பட்டிருக்கிறோம், இது Cow Cola!. ஆரஞ்சு, லெமன் சுவைகளில் கிடைக்கிறதாம். எப்படி இருக்கிறது என்று சாப்பிட்டுப் பார்த்துவிட்டு சொல்லு. அடுத்த தயாரிப்பு சாணத்தில் பிஸ்கெட் செய்வார்கள் போல. அதற்கு யாராவது சமையல் குறிப்பு போடுவார்கள். எல்லாம் அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்.
தினமலரில் உள்ள செய்தியை படித்தால் யார் முட்டாள், யார் புத்திசாலி என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். கூட்டுறவு வங்கியை நம்பி முதலீடு செய்தவர்களின் நிலைமையைப் பாருங்கள். கோர்ட்டுதான் ஜப்தி செய்ய அனுமதி அளிக்கிறது. அதே கோர்ட் ஜப்தி செய்யச் சென்ற நான்கு மணி நேரத்தில் ஜப்திக்கு தடையும் விதிக்கிறது. அரசியல் செல்வாக்கு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பது தெளிவாக தெரிகிறது. இதிலிருந்து பார்த்தால் கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்தவர்களும் முட்டாள்கள். கோர்ட் ஆணையை ஏற்று ஜப்தி செய்யச் சென்றவர்களும் முட்டாள்கள். ஏமாற்றியவன் புத்திசாலி. இனிமேல் ஓட்டுப் போட்டதும் கையில் மை வைப்பதற்கு பதில் காதில் பூ சுற்றி அனுப்பலாம்.
தற்போது மல்லிகை பூவின் வியாபாரம் சென்னையில் சரிந்துவிட்டதாம். . எல்லா பெண்களும் தங்கள் நீள முடியை 'பாய் கட்' செய்துவிடுவடுவதால் மல்லிகை பூ வியாபாரம் சரிந்துவிட்டது என்று செய்தி. இந்த மல்லிகைப் பூவும் பங்கு சந்தை மாதிரி விடியற்காலை மொட்டாக இருக்கும் போது 50ரூபாய், பிறகு ஒன்பது மணிக்கு பூத்தவுடன் 40 ரூபாய், மத்தியானம் கொஞ்சம் வாடியவுடன் 30 ரூபாய் சாயந்திரம் 10 ரூபாயாம். அதனால் ஆண்கள் எல்லோரும் தங்கள் மனைவிக்கு காலையிலேயே பூ வாங்கி கொடுத்தால் (வியாபாரிகளுக்கு) நல்லது.
நம்ம நாட்டில்தான் மல்லிகைப் பூவை சாமி படம், லாரி, பைக், மனைவி என்று எல்லாவற்றிருக்கும் மாட்டுவார்கள். நான் போன முறை ஓட்டு போட சென்ற போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீதும் வைத்திருந்தார்கள். ஆக மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் கூட பெண் போல.
ராமதாஸும், அம்மாவும் வாக்கு பதிவு இயந்திரம் பற்றி அறிக்கைவிடும் இந்தக் காலத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் தனக்கு ஐஸ்வரியா ராய் சின்னம் வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார். ஜெயித்தால் ஐஸ்வர்யா ராயையே ஜெயித்துவிட்டதாக நம்பிக்கையா?
நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன். ஜோதிடம், ஆன்மிகத்தை நம்புகிறவன். எனது ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர்கள், இந்த வாரம் முதல், நல்ல காலக்கட்டம் தொடங்குகிறது என்று தெரிவித்து உள்ளனர். அந்த வார்த்தைகள் பலித்துவிட்டன-- எஸ்.வி.சேகர் அதிமுகவிலிருந்து வெளியே வந்தவுடன் சொன்னது. இவர் வெளியே வந்த அதே நேரத்தில் அனிதா ராதாகிருஷ்ணனும் வந்துள்ளார். ஆடித் தள்ளுபடியில் ஒன்று எடுத்தால் ஒன்று இலவசம்.
குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சிக்கு கோயிலுக்கு போவார்கள். லேடஸ்ட் நியூஸ் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் குடும்பத்தினருடன் நேற்று காலை திருவண்ணாமலை கோயிலுக்கு வந்தார். அங்கு பகல் 12 மணியளவில் நடைபெற்ற விசேஷ நண்பகல் பூஜையில் அவரும், குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஆலயத்தின் மற்ற சன்னதிகளுக்கும் சென்று அவர்கள் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். திருவள்ளுவர் சிலை பெங்களூரில் திறந்ததற்கு நேர்த்தி கடனாக இருக்குமோ?
கனிமொழி ரீசண்டா 'பகுத்தறிவாக இருப்பதற்கு நிறைய மன உறுதி வேண்டும்' என்று சொல்லியுள்ளார். இலக்கியவாதிகள் அரசியல்வாதி ஆன இப்படி தான் ஏதாவது சொல்லுவார்கள்.
சொல்வனத்தில் இலக்கிய அரசியல் கட்டுரை ஒன்று வந்திருக்கிறது. டைம் கிடைத்தால் படித்து பாரு மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி
சனிபெயர்ச்சி, குருபெயர்ச்சி என்ன வித்தியாசம் ?
மனைவி அம்மா வீட்டுக்குப் போனால் - சனிபெயர்ச்சி.
தன் தங்கையுடன் திரும்பி வந்தால் - குருபெயர்ச்சி!
இப்படிக்கு,
இவ
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, August 11, 2009
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 11-8-2009
Posted by IdlyVadai at 8/11/2009 04:00:00 PM
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










56 Comments:
ponathu thunai muthalvar illai. thunai muthalvar ponnu, avara kanavar etc...
ஏன் இந்த முரை மஞ்சள் கமெண்ட் மிஸ்ஸிங் :((((((
/****அந்த அட்டைப் படத்தை இங்கே போட ஆசைதான்; என்ன செய்ய, இட்லிவடையை சில ஆண்களும் படிக்கிறார்களே***/
I dont understand what you are trying to convey!
சந்தடி சாக்குல கனிமொழிய இலக்கியவாதின்னு சொல்றீங்க?
/***இங்கே இப்படி என்றால் ஆனந்த விகடனில் பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற பெயரில் "பிகினி போட்டு நடிக்க முடியுமா?' என்ற தலைப்பில் சினேகாவின் படத்தை கிராஃபிக்ஸ் மூலம் மாற்றி சும்மா உல்லுல்லாயி என்று அசிங்கப்படுத்தியிருக்கார்கள்.**/
யோவ் இட்லிவடை லிங்கை கொடுத்து விட்டு பிறகு மேட்டரை சொல்லுங்கள்!!!!!
என் மனைவிக்கு தங்கை இல்லை. அப்படியானால் எனக்கு குரு பெயர்ச்சி கிடையாதா?
/***சார்லி குளித்துக்கொண்டிருக்கும்போது வீட்டு வேலைக்காரி முதுகு தேய்த்துவிடுவாள். அதைப் பார்க்கும் ஒரு பெண், சார்லியின் மனைவி கோவை சரளாவிடம், "உன் புருஷனுக்கு அவ முதுகு தேச்சு விடுறாடீ" என்று சொல்வாள். அதற்கு கோவை சரளா, "எருமைக்கு எவ முதுகு தேச்சா என்ன?" என்பார்.
***/
கமல் மேல் எதற்கு இந்த கொலை வெறி?????
/**நெற்றியில் விபூதி குங்குமம் பிரசாதம் வைத்திருப்பர் என்றுதானே நினனக்கிறாய், அதுதான் இல்லை. யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று அவர் கன்னத்தில் முத்தமிட்டார். கோவிலுக்குள் நடந்த இந்த முத்தக்காட்சி பக்தர்களைப் பரவசப்படுத்தியது. ***/
இவ்வளவு நாள் நான்கு சுவருக்குள் நடந்தது இப்போது அப்படி இல்லை, அவ்வளவு தான் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை....
/***பன்றிக் காய்ச்சலுக்கும் பன்றிக்கும் உள்ள சம்பந்தம் பசுக்களுக்கும் இணையப் புனிதப்பசுக்களுக்கும் உள்ள சம்பந்தம் போன்றதுதான் என்று இங்கே எத்தனை பேருக்குத் தெரியும்?
***/
புரியவில்லை!!!!!
/***கனிமொழி ரீசண்டா 'பகுத்தறிவாக இருப்பதற்கு நிறைய மன உறுதி வேண்டும்' என்று சொல்லியுள்ளார். இலக்கியவாதிகள் அரசியல்வாதி ஆன இப்படி தான் ஏதாவது சொல்லுவார்கள்***/
காலக் கொடுமை, இவங்க சொன்னதெல்லாம் இட்லிவடையில் வருகிறது!!!!
/***Vedantha Desika Dasan said...
என் மனைவிக்கு தங்கை இல்லை. அப்படியானால் எனக்கு குரு பெயர்ச்சி கிடையாதா?***/
ஒண்ணு விட்ட குரு பெயர்ச்சி அமைய வாய்ப்பு உண்டு....
/***Anonymous said...
சந்தடி சாக்குல கனிமொழிய இலக்கியவாதின்னு சொல்றீங்க?***/
Neenga enga irunthalum vaazhka!!!!
//கமல் மேல் எதற்கு இந்த கொலை வெறி?????//
நிஜமாகவே ஒருவர் சாட்'ல் வந்து இந்த ஜோக் சொன்னார். அவர் பெயர் வேண்டாம்.
//புரியவில்லை!!!!!//
நல்லவேளை :-)
//நம்ம ஹீரோயின்களும் சும்மா இல்லை, படம் முடிந்தவுடன் ராக்கி கட்டி 'அண்ணா' என்று சொல்லிவிடுகிறார்களாம். அண்ணா 'நாமம்' வாழ்க!.//
அண்ணா நாமம் வாழ்க... மஞ்சள் துண்டு வாழ்க.... பகுத்தறிவு வாழ்க... அறிவாலயம் வாழ்க... கோபாலபுரத்தில் நான் மட்டும் வாழ்க..... இட்லிவடை.... யப்பா..... இந்த லிஸ்ட் ரொம்ப பெருசு.... தாத்தா வயசைவிட....முடியல...
//"எருமைக்கு எவ முதுகு தேச்சா என்ன?" என்பார்.//
நன்னா போயிண்டு இருந்த வண்டிய இப்படி கொடசாய வச்சுட்டியேடா... அபிஷ்டு... மாமீஸ் எல்லாரும் ஒன்ன பாக்கறதுக்கு கியூல நிக்கறா!! எதுக்கா... போய் பாரு... அவா கையில என்னென்ன இருக்குன்னு....
//நம்மூரில் சாமியார்களுக்கு எல்லா நாளும் ஆகஸ்டு பதினைந்துதான்; சுதந்திர தினம்தான்.//
ம்ம்ம்.... கருப்பு சட்டை போட்டுண்டு ஒரு பெரிய க்ரூப் வந்துண்டு இருக்குன்னு அவர்கிட்ட சொல்லுங்கோ...
//மந்திரிவீட்டு படங்களும் தான் இணையத்தில் இருக்கிறது. அதைப் போட்டால் சும்மா இருப்பார்களா.//
உலகத்தில் உள்ள அனைத்து வண்டிகளும் வரும்.... அவர் வீட்டு வாண்டூஸ் கூட தன்னோட நடைவண்டியோட.......
//கனிமொழி ரீசண்டா 'பகுத்தறிவாக இருப்பதற்கு நிறைய மன உறுதி வேண்டும்' என்று சொல்லியுள்ளார். இலக்கியவாதிகள் அரசியல்வாதி ஆன இப்படி தான் ஏதாவது சொல்லுவார்கள்.//
ஏன்....இதை எல்லாம் படித்து எனக்கு ஒன்றும் ஆகாமல் இருக்க வேண்டும் என்ற "மன உறுதி"யையும்,"ஸ்டீல் பாடி"யையும் தருமாறு எப்போதும் பாடிகாட் முனியையும், அய்யனாரையும் வேண்டுகிறேனே??!!!
/*** IdlyVadai said...
//கமல் மேல் எதற்கு இந்த கொலை வெறி?????//
நிஜமாகவே ஒருவர் சாட்'ல் வந்து இந்த ஜோக் சொன்னார். அவர் பெயர் வேண்டாம். ****/
என்னமோ போங்க!! அவரை பிடிக்குதோ இல்லையோ அவரது கலை பயணத்தை இப்படி ரொம்ப கேவலாமா விமர்சனம் செய்ய கூடாது, உண்மையில் அவர் ரொம்ப துரதிஸ்டஷாலி பாவம்...உண்மையில் எப்படி நடித்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்ள ஒரு யோகம் (நடிப்பவருக்கு!!) வேண்டும், கமலுக்கு அது இல்லை என நினைக்கிறேன் ஏனெனில் எவ்வளவோ முயற்சி செய்கிறார், ஆனால் மக்கள் இது போல ஒரு வரியில் இது போல சொல்லி விடுகிறார்கள்!!! கமலுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.... எனக்கு இந்த பத்திவை படித்தவுடன் இது தான் ஞாபகம் வருகிறது "For every action, there is an equal and opposite criticism. "
/**//புரியவில்லை!!!!!//
நல்லவேளை :-)
***/
இப்போது புரிந்து விட்டது (நண்பணிடம் கேட்ட பிறகு...)
இங்கு பயின்றுள்ள அணி வஞ்சப் புகழ்ச்சி அணி, ஆம் என்றால் நான் புரிந்து கொண்டது சரி..
//கோவிலுக்குள் நடந்த இந்த முத்தக்காட்சி பக்தர்களைப் பரவசப்படுத்தியது//
என்ன கொடுமை இது ?
// நம்ப கேப்டன் மட்டுமே ஒவ்வொரு குடும்பத்துக்கும் 9 ஆயிரத்து சொச்சம் தந்திருக்கிறார்.//
சரத் குமாரிடம் கொடுக்கலியோ??
நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கழித்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்!
இ வ : தூங்காதே - இடது பக்கம் முனி கடிதம் 11-08-2009 !
வலது புறம் - நடுவே முனி கடிதம் 14-July-2009! update !!!
விழித்துக் கொள்ளும் ஐயா ! விழித்துக் கொள்ளும்!
தினமலரில் கூட்டுறவு வங்கி மோசடி பற்றி வந்த செய்தியை பதிவிட்டதிற்கு நன்றி.
52 கோடியை ஏமாற்றியவர்கள் நன்றாக இருக்கிறார்கள்.எளிதில் தப்பித்து விடுகிறாற்கள்.
பத்தாயிரம் இருபதாயிரம் என்று முதலீடு செய்தவர்கள் கோர்ட்டுக்கு அலைந்து அதையும் இழந்து விடுகிறார்கள்.
ஜப்தி செய்ய சென்ற அருள் அரசன், ஜெயபிரகாஷ் நாராயணன்,முருகன்,ராஜாராம் மற்றும் தயாளன் போன்றவர்கள் நிலமை மத்தளம் போல் ஜப்தி செய்ய சென்றால் அரசியல் வாதியிடம் அடி இல்லை என்றால் .........அடி என்று ஆகிவிட்டது.
ரஜினியின் போட்டோவை ஏன் கமல் போட்டோ பக்கத்தில் போட்டிருக்கிறீர்?? ரஜினியை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள்??
//Coca Cola கேள்விப்பட்டிருக்கிறோம், இது Cow Cola!. ஆரஞ்சு, லெமன் சுவைகளில் கிடைக்கிறதாம். //
இதையே கோமியம் என்கிற பெயரில் கொடுத்தால் கலைஞர் Cow Cola-kum பூணுல் போட்டு விடுவார்
Good one.
பன்றி காய்ச்சல் பற்றி கொஞ்சம் உருப்படியான விஷயம் தினமலரில் வந்துள்ளது.
பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?தீவிரமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலிருந்து நம்மை பாதுகாப்பது மற்றும் நோய் வந்துவிட்டால் அடுத்து நாம் செய்ய வேண்டியது இங்கே:
அறிகுறிகள்
கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால், உடனடியாக டாக்டரிடம் செல்ல வேண்டும். அரசு மருத்துவமனையில் உள்ள பன்றிக்காய்ச்சல் மையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
*பன்றிக்காய்ச்சலுக்கு காய்ச்சல் தான் முதல் அறிகுறி. அத்துடன் மூக்கிலிருந்து நீர் வடியும்.
*இருமல்தொடரும். தொண்டை வலிக்கும். மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கலாம்
* பசி எடுக்காது. சாப்பிட்டாலும் வாந்தி வரும்.
* வயிற்றுப் போக்கு இருக்கும். களைப்பு ஏற்படும்.
* அதிக உடல் வெப்பம், தசை வலி,வேலை செய்ய முடியாத நிலை.
* அடிக்கடி கோபம், எரிச்சல், உளைச்சல் ஆகியன ஏற்படும்.
* நீலம் மற்றும் சாம்பல் நிறமாக தோல் காட்சியளிக்கலாம். தோல் எரிச்சல் ஏற்படும்.
*தண்ணீர் குடிக்க முடியாத நிலை.
எப்படிப் பரவும்
*இருமல் மூலம் வைரஸ்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு காற்று வழியாக பரவும்.
* வைரஸ் உள்ள இடங்களை தொட்டால், பின்னர் வாய் மற்றும் மூக்குப் பகுதியை தொடும் போது நமக்கு வைரஸ் பரவிவிடும்.
*நோயாளிகளிடமிருந்து மருத்துவ ஊழியர்களுக்கு. தடுப்பு முறைகள்
* உங்களுடைய கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங் கள். அடிக்கடி கைகழுவிக் கொள்ளுங்கள்.
* ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், விழாக்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களுக்கு "சர்ஜிகல் மாஸ்க்' இல்லாமல் போக வேண்டாம்.
* பன்றிக்காய்ச்சல் இருக்குமோ என்று யாரையாவது சந்தேகப்பட்டீர்களேயானால் சற்று தள்ளி இருங்கள்.
* நன்றாக தூங்க வேண்டும். காற்று வரும் இடத்தில் இருக்க வேண்டும்.
*நிறைய தண்ணீர்குடிக்க வேண்டும். செய்யக் கூடாதவை
*கைகுலுக்குதல், தொட்டுப் பேசுதல்.
*பொது இடங்களில் துப்புதல்.
* மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து எடுத்தல்.
* சுயமாக வேறுமாத்திரைகளை எடுத்தல்.
* பன்றிக்காய்ச்சல் மருந்தான, டாமிப்ளூ மருந்தை நாமாக எடுக்கக்கூடாது. இது அறிகுறியை மறைத்து, பின்னர் விபரீத விளைவுகளை ஏற் படுத்திவிடும். நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்துவிடும்.
உங்களுக்கு உடல் நலக் குறைவா
* உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
* பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்துவிடுங்கள்.
* நிறைய தண்ணீர்குடியுங்கள்.
* தும்மல், இருமல் ஏற்படும் போது, முகத்தை துணியால் மூடிக்கொள்ளுங்கள்
* அடிக்கடி புதிய முகக்கவசம் போட்டுக் கொள்ளுங்கள். பழைய கவசத்தை பாலிதீன் கவரில் இட்டு குப்பைத் தொட்டியில் போடுங்கள்.
பன்றிக்காய்ச்சல் இருந்தால்
* பயணத்தை தவிர்க்கவும்.
* பணிபுரியும் இடம் அல்லது கல்வி நிறுவனங்களுக்கு செல்ல வேண்டாம்.
குழந்தைகள் கவனம்
*குழந்தைகளின் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
* முகம் மற்றும் வாய்ப் பகுதியை தொடக்கூடாது.
*மக்கள் கூடும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம்.
* சுடுநீர் குடிக்கவும்.
*குழந்தைக்கு காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள்
* காய்ச்சல் மாணவர்களை அடையாளம் கண்டு, பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
//யோவ் இட்லிவடை லிங்கை கொடுத்து விட்டு பிறகு மேட்டரை சொல்லுங்கள்!!!!!//
அட அற்ப அனானி! அதான் ஆனந்த விகடன் என சொல்லிட்டாரே.
நம்ம இட்லி அந்த லிங்க் கொடுத்தால் நம்ம கலாசார சிகாமணிகள் (கண்டிப்பா பெண் வாசகர்கள்) 'சீ' (or) 'ஐயைய' அவரை வாய்க்கு வந்த மாறி திட்டுவார்கள்.
அதான் அவர் கொடுக்கவில்லை.
ஒன்னும் அவ்வளவு விசேசமா இல்லை. ;-)
I did not see, my friend told this in a chat. Believe me. ;-)
வாஷிங்டன்: மின்னணு எந்திர வாக்குப்பதிவை மென்பொருள் புரோகிராம்கள் மூலம் எளிதாக மாற்ற முடியும். அதில் பதிவான ஓட்டுக்களையும் நமக்கு சாதகமாக மாற்ற முடியும் என அமெரிக்க கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்ட நாடு முழுவதும் இருந்து பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டின. தமிழகத்தில் அதிமுக, மதிமுக, பாமக இந்த கருத்தை வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் இவர்களின் கருத்துக்கு ஆதரவு சேர்ப்பது போல அமெரிக்க கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கலிபோர்னியா, சான் டீயாகோ, மெக்சிகன் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று மின்னணு எந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்த முடியுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டது.
தற்போது அவர்கள் தங்களது முயற்சியில் வெற்றி பெற்றிருப்பதாகவும், ஒரு மென்பொருள் புரோகிராம் மூலம் ஒருவருக்கு விழுந்த ஓட்டுக்களை வேறு ஒருவருக்கு மாற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்த குழுவில் இடம்பெற்ற சான் டீயாகோ பல்கலைக்கழக பேராசிரியர் ஹோவவ் சாஜெம் கூறுகையில்,
வாக்குப்பதிவு எந்திரம் என்பது தன் வாழ்நாள் முழுவதும் நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால், தற்போது உள்ள எந்திரங்கள் நாங்கள் எழுதிய மென்பொருள் புரோகிராமுக்கு அடிபணிந்துவி்ட்டது.
இந்த ரிடர்ன் ஓரியன்டட் புரோகிராம் மூலம் ஒருவர் மின்னணு எந்திரத்தை தன்வசப்படுத்தி ஓட்டுக்களை மாற்றிவிடலாம். இந்த ஆராய்ச்சியை நாங்கள் மின்னணு எந்திரத்தின் புரோகிராம் மூலத்தை பெறாமல் அதை தகர்த்துள்ளோம்.
இந்த ஆராய்ச்சியின் மூலம் நாங்கள் காகிதத்தை பயன்படுத்தும் பழைய வாக்குச் சீட்டு முறை தான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். ஆப்டிக்கல் ஸ்கேனர்களை கொண்ட வாக்கு சீட்டு முறை மிக சிறந்ததாக இருக்கும் என கருதுகிறோம்.
ஆனால், வாக்குச்சீட்டு முறையின் மூலம் தேர்தல் நடத்துவது செயல்முறைக்கு சற்று கடினமானது தான் என்றார்.
இனி இதைக் காரணம் காட்டி பாமக, அதிமுக அன்ட் கோ தேர்தல் ஆணையத்தை இறுக்கலாம்.
Source: Thats tamil
// தமிழ் நாட்டில் மட்டும் தான் ஆடித் தள்ளுபடி என்று நினைத்திருந்தேன், ஆனால் பிரான்ஸ் நாட்டிலும் உண்டு போல. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு இதழுக்கு ///
அடங்கொன்னியா.....!! அட நீங்க வேற ...... நம்ப ஷகிலா மேடமும் ... ஆ(டை)டி தள்ளுபடியில ஒரு படம் ரிலீஸ் பண்ண போறாங்களாம்....!!!
// ரஜினி பற்றிய குறும்படத்தின் பெயர் 'தலைவர்' //
செண்டிமெண்டா இந்த குறும் படத்துல தலைவி கெட்டப்புல " நயன்தாரா " வா....?? அப்போ நம்ம தலைவருதான் அடுத்த பிரபுதேவா 'வா....???
// சஹி கோபால் ஆலயத்துக்கு ஷில்பா சாமி கும்பிட சென்றார். சிறப்பு பூஜைகள் செய்து வரும் சாமியார் அங்கு வந்த ஷில்பா ஷெட்டியின் முகத்தைப் பிடித்து இழுத்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று அவர் கன்னத்தில் முத்தமிட்டார். //
மேக்...மேக்..மேக்.... மேக்கோரீன.........
உவ்வோ.. உவ்வோவ்......உவ்வோவ்......உவ்வோவ்......
// ஆனால் நம்ப கேப்டன் மட்டுமே ஒவ்வொரு குடும்பத்துக்கும் 9 ஆயிரத்து சொச்சம் தந்திருக்கிறார். //
வாழ்க வளமுடன்....!!
// 1960களில் ஒரு குடும்பத்தின் பருப்பு நுகர்வு ஓராண்டில் சராசரியாக 27 கிலோவாக இருந்தது. 2009 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் ஆய்வு செய்தபோது இதே அளவு 11 கிலோவுக்கும் கீழே போய்விட்டது. ///
பருப்பு வேகுலையோ.... ......???
// இந்தியாவில் விரைவில் 33 சதவிகிதம் பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிப்படைவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. //
இதுலயாவது 33 % கெடச்சுதே......
// Coca Cola கேள்விப்பட்டிருக்கிறோம், இது Cow Cola!. //
இதுக்கும் நம்ம கம்பவுண்டர்.குஜய் தான் விளம்பர மாடலா......?
// தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் தனக்கு ஐஸ்வரியா ராய் சின்னம் வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார். //
பயபுள்ள.... நமிதாவா மறந்துட்டானே.....!!!
// எஸ்.வி.சேகர் அதிமுகவிலிருந்து வெளியே வந்தவுடன் சொன்னது. இவர் வெளியே வந்த அதே நேரத்தில் அனிதா ராதாகிருஷ்ணனும் வந்துள்ளார். ஆடித் தள்ளுபடியில் ஒன்று எடுத்தால் ஒன்று இலவசம். //
ஆனா... ரெண்டுமே காமிடி பீசு......!!!
// லேடஸ்ட் நியூஸ் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் குடும்பத்தினருடன் நேற்று காலை திருவண்ணாமலை கோயிலுக்கு வந்தார். அங்கு பகல் 12 மணியளவில் நடைபெற்ற விசேஷ நண்பகல் பூஜையில் அவரும், குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். திருவள்ளுவர் சிலை பெங்களூரில் திறந்ததற்கு நேர்த்தி கடனாக இருக்குமோ? //
நைனாவுக்கு.... கம்பவுண்டருக்கும் மேல டாக்டர் பட்டம் கெடச்சிருக்குள்ள.....!!
// கனிமொழி ரீசண்டா 'பகுத்தறிவாக இருப்பதற்கு நிறைய மன உறுதி வேண்டும்' என்று சொல்லியுள்ளார். இலக்கியவாதிகள் அரசியல்வாதி ஆன இப்படி தான் ஏதாவது சொல்லுவார்கள். //
அம்முனி ... எப்பவுமே இப்புடித்தான்.... நல்ல டைமிங் ஜோக் சொல்லுவாங்க.....!!!
// மனைவி அம்மா வீட்டுக்குப் போனால் - சனிபெயர்ச்சி.
தன் தங்கையுடன் திரும்பி வந்தால் - குருபெயர்ச்சி! //
ரெண்டையும் கட்டிகிட்ட - ஜென்ம சனி......!!
//அந்த அட்டைப் படத்தை இங்கே போட ஆசைதான்;//
நாங்கெல்லாம் மெயில் ஐடி எதுக்கு வச்சிருக்கோம்!
அனுப்புங்க தல!
//ஏன் இந்த முரை மஞ்சள் கமெண்ட் மிஸ்ஸிங்//
முரைப்பிங்களோன்னு விட்டுருக்கலாம்!
//படம் முடிந்தவுடன் ராக்கி கட்டி //
தமிழ்நாட்டு நடிகைகள் தான் அப்படி!
நம்ம ராக்கி சவந்த் பாருங்க நிகழ்ச்சி முடிஞ்சது கட்டிகுவாராம்!
///அங்கு பகல் 12 மணியளவில் நடைபெற்ற விசேஷ நண்பகல் பூஜையில் அவரும், குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஆலயத்தின் மற்ற சன்னதிகளுக்கும் சென்று அவர்கள் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர் ///
முன்பு ஒருமுறை கட்சிக்காரர் நெற்றியில் குங்குமம் வைத்தார் என்று கிண்டல் செய்த முதல்வர்... தன் குடும்பத்தாரை என்னத்த சொல்லுவார்???
சொல்வனம் கட்டுரை உரலுக்கு நன்றி. சொல்வனம் தளத்தையும் இப்போதுதான் பார்த்தேன். நல்ல கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறர்கள. மைசூர் மல்லர்கள் குறித்த கட்டுரை நன்றாக இருக்கிறது
நன்கு படித்தவர்கள் என்று தானே இவர்களை தேர்ந்தெடுக்கிறோம். இவர்களே இப்பிடி செயல்பட்டால் இந்த நாடை யாரால் காப்பாற்றமுடியும்?
பின்னூட்டம் போட வேண்டாம் என்று நினைத்தேன், இந்த சுமாரான லெட்டருக்கு. இருந்தாலும், போட்டு வெக்கலாமே என்று.
//அந்த அட்டைப் படத்தை இங்கே போட ஆசைதான்; என்ன செய்ய, இட்லிவடையை சில ஆண்களும் படிக்கிறார்களே//.
ஏற்கனவே ஒருத்தர் கேட்டுட்டார்! இதுல என்ன உள்குத்து?
//"எருமைக்கு எவ முதுகு தேச்சா என்ன?" என்பார்//.
ரொம்ப மட்டமான கமெண்ட். எனக்கு குழப்பம் அதிகம் ஆயிடுத்து. "உன்னைப் போல் ஒருவன்" உண்டா ? இல்லையா? என்று!!! தல வெடிக்கறதுக்கு முன்னாடி எனக்கு மெயில் அனுப்புங்க, இட்லி.
//எவ்வளவு சம்பாதித்த பிறகும் ஸ்டார் ஓட்டலுக்குப் போனாலும் தயிர்சாதம் சாப்பிடுகிற நம்ப மக்கள் வேறு என்னதான் செய்வார்கள்.//
தயிர் சாதம்ன்னா உங்களுக்கு அவ்ளோவ் இளக்காரமா?
//ஆனால் நம்ப கேப்டன் மட்டுமே ஒவ்வொரு குடும்பத்துக்கும் 9 ஆயிரத்து சொச்சம் தந்திருக்கிறார்//.
ஆசை காட்டி ஏமாத்திய அனைத்து நாய்களையும் நிற்க வைத்து சுடவேண்டும்.
//1960களில் ஒரு குடும்பத்தின் பருப்பு நுகர்வு ஓராண்டில் சராசரியாக 27 கிலோவாக இருந்தது. 2009 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் ஆய்வு செய்தபோது இதே அளவு 11 கிலோவுக்கும் கீழே போய்விட்டது.//
அறுபதுகளில் குடும்பங்கள் மிகவும் பெரிது. பிரட்- பிஸ்சா-பாஸ்தா சாப்பிட மாட்டார்கள்...வாங்கறவன் வாங்கிண்டுதான் இருக்கான்...."அது மூலமா" சாப்டறவன் சாப்ட்டுண்டுதான் இருக்கான்..
//பன்றிக் காய்ச்சலுக்கும் பன்றிக்கும் உள்ள சம்பந்தம் பசுக்களுக்கும் இணையப் புனிதப்பசுக்களுக்கும் உள்ள சம்பந்தம் போன்றதுதான் என்று இங்கே எத்தனை பேருக்குத் தெரியும்?//
தயவு செய்து புரியும்படி சொல்லவும். அல்லது குளூ-வாவது குடுங்க. நீங்க எழுதறது நாலு பேரு படிச்சு என்ஜாய் பண்ணத்தான்...நீர் அதை அறிவீர்!
//ஆக மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் கூட பெண் போல.//
பூ வெச்சதெல்லாம் பொண்ணுன்னு சொல்லற ஒங்கள என்ன சொல்லறது? கொஞ்சமாவது அடங்குமைய்யா!
//லேடஸ்ட் நியூஸ் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் குடும்பத்தினருடன் நேற்று காலை திருவண்ணாமலை கோயிலுக்கு வந்தார்.//
அவர்கள் போனது திரு-அண்ணா-மலை. மலைக்கு வந்து திரு அண்ணாவைப் பார்க்க. மலைல விளக்குக்கு போடறதுக்கு பதிலா பத்திரிகைகள் இதைத் திரித்து போட்டு மஞ்சத் துண்டு கூட்டத்தின் பகுத்தறிவையும், சுயமரியாதையையும் எள்ளி நகைஆடுகின்றன. விரைவில் ஒலி எழுப்பும் நாளேட்டில் மஞ்சள் கவிதை நிச்சயம்.
”ஜெயித்தால் ஐஸ்வர்யா ராயையே ஜெயித்துவிட்டதாக நம்பிக்கையா?”
who asked such a symbol?
Sharon stone is here dude :)))
click here
Ananda vikatan trying its level best to downgrade itself. too sad
Boring!
ஆனந்த விகடன் மெல்ல மெல்ல ஒரு முழுமையான கமர்ஷியல் பத்திரிக்கையாக மாறிக் கொண்டு வருகிறது.
இப்பொழுதெல்லாம் வாராந்திரி அல்லது மாதாந்திரிகள் எல்லாம் பெயர் வெளியிட விரும்பாத வாசக வாசகியரின் அந்தரங்கப் பிரச்சனை முதல் அந்த நாட்கள் பிரச்சனை வரை ஒரு செக்ஸாலஜிஸ்டை வைத்துக் கொண்டு அலசோ அலசென்று அலசித் தள்ளுகின்றன. விகடன் அந்தப் புரட்சியையும் தன்னுள் புகுத்திக் கொண்டால் ஒரு முழுமையான தற்காலப் பத்திரிக்கையாகப் பரிணமிக்கும். இந்த அந்தரங்க செய்திகள் வராத பத்திரிக்கை இப்பொழுதெல்லாம் பத்திரிக்கையாகவே மதிக்கப்படுவதில்லை. இதுபோன்ற பத்திரிக்கை தர்மத்தை அறியாத அறுபதுகளிலேயே இன்னமும் இருக்கும் மடிசஞ்சிகள் பத்திரிக்கையின் தரம் போய்விட்டது என்று பிதற்றித் திரிகிறார்கள்.
ராக்கி சாவந்த் போல, நம்ம "கலைஞர்" டிவி லேயும், ரம்பாவின் சுயம்வரம் ஆரம்பிக்க ஏற்பாடு நடக்குதாமே? எத்தனை இளிச்சவாயன்கள் போட்டி போட போறானுங்கோ? முனியை விட்டு தகவல் சேகரிக்க சொல்லுங்க?
/*** sivaswami said...
Ananda vikatan trying its level best to downgrade itself. too sad***/
விகடன் தகுதிக்கு சினேகாவின் பிகினி படத்தை போட்டால் கடுப்பாக தான் இருக்கும், வேறு ஏதாவது நல்ல பொண்ணு போட்டோவ போட்ட மக்கள் குஸியாவார்கள்....அப்படிதானே தலை????
Baski for you,
http://www.flickr.com/photos/30655058@N07/3807409203/
//ரஜினியைச் சொல்லிவிட்டு கமலைச் சொல்லாவிட்டால் கமல் ரசிகர்கள் ரசிகைகள் கோபிப்பார்கள்.//
ரஜினியைச் சொல்லிவிட்டு கையோடு கமலை மட்டப்படுத்திச் சொல்லாவிட்டால் ரஜினி ரசிகர்கள் ரசிகைகள் கோபிப்பார்கள் என்று சொல்ல நினைத்தீர்களா?
வழக்கம்போலவே அநாகரிகமான பகுதி. இந்த ஜோக்கை யார் சாட்டில் சொல்லியிருப்பார் அல்லது சந்தடி சாக்கில் யாரோ சாட்டில் சொன்னதாகச் சொல்லிக்கொண்டு இங்கே பிரசுரமாகியிருக்கிறது என்றும் எனக்குத் தெரியும். மரத்தடியில் இந்த இலக்கிய ஜோக் ஏற்கனவே அம்பலமாகியிருக்கிறதே.
இட்லிவடையே முகமூடி. அதுக்குமேல இன்னொரு முகமூடி பாவனையா? பார்த்து, மூச்சுத் திணறப் போகுதுங்ணா.
/பன்றிக் காய்ச்சலுக்கும் பன்றிக்கும் உள்ள சம்பந்தம் பசுக்களுக்கும் இணையப் புனிதப்பசுக்களுக்கும் உள்ள சம்பந்தம் போன்றதுதான் என்று இங்கே எத்தனை பேருக்குத் தெரியும்?//
:-)
ஷாரன் ஸ்டோன்: ஆண் வலைஞர்கள் சார்பாக, இந்தப் படத்தைப் போடாதுவிட்ட உம்மை பாராட்டுகிறோம். இப்படிக்கு கிழவிகளின் படங்களை பார்க்கும் பொது மட்டும் உணர்ச்சிவசப்படாத "basic instinct" கொண்டோர் சங்கம்!!
ஸ்ரேயா மட்டுமல்ல, சென்சார் விதிகளைத் தளர்த்தினால் எதையும் "புலப்படுத்தும்" (காட்டும்னு சொன்னா கௌரவமா இல்ல!) ஒரு மகளிர் அணியே காத்திருக்கிறது...
கண்ணா... ரஜினியைப் பத்தி ஒரு தடவ ஒரு குறும்படம் எடுத்தா, நூறு தடவ சினிமாஸ்கோப்பே எடுத்த மாதிரி...
//கலைஞர் டிவி அந்தப் பெருமையைச் செய்யப் போகிறதாம்//
காண்ட்ராக்டுகள், டெண்டர்கள் மட்டுமல்ல, புதிய படங்கள் சினிமா விழாக்கால் எதுவா இருந்தாலும் அரசு - மூக்காவிற்குதான் முன்னுரிமை. Charity begins at home, and ends too!
ராக்கி கா சுயம்வர்: ராக்கி கட்டீடுவாங்களோன்னு அவனவன் வீட்டுலேர்ந்தே வெளீல வராம இருக்கும்போது, ராக்கிய 'கட்டிக்க' இவ்ளோ பேர் வந்திருக்காங்களே, பாராட்டுங்கய்யா... ஆமாம், ஏன் மைக்கேல் ஜாக்சன் மூஞ்சி-தசாவதாரம் மேக்கப் எல்லாம் ஞாபகம் வருது ராக்கியப் பாத்தா?!?!
தயிர் சாதம் சாப்பிடும் ஒரு சாமியார்: ஹ்ம்ம்... ரிச்சர்ட் கியர் ரேஞ்சுக்கு ஒரு கெழம் விளையாடீருக்குதேன்னு பொறாமை எல்லாருக்கும்... ஆனா மிஸ்டர் இட்லிமுனி, அவரைப் பாத்தா சாமியார் மாதிரி இல்ல... கோயில் பூசாரி மாதிரிஇருக்கார்...
//ரஜினியைச் சொல்லிவிட்டு கையோடு கமலை மட்டப்படுத்திச் சொல்லாவிட்டால் ரஜினி ரசிகர்கள் ரசிகைகள் கோபிப்பார்கள் என்று சொல்ல நினைத்தீர்களா?
வழக்கம்போலவே அநாகரிகமான பகுதி. இந்த ஜோக்கை யார் சாட்டில் சொல்லியிருப்பார் அல்லது சந்தடி சாக்கில் யாரோ சாட்டில் சொன்னதாகச் சொல்லிக்கொண்டு இங்கே பிரசுரமாகியிருக்கிறது என்றும் எனக்குத் தெரியும். மரத்தடியில் இந்த இலக்கிய ஜோக் ஏற்கனவே அம்பலமாகியிருக்கிறதே. //
ஏன் ஜோக்கையும் செய்தியையும் ஒன்றாக பார்க்கிறீர்கள் ? அந்த ஜோக்கை ஒருவர் எனக்கு சாட்டில் வந்து சொன்னது நிஜம். அவருக்கு தைரியம் இருந்தால் இங்கே வந்து சொன்னேன் என்று சொல்லட்டும். எனக்கு ஆட்சேபனை இல்லை. வரவில்லை என்றால் பயம், அல்லது H1N1 காரணமாக இருக்கலாம்.
//இட்லிவடையே முகமூடி. அதுக்குமேல இன்னொரு முகமூடி பாவனையா? பார்த்து, மூச்சுத் திணறப் போகுதுங்ணா.//
ஆமாம் மூச்சு திணறுகிறது என்ன செய்ய ? ஏதாவது பாட்டி வைத்தியம் இருந்தால் சொல்லவும்.
யார் அந்தப் புண்ணியவான்: கிருஷ்ணா டாவின்சி? தெரீல.
ஆனா, விகடன் இதுக்கு பதிலா, அதே சிநேகாவோட கண்றாவிக் கவர்ச்சி படம் எதையாவது பெருசா போட்டு, ரசிகர்கள் விரும்பும் சிநேகான்னு க்ராஃபிக்ஸ்ல பொடவ கட்டி சின்னதா போட்டிருந்தா கூட, படத்தப் பெருசா போட்ட மாதிரியும் ஆயிருக்கும், நல்ல இமேஜோட தப்பிச்சா மாதிரியும் ஆயிருக்கும்.
ஹ்ம்ம்... நம்மள ஆசிரியர் குழூல சேர்த்தா தானே!
அப்பறம் சொல்ல மறந்துவிட்டேன், வழக்கம்போலவே சில பகுதிகளை நீக்கியுள்ளேன்.
குழந்தைகள் தீ விபத்தில்: எதுக்கு ஒரு கோடி? சின்னபுள்ளத்தனமா இருக்கு! திடீர்னு எதிர்பாராம வசூல் ஆயிடுச்சுன்னா குடுக்க வேண்டி வந்துருமே... பத்து கோடி சேரட்டும்; இன்னும் ரெண்டு வி"பத்து" நடக்கட்டும்...சேர்த்துக் குடுத்துருங்க...
பருப்பு நுகர்வு: அறுபதுகளில் வீட்டிற்கு ஏழு பேர் கூட இருந்தார்கள், இப்போது நாமிருவர் - ந'மக்கு' ஒருவர்னு (அல்லது, நமக்கிடையில் பழைய காதலர்... சும்மா தமாஷ் தான் :P) என்று ஆகிவிட்டதால் பருப்பு மட்டுமல்ல, பலதும்குறைந்தேவிட்டது.
ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாதவர் ஜாதகம் கணிப்பு பற்றி பேசுகிறாரே ?
ஆமா - திருவள்ளுவர் சிலைக்க்கு பெங்களூரில் பொட்டு வைத்த ஃபோட்டோ பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. சர்வஞருக்கும் கருணாநிதி பொட்டு வைப்பாரா ?
http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=13134
இந்தியாவின் ஜாதகத்தை தி.மு.க., கணிக்கும்: முதல்வர் கருணாநிதி பேச்சு
சென்னை:" "இந்திய அரசியலின் ஜாதகத்தை கணிக்கக் கூடிய அளவில் தி.மு.க., வெகு விரைவில் இடம்பெறும்,'' என முதல்வர் கருணாநிதி கூறினார்.
ம.தி.மு.க., வக்கீல் ராதாகிருஷ்ணன், தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.,வில் நேற்று இணைந்தார். சிவகங்கை கணேசன், தூத்துக்குடி பார் அசோசியேஷன் தலைவர் செங்குட்டுவன், வலசை செல்வராஜ் உள்ளிட்ட பலர், அவருடன் தி.மு.க.,வில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: தி.மு.க.,வில் நேற்று ஒரு ராதாகிருஷ்ணன் சேர்ந்தார்; இன்று ஒரு ராதாகிருஷ்ணன் சேருகிறார். தி.மு.க.,வில் இருந்து வெளியேறி, மீண்டும் இணைகிறார். தண்ணீரில் மூழ்குபவர்கள் கூட மூன்று முறை தான் மூழ்குவர். இவர் மூன்றாவது முறையாக சேருகிறார். அவரையும் அவருடன் சேருபவர்களையும் வரவேற்கிறேன்.
தி.மு.க., மாநிலம் தாண்டி மங்காப் புகழ் பெற்றுவரும் கட்சி. தேசிய கட்சிகளுக்கு இணையாக தி.மு.க., வளர்ந்து வருகிறது. தி.மு.க.,வை விட்டு அகில இந்திய அரசியலை வேறு யாரும் நடத்த முடியாது என்ற எண்ணம் நமக்கு வந்துள்ளது. தினமும் பலர் தி.மு.க.,வில் சேரச் சேர, இது தேசிய இயக்கமாக நின்று நிலைக்கும். இந்திய அரசியலின் ஜாதகத்தை கணிக்கக் கூடிய அளவில் வெகு விரைவில் தி.மு.க., இடம்பெறும்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ""திருவாரூர் தேர் எங்கு சுற்றினாலும் மீண்டும் நிலைகொள்ள ஓர் இடத்திற்கு வரும். அதுபோல, நான் சுற்றிவிட்டு தி.மு.க.,வுக்கு வந்துள்ளேன்,'' என்றார். துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
முதல்வருக்கு உடல்நலக் குறைவு!; நிகழ்ச்சிக்கு முதல்வர் கருணாநிதி தாமதமாக வந்தார். அதுபற்றி அவர் பேசுகையில், ""எனக்கு பிற்பகலில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவர்கள், உடல்நிலை குறித்து ஆய்வு செய்தனர். மருத்துவர்கள் எவ்வளவோ சொல்லியும், தடுத்தும், கேட்காமல் சற்று தாமதமாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். தி.மு.க.,வுக்கு தாமதமாக திரும்பியவர்களை, தாமதமாக வரவேற்பதில் தவறில்லை,'' என்றார்.
எய்ட்ஸ் கட்டுப்பாடு: இணையத்தில் யார் வேண்டுமானாலும் டவுன்லோடு செய்யலாம்... 'பயன்' செய்து படுத்தக்கூடாது... யாராயிருந்தாலும் பணம் கொடுத்துத்தான் ஆகவேண்டும். ஏன், இதற்கென்று நடிகைகள் கிடைக்க வில்லையா அரசுக்கு? (அரை-சுக்கு)
என்ன செய்வது? எல்லாம் உளியின் ஓசை!
swine : பன்றிகள் நல வாரியத்தலைவரை விட்டு மான நஷ்ட வழக்கு போடச்சொல்லுங்கள்... அப்படியே யானைக்கால், பூனைமுடி, கணக்குல புலி, பழம் பெருச்சாளி, லய சிம்மம், பாம்புக்காது, ஆட்டு மூளை, கிளி மாதிரி பொண்ணு, bull shit எல்லாத்துக்கும்போடணும்.
"பொம்பள சொன்னாக் கேட்டுக்கணும்".
அம்மிணி சூடா பின்னோட்டம் போட்ட உடனே "இவ" ரொம்ப பவ்யமா கை கட்டி வாய் பொத்தி எடிட் பண்ணிட்டார்.
எப்படியோ, நல்லது நடந்தா நல்லது.
கௌ கோலா: அதான் ஏற்கனவே கோமியம் இருக்கே, கோலா வேற எதுக்கு அனாவசியமா!
கையில் மை: அதையும் வலது கை ஆள்காட்டி விரல்லதான் சுத்துவாங்களா?
மல்லிகை: do the boy cut - poo the boycott!
ஐஸ்வர்யா சின்னம் : தமிழ்நாட்டுல நமீதா சிம்ரன் மாதிரி எதாவது சின்னம் கேட்டாதான் ஒட்டு விழும்.
எஸ்.வி.சேகர்: அப்போ, இவர் அதிமுகால சேரும்போது உனக்கு கேட்ட காலம் ஆரம்பிச்சாச்சுன்னு அதே ஜோஸ்யர்கள் சொல்லலியா?
திருவண்ணாமலை: செந்தாமரைக்கு என்றுமே கடவுள் நம்பிக்கை உண்டு. தி.நகர் கிருஷ்ணா கான சபாவில் தான் அவள் நாட்டிய அரங்கேற்றம் கூட நடந்தது.
பகுத்தறிவு: நிறைய மன உறுதி வேணும், for this so called பகுத்தறிவிற்கு.
சொல்வனம்: இந்தக் கட்டுரைக்காகவே இட்ளிவடையைப் பாராட்டுகிறோம்.
"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி"
மக்கட்க்கு இறை என்று 'செயல்படாத பிரதமர்' மக்களை இரையாக வைத்த நிலையே இது. பழக்க தோஷத்தினால் நீட்டிய இடமெல்லாம் நாட்டிவிட்டார் போலும். ஆமாம், அவரென்ன ரெவியு டிபார்ட்மென்ட்டில் வேலையை இருந்தாரா? "நீட்டினால்தான்" கையெழுத்துப் போட?
//Vedantha Desika Dasan said...
என் மனைவிக்கு தங்கை இல்லை. அப்படியானால் எனக்கு குரு பெயர்ச்சி கிடையாதா?//
Dear Vedanth... you are given and kept (கொடுத்து வெச்சவர்). நீர் யாரை வேண்டுமானாலும் இவள் (அல்லது திறமையைப் பொறுத்து இவர்கள்!) உன் தங்கை மாதிரி என்று மனைவிக்கு அறிமுகப்படுத்தலாம் :) :)
//
வந்த நண்பர் வீ.சேகரின் இயக்கத்தில் வந்த "பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்" படத்தின் ஒரு ஜோக்கை சொன்னார்.
//
இங்கிருந்து...
//
சார்லி குளித்துக்கொண்டிருக்கும்போது வீட்டு வேலைக்காரி முதுகு தேய்த்துவிடுவாள். அதைப் பார்க்கும் ஒரு பெண், சார்லியின் மனைவி கோவை சரளாவிடம், "உன் புருஷனுக்கு அவ முதுகு தேச்சு விடுறாடீ" என்று சொல்வாள். அதற்கு கோவை சரளா, "எருமைக்கு எவ முதுகு தேச்சா என்ன?" என்பார்.
//
இந்த ஜோக்(?) காணாமல் போவதற்காக தாளித்த அனைவருக்கும் நன்றி..
எத்தனை முறை தாளித்தாலும் இட்லிவடை கமல், காவி, இலை விஷயங்களில் பல்லைகாட்டி அரைவேக்காடு ஆகிவிடுகிறது
IV,
enna post ithu?
kadi thangalai..
//ரஜினியைச் சொல்லிவிட்டு கமலைச் சொல்லாவிட்டால் கமல் ரசிகர்கள் ரசிகைகள் கோபிப்பார்கள். கமல் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து(1959) ஐம்பதாவது ஆண்டையொட்டிய அவரது திரை வாழ்வைக் கொண்டாட விஜய் டிவி முடிவு செய்திருந்தது. பிரபலங்களின் பேட்டி, ஸ்பான்ஸர் எல்லாம் ரெடி. ஆனால் தீடீர் என்று இப்போது கலைஞர் டிவி அந்தப் பெருமையைச் செய்யப் போகிறதாம்.//
***************
உங்கள் 50 ஆண்டு கலைச்சேவையை பாராட்டி 4 விருதுகள் கொடுத்த விஜய் டி.வி.க்காக ஒப்புக்கொண்ட ஆண்டவர் 50 என்ற நிகழ்ச்சியை சில கோடிகள் வாங்கிக்கொண்டு கலைஞர் டி.வி.யிடம் தாரை வார்த்த அண்ணன் ஆழ்வார்பேட்டை ஆண்டவர் இன்று முதல் "பரமக்குடி பல்டிமணி" என்ற பெயரில் அழைக்கப்படுவார் என்று எங்கள் சங்கம் (டகால்டிகளின் டங்குவார் அருப்போர் சங்கம்) சார்பில் தெரிவித்து கொள்கிறேன்...
(ஜப்பானில் ஜானகிராமன்)
Idly Vadai need to increase their hits thro mocking Kamal..?
Foolish move.
சொல்வனக் கட்டுரையில் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள் ஷாக்கிங்காக இருந்தன. நேருவிடம் கரியப்பாவும், படேலும் காஷ்மீர் பிரச்சனை குறித்துப் பேசப்போன போது நேரு காஷ்மீர் விஷயத்தைத் தவிர உலக இலக்கியம், இசை எனப் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தாராம். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த படேல், "Mr.நேரு, உங்களுக்குக் காஷ்மீர் வேண்டுமா? வேண்டாமா?" என்று கத்தியபின்பே நேரு சீரியஸானார் என்று கரியப்பா ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். அதே பொறுப்பின்மையும், அக்கறையின்மையும் இப்போது மன்மோகன்சிங் வரை தொடர்வது வேதனை. இத்தனைப் பெரும்தவறுகளை நம் மீடியா எப்படி கண்டுகொள்ளாமல் விட்டது? அது சரி, இவர்கள் காசு கொடுக்கும்பக்கம் குரைக்காதவர்கள் இல்லையா?
சொல்வனத்துக்கும், அறிமுகப்படுத்திய இட்லிவடைக்கும் என் நன்றிகள்.
IV,
Good letter to Muni, nice points and manjal posting was very good... adrushtasaligalukku vazhtukkal ?!.
Kamesh
சோனியா - செல்வராகவன் விவாகரத்து செய்ய முடிவு
பெரும் பரபரப்பாக பேசப்பட்டு, பெரும் ஆடம்பரமாக நடந்த செல்வராகவன், சோனியா அகர்வால் திருமணம் குறுகிய காலத்திற்குள் முடிவுக்கு வந்து விட்டது. இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
http://www.maheshwaran.com/index.php?option=com_seyret&task=allvideoslist&Itemid=186&from=70
Post a Comment