கருணாநிதிக்கு பகிரங்க கடிதம்! பற்றி விடுதலை..
ஈழத் தமிழர் பிரச்சினையில் எந்தப் பார்ப்பானும் சிங்களர்களின் கையாள்தான்! தப்பித் தவறிகூட வேறு வகையில் சிந்தித்துவிடக் கூடாது என்பதிலே மிகவும் வைராக்கியமாக இருந்தனர் - இருந்தும் வருகின்றனர்.
இந்து ராம் துக்ளக் சோ என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு. இவர்கள் மிகவும் வெளிப்படையாக தமிழன் ரத்தத்தை ருசி பார்ப்பதில் நாக்கை நீட்டிக் கொண்டு அலைபவர்கள்.
ஆனால் ஆனந்த விகடனின் தளுக்கே தனி!
இந்த வார ஆனந்த விகடன் (15.7.2009) கருணாநிதிக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
எதிலும் ஒரு நீக்குப் போக்கு வேண்டும் என்பார்கள். அங்கு இருக்கும் தமிழருக்கு நன்மை செய்ய வேண்டுமானால், இங்கே நாம் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்பு உணர்வோடு அங்குள்ள சிங்கள இனத்தின்மீது ஒன்று சொல்லி அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கினால் அது நல்லதல்ல! பேசும்போது சுவையாக இருக்கும். வீராவேசமாகப் பேசலாம். சூறாவளிப் பேச்சு, புயல் பேச்சு, கடல் அலைப் பேச்சு, எரிமலைப்பேச்சு என்று புகழாரம் சூட்டலாம். ஆனால் சிங்களர்களுடைய கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் நீக்குப் போக்கு என்று சொன்னேன் என்று முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் கூறிய கருத்தினை எடுத்துக்காட்டி தனது வக்கணைகளை வாரிக் கொட்டியிருக்கிறது விகடன் 3-0 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உங்களது யோசனை துளிர்த்து இருந்தால், 80 ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களர்கள் கொன்று இருக்க மாட்டார்கள். புலிப்படையில் 30 ஆயிரம் பேர் உயிர்ப் பலியாக வேண்டிய அவசியம் வந்து இருக்காது. கொழும்பில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அன்றைய ஜெயவர்த்தனாவுக்கு தந்தி அனுப்பி கோரிக்கை மட்டும் வைத்திருந்தால், பவுத்தர்கள் கோபம் அதிகமாகி இருக்காது. ஆனால் நீங்கள் தான் தமிழனுக்கு ஒரு நாடு, தனித் தமிழீழ நாடு என்று கரகரக் குரலால் நித்தமும் கர்ஜித்தீர்கள். ரத்தக்கறை படிந்த ஜெயவர்த்தனாவின் கொடூரத்தை தமிழ்நாட்டுத் தெரு வெல்லாம் சொல்லி, மக்கள் கொடுத்த பதவியை ராஜினாமா செய்து, பிறந்த நாளுக்குக் கிடைத்த பணத்தை போராளிகளுக்குத் தூக்கிக் கொடுத்து, விடிய விடிய டெசோ ஊர்வலங்களை நடத்தி, கறுப்புச் சட்டை போட்டு, டெல்லிக்குக் காவடி தூக்கி, ஆட்சியைப் பறி கொடுத்து.. என பாழாய்ப் போன ஈழத் தமிழனுக்காக காலத்தை வீணாக்கி விட்டீர்களே, தலைவரே? - _இதுதான் ஆனந்தவிகடன் உதிர்த்த முத்துகள்.
ஈழத்தில் தமிழர்கள் சிங்களர்களால் கொல்லப் பட்டதற்கும் போராளிகள் கொல்லப்பட்டதற்கும் எல்லாம் காரணமே கருணாநிதி பேச்சுதான் என்று குற்றப் பத்திரிகை படித்துள்ளது விகடன்
ஈழத் தமிழர்களுக்காக அகிம்சை வழியில் தந்தை செல்வா தலைமையில் போராடினார்களே, உண்ணாவிரதங்கள் இருந்தார்களே, ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்திலும் கருத்துகளை எடுத்து வைத்தார்களே _ அதற்கெல்லாம் செவி சாய்த்து, தமிழர்களின் அடிப்படை நியாயமான உரிமைகளை அங்கீகரித்ததா இலங்கை அரசு?
1956_இல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று சட்டம் செய்யப்பட்டது அதனை எதிர்த்து 1956 ஜூன் 5_ஆம் நாள் தந்தை செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
கொழும்பில் உள்ள காலிமுகத் திடல் என்னும் இடத்தில் அறவழியில் நடத்தப்பட்ட அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிங்களர்கள் வெறி கொண்டு தாக்கினரே. உருட்டைக் கட்டைகளைக் கொண்டு அடித்தார்களே, கற்களால் அடித்தனரே, சிலரை பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆற்றிலே தூக்கி எறிந்தனரே! குருதி சொட்டச் சொட்ட அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட அந்தத் தலைவர்கள் நாடாளுமன்றத்திற்குச் சென்றபோது பிரதமராக இருந்த பண்டார நாயகா அவர்களைப் பார்த்து கேலியாகச் சிரித்தாரே, எதற்காக இப்படி உதைபடுகிறீர்கள்! சிங்களவர்கள் கொஞ்சம் முரடர்கள் பேசாமல் கலைந்து சென்று விடுங்கள். இனிமேல் இங்கு சிங்களம்தான் ஆட்சி மொழியாக இருக்கும்? என்றுதானே சொன்னார்.
இதனைத் தொடர்ந்து பத்தே நாள்களுக்குள் கல்லுயா பள்ளத்தாக்கில் வாழ்ந்த 150 தமிழர்கள் கொல்லப்-பட்டனரே!
இதற்குக்கூட கலைஞர் கருணாநிதிதான் காரணம் என்று எழுதப் போகிறார்களா? அப்பொழுது கருணாநிதி ஏதாவது பேசியிருப்பார் என்று ஆடு ஓநாய் கதையை ஆனந்த விகடன் கூட்டம் அவிழ்த்து விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
போர் முடிந்தது _ ஆனாலும் ஈழத் தமிழர்களின் சோகத்துக்கு மட்டும் முடிவு ஏற்பட்டு விடவில்லை. ஈழத் தமிழர்கள் படும் துன்பத்தைப்பற்றிப் பேச _ எழுத அங்கு மனிதர்கள் இல்லை, ஏடுகள் இல்லை. வாரம் ஒன்றுக்கு 1400 பேர் முள் வேலி முகாம்களில் தமிழர்கள் மரணம் அடையும் கொடுமை! சிங்கள இரும்புக்கரத்தின் கொடிய பிடியில் ஈழத் தமிழர்கள் மரண விளம்பில் தத்தளித்துக் கொண்டுள்ளனர் இத்தகு சூழ்நிலையில், இந்த நேரத்தில் பேசப்படும் உரைகள் ஈழத் தமிழர்களுக்குக் கேடாக அமைந்துவிடக் கூடாதே என்ற பொறுப்புணர்ச்சியில் காலம் கருதி ஒரு முதல் அமைச்சர் பேசியதை -_ வேறு விதமாக மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் வகையில் ஆனந்த விடகன். விளை-யாடிப் பார்க்கிறது _ வெந்த புண்ணியில் வேல் பாய்ச்சும் விகாரப் புத்தியில் தன் வேலையைக் காட்டுகிறது.
இலங்கையில் சிங்களர்கள்தானே மெஜாரிட்டி? அப்படியிருக்கும்போது சிங்களவர் தான் ஜனாதிபதியாக வர வேண்டும். பிரதமராக வர வேண்டும் என்பதை ஒத்துக் கொண்டு போனால் தமிழர்களுக்கு இந்தத் தொல்லைகள் எல்லாம் வந்திருக்காதே! தமிழுக்கு இடம் இல்லாமல் போனால் குடிமூழ்கியா போய்விடும்?
தேவையில்லாமல் இதற்கெல்லாம் கொடி பிடித்ததால்தானே தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்? என்று கூட ஆனந்தவிகடன் இதோபதேசம் செய்யும்போலும்!
மானம் ஈனம் பார்த்தால் முடியுமா? அங்குத் தமிழ்ப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்-பட்டால், சூழ்நிலை கருதி, உயிர் தப்பிக்க அதனைப் பொருட்படுத்தாமல் விட வேண்டியது தானே -_ என்று-கூட ஆனந்தவிகடன் வகையறாக்கள் எழுதி-னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை (அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்பதுதானே அவாள்! தர்மம்!)
இரு வேறு மாறுபட்ட நிலைகளில் கலைஞர் அவர்-கள் கூறிய கருத்தினை மிக இலாவகமாக பயன்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, எந்த நிலை-யிலும் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட வேண்டியவர் மட்டும் கலைஞராகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவில் ஆனந்தவிகடன் செயல்பட்டு இருப்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.
உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது _ போராடு-வது கூடாது என்று சுயமரியாதை உள்ள எவரும் கூற மாட்டார்கள். ஆனால் அதே நேரத்தில் ஒரு கட்டத்தில் பன்னாட்டு ஆயுத பலத்தால் போராளிகள் படுகொலை செய்யப்பட்டு பாமர மக்கள் ஒரு பாசிச ஆட்சியின் திட்டமிட்ட அடக்குமுறைகளால் பரிதவிக்-கும் அவல நிலையில் கூறப்படும் கருத்து என்பது வேறுவிதமாகத் தானிருக்க முடியும். இரண்டும் இரு வேறுபட்ட நிலைகள் ஆனந்தவிகடன் வகையறாக்களுக்கு இது தெரியாதா? தெரியும், தாராளமாகவே தெரியும். ஆனா-லும் எதைச் சொல்லியாவது கருணாநிதியை தாக்க வேண்டும் என்பதுதானே அவர்களின் தீராத வெறி - _ சும்மா இருப்பார்களா?
மாநாடு கூட்டி பார்ப்பனர்கள் அரிவாளைத் தூக்கு-வோம் _ ஆரியத்தைக் காப்போம்! என்று முழக்க-மிட்டபோது ஆனந்தவிகடன் பேனாக்கள் எங்கே போய் ஒளிந்து கொண்டன என்று தெரியவில்லை.
ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலை இங்கு பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டு இருந்தால், ஒருக்-கால் அப்படி எழுத முன் வந்திருப்பார்களோ என்-னவோ! தமிழன் தான் பெருந் தன்மைக்காரனா-யிற்றே!
( நன்றி: விடுதலை )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, July 13, 2009
கருணாநிதிக்கு பகிரங்க கடிதம்! - விடுதலை கருத்து
Posted by IdlyVadai at 7/13/2009 06:45:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










15 Comments:
"colossal" waste of time!!!
ayya viduthalai,
neengal nadathum kalvippanikku,fund niruvanathukku yarr atharavu kodukkarankalo avangalukku (kurippa alunkatchikku) atharavu tharuvathuthan ungal tholil. ithula pavam ela makkal,ayyar inam,tamil makkal katachiya periyar.
neenga eppati venunnalum pesunga palaya pechellam yarr ninaivilirukka poguthu.
tamilan kidakkan vengayam
by
metai pechu vaipakkum kenathamilan
ம்ம்ம்ம்ம்ம்.......
நாய அடிப்பானேன்,
* யை சுமப்பானேன்?
இதெல்லாம் ஒரு நியூஸ்னு போடறீங்களே, உங்கள சொல்லணும்........
ஏதோ, ஆனந்த விகடன் லெட்டர் போட்ட உடனே, நம்ம "தல" அத பாராட்டி, ஒரு விரச கவிதை எழுதி இருந்தா அதா போடுங்க....
இல்லேன்னா, ஒரு விரச மடல் எழுதினா அதா போடுங்க... அத விட்டுட்டு.... இந்த "டுபான் மேட்டர்" எல்லாம் போடாதீங்க....
கருணாநிதி இப்படி புனை பெயர் வைத்திருப்பது (விடுதலை) இப்ப தான் தெரியும்.
அரசியல் பண்ண "அந்த" மகா தலைவர்களுக்கு கிடைத்த ஆயுதம் இரண்டு.
. "தமிழ்" வைத்து அரசியல் (இந்தி எதிர்ப்பு)
. இந்து சமய எதிர்ப்பு.
இதை பற்றி பேசிக்கொண்டே தான் இருப்பார்கள். (ஆட்சியில் நீடிக்க வேண்டுமே!)
புத்தியுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்.
நம்ம ஊரு பிச்சைகார வாக்காளர்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்.
உங்களில் யாருக்காவது மனம் குறுகுறுக்கிறதா ???
தெளிவான பலர் இந்த நாட்டை விட்டே ஓடி விட்டார்கள். நான் வேறு வழியின்றி (என்னை போல் சிலர்) இப்படி இட்லிவடையில் பின்னூட்டம் போட்டு நேரத்தை வீண் செய்து கொண்டிருக்கிறோம்.
வாழ்க நம் சக்கர நாற்காலி முதல்வர்.
//புத்தியுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்.
நம்ம ஊரு பிச்சைகார வாக்காளர்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான். //
Rightly said.
நான்தான் அப்பவே சொல்லிட்டேனே..
முதல்வர் ஒரு புதிய பார்ப்பன அர்ச்சனையைக்
கண்டு பிடித்துவிட்டார் என்று!
இப்போ தான விடுதலை-ல ஆரம்பிச்சிருக்காங்க...இன்னும் முரசொலி இருக்கே. அது வரை காத்துகிட்டு இருப்போம்.
விஜயகாந்துக்கு முரசு சின்னத்த ஒதுக்கிட்டா "முரசொலி" பேர மாத்திக்கிவாங்களா ?
மு க வின் மனசாட்சியே, வாங்கிய எலும்பு துண்டுக்கு வஞ்சனை இல்லாமல் உழைத்திருக்கும் உழைப்பாளியே, கருணாநிதியின் நிழலே இந்து சமயத்தை எதிர்த்து (பார்ப்பான்) பிழைக்கும் விடுதலையே
அரசியல் என்றால் அது பார்ப்பான் எதிர்ப்பு என அரிச்சுவடி படித்திருக்கும் கருணா வின் பள்ளிமானவனே
காலத்துகேற்ப தன நிலை மாற்றிக்கொள்ளும் திருவாளர் கருணாநிதியின் நிலைப்படை சொன்னதற்கு உங்களின் பகிரங்க கடிதம் ஒரு !@#$#@!
மகாவம்சத்தில் இருந்து நிகழ்வுகளை குறிப்பிடாததற்கு நன்றி...
காமேஷ்
விடுதலை ஆசிரியருக்கும், பதிப்பகத்தாருக்கும் ஆனந்த விகடனின் கட்டுரையை விமர்சனம் செய்ய வேண்டும் என்றால், அதை மட்டும்தான் செய்ய வேண்டும். அதை எழுதிய யாரோ ஒரு "அரசியல் அறியாத் தமிழன்" எழுப்பிய கேள்விகளுக்கு "நாகரீகமாக" பதில் அளித்து இருக்க வேண்டும்.
அதை விடுத்து திரு சோ மற்றும் ஹிந்து திரு ராம் போன்றோர் இந்த ஆட்சியாளரின் காலைப் பிடிக்கவில்லை என்பதற்காக பார்பனர்களை மொத்தமாகச் சாடும் இந்த மாதிரி பத்திரிகை செய்திகளை வெளியிட்டு இட்லிவடையின் தரம் தாழ வேண்டாமே!!
இந்த போஸ்ட் discussion க்ளோஸ் பண்ணிட்டு அடுத்த நல்ல போஸ்டுக்கு போகலாம்.
போடுங்க நல்ல கேள்வி பதில் போஸ்ட் ஒண்ண. ரொம்ப நாள் ஆச்சு.
ஆனந்த விகடனின் முயற்சி பாராட்டுக்குரியவை...
விடுதலை பத்திரிக்கையின் தறுதலை ஆசிரியர் என்று எனக்கு தெரியாது.
மக்கள் விடுதலைக்காக போராடுங்கள், கலவானிகளின் விடுதலைக்கு போராடுவதை விட்டு விடுங்கள்!
யாங்க அய்யர(எதுவும் தப்பா பேசுறேனா?) திட்டி கலவனிய நல்லவன்னு சொல்றீங்க, வேணும்ன்னா கலைவாணி திருடளைன்னு நிருபீங்க!
சப்டாச்சா?ன்னு கேட்டா ஆமா! இல்லைன்னு பதில் சொல்லுங்க! அதவிட்டுட்டு நண்பர் சாப்பிட்டுட்டார், சோனியா சாப்டுட்டர்ந்னு சும்மா மொக்க போடாதீங்க!
//மானஸ்தன் said... இந்த போஸ்ட் discussion க்ளோஸ் பண்ணிட்டு அடுத்த நல்ல போஸ்டுக்கு போகலாம்.//
விடு-தல... மன்னிச்சு விடு.. பார்ப்பனர் பாப்பான் என்று
மூக்க-விடுதலை இவங்க நிறுத்த மாட்டாங்க...
i do not know who is this viduthalai editor.
KARUNANIDHI AND COMPANY ARE EATING TAMILNADU AND HE HAS NOT TOLD ANYTHING BECAUSE HE IS GREASED.
DIRTY POLITICS
Post a Comment