December 4, 1910 - January 27, 2009
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, January 27, 2009
முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் காலமானார்
Posted by IdlyVadai at 1/27/2009 03:48:00 PM
Labels: அஞ்சலி
Subscribe to:
Post Comments (Atom)












16 Comments:
தமிழக தொழில்வளத்திற்கு வித்திட்ட காமராசர் சீடருக்கு எனது அஞ்சலிகள் :(
காமராஜர் சீடரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்திற்கு தமிழக மக்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அமுதபிரியன்.
தமிழக தொழில்வளத்திற்கு வித்திட்ட "முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன்க்கு எனது அஞ்சலி
அன்னாரின் ஆன்ம சாந்தியடைய பிரார்த்திப்போம்..
kamarajarukku mattumalla tamilarkalukkum thurogam seithavar
சிறந்த் இந்தியனுக்கு உன்மையான இந்தியனின் வீர வனக்கம்...
நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார்... ஆன்மா சாந்தி அடையட்டும்.
இன்றைய தலைமுறை, ஒரு வேளை, நீங்கள் தமிழ்நாட்டுக்கு செய்த நன்மைகளை
அறிந்திருக்க மாட்டார்கள்
கிண்டி அம்பத்தூர் தொழிற்பேட்டைகள் உங்கள் பெயரை என்றும் ஞாபகப்படுத்திகொண்டிருக்கும்
ஏதோ, தமிழ்நாடு செய்த புண்ணியம், காமராஜ் ஆட்சி ஒரு 5 ஆண்டு காலம் இருந்தது.
அதுதான் கடந்த 40 ஆண்டு ஊழல் ஆட்சியை எங்களை தாங்க வைத்துள்ளது.
நன்றி.வாழ்க உம் புகழ் !
தமிழர்களின் உயர்ந்த பண்பு அனானி (7.42)
பின்னூட்டத்திலிருந்து ஒளி விட்டுப்
பிரகாசிக்கிறது! இறந்தவர்களைப் பற்றிப்
புகழ் பேச வேண்டாம், ஆனால் இகழக்
கூடாது என்ற பண்பெல்லாம் இக்காலத்துத்
தமிழ்மக்களிடம் எங்கே இருக்கும்,
பகுத்தறிவு மிகுந்தவர்களல்லவா?
மறைந்த வெங்கடராமன் அவர்கள் ஒரு
தமிழர், அவர் தமிழர்களுக்கு செய்த
நன்மைகள் - குறிப்பாக தொழிலாள்ர்கள்
நலன் - மக்கள் மறக்க மாட்டார்கள்
He lived as a good statesman. He will ever be remembered for his contributions to the Parliamentry Form of our governance system
May his soul rest in peace
தமிழ்நாடு பீகார் மாதிரி ஆகிவிடாமல் இருக்க காமராஜரோடு இணைந்து பெரும் தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள் என தமிழகமெங்கும் அமைத்து தொழிற்புரட்சி நடக்க மத்திய அரசில் இருந்து பாடுபட்டவர்களில் சிறப்பானவர். ஊழல் செய்யாதவர்.
ஆர்வியின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஆர். வெங்கட்ராமன் அவர்கள் மறைவிற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்.
அதேநேரத்தில், ஒரு முக்கியப் பிரச்சினையை முன் வைக்கவேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் என்பதால் அரசு மரியாதை தரும் வகையில் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள அவரின் உடல்மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டு இருப்பது மரபுதான்.
ஆனால், இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கிய செய்தி என்னவென்றால், அந்தத் தேசியக் கொடியில் முதலாவதாக உள்ள ஆரஞ்சு வண்ணத்தின்மேல் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியாரின் படத்தை ஒட்டி வைத்துள்ளனரே - அது எப்படி? சங்கராச்சாரியார் என்றல்ல - எந்த ஒருவரின் படத்தையும் தேசியக் கொடிமீது ஒட்டி வைக்கலாமா?
அதுவும், தேசியக் கவுரவமாகக் கருதப்படும் கொடியில், மதச் சார்பற்ற அரசின் தேசியக் கொடியில், தீண்டாமை க்ஷேமகர மானது என்று சொன்ன - அரசமைப்புச் சட்டத்தின் பகைவரது படத்தை ஒட்டலாமா?
தேசியக் கொடியை அவமானப்படுத்தும் செயல் அல்லவா இது?
தேசியக் கொடி, அரசமைப்புச் சட்டம் போன்ற தேசிய சின்னங்களை அவமதித்தால் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை என்று சட்டம் உள்ள நிலையில் இதனைச் செய்தவர்கள்மீது என்ன நடவடிக்கை?
குடியரசுத் தலைவராக இருந்து மறைந்தாலும், அவாளின் வட்டாரம் எதை முன்னிறுத்துகிறது என்பதைப் பார்த்த பிறகாவது தமிழர்களின் கண்கள் திறந்து கொள்ளுமா?
அனானி (3) -
காமாலைக் கண்ணர்களுக்கு கண்டதெல்லாம்
மஞ்சள் என்றொரு சொலவடை உண்டு!
குற்றம் கண்டு பிடிக்கவேண்டும் என்ற ஒரே
சிந்தனை உள்ளவர்களுக்கு எதுவும் அப்படித்
தான் தெரியும்.
மறைந்த திரு வெங்கடராமன், காஞ்சி முனிவரின்
பக்தர் - அவரைத்தன் குருவாகும் வழிகாட்டியாக
வும் வணங்கி வாழ்ந்தவர்..அந்தக் குடும்பத்தினரின்
விருப்பமாக இப்படத்தை வைத்ததில் நிச்சயம்
தவறேதும் இருக்காது!
நாட்டுக் கொடி அவமதிப்பு, நமது கண்மணிகளுக்
குத்தான் கைதேர்ந்த கலை - மறைந்த தலைவருக்
கோ அல்லது அவரது குடும்பத்தனர்க்கோ அல்ல!
தினசரிகளில் வந்துள்ள செய்திகளைப் படித்துப்
பார்த்தாலே தெரியும் தலைவரது புகழ்.
May his soul rest in peace,
He is such a honest politician, He never involve in any sort of Scandals or Corruption case,
Very respectful Central Minister.
Nandhkumar B,Dubai
இ.வ ,
அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். ஆனால், ஒரு சில வெப்சைட்-கலை பார்க்கும் பொழுது பார்பனர்களை திட்டி கொண்டு இருக்கிறார்கள். tamilnadutalk.com சைட்-ல் , "வெங்கடராமன் சாவு" என்று போட்டு இருக்கிறார்கள். இதெல்லாம் நாகரீகமா? மேலும், கண்ட படி வசை பாடி இருக்கிறார்கள். இதெல்லாம் எங்கே ப்போய் சொல்லுவது?
he does not deserve any appreciation except that he could cling on to power for so many years without any problem
Post a Comment