திருமலை எழுத்தை படிப்பவர்களுக்கு BP எப்போதும் ஏறும் :-)
ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் இட்லி வடைக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள். பல விதங்களிலும் இது ஒரு சந்தோஷப் பட வேண்டிய செய்தி. வலைப் பதிவுகளை தொடர்ந்து நடத்துவது ஒரு அசாத்தியமான பணி. ஒரு விதக் கொள்கைகளுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கங்கள் சார்ந்த வலைப் பதிவாளர்களுக்கு வேண்டுமானால் தங்கள் கொள்கைகள் மீதுள்ள உந்துதலினால் தொடர்ந்து வலைப் பதிவு செய்வதும் தங்களுக்குள்ள பின்புலத்தினாலும், கிடைக்கும் பிரதிபலன்களினாலும் பல ஆண்டுகள் தொடர்வதும் இயல்பான ஒன்றாக இருக்கும். ஆனால் எந்தவித லாப நோக்கும் இல்லாமல், பிரதிபலன்களை எதிர்பார்க்காமால், குறுகிய நோக்கங்கள் இல்லாமல் வெறும் தன்னார்வத்தினால் மட்டுமே ஒரு வலைப் பதிவை வெற்றிகரமாக, பல லட்ச்சம் வாசகர்களைச் சென்றடையும் விதத்தில் நடத்தி வருவது நிச்சயம் நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒரு சாதனையே. அந்தச் சாதனையை நிகழ்த்திய இட்லி வடை(யர்களு)க்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும் உரித்தாகுக.
எனக்கு இட்லி வடை தளத்தை யார் நடத்துகிறார்கள் என்பது தெரியாது. ஒருவரா பலரா என்பதும் தெரியாது. கொள்கைகள், நோக்கங்கள், திட்டங்கள், பின்புலன்கள் ஏதும் உள்ளனவா என்பதும் தெரியாது. இருந்த போதிலும் கடந்த ஐந்து வருடங்களாக நான் தொடர்ந்து ஒரு இட்லி வடை ரசிகனாகவே இருந்து வருகிறேன். தினமலர், எக்ஸ்பிரஸ், நியுஸ் டுடே போன்ற அச்சு இதழ்கள் காலையில் கிடைக்காத குறையை அனுதினமும் காலையில் அருந்தும் காஃபியுடன் சேர்ந்து போக்குவது இட்லி வடையே. என் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக ஆகிப் போனது இட்லி வடை.
தமிழில் பொதுவாக, பெரும்பான்மையான இணைய தளங்களும், வலைப் பதிவுகளும் கடுமையான இந்திய துவேஷம், இந்து மத இழிவு, பிராமணக் காழ்ப்பு, இன வெறுப்பு, தீவீர்வாதம் போன்ற நச்சுக்களை மட்டுமே உமிழ்ந்து வருகின்றன. ஆபாசம், தனிநபர் துவேஷங்கள்,. மிரட்டல்கள், பளாக் மெயில்கள், நிறைந்த தமிழ் இணைய உலகின் நடுவில், தமிழ் இணைய்ம் என்றாலே மன நிம்மதியைக் குலைக்கும், பிரிவினைகளைத் தூண்டும், வன்முறை சார்ந்த, நாகரீகமானவர்கள் தவிர்க்க வேண்டிய இடம் என்ற சூழ்நிலையைப் போக்கி தமிழிலும் கூட ஆரோக்கியமாகவும், வெறுப்புணர்வின்றியும், நகைச்சுவையுணர்வுடனும், இந்திய தேசியத்தின் மீது நம்பிக்கையுடனும், எந்த மதத்தையும் இழிவு செய்யாத நோக்கத்துடனும் இயங்கி வரும், வந்த தமிழ் இணைய தளங்கள் வெகு சிலவே. முகமூடி, வந்தியத் தேவன், மாயவரத்தான், பாலா,செல்வன் ஆகிய சில நண்பர்கள் தமிழ் வலைப் பதிவுலகில் தொடர்ந்து இயங்கி வந்த பொழுதிலும், அவர்களுக்கு ஏற்பட்ட பணிச்சுமைகள்,. நேரமின்மை காரணமாக தொடர்ந்து எழுதி வ்ர இயலவில்லை.
பொதுவான வலைப் பதிவு முறையை விட்டு சற்றே விலகி, படிக்கச் சுவாரசியமான முறையில் இடை விடாது தொடர்ந்து இயங்கி வருவது இட்லி வடை மட்டுமே. இட்லி வடையை நடத்துபவரோ அல்லது நடத்தி வருபவர்களோ நிச்சயம் தொழில்நுட்பப் பின்ணணியில் உள்ள ஒரு 9-5 வேலையில் இருந்து வருகிறார்கள் என்றே நம்புகிறேன். அப்படிப் பட்ட வேலைப் பளுவிற்கும் நடுவே ஒரு வலைப் பக்கத்தை அதன் சுவாரசியம் குறையாமல் தொடர்ந்து 5 வருடங்கள் நடத்துவது என்பது அசாத்தியமான ஒரு சாதனையே. அந்த சாதனையை நிகழ்த்திய இட்லி வடையை பிரமிப்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்த்துகிறேன்.
இட்லி வடை என்பது செய்திகளை முந்தி அளிக்கிறது. இட்லி வடை அரசியல், சமூக. திரைப்பட நிகழ்வுகளை யார் மனதும் புண்படாத விதத்தில் மென்மையான அங்கதத்துடன் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. துணிவான விமர்சனங்களையும் எப்பொழுதும் தன் வாசகர்களிடம் பகிர்ந்து வருகிறது. போலி மதச்சார்பின்மை, இந்து மத வெறுப்பு, பிராமண காழ்ப்பு, தனி நபர் மிரட்டல்கள் போன்ற இழி செயல்களில் ஒரு பொழுதும் இட்லி வடை ஈடு பட்டதில்லை. தமிழ் திரட்டியில் இருந்து, தன் வாசக எண்ணிக்கைக் குறைந்து விடுமோ என்ற அச்சமின்றி வெளியேறும் துணிவு, நேர்மை, அராஜகத்தை எதிர்க்கும் தார்மீகக் கோபம் இட்லி வடையிடம் இருந்தது போற்றத்தக்கது. இந்தக் குணங்களினாலேயே இட்லி வடையின் அபிமான வாசகனாக நான் மாறினேன் என்பதைக் கூறத் தேவையில்லை. தமிழின் ஜனரஞ்சகமான இதழ்களான விகடன் குமுதத்திற்கும் அரசியல் நேர்மையும், உண்மையும் தெளிவும் கொண்ட துக்ளக் போன்ற இதழ்களுக்கும் நடுவே ஒரு இடத்தை தமிழ் இணையத்தில் இட்லி வடை நிரப்புகிறது. பல செய்திகளை நாம் செய்திப் பத்திரிகைகள், வார இதழ்களில் வருவதற்கு முன்பாகவே கூட இட்லி வடை மூலமாக அறிந்து கொள்கிறோம். தேர்தல் போன்ற பரபரப்பான சூழ்நிலைகளில் அபாரமான வேகத்தில் செய்திகளையும் விமர்சனங்களையும் அளித்து வந்துள்ளது இணையப் பதிவு என்பது வெறும் அரட்டை இடம் என்ற எண்ணத்தைப் போக்கி ஆக்கபூர்வமாகவும் இட்லி வடை பல பணிகளை ஆற்றியுள்ளது. எளியவர்களையும், ஏழைகளையும், உதவி வேண்டுபவர்களையும் இனம் கண்டு தன் வாசகர்கள் மூலமாக உதவிக் கரம் நீட்டும் புனிதமான சேவைகளையும் இட்லி வடை மேற்கொண்டு வருகிறது.
இட்லி வடை. இந்தச் சாதனைகளுக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
இட்லி வடைக்கு நிச்சயம் நேரம் கிடைப்பதும், கிடைக்கும் குறுகிய நேரத்தில் பல்வேறு தகவல்களையும் சேகரித்தும், விமர்சித்தும் வழங்குவது நிச்சயம் ஒரு சவாலான பணியாகவேதான் என்றும் இருந்து வரும் என்று நம்புகிறேன். இருந்தாலும் சாத்தியப் படும் எனில் இட்லி வடை தன் வட்டத்தைச் சற்றே விரிவு படுத்திக் கொள்ளலாம். மேலதிக ருசி கருதி ஒன்றுக்கும் மேற்பட்ட துறைசார்ந்த வடைகளைச் சேர்த்துக் கொள்வதோ, வெளியே முகம் காண்பிக்கத் தயங்கும் திறமையான ஒரு சில இட்லிகளை தன்னுடன் இணைத்துக் கொள்வதையோ இட்லி வடை பரிசீலிக்கலாம். ஏற்கனவே அப்படி இருக்குமாயின் எனது கருத்தைப் புறம் தள்ளவும். தமிழிலும். பொதுவாக இந்தியா சம்பந்தப் பட்டு வரும் நல்ல பல நூல்களை இட்லி வடை தன் வாசகர்களுக்கு இட்லி வடைக்கே உரிய சுவாரசியத்துடன் அறிமுகப் படுத்தலாம். வெறுமே திரைப் படத் தகவல்களை மட்டும் அளிப்பதற்குப் பதிலாக நல்ல திரைப்படங்கள் எங்கு காணப் பட்டாலும் இட்லி வடையில் இட்லி வடைப் பாணியில் அறிமுகப் படுத்தலாம். பொருளாதாரம் குறித்த தகவல்களையும், செய்திகளையும், விமர்சனக்களையும் அளிக்கலாம். இட்லி வடைக்குக் காணக் கிடைக்கும் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். ஜெயமோஹன் உபயத்தில் அதற்கான வாசகர் வட்டமும் விரிவடைந்துள்ளது. பரிசீலிக்கவும். அரசியல் விமர்சனங்களை இன்னும் ஆழமாகவும் விரிவாகவும் அலசலாம், அளிக்கலாம்.
இட்லி வடை வலைப் பதிவையும், அதன் ஆசிரியர் (களையும்) இன்னும் நூறாண்டிரும் என்று வாழ்த்துகிறேன். உங்கள் பதிவுகள் இன்னும் கோடிக்கணக்கான தமிழர்களைத் தன் வாசகர்களாகப் பெற்று அவர்களை திராவிட இயக்க பாசிச சக்திகளில் இருந்தும், திராவிட கட்சி மாயையைகளில் இருந்தும், இன வெறுப்பிலிருந்தும், சுயநலத்தில் இருந்தும் வெளிக்கொணர தொடர செயல் பட வேண்டும், செல்ல வேண்டிய தூரமும் காலமும் அதிகம் உள்ளது. நீண்ட பயணம் காத்திருக்கிறது. தமிழ் வாசகர்களை அறியாமையில் இருந்தும் கவர்ச்சியிலும் போலித்தனமான அரசியல்வாதிகளின் பிடிகளில் இருந்து மீட்டு அவர்களிடம் இந்திய தேசீய ஒற்றுமை உணர்வையும், சிந்தனைத் தெளிவையும் வெறுப்பற்ற சகோதர்த்துவத்தையும் வளர்க்க இட்லி வடை தொடர்ந்து செயல் பட வேண்டியது அவசியம். அந்த மேலான நோக்கங்களைச் செயல் படுத்த இட்லி வடைக்கு ஆண்டவன் நீண்ட ஆரோக்யமான ஆயுளையும், மன நிம்மதியையும் அளிக்கப் பிரார்த்திருக்கிறேன்.
வாழ்க, வளர்க,
அன்புடன் வாழ்த்தும்
ச.திருமலை
எழுதிய திருமலைக்கும், எடிட் செய்த இட்லிவடைக்கும் நன்றி
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, October 25, 2008
இட்லிவடைக்கு நீண்ட பயணம் காத்திருக்கிறது - திருமலை
Posted by IdlyVadai at 10/25/2008 11:47:00 AM
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










8 Comments:
Whoz next? PKS?!
////அரசியல் நேர்மையும், உண்மையும் தெளிவும் கொண்ட துக்ளக் போன்ற...////
Very good.
I don't think you people will change and mingle with mainstream Tamils.
Sathappan
எனது பின்னூட்டத்தில் உள்ள கடுமையைக் குறைத்து ஏகப் பட்ட கிரிமினல்களுக்கு பி பி ஏறாமல் பார்த்துக் கொண்ட இட்லி வடைக்கு அந்த கிரிமினல்கள் அல்லவா நன்றி சொல்ல வேண்டும் ?
அன்புடன்
ச.திருமலை
எல்லாம் சரிதான்.
இட்லி வடை நடத்தும் தமிழ் ரோபா பத்தி யாருமே சொல்லவில்லையே. இ.வ அதையும் கொஞ்சம் சொல்லுங்க..
ரோபோ படம் ஆரம்பித்த பிறகும் அதை பற்றி நீங்க பேசலாம் சங்கர் ஒன்னும் சொல்லமாட்டார்.
அன்புடன். கி.பாலு
///Very good.
I don't think you people will change and mingle with mainstream Tamils.
Sathappan////
சாத்தப்பன்
மெயின் ஸ்ட்ரீம்ல மிங்கிள் ஆகுறதுன்னா என்ன அங்கிள்?
கருணா சொல்றதுக்கெல்லாம் ஜால்ரா போடுறதா?
எனக்கு இட்லி வடை யாரெனத் தெரியும் ஆனால் பேசினபடி தமிழ்நாட்டு எம்பி எல்லாம் ராஜினாமா பண்ணினால்தான் சொல்வேன்
ஜிங்கிள் பிங்கிள் Ambi,
YES dear,
Sathappan
Idly Vadai nguraa paara Iyer Kadai maathi vaicha super aa erukum.
Post a Comment