ஒகேனக்கல் பிரச்சனையில், தனது பேச்சுக் குறித்துத் தகுந்த நேரத்தில் உரிய விளக்கமளித்து பதற்றத்தைத் தணித்ததற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு கர்நாடக அரசு நன்றி தெரிவித்துள்ளது.
"ஒகேனக்கல் விவகாரத்தில் தமிழ்த் திரையுலகினர் 8 மணி நேர உண்ணாவிரதத்தை மேற்கொண்டபோது, நடிகர் ரஜினி பேசிய கருத்துக்களால் பதற்றம் ஏற்பட்டது. தற்போது தான் பேசிய கருத்துக்கள் குறித்து அவரே விளக்கமளித்துள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது." என்று கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.
ரஜினிக்கு வடிவேலு ஆதரவு
தமிழ் சினிமா, தமிழ் மக்கள் நல்லாயிருக்கணும்னு எப்பவுமே சொல்றவர் அண்ணன் ரஜினி. அவரைப் போயி இப்படியெல்லாம் பேசுறாங்களே நம்மாளுங்க... ரொம்ப வருத்தமா இருக்குண்ணே...
யாருக்கு எப்போ வாய்ப்புக் குடுக்கணும்னு சரியா புரிஞ்சு, தெரிஞ்சு வச்சிருக்கிறவர் ரஜினி. அவர் என்னிக்குமே நம்ம ஆளுதாங்க. அவரை வேற மாநிலத்துக்காரரா பாக்கிறதே தப்பு.
யாரைப் பத்தி யார் பேசறதுன்னே ஒரு வரைமுறை இல்லாமப் போயிடுச்சி... அதனாலதான் போற வாரவிங்கெல்லாம் ஒரு கல்ல விட்டெறிஞ்சிட்டுப் போறாய்ங்க.
பெங்களூர்ல குசேலன் ஓடலன்னா அவருக்கு என்னங்க நஷ்டம்? அவருக்கென்ன கன்னட ரைட்ஸூக்கும் சேர்த்தா காசு கொடுத்தாய்ங்க. அவருக்கு இதுல சம்பந்தமே இல்ல


நன்றி: தினமணி










4 Comments:
//ரஜினிக்கு வடிவேலு ஆதரவு//
கண்டிப்பா, ஒரு காமடியனுக்கு சிக்கல்னா இன்னொரு காமடியன் ஆதரவு தரவேண்டியது தார்மீக கடமை.
NARATHAMUNI KARUTHU,SIRIPAI THARAVILLAI..SILA INA,MATHA,MOLI,VERIYARKALIN VEITHERICHALKALIN ORU THULI.
VOTTU PETTIELA RAJINI MATTER PODUPPA.ORU MAASAMA ORE MATTER ODTHU.
SOMNATH SATTERJI PATHI ELLAM EVANUKKU KAVALAI.?
ஓம் சதீஷ் அண்ணாச்சி, நான் யாரும் சிரிக்க வெக்க இத போஸ்ட் பண்ணல, சிரிக்க வெக்க தான் ரஜினி இருக்காரே. :-)
இன மத மொழி etc, could you please tell me which language i speak?, which religion i belong to? or which community i belong to ? , if that is the case, இதெல்லாம் தாண்டி ரஜினி தான் கிச்சு கிச்சு மூட்ராறு
Post a Comment