மதுரைமாவட்ட மக்கள்அனைத்து தொலைக்காட்சிசேனல்களையும்பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும், கேபிள்ஆபரோட்டர்கள்ராயல்கேபிள்விஷனில் இணையுமாறு ஆளும்கட்சியினரால்மிரட்டப்படுவதாகவும்அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வ ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். அறிக்கை கீழே...
துன்பங்கள் தனியாக வருவதில்லை, துரத்திக் கொண்டு வரும் என்ற பழமொழிக்கேற்ப, இரண்டு ஆண்டுகால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் பல்வேறு வழிகளில் புதுப்புது துன்பங்கள் தமிழக மக்களைதுரத்திக் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். அண்மையில் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ராயல் கேபிள் விஷன் என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருப்பதையும், அது விரைவில் தென் மாவட்டங்கள் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்திருப்பதையும் தமிழக மக்கள் நன்குஅறிவார்கள் என்றும் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவாக, மாறன் குடும்பத்திற்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்திற்கும், ராயல் கேபிள் விஷன் நிறுவனத்திற்கும் மிகப்பெரிய அளவில் தற்போது தகராறு ஏற்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ட்ராய் விதிப்படி பொதுமக்கள் பார்ப்பதற்குவசதியாக தொலைக்காட்சி நிறுவனங்கள், கேபிள் நிறுவனங்களுக்குதங்கள் சேனல்களைபாரபட்சமின்றி வழங்க வேண்டும் என்று ராயல் கேபிள் விஷன் நிறுவனமும், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மு.க. அழகிரி, கேபிள் ஆபரேட்டர்களை மிரட்டுகிறார் என்று சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனமும் ஒன்றைஒன்று பரஸ்பரம் குற்றம் சாட்டி அறிக்கைப் போரில் இறங்கியுள்ளதைசெல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவு என்னவென்றால், அனைத்து தொலைக்காட்சி சேனல்களையும் பார்க்க முடியாத அளவுக்குமதுரைமாவட்ட மக்கள் தள்ளப்பட்டிருப்பதாகவும், மதுரைமாவட்டத்தில் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள் ராயல் கேபிள் விஷனில் இணையுமாறு ஆளுங்கட்சியினரால் மிரட்டப்படுவதாகவும், இதுகுறித்த புகாரைஆளுங்கட்சியின் தலையீடு காரணமாக காவல் துறையினர் வாங்கவேமறுப்பதாகவும், தகவல்கள் வருவதாக அவர் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பப் பிரச்னைகாரணமாக, தமிழக மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனைஅளிப்பதாக செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமது ஆட்சிக் காலத்தில் கம்பி வட இணைப்பமைவு நிறுவனத்தார்களின் செயல்பாடு குறித்து புகார்கள் வந்ததால், பொதுமக்களுக்குவழங்கப்படும் வசதிகளில் குறைபாடு, அதிக அளவு கட்டணங்கள் வசூல் செய்தல், மக்கள் பார்ப்பதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக ஒருசில தொலைக்காட்சி அலைவரிசைகளைதெளிவில்லாமல் ஒளிபரப்பு செய்தல் போன்றவற்றைத் தடுப்பதற்குஏதுவாக, தமிழ்நாடு கம்பிவட தொலைக்காட்சி இணைப்பமைவு மற்றும் பன்முக சேவைஒளியிழைச் செய்தி பரிமாற்றம் உள்ளடங்கலான மேலாண்மையைகையகப்படுத்துதல், சொத்துரிமைமாற்றம், அதனைமேற்கொள்வதற்கான சட்ட முன்வடிவு 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருபத்து ஒன்றாம் தேதியன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதாக செல்வி ஜெயலலிதா கூறியுள்ளார். இந்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்ட அரைமணி நேரத்திற்குள், கருணாநிதி தயாநிதி மாறனுடன் ராஜ்பவனுக்குச் சென்று ஆளுநரைச் சந்தித்து இந்த சட்டமுன்வடிவுக்குஒப்புதல் தரக்கூடாது என்று கூறியதையும் செல்வி.ஜெயலலிதா சுட்டிக் காட்டியுள்ளார். இதற்குக் காரணம், அப்போது மாறன் குடும்பத்தினரிடமிருந்து கருணாநிதிக்குபணம் வந்து கொண்டிருந்தது-எனவே, சுயநலத்தின் காரணமாக மக்கள் நலனைகொல்லைப்புற வழியாகச் சென்று கருணாநிதி முடக்கினார்-ஆனால் தற்போது நிலைமைமாறுபட்டு, மாறன் குடும்பத்திற்கும் கருணாநிதி குடும்பத்தினருக்குமிடையேபிரிவினைஏற்பட்டதால் கருணாநிதி குடும்பத்திற்குவருமானம் வருவது நின்றுவிட்டது-இதில் தன் மகன் மு.க. அழகிரியின் பக்கம் நின்று குடும்ப வருமானத்தைப் பெருக்க கருணாநிதி தயாராகிவிட்டார் என்றும் செல்வி ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் தற்போது நிலவும் பிரச்னைகுறித்து மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதியிடம் கருத்து கேட்கப்பட்டபோது, அரசு கேபிள் கார்ப்பரேஷன் என மாநில அரசின் பொதுத்துறைநிறுவனத்தைதமிழக அரசேதொடங்கிநடத்த உள்ளதாகவும், அதன்மூலம் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கருணாநிதியின் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் பிரச்னைஏற்பட்ட ஒருசில மாதங்களிலேயேஇரண்டு தொலைக்காட்சி சேனல்களைஆரம்பித்த கருணாநிதிக்கு, அரசின் பொதுத்துறைநிறுவனத்தைத் தொடங்க என்ன தடைஇருக்க முடியும்? இதில் ஏன் தாமதம்? எல்லாம் சுயநலம்தான்!என்றும் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அப்படி அரசு கேபிள் கார்ப்பரேஷன் வந்தாலும், அதில் அரசியல் தலையீடு இல்லாமல் இருக்குமா? என்பதற்கும் எந்தவிதமான உத்தரவாதமும் இல்லைதன்னுடைய மகனைமீறி தைரியமாகச் செயல்படக்கூடிய நிலையில் மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதி இல்லைஎன்ற எண்ணம் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது என்றும் செல்வி.ஜெயலலிதா கூறியுள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் அநியாயமான விலைஉயர்வு, கட்டுமானப் பொருட்களின் கட்டுக்கடங்காத விலைஉயர்வு, மறைமுக பேருந்துக் கட்டண உயர்வு, தொடர் மின்வெட்டு, பணவீக்கம் அதிகரிப்பு, பெட்ரோல்-டீசல்-சமையல் எரிவாயு விலைஉயர்வு என பல்வேறு துன்பங்களைதமிழக மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில், கவலையைமறந்து ஏதோசிறிது நேரமாவது தொலைக்காட்சியில் தங்களுக்குவிருப்பமான நிகழ்ச்சியைப் பார்த்து பொழுதைக் கழிப்பதற்குவழியில்லாத நிலைமதுரைமாவட்டத்தில் தற்போது உருவாகிஉள்ளதாக செல்வி ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் படுகொலை, தினகரன் பத்திரிகைஅலுவலகம் எரிப்பு, அதன் காரணமாக 3 பேர் மரணம் ஆகியவற்றின் காரணமாக, பொதுமக்களும், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களும் செய்வதறியாமல் திகைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மரணபயம் மக்களைதற்போது கவ்விக் கொண்டிருக்கிறது- சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், பொதுமக்கள் அஞ்சி, நடுங்கிஅடிமைகள் போல் வாழந்து கொண்டிருக்கின்றனர்- இதுபற்றியெல்லாம் கவலைகொள்ளாமல், மாநாடு என்ற போர்வையில் ஆங்காங்கேஅரசுப் பேருந்துகளைமாநாட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தியும், கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்குவிடுமுறைஅளித்தும் மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதியும், அவரது குடும்ப உறுப்பினர்களும் பொதுமக்களைதுன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கருணாநிதிக்குஉண்மையிலேயேநாட்டு மக்கள் மீது அக்கறைஇருக்குமானால், மதுரைமாவட்ட மக்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப அனைத்து தொலைக்காட்சி சேனல்களையும் கண்டு மகிழ்வதற்கும், அங்குள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நிம்மதியாக இருப்பதற்கும் நியாயமான வழிமுறையைசுயநலமின்றி வகுக்க வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்வதாகவும் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். குடிமக்கள் அஞ்சி நடுங்கும்படியாக கொடுங்கோல் ஆட்சி நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும் என்ற வள்ளுவரின் வாக்கைஇந்தத் தருணத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, June 24, 2008
RCV X SCV - ஜெ அறிக்கை
Posted by IdlyVadai at 6/24/2008 03:15:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










0 Comments:
Post a Comment