எச்சரிக்கை: படிக்கும் போது, ரஜினி ரசிகர்கள் பக்கத்தில் இருக்க போகிறார்கள்.
நமது புராணங்கள் இதிகாசங்களில் இருந்து கதைகளை உருவி புதிய புதிய திரைக்கதைகளை உருவாக்குவதில் நம் சினிமாக்காரர்கள் சளைப்பதேயில்லை. ஒரு சத்யவான் சாவித்ரி கதையை ரோஜாவாக மாற்றிய சுஜாதாவைப் போல, ஒரு குசேலர் கதை அருமையான திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறார், மலையாளத்தின் திரைக்கதையாசிரியரும், வசனகர்த்தாவும் இயக்குனரூம் நடிகருமான ஸ்ரீநிவாசன். தன் அப்பாவித்தனமான விளக்கெண்ணெய் மூஞ்சிக்குப் பின்னால் அபாரமான திறமைகளை மறைத்து வைத்திருக்கும் படைப்பாளி. கத பறயும் போல் மலையாளத்தில் வந்த மற்றொரு இயல்பான, சிறப்பான திரைப்படம்.'குசேலன்' படத்துக்காக, மொத்தம் 600 பிரிண்ட்டுகள் போடப்படுகின்றன. படம், ஜூலை மாதம் திரைக்கு வந்துவிடும். மலையாள படத்தில் மம்முட்டி தோன்றியதை விட, 4 மடங்கு அதிகமான காட்சிகளில், ரஜினிகாந்த் இந்த படத்தில் தோன்றுவார்.
எதிர் நீச்சல், பாமா விஜயம், அன்புள்ள ரஜினிகாந்த் போன்ற எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பார்த்த காட்சிகளானுலும் கூட, ஸ்ரீநிவாசன் திரைப்படங்களின் ஆதார அம்சமான ஒரு பாமரனைச் சுற்றி நிகழும் சம்பவங்களும், பாத்திரங்களும் சேர்ந்து இந்தத் திரைப்படத்தையும் மற்றுமோரூ அருமையான திரைப்படமாக்குகிறது. ஸ்ரீநிவாசன் படங்களின் சிறப்பே அதன் கச்சிதமான திரைக்கதையமைப்பும், இயல்பான பாத்திரங்களும், இயற்கையான நிகழ்வுகளும், சினிமாத்தனம் இல்லாத இயல்பான இயற்கையான கதையுமேயாகும்., இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல, ஒரு நல்ல படம் என்றால் இப்பட்டித்தான் இருக்க வேண்டும் என்ற திருப்தியை ஸ்ரீநிவாசனின் பல வெற்றிப் படங்களைப் போலவே இந்தக் கதை பறயும் போளும் அளிக்கிறது.
இதற்கு முன்னால் நெம்பர் 20 மெட்ராஸ் மெயில் என்னும் ஹாஸ்ய த்ரில்லரில் மம்முட்டி , நடிகர் மம்முட்டியாகவே படம் முழுக்க வருவார். ஷூட்டிங்கிற்காக திருச்சூரில் இருந்து மெட்றாஸ் போகும் மெயிலில் ஏறும் நடிகர் மம்முட்டிக்கும் அதே டிரெயினில் பயணப் படும் ஒரு இளைஞர் பட்டாளத்திற்கு ஏற்படும் சிக்கல்களை சுவாரசியமாகச் சொல்லும் சினிமா அது..இந்தப் படத்திலும் சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஒரு சின்ன மலைக் கிராமத்துக்கு ஷூட்டிங்கிற்காக வர, அவரது வருகக அதே கிராமத்தில் தன் அன்றாட வாழ்க்கைக்கே போராடிக் கொண்டிருக்கும் ஒரு ஏழை அப்பாவி பார்பரின் வாழ்வில் ஏற்படுத்தும் வேடிக்கையான மாற்றங்களே கதை பறயும் போளின் கதை.
பார்ப்பர் பாலனின் பார்பர் ஷாப் ஒரு சின்ன பத்துக்குப் பத்து அறையும், அதில் ஒரு காலொடிந்த மர நாற்காலியும், ரசம் போன கண்ணாடியும் தேய்ந்து போன கத்திரியுமே ஆகும். அந்த சின்ன பார்பர் தொழிலுக்கும் ஒரு போட்டி வந்து விட நொடித்துப் போகும் பாலனும் அவரது மனைவி குழந்தைகளும் மூன்று வேளைச் சோற்றிற்கே லாட்டரி அடிக்கிறார்கள். ஏழ்மையிலும் தனக்கு இருக்கும் கவுரவத்தையும் மதிப்பையும் விட்டுக் கொடுக்காமல் தன் துடுக்கான பேச்சினால் தன்னை மேலும் காயப் படுத்திக் கொள்ளும் அப்பாவி பார்பர் பாலன். கிராமத்தினரின் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகும் பிழைக்கத் தெரியாத அப்பாவி. தூங்கி வழியும் அந்த கேரள மலைக் கிராமத்தில் திடீரென்று ஒரு சுவாரசியம் பரபரப்புக் கிளம்பி விடுகிறது. அருகில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் கேரளத்தின் சூப்பர் ஸ்டார் நடிக்க வருகிறார் என்ற செய்தி காட்டுத் தீயாகப் பரவுகிறது. கிராமம் முழுக்கப் பரபரப்புத் தொற்றிக் கொள்கிறது. கிராமத்திற்கு அது ஒரு திருவிழாவாகி விடுகிறது. எல்லோருக்கும் சூப்பர் ஸ்டாருடன் நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ள ஆசை. ஆனால் தனிமையை விரும்பும் மம்முட்டியோ மெஷின் கன் ஏந்திய கமாண்டோக்கள் படை சூழ, யாரும் நெருங்க முடியாமல் கெஸ்ட் ஹவுசில் தங்கியிருக்கிறார். இந்த இடத்தில் பார்பர் பாலனும், சூப்பர் ஸ்டாரும் ஏதோ ஒரு காலத்தில் நெருங்கிப் பழகிய பள்ளித் தோழர்கள் என்ற விஷயம் பாலனின் பிள்ளைகள் மூலமாக பறவைக் காய்ச்சல் போல ஊர் முழுக்கப் பரவி விட, பாலனின் அன்றாட இயல்பு வாழ்க்கை அடியோடு மாறி விடுகிறது. பிள்ளைகளின் பள்ளிக் கூடம் முதல் உள்ளூர் பணக்காரர்கள் வரை பலரும் பாலனை சூப்பர் ஸ்டாரின் அறிமுகத்திற்காக நெருக்குகிறார்கள். இயல்பிலேயே கூச்ச ஸ்வாபியான பாலனுக்கோ தன்னை அத்தாம் பெரிய நடிகர் இன்னமும் நினைவில் வைத்திருப்பாரா, வைத்திருந்தாலும் எப்படி நடத்துவார் என்ற அச்சம், வெட்கம் தயக்கம். அந்த தயக்கமேஎ அவரை சூப்ப்ர் ஸ்டாரைப் போய்ப் பார்ப்பதைக் கூட தவிர்க்க வைக்கிறது. அவரது தயக்கம் அவரைப் பல்வேறு சிக்கல்களில் மாட்டி விடுகிறது. சூப்பர் ஸ்டாரின் வருகையும் அது அந்தக் கிராமத்தில் ஏற்படுத்தும் பரபரப்பையும், பாலனின் வாழ்வில் ஏற்படுத்தும் சிக்கல்களையும் அளவான நகைச்சுவையுடன் சொல்லுகிறது. இறுதியில் சூப்பர் ஸ்டார் பாலனை அடையாளம் கண்டு கொண்டாரர, நிஜமாகவே நட்பு இருந்ததா என்பதையெல்லாம் உணர்ச்சி பூர்வமான ஒரு கிளைமாக்ஸில் நகர்த்துகிறார்கள்.
இந்தப் படத்தின் வெற்றிக்கு முழு முதல் காரணம் அதன் திரைக்கதையும் அதன் திரைக்கதையாசிரியரான ஸ்ரீநிவாசனுமேயாகும். பார்பர் பாலனாகவும் ஸ்ரீநிவாசனே நடித்திருக்கிறார். புது இயக்குனர் மோகனன் இருக்கும் இடம் தெரிய விடாமல் ஸ்ரீநிவாசன் படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் . ஸ்ரீநிவாசனின் நடிப்பு பலருக்கும் பிடிக்காது. உணர்ச்சிகளளக் காட்டாத ஒரு விளக்கெண்ணெய் முகம். இருந்தாலும் அதுதான் அவரது பலமும் கூட. நடிக்காமலேயே இயற்கையாகவே இருப்பதுதான் ஸ்ரீநிவாசனின் சிறப்பே. அவரது மனைவியாக வரும் மீனா தான் இந்தப் படத்தின் ஒரே இயல்பற்ற பாத்திரம். ஒரு கிராமத்து ஏழை பார்பருக்கு இத்தனை அழகான ஒரு மனைவி, திருத்தப் பட்ட இமைகளுடனும் தன் நளினம் குறையாமல் இருப்பது கொஞ்சம் இடறுகிறது. மற்றபடி கவிஞரரக வரும் சலீம் குமார், டீக் கடை மாஸ்டர் மம்மக் கோயா, ஸ்ரீநிவாசனின் பிள்ளைகள், போட்டி பார்பர் ஷாப் ஜகதீஷ், பிரின்ஸிபாலாக வரும் பி ஏ சி லலிதா , வட்டிக்கு விடும் பணக்காரரான இன்னனசண்ட் மற்றும் ஏராளமான கிராமத்து ஆட்கள் என்று அனைவரும் வெகு இயல்பாக நடித்திருக்கிறார்கள். மலையாளப் படங்களின் அசுர பலமே இந்த காரெக்டர் ஆர்டிஸ்டுகள்தான். கதையை இவர்கள்தான் நடத்திச் செல்கிறார்கள். இயல்பான முகங்களும் பேச்சுக்களும் நம்மை ஒரு நிஜமான கேரள மலைக் கிராமத்திற்கே இட்டுச் சென்று விடுகின்றன. சூப்பர் ஸ்டாராக வரும் மம்முட்டிக்கு எண்ணி சில ஃப்ரேஎம்கள்தான் ஆனால் நம்மை நெகிழ்த்தி விடுகிறார். ஒரு சூப்பர் ஸ்டாருக்கான பள பளப்புடனும், கவர்ச்சியுடனும் மிளிர்கிறார். இவருக்கு மட்டும் வயதே ஆவதில்லை,. எம் ஜி ஆர் போல ஏதேனும் காய கல்பம் சாப்பிடுகிறாரா என்பது தெரியவில்லை. இறுதிக் காட்சியில் நம்மை உருக்கி விடுகிறார். சந்தேகமில்லாமல் இந்தியாவின் உன்னதமான நடிகர்களில் ஒருவர் மம்முட்டி. சினிமாவில் ஒரே ஒரு பாடலும் நடனத்தையும் தவிர அதிகப் படியான காட்சிகளோ, உணர்ச்சி வசப் படுடுத்தும் பேத்தோஸ் காட்சிகளோ ஒரு மில்லி கிராம் கூட கிடையாது. அப்படி ஒரு யதார்த்தம். சினிமாப் பார்ப்பவர்களைக் கேனையர்களாக நினைத்துக் கொண்டு காண்பிக்கப் படும் ஃபிளாஷ் பாக்குகள் அறவே கிடையாது (அதற்கான வாய்ப்புகள் இருந்த போதிலும்). கத பறயும் போள் பிரமாதமான சினிமாவோ , கலைப் படைப்போ கிடையாது. எளிமையான , இயல்பான ஒரு சினிமா, பார்த்து விட்டு வரும் பொழுது எவ்வித எரிச்சலையோ, நம்பகமில்லாத யதார்த்தமில்லாத காட்சிகள் தரும் அஜீரணமோ இல்லாத, ஒரு இனிய உணர்வை அளிக்கும் சினிமா, அவ்வளவுதான். மீண்டும் சொல்கிறேன் தமிழ் நாட்டில் இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் இப்படி ஒரு சினிமா வரவே வராதுதான் இருந்தாலும், சினிமாக்காரர்கள் பின்னால் வெறி பிடித்து அலைவதில் மலையாளிகளும் தமிழர்களுக்குச் சற்றும் சளைத்தவர்களில்லை என்று இந்தப் படம் காண்பிப்பது ஒரு அல்ப திருப்தியை அளிக்கிறது :))
இயல்பான , யதார்த்தமான சினிமாத்தனங்கள் அற்ற இந்த சினிமாவில் கதா பாத்திரங்களுடன் முக்கியமாக நடிப்பது கேரளாவின் பசுமை, மலைகளின் பிரமிப்பு, கொஞ்சும் எழில். இது வரை நாம் கண்டிராத ஒரு கேரள எழில் இந்தப் படத்தில் விரிகிறது. ஒரு இடத்தில் ஸ்ரீநிவாசன் தன் பிள்ளைகருடன் ஒரு ஆற்றுப் பாலத்ஹ்தின் மேல் நடந்து வர மெதுவாகக் காமிரா அந்த இடத்தின் பின்னணியை விழுங்குகிறது. அடடா காணக் கண் கோடி வேண்டும், நிஜமாகவே இறைவன் தன் இயற்கை அருளை பரிபூர்ணமாக அருளிச் செய்த பிரதேசம். ரப்பர் காடுகளும், மலைகளும், மலைகளின் மீதிலிருந்து இறங்கும் பிருமாண்டமான அருவிகளும், நதிகளூம், ஒடுங்கி ஓடும் மலைப் பாதைகளும், பாலங்களும், படத்திற்கு ரம்யமான ஒரு பின்புலத்தை அளிக்கின்றன. இயற்கையான இந்தப் பின்புலங்கள் இயற்கையான ஒரு கதையுடனும் நடிப்புடனும் இணைந்து நமக்கு ஒரு திருப்தியான நல்ல சினிமாவைப் பார்த்த மகிழ்ச்சியான அனுபவத்தை அளிக்கின்றன.
இப்படியாகப் பட்ட ஒரு நல்ல சினிமாவின் மீது யாரோ திருஷ்டிக் கண் போட்டு விட அதற்கு பிடித்திருக்கிறது கேடு காலம். ஆம் அந்தத் துரதிருஷ்ட செய்தியை ஏன் கேட்கிறீர்கள் போங்கள் !! இந்தப் படத்தைத் தமிழில் எடுக்கப் போகிறார்களாம்? இதை விட விசனமான ஒரு செய்தி என்ன இருக்க முடியும்? அதை விட வருத்தம் தரும் விஷயம் இதை மசாலா மன்னன் பி.வாசு , மசாலா நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கப் போகிறாராம். ரஜினியின் ரசிகர்களை ஏமாற்றாமல் அவருக்கு ஜோடி, சண்டை, காமெடி, நடனம் எல்லாம் வைக்கப் போகிறேன் என்று உறுதியளித்திருக்கிறார். இந்திய பீனல் கோடின் படி மனிதக் கொலை செய்பவர்களுக்கு மட்டும்தான் மரண தண்டனை அளிக்க முடியுமா?
நல்ல சினிமாக்களை தேடி கண்டுபிடித்து சின்னா பின்னமாக்கி படு கொலை செய்யும் இந்தப் பி.வாசுக்களை எப்படி தண்டிப்பது? பி.வாசுவிடமிருந்தும் ரஜினியிடமிருந்தும் இந்தக் கதை பறயும் போளை அந்தக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
இந்தப் படத்தைத் தமிழில் எடுத்தால் எப்படி எடுப்பார்கள் என்று கற்பனன செய்தால் நினைக்கும் பொழுதே நெஞ்சு பதறுகிறது. நல்ல சினிமா ரசிகர்கள் இந்தப் பி. வாசுவைக் கடத்திக் கொண்டு போய் ஆப்ப்கானிஸ்தானத்தில் விட்டு விட்டால் கத பறயும் போள் பிழைத்துப் போகும். ரஜனிகாந்துக்கு ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை? யாரரவது இமய மலைச் சாமியார் அவருக்கு எடுத்துச் சொல்லப் படாதா?
ஏற்கனவே பரதம் என்றொரு நல்ல சினிமாவை எடுத்துப் கைமா செய்தவர் இதே பி.வாசுதான், அதை நாசமாக்கியது பத்தாது என்று வெறி தீரரமல் அதில் நடிக்க வேறு செய்தார். அப்புறம் மணிச்சித்திர தாழ் இப்பொழுது கத பறயும் போள், இந்த ஆளுக்கு மலையாள சினிமா மேல் அப்படி என்னதான் காண்டு? ஏனிந்த கொலை வெறி?
நாம நினைத்த மாதிரியே ஒரு நல்ல மலையாளப் படத்தை எடுத்துக் கொத்து புரோட்டா போடக் கிளம்பிட்டாய்ங்க பி.வாசு தலைமையில். ஒரு சாதாரண சினிமாவுக்கு இவனுங்கள மாதிரி யாரும் பில்டப் கொடுக்க முடியாது சாமிகளா. நாலு சண்டையாம், ஐந்து டூயட்டாம், ஸ்ரீநிவாசனுக்கு நிஜமாகவே ரஜனிகாந்த் ஃபிலிம் இன்ஸ்டியுட் சக மாணவராம். ஐயோ பாவம் ஸ்ரீநிவாசன் :))
தமிழில் இந்தப் படத்தை ரஜினிகாந்த்தை வைத்து குசேலன் என்று எடுத்தால் அது இப்படி இப்படி எல்லாம் கொத்து புரோட்டாச் செய்யப் பட வாய்ப்புகள் ஏராளம். சாம்ப்பிளுக்குச் சில:
கத பறயும் போள்... இதெல்லாம் ஒரு படம், சே! இப்படி ஒரு திராவையான படத்தை நான் சமீபத்தில் பார்த்ததில்லை. ஏனென்றால்:
1. மம்முட்டி வரும் முதல் சீன். கார் வந்து நிற்கிறது. மம்முட்டி இறங்கி, எல்லாருக்கும் கை காண்பித்துவிட்டு போய்விடுகிறார். ஒரு intro song இல்லை. சந்திரமுகியில் வருவது போல் ஒரு சண்டைக்காட்சியுடனாவது ஆரம்பித்திருக்கலாம். இவனெல்லாம் என்ன ஹீரோ?
2. சீனிவாசனுக்கு மீனா ஜோடி. ஒரு டூயட் கூட இல்லை. அப்புறம் எதுக்கு மீனா? அட்லீஸ்ட், மீனா படம் நடுவில் மல்லாந்து படுத்துக்கொண்டு பார்பர் பாலன் பணக்காரன் ஆவது போல ஒரு கனவுப் பாட்டு வைத்திருக்கலாம். ஸ்விஸ்- ல்லெ ஒரு பாட்டு, சங்கர் மகாதேவன் பாடி. அப்படி எதுவும் இல்லை இந்தப் படத்தில்.
3. மம்முட்டியும் சீனிவாசனும் பால்ய காலத்து நண்பர்களாம். ரெண்டு பேருக்கும் என்ன உறவு என்பதை ஒரு சில வாக்கியங்களிலேயே சொல்லி முடித்துவிடுகிறார்கள். அட, ஒரு flashback இல்லை. sepia tone-ல்லெ ரெண்டு பசங்களும் ஒண்ணா மாங்காய் சாப்பிட்டு, ஒரே கட்டிலில் படுத்து, இளையராஜா "அறியாத வயசு"ன்னு பாடி விஸ்தாரமா காட்டாம, என்ன இது? மம்முட்டி 2 நிமிஷத்தில் பேசி முடிச்சிடறார்.
4. படம் நடுவில் போர் அடிக்கிறது. இண்டெர்வல் முடிஞ்சு ஒரு குத்துப் பாட்டு இருந்தா நல்லா இருந்திருக்கும். ஒண்ணையும் காணோம்.
5. சீனிவாசனின் மகளாக வரும் பெண் ரொம்ப அழகாக இருக்கிறாள். அவளை வச்சு ஒரு லவ், ஸ்கூல்ல பசங்க அடிக்கும் லூட்டி-ன்னு டெவலப் பண்ணியிருக்கலாம்.
"யூத்"தை கவர் பண்ணியிருக்கலாம். அப்படியெல்லாம் இவங்க யோசிக்கவே இல்லை.
இப்படி ஒரு படத்தை தியேட்டர் போயி பார்த்தமேன்னு இருக்கு. பி.வாசு இந்த திரைக்கதையை கொஞ்சம் சரி பண்ணி, செதுக்கி, தமிழ் மக்களின் ரசனைக்கேற்றவாறு மாத்தி, நம்ம யூத்துக்கும் தாய்க்குலத்துக்கும் கோடானுகோடி ரஜினி ரசிகர்களுக்கும் பிடிக்கற மாதிரி மாத்துவார்ன்னு காத்திட்டிருக்கேன். அப்பவாவது இந்தப் படம் உருப்படுமா பார்க்கலாம்.
இதை தமிழ்ப் "படுத்தினால்" முதல் சீனிலேயே ரெண்டு ஷூக்கள் க்ராஸ் பண்ணித் தெரியும் அதை விலக்கினால் அதன் பின்னால் தலையைச் சிலுப்பிக் கொண்டு ரஜனி குதிப்பார் அப்புறம் ஒரு சண்டை போடுவார். அவரது அம்மா அவரைக் கல்யாணம் செய்யச் சொல்லி கெஞ்சுவார். அவரோ தன் நண்பனைத் தேடிக் கண்டுப் பிடித்த பின்னர்தான் திருமணம் என்று சொல்லி விடுவார்.
அப்புறம் ஷீட்டிங் போகும் இடத்தில் ஒரு ஸ்கூல் பெண்ணை ரவுடிகள் வம்பிழுக்க சும்மா பறந்து பறந்து பறந்து அடி பின்னுவார். அப்புறம் பார்த்தால் அந்தப் பெண் தேடிக் கொண்டிருக்கும் பெண்ணாய் இருப்பாள் இருந்தாலும் தெரிய வராது.
ஷூட்டிங் நடக்கும் கிராமத்தில் பொது இடத்தை வில்லன் ஆக்கிரமித்திருப்பான், அவனை வதம் செய்து வள்ளல் ஆவார் உடனே ஊர் காரர்கள் எல்லோரும் சேர்ந்து பாடி ஆடுவார்கள். அப்புறம் ஊரில் ஒரு சின்னப் பெண்ணை அவர் பேத்தி வயதில் டாவடித்து டூயட் பாடுவார்.
அப்புறம் பார்த்தால் நண்பனின் தங்கையாக இருக்கும். ஷூட்டிங்கிற்கு வரும் கதாநாயகியும் அவரை நினைத்து ஒரு தலையாக ஒரு பாடல் பாடுவார். அப்புறம் நண்பனை நினைத்து சின்ன வயதுக்குப் போய் விடுவார் அங்கும் பாட்டு. ஆட்டம். இப்படியாகக் கதை போய் கடைசியில் அந்த நண்பனைக் கண்டு பிடித்து விடுவார்.
ஐயா ரஜினி ரசிகர்களே, காலிலே விழுந்து கெஞ்சிக் கேட்டுக்கிறேன், ப்ளீஸ். உங்களுக்கு நிஜ ரஜினிகாந்த் படம் வேண்டுமானால் கொஞ்சம் பி.வாசுவிடம் சொல்லி நெம்பர் 20 மெட்ராஸ் மெயில் சினிமாவை எடுக்கச் சொல்லுங்கள். அதில் மம்முட்டிக்குப் படம் முழுக்க ரோல், ரஜினிகாந்தும் நடிகர் ரஜினிகாந்தாகவே வரலாம், அதில் டூயட், சண்டை என்று தூள் கிளப்பி விடலாம், மோகன்லால் காரெக்டருக்கு மோகன்லாலைத்தான் கூப்பிட வேண்டும் தமிழ் நாட்டில் அது போன்று நடிக்க ஒரு சும்பனும் கிடையாது. தயவு செய்து பி. வாசுவுக்கு ஃபோன் போட்டு ஸ்ரீநிவாசன் கதையை விட்டு விடச் சொல்லுங்கள் சாமிகளா. புண்னியமாகப் போகட்டும். ஸ்ரீநிவாசன் சினிமாக்களில் அவர் எல்லோருக்கும் இளப்பமாக வருவார் இப்ப பாத்தால் தமிழ் நாட்டில் உள்ள தங்கர் பச்சன், பி.வாசு போன்ற கோமாளிகளுக்கும் அவர் இளப்பமாகப் போய் விட்டார். கென்னியின் மனைவி தங்கமானவர். கென்னிக்குக் காழ்ச்சாவை தமிழில் செய்ய வேண்டும் என்ற ஒரு விபரீத ஆர்வம் பொத்துக் கொண்டு வந்த பொழுது காலில் கையில் விழுந்து டைவர்ஸ் செய்து விடுவேன் என்றெல்லாம் மிரட்டி அந்த விபரீத ஆசையைப் போக்கடித்துக் காழ்ச்சாவைக் காப்பாற்றினாராம், அந்த மாதிரி ரசனையுள்ள பெண்ணரசி இந்த ரஜினிக்கு மனனவியாக அமையாமல் போய் விட்டாரே என்னே மலையாளத்துக்கு வந்த சோதனை, எண்ட குருவாயூரப்போவ் :(((`குசேலன்' படத்துக்காக, மொத்தம் 600 பிரிண்ட்டுகள் போடப்படுகின்றன. படம், ஜூலை மாதம் திரைக்கு வந்துவிடும்.
- பி.வாசு
மலையாள படத்தில் மம்முட்டி தோன்றியதை விட, 4 மடங்கு அதிகமான காட்சிகளில், ரஜினிகாந்த் இந்த படத்தில் தோன்றுவார்.
நயன்தாரா, இந்த படத்துக்காக, தன் தோற்றத்தில் விசேஷ அக்கறை எடுத்துக் கொண்டார். குறைவாக சாப்பிட்டு, சீக்கிரமாக தூங்கி முகத்திலும், உடம்பிலும் வசீகரத்தை அதிகரித்து கொண்டார்.''
வாசகர்கள் வழக்கம் போல் தங்கள் கொத்து புரோட்டாக்களை கமெண்ட் பெட்டியில் போடலாம் :-)
( பிகு: இந்த கட்டுரை எனக்கு மெயிலில் வந்தது. சில பகுதிகளை எடிட் செய்து வெளிட்டுள்ளேன் - இட்லிவடை )
குசேலன் பற்றி சினிமா நிருபர் தரும் தகவல்கள்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, June 27, 2008
குசேலன் - படம் வரும் பின்னெ விமர்சனம் வரும் முன்னே
Posted by IdlyVadai at 6/27/2008 02:10:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










27 Comments:
பி ஏ சி லலிதா அல்ல, கே.பி.ஏ.சி லலிதா.
Rajini Padam Masala Padam, Avaruku Actinge Theriyathu appadi ippadinu summa 25 yearsa sollikitte avaroda yellam padathiyum parthu arivu jeevi madri comment pannuranga irukum varai, Rajini thaan Super Star
IV,
As a Rajini fan, I thank you for publishing this. This article is like a Dhrishti Poosanikkai before the release of Kuselan.
After seeing the excellant & stylish Thalaivar in Kuselan stills, I feel this kind of Dhrishti and that too before the movie's release, will pave the way for the HUGE SUCCESS of Kuselan.
I remember in Karnan movie, whatever arrows sent by Arjun to kill Karnan will fall as garlands on the shoulders of Karnan. Lord Krishna will explain it as due to the extensive Dharmam done by Karnan.
In similar vein, during MGR's rein as CM of TN, whatever bad Karunanidhi used to talk about him, will end up as INCREASED vote/seat for MGR and AIADMK.
Now, its the turn of Super Star Rajini. Please go ahead all you Rajini-baiters, We need your blessings & continue your tirade against Rajini. so that his movies can scale greater & greater heights & increase your Stomach-burning to unhealthy levels.
Hi,
I feel this as a publicity given to Idlyvadai site. Yaanai irunthaalum aayiram pon iranthaalum aayiram pon. I like your site and I am a regular reader, but I still don't understand why you negatively criticise Superstar this much. Superstar is the only human being who gives respect to others opininon (even PMK), thats he is growing. I go with Arunachalam comment its like Dhrishti poosanikkai.
Hi,
I feel this as a publicity given to Idlyvadai site. Yaanai irunthaalum aayiram pon iranthaalum aayiram pon. I like your site and I am a regular reader, but I still don't understand why you negatively criticise Superstar this much. Superstar is the only human being who gives respect to others opininon (even PMK), thats he is growing. I go with Arunachalam comment its like Dhrishti poosanikkai.
பிகு: இந்த கட்டுரை எனக்கு மெயிலில் வந்தது. சில பகுதிகளை எடிட் செய்து வெளிட்டுள்ளேன் - இட்லிவடை
IV, I definitely have to agree to the views expressed in the email. One recent proof is Chandramukhi. Leave alone, copying the movie but Vasu failed to even acknowledge the script. Idhukku enna solreenga?
Dear IV,
Better to put a disclaimer for this article or else this article may leave a negative impact on you.
எமது நிருபர் வலைப்பூவில் குசேலன் பற்றிய சிறப்பு கட்டுரையை வெளியிட்டுள்ளோம். நேரமிருந்தால் அதை ஒருமுறை வந்து படித்து செல்லுங்கள் இட்லிவடையாரே...!
http://nirubar.blogspot.com/2008/06/blog-post_20.html
ஐயா ரஜினி ரசிகர்களே நீங்களாவது உங்கள் ரசனையை மாற்றுங்களேன்.கத பறையும்போள் கதைய கொத்துபரோட்டா ஆக்கிடாதீங்க
சினிமா நிருபரே... நீங்க சொல்லவே வேண்டாம், உங்க பதிவுகளை தவறாமல் படித்து வருகிறேன்.
நன்றாக இருக்கிறது உங்க பதிவுக்கும் ஒரு லிங்க் தந்துள்ளேன்
நன்றி
Thank you Idlyvadai.
rightly said (the person who sent the email)...
but i guess it is too late..i am sure, the Chalna for parotha is now being prepared !
எனக்கும் அந்த பயம் இருக்கு... நிச்சயம் கொடுமையா தான் இருக்கும் என்று திடமாக நம்புகிறேன்.
அதற்கான காரணம்ங்கள்:
பரதம் (மலையாளம் ) தேசிய ஆவார்ட் வரை வாங்கிய படம், தமிழில் சீனு என்று இதே வாசு சாவடிச்சாரி அந்த கதையையும், நம்மளையும். (அந்த படம் தான்னு தெரியாம போய் இந்த சீனு கருமத்தை பார்த்தேன் :((((
அடுத்து, மணிசித்ரதாள் ஒரு அருமையான தேசிய ஆவார்ட் வாங்கிய படம், அதையும் சந்திரமுகியா பிரிச்சு, கிழிச்சு காயப்போட்டாரு நம்ம வாசு.(அந்த படம் ஓடின தியேட்டர் பக்கம் போவதை கூட அவாய்டு பண்ணிட்டேன்!, குறிப்பா சாந்தி தியேட்டர் என்னை ரெம்ப தொல்லை பண்ணிட்டாங்க எவ்வள்வு நாளூ!!)
"இப்ப கத பரயும் போள்" இதையும் அழிச்சிட்டுத்தான் அடங்குவேன் என்று ஒரே முடிவோட இறங்கியிருக்காரு...
விதி வலியது! வேற என்ன சொல்ல...
பி.கு: மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் மம்முட்டியா அவர் நடிக்கலைன்னு நினைக்கிறேன்! அனேகமா ஏதோ ராஜ்பரத் (அ)ராஜ்குமாரோ என்னவோ அந்த மாதிரி ஒரு பேரு!
ஆம் சூப்ப்ர் ஸ்டார் அஷோக்ராஜாக ஒரு ரிசர்வ்ட் பெர்சனாலிட்டியாக நடித்திருக்கிறார். நிச்சயம் வானத்தில் பறந்து சண்டை போடுவதில்லை, அவர் வரும் காட்சிகளே குறைவு நிச்சயமாக அது ஒரு முழு ஸ்ரீநிவாசன் சினிமா. அதில் மம்முட்டி ஒரு கவ்ரவ வேடம் அவ்வளவே.
ராஜா: நன்றி ஆம் அவர் பெயர் பே பி ஏ சி லலிதா தட்டச்சுப் பிழை அது
இட்லி வடை வாசுவின் இனிஷியல் பீ வெறும் பி அல்ல. அவர் அப்பா பெயர் பீதாம்பரம். பீதாம்பரம் எம் ஜி ஆரின் மேக்கப் மேன். நீங்கள் பி என்றே அடித்திருக்கிறீர்கள். இது உங்கள் எடிட்டிங்கா அனுப்பியவர் அப்படி அனுப்பவில்லையே :)))
தன் இனிஷியலைப் போலவே சினிமாவையும் எடுத்து மலையாளத்தில் வரும் நல்ல படங்களள சின்னா பின்னமாக்கி படு கொலை செய்யும் இந்தப் பீ வாசுக்களை எப்படி தண்டிப்பது? பீ வாசுவிடமிருந்தும் ரஜினியிடமிருந்தும் இந்தக் கதை பறயும் போளை அந்தக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்
ஏற்கனவே பரதம் என்றொரு நல்ல சினிமாவை எடுத்துப் பிரிச்சிப் பீ யாக்கியவர் இதே பீ வாசுதான்
பீ வாசு நிச்சயமாக இந்தக் கத பறயும் போள் கதையை அவரது இனிஷியலாக்கி விடுவார் :))
//இந்திய பீனல் கோடின் படி மனிதக் கொலை செய்பவர்களுக்கு மட்டும்தான் மரண தண்டனை அளிக்க முடியுமா?
//
Appadiye valimozhigiren. Ennai poruthavarai intha padathai 'Thavamaai Thavamirunthu' Cheran-nidam koduthirukkalaam....ennai porutha varaiyil avarthaan better choice.
//சினிமா நிருபரே... நீங்க சொல்லவே வேண்டாம், உங்க பதிவுகளை தவறாமல் படித்து வருகிறேன்.
நன்றாக இருக்கிறது //
நிசமாவா? மூன்றாந்தர கிசுகிசுக்கள் அவ்வளவு பிடிக்கும் இட்லியாருக்கு. சர்தான்.
இட்லிவடை வலைப்பதிவை அதிமுக வாங்கி விட்டதா ? :((
\\
இட்லிவடை வலைப்பதிவை அதிமுக வாங்கி விட்டதா ? :((
\\
இங்க போயி பாருங்க கொடுமைய
http://aiadmk9.blogspot.com/
இப்படிக்கு
இட்லிவடை தினமும் தின்பவன்
சந்திரமுகி ஒன்றும் ரஜினியின் வழ்க்கமான படம் இல்லை - ரஜினி பார்முலாவில் இருந்து சற்றே விலகி இருந்த படம் அது. அதை மசாலா படம் என்று சொன்னால் என்ன செய்வது? ஹீரோயின்னுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட முதல் ரஜினி படம் அது தான்.
இரண்டாவதாக, குசேலன் படம் வருவதற்குள் அந்த படத்தை காரி துப்ப யாருக்கும் உரிமை கிடையாது. ஓர் இரண்டு வாரம் காத்திருங்கள் :-)
அடடா ரொம்ப வயிறு எரிந்து போய் இருக்காங்க போல இருக்கு.
ஒரு கப் ஐஸ் கிரீம் சாப்ட்டா வயித்துக்கு குளுகுளுன்னு இருக்கும். என்ன தான் முக்கி முக்கி இந்த மாதிரி எழுதினாலும்......
என்னமோ போங்க :-)
என்ன தான் திட்டினாலும் ரஜினி, தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத சக்தி தான்.
அவரின் ஆரம்ப கால படங்களின் போக்கிலேயே விட்டிருந்தால் அவரும் ஒரு மிக சிறந்த நடிகராகி இருந்து இருப்பார். ஆனால் அவரை ஒரு வியாபாரி-ஆக உருவெடுத்ததில் தமிழ் சினிமாவின் பெரும்பாலான producers மற்றும் directors-களுக்கும், ஏன் தமிழ் ரசிகர்களுக்கும் பெரும் பங்கு உண்டு.
வாசுவிடமிருந்து ரஜினி-யையும் யாராவது கைப்பற்றினால் தேவலை.
ஐயோ கடவுளே :))! இப்பதான் மைக் முனுசாமி சொன்னத பார்த்து சந்தோஷமா சிரித்துக்கொண்டு இருந்தேன்..அதுக்குள்ள என்ன டென்ஷன் ஆக்கிட்டீங்க... இவ்வளவும் பேசிட்டு குசேலன் படம் பார்க்க முத ஆள போய் நிப்பீங்க எனக்கு தெரியும்.... :) பரவாயில்ல ரஜினி பத்தின பதிவுகளில் தான் உங்களுக்கு நெறைய பின்னூட்டம் வருது போல ... அவரால மறைமுகமா நீங்களும் பயனடைகிறீர்கள்.... ஒரு வேலை கமலும் இட்லிவடையின் அங்கமோ.. இருக்கலாம்.. பிழைச்சு போங்க.
Stomach burning to the extreme levelllllllllllllllllllllll
p.vasu maadiri padangalai kedukaaravangalai nallaa thitti irukkaaru, naan romba santhosha padren..aanaa, malayala actors maadiri natural acting kodukka ingeyum aalunga irukkaanga, but directors avangalai use pannikka maattengaraanga...mohanlal-i vida nallaa nadikkavum inge aalunga irukkaanga...adanaale tamil actors-i eppavum koraichi ezhudaatheenga...avangalukku sariyaana vaippu vazhangaatha directors-i thittunga....
this is a very good movie - but nobody shoudl watch it in atheatre. within aweek, they'll screen it in kalaignar tv
Post a Comment