ஜெ அறிக்கைக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்..
நாள் தவறினாலும் அறிக்கை மூலமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஜெயலலிதா இன்றைய தினம் விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசிலே உள்ளவர்கள் இன்னமும் தன்னுடைய ஆலோசனையைக்கேட்டுக் கொண்டு தான் நடக்கிறார்கள் என நினைத்துக் கொண்டு, மத்திய அரசு கூட்டியுள்ள ஒரு கூட்டத்திற்கு தமிழக அரசின் முதல்-அமைச்சர் என்ற முறையில் கலைஞரை அழைத்திடக் கூடாது என்ற வகையில் கருத்தினைத் தெரி வித்திருக்கிறார்.
மத்திய அரசோ, அதிலே உள்ள அமைச்சர்களோ யாரும் இந்த அம்மையாரைத் திரும்பிப் பார்க்கத் தயாராக இல்லை. ஆனால் இன்னமும் பழைய நினைப்புடா பேராண்டி என்பதைப் போல தாண்டிக் குதித்து முதல்-அமைச்சர் கலைஞரை பற்றி யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையிலே கையெ ழுத்திட்டு பத்திரிகைகளில் அவை வராதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்.
தனது தோழமைக் கட்சிகளை இவர் மதிப்பதைப் போலத்தான் மற்ற கட்சிகளும் மதிப்பார்கள் என்று கருதிக் கொண்டு விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர், தமிழக முதல்-அமைச்சர் சொல்லித்தான் கூறியிருப்பார் என்றும் ஜெயலலிதா கதை அளந்திருக்கிறார்.
விடுதலைப்புலிகளுக்கு தி.மு.கழக அரசு வெளிப்படையாக ஆதரவு அளித்து வருவதைப் போல தொடர்ந்து ஜெயலலிதா அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்.
விடுதலைப்புலிகளுக்கு எம்.ஜி.ஆர். உதவி செய்ததைப் போல கருணாநிதி செய்ய வில்லை என்றும், பங்களா தேஷ் பிரச்சினையில் இந்திய அரசு உதவி செய்ததைப் போல விடுதலைப்புலிகளுக்கு இந்திய அரசு உதவிட முன் வரவேண்டுமென்றும், விடுதலைப்புலிகளின் தலை வரான பிரபாகரனுக்கு ஏதாவது ஒரு தீங்கு நேரிட்டால் அதனை தமிழ்ச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது என்றும், ஜெயலலிதா கொடுத்த பேட்டிகள் இன்னமும் பழைய ஏடுகளில் அப்படியே உள்ளன. அதையெல்லாம் மறந்து விட்டு தற்போது ஜெயலலிதா விடுதலைப்புலிகளின் எதிர்ப் பாளராக மாறி, அவர்களுக்கு எதிராக அறிக்கை விடுவது மட்டுமல்லாமல், தி.மு.கழக அரசு அவர்களை ஆதரிப் பதைப் போலவும் கூறிக் கொண்டிருக்கிறார்.
ராஜீவ் காந்தியை கொன்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் 1999-ல் உறுதி செய்து எட்டு ஆண்டுகள் ஆகியும் அது இன்னமும் நிறைவேற்றப்படவில்லையே, அது ஏன் என்று ஜெயலலிதா தனது அறிக்கையிலே கேட்டி ருக்கிறார்.
யாரைப்பார்த்து இந்தக் கேள்வியை அவர் கேட்கிறார்ப 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஜெய லலிதா இருந்தார். அப்போது என்ன செய்து கொண்டி ருந்தார்ப இப்போது யாரைப்பார்த்து கேள்வி கேட்கிறார்.
வன்முறையைப்பற்றி ஜெயலலிதா அறிக்கையிலே கூறியிருக்கிறார். வன்முறைக்கு அகராதியை எடுத்துப்பார்த்து அர்த்தம் தேடினால் அதற்கு ஜெயலலிதா என்று போட்டிருந்தால் தானே பொருத்தமாக இருக்கும். இவரது ஆட்சியில் நடக்காத வன்முறைகளா இன்னொரு ஆட்சியிலே நடந்து விடப் போகிறது.
விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்த வன்னியரசு என்பவர் நீதிமன்றத்தினால் ஜாமீனில் விடப்பட்டதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி தான் காரணம் என்றும் தொடர்ந்து ஜெயலலிதா புலம்பி வருகிறார். நீதிமன்றம் ஜாமீனில் ஒருவரை விடுவித் தால் கூட, அதற்கு அரசும் முதல்-அமைச்சரும் தான் பொறுப்பாப ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அப்படித் தான் நடைபெற்றதா?
தமிழக முதல்-அமைச்சர் ஏதோ தேச துரோகம் செய்து விட்டதாக ஜெயலலிதா தொடர்ந்து ஒரு கருத்தைச் சொல்லி வருகிறார். இது குறித்து நீதிமன்றத்திற்கே சென்று அவர் மீது வழக்கு தொடர வேண்டும். கலைஞர் ஆட்சிக்காலத்திலே இருந்த போது ஜெயலலிதாவைப் போல வழக்குகளைச்சந்தித்துக் கொண்டிருக்கிறாரா? அல்லது அரசாங்க நிலத்தை அடி மாட்டு விலைக்கு வாங்கி தன் பெயரிலும், தன் தோழி பெயரிலும் பட்டா போட்டுக் கொண்டாராப கொடநாடு எஸ்டேட்டை வாங்கினாரா?
விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களான பால சிங்கம், தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு கருணாநிதி இரங்கல் தெரிவிக்கலாமா என்பதைப்பற்றி ஜெயலலிதா மீண்டும் மீண்டும் பெரிய குற்றமாகக் கூறுகிறார். ஒருவர் இறந்ததற்காக இரங்கல் தெரி விப்பது என்பது மனித நேயப்பண்பாடு. அதற்கும் அம்மையாருக்கும் வெகு தூரம்.
மத்திய அரசைப் பார்த்து முதல்-அமைச்சர் கருணாநிதி எப்படி மத்திய அரசின் கூட்டத்திற்கு அழைத்தீர்கள் என்று கேட்கிறார். அதற்கு வேறு ஒன்றும் காரணமில்லை. இந்த அம்மையாருக்கு பொறாமை, வயிற்றெரிச்சல், தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதன் காரணமாக இப்படி யெல்லாம் அறிக்கை விடுகிறார்.ë
தமிழ்நாட்டில் அரசு நன்றாக நடைபெறுகிறது. உதாரணத்திற்கு இன்று கூட மிகப்பெரிய நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு தான் நுழைந்ததாக கூறப்படும் ஐந்து நக்சலைட்டுகள் தமிழக காவல் துறையினரின் திறமையான முயற்சியின் காரணமாகப் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன் பேசுவதைப் பற்றி அறிக்கை விடும் ஜெயலலிதா, அதே கருத்தை எதிரொலித்து அறிக்கை விடும் வைகோவிற்கு எதிராக வாய் திறக்காமல் இருக்க என்ன காரணம்? இந்தியா இலங்கை அரசுக்கு ராணுவ உதவி செய்யக்கூடாதென்று விடுதலைப்புலிகளுக்கு ஆதர வாக பட்டவர்த்தனமாக வைகோ பிரதமருக்கு கடிதமே எழுதியிருக்கிறாரே, அதைப் பற்றி ஜெயலலிதா அம்மையார் விமர்சிக்காததற்கு என்ன காரணம்ப ஒரேயொரு துணையாக இருக்கும் அவரையும் இழந்து விடக் கூடாது என்பது தானா?
முதலில் ஜெயலலிதா இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு, அதன் பின்னர் தி.மு.கவைப்பற்றியும், தலைவர் முதல்வர் கருணாநிதி பற்றியும் அறிக்கை விட முன் வரட்டும்!
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, December 19, 2007
கருணாநிதியை விமர்சிப்பதா? - ஜெக்கு துரைமுருகன் கண்டனம்!
Posted by IdlyVadai at 12/19/2007 04:56:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










3 Comments:
right question.
அமைச்சர் EVKS இளங்கோவனின் கமெண்ட்..
''தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் திருமாவளவனாக இருந்தாலும் சரி, பெருமாவளவனாக இருந்தாலும் சரி. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்''
அப்போ வைகோ மீது என்ன நடவடிக்கை எடுப்பார்கள்...??
இதெல்லாம் தெரிஞ்சி தான் வை கோ பொத்திக்கிட்டு இருக்காராகும்....
கருணாநிதி, ராமதாசை எதிர்கொள்ள ஆற்காடு வீராசாமியை இறக்கி விட்டதை போல இப்ப ஜெயலலிதாவுக்கு துரைமுருகனா?
Post a Comment