`குர்பானி' கொடுக்க 41 ஒட்டகங்கள் தயார் ! என்ற பதிவை தொடந்து இந்த செய்தி....
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒட்டகங்களை வெட்ட தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. பக்ரீத் பண்டிகைக்காக குர்பானி விருந்து தயாரிப்பதற்காக ஏராளமான ஒட்டகங்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இவற்றை வெட்டி, பக்ரீத் பண்டிகைக்காக குர்பானி விருந்து தயாரிக்கப்பட உள்ளது. இந்தநிலையில் ஒட்டகங்களை வெட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர்கள் எஸ்.எம். சுப்பிரமணியன், ராஜேந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு
( கடந்த ஆண்டு இதே போல ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்ட போது அவற்றை பலியிட எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. மிருகவதை தடுப்பு சங்கத்தி னரும், வக்கீல் ராஜேந்திரனும் இந்த வழக்கை தொடர்ந்து இருந்தனர்.
அதையடுத்து ஒட்டகம் வெட்ட ஐகோர்ட்டு தடை விதித்தது. பின்னர் சில நிபந்தனைகளுடன் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. )
நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, சசிதரன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மிருகவதை தடை சட்டத்தின் கீழ் ஒட்டகங்களை வெட்ட அனுமதிக்கக் கூடாது என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், ஒட்டகங்களை வெட்ட தடை விதிக்க முடியாது என்று கூறினர். இந்த வழக்கு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி அன்று உயிர் விட்ட ஒட்டங்கள் அப்போது சொர்கத்துக்கு போய் இருக்கும்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, December 20, 2007
ஒட்டகங்களை வெட்ட தடையில்லை - கோர்ட்
Posted by IdlyVadai at 12/20/2007 02:30:00 PM
Subscribe to:
Post Comments (Atom)











0 Comments:
Post a Comment