ஸ்டாலின் முடிசூட்டு விழா அழகிரியால் கெட்டது என்று ஜெ அறிக்கை
கருணாநிதி தனது மகனுக்கு முடிசூட்ட விரும்பி நடத்தப் பட்ட இளைஞர் அணி மாநாடு பெரும் தோல்வியில் முடிந்துள் ளது. அந்த மாநாட்டின் முடிவு, கருணாநிதி குடும்பத்து அண்ணன் "செங்குட்டுவனால்' முறியடிக்கப்பட்டதால், எனக்குப் பிறகு இன்னார் என்று ஸ்டாலினை அடையாளம் காட்டும் விழாவாக மட்டுமே நடந்து முடிந்திருக்கிறது.
நெல்லை நகரத்தையே ஒரு போர்க்கால சூழலுக்கு ஆளாக்கி அங்கு வசிக்கும் மக்கள் வெளியே நடமாடக் கூடாது என்று நகர பஸ்களை ஓடாமல் நிறுத்தினர். வர்த்தக நிறுவனங்களை மூடச் செய்து, ஆட்டோ போன்ற வாகனங்கள் இயங்கக் கூடாது என்று மிரட்டியதெல்லாம் மக்களாட்சியில் உலகில் எங்காவது நடைபெற்றது உண்டா?
தி.மு.க.,வினர் பயணம் செய்த 186 அரசு மற்றும் தனியார் பஸ்கள் அடித்து நொறுக்கப் பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. மேலும், பல பஸ்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனியார் பஸ்களுக்கு அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் டீசல் நிரப்பிச் சென்றுள்ளனர்.
பஸ்களில் மதுபான பெட்டிகள் வைக்கப் பட்டு அனுப்பப்பட்டிருக்கின்றன. மாநாட்டுக்கு பெரும்பகுதி மின்சாரம் கொக்கி போட்டு திருட்டுத் தனமாக எடுக்கப்பட்டிருக்கிறது. மாநாட்டுப் பந்தலில் தங்க வைக்கப் பட்டவர்கள் காலைக் கடன்களைக் கழிக்க மாநகர டவுன் பஸ்கள் தாமிரபரணி ஆற்றங்கரை வரை இயக்கப்பட்டு, அங்கு இறங்கி, அந்தப் பகுதியையே மாசுபடுத்தி மாபெரும் கழிப்பிடமாக மாற்றி விட்டார்கள். தி.மு.க.,வினரை தங்க வைக்க பள்ளி நிர்வாகிகளை மிரட்டியுள்ளனர். தங்கியவர்கள் பள்ளிகளை பயன்படுத்த முடியாத அளவுக்கு பாழ்படுத்தி விட்டனர்.
ஓயாத மழை, தொடர் வெள்ளப் பெருக்கு, சாவு எண்ணிக்கை 40க்கு மேல் உயர்ந்து விட்டது. வீடுகளை இழந்த மக்கள் தங்கும் இடம், உணவு, தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். வீடுகளில் கழிவுநீர், வெள்ள நீர் புகுந்து வெளியேற்ற முடியாமல் திணறுகின்றனர். சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன. யாரும் மக்களுக்கு உதவி செய்யவில்லை.
தமிழகத்தில் அரசாங்கம் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. என் ஆட்சியாக இருந்தால் இந்நேரம் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டிருப்பேன்.
மாநாடு நடத்திய களைப்பில் அமைச்சர் ஸ்டாலின் கேரளாவில் குமரகத்தில் ஓய்வெடுக்கிறார். கருணாநிதி டில்லியில் இருந்து கொண்டே, "உடல் நலமில்லை' என்று கூறி முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுக்கிறார். வெள்ளப் பகுதிகளை எந்த அமைச்சரும் எட்டிப் பார்க்கவில்லை. மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, December 22, 2007
முடிசூட்டு விழா அழகிரியால் கெட்டது - ஜெ
Posted by IdlyVadai at 12/22/2007 10:18:00 AM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










0 Comments:
Post a Comment