நடிகர் சஞ்சய் தத்துக்கு இடைக்கால ஜாமீன் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு -
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் தண்டனை வழங்கி மும்பை தடா கோர்ட் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சஞ்சய் தத் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார். தடா கோர்ட்டின் முழுமையான தீர்ப்பு விவரம் கிடைக்காததால், தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர முடியாத நிலையில் உள்ளார் சஞ்சய் தத். தீர்ப்பின் முழு விவரம் தரப்படாததன் அடிப்படையில், தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி, சஞ்சய் தத் உட்பட ஐந்து பேர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு நடிகர் சஞ்சய்தத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, August 20, 2007
சஞ்சய் தத்துக்கு இடைக்கால ஜாமீன்
Posted by IdlyVadai at 8/20/2007 12:38:00 PM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)











0 Comments:
Post a Comment