நேற்று அன்னையர் தினம், அரசியல் பரபரப்புக்கிடையில் மறந்தோம். சரி ஒரு கவிதை ( சத்தியமாக நான் எழுதவில்லை )
என் கணவன் நீ
என் துணைவன் நீ
எனக்குக் காய்ச்சல் கண்ட
ஒரு நாள் காலையில்
காய்கரி நறுக்கித்
தரும்படி கேட்டேன்
கத்தி கேட்டாய்
எடுத்துத் தந்தேன்
காய்களைக் கேட்டாய்
பொறுக்கித் தந்தேன்
நறுக்கிப் போட்டதும்
கண்ணாடியோடு
போப்பர் படிக்கப்
போய் விட்டாய் நீ
தோலை அள்ளித்
தூசியை அள்ளிக்
கூட்டிப் பெருக்கி
முடித்து வைத்தேன்
இன்னொரு நாள்
இந்த வீடு முழுவதும்
அப்பிக் கிடந்த
குப்பை முழுவதையும்
கூட்டிப் பெருக்க
உன்னைக் கேட்டேன்
துடைப்பம் கேட்டாய்
எடுத்துத் தந்தேன்
நாற்காலிகளை நீ
மடக்க சொன்னாய்
பேப்பர்களை நீ
மடிக்கச் சொன்னாய்
கூட்டிப் பொருக்கிக்
குப்பையைக் குவித்துப்
போட்டபடியே
குளிக்க போனாய்
முறத்தை எடுத்துக்
குப்பையை வாரி
வெளியிலெறிந்து
முடித்து வைத்தேன்
காதலில் வந்தாய்
கலவியில் இருந்தாய்
அப்புறம் உனக்கு
ஆயிரம் வேலை
பத்து மாதமும்
நித்த்மும் வளர்த்துப்
பாதியில் விடாமல்
பையனைப் பெற்று
நாந்தான் அதையும்
முடித்தேன் கண்ணா
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, May 14, 2007
பாதியில் விடாமல்
Posted by IdlyVadai at 5/14/2007 11:14:00 PM
Labels: கவிதை
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










5 Comments:
யதார்த்தத்தைச் சுட்டும் கவிதை. யார் எழுதி இருந்தாலும் வாழ்த்துக்கள்.
everyday affair in all houses where women are trying to assert themselves.'nee sonnathane enakkku pathiram enge irukkinnu theriyum'.this, after living in the same house for nearly six years!!!!!!sametime, have a western man as guest,..staying with your family..washing dishes, wiping them ,placing them in the correct cabinets...the list is endless, just as the list of undone work by indian men.
thank you idly vadai. instead of a 'senti 'thaikuppin tharam dialogue, this poem is more real.
Arumaiyaana kavithai..
Ezhuthiyavarin peyerayum include seithirukkalaam.
Shyam தெரியவில்லை, ஒரு கேள்வி பதிலில் இதை படித்தேன். அதிலும் எழுதியவரின் பெயர் போடவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லலாம்.
அருமையான கவிதை.
எழுதியவருக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment