டிஸ்கி: இந்த பதிவிற்கும் சில தமிழ்மணம் பதிவுகளுக்கும் சம்பந்தம் உண்டு. நெஞ்சு வலி, வயத்தெரிச்சல், கோழைகள், சுயநலவாதிகள் வேறு பதிவுகளை நாடலாம். பொதுநலவாதிகள், பகுத்தறிவு சிங்கங்கள் மேற்கொண்டு படிக்கலாம்.
இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சிகள் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் கடந்த வாரம் நடைபெற்ற முழு அடைப்பு பெரும் வெற்றி பெற்றதாக தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் அறிவித்துள்ளார். டாக்டர் கலைஞர் ஏன் எல்லா கட்சிகளையும் கூட்ட வேண்டும் ? என்று சில சுயநலவாதிகள் சிந்தித்தார்கள். அரசே ஒரு வேலை நிறுத்தத்தை அறிவிக்ககூடாது என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதை சமாளிக்க, பொன் விழா காணும் நம் தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிகள் நடத்தும் பந்த் அறிவித்தார். ஆனால் அரசு நிறுவனங்கள், போக்குவரத்துக்கு எல்லாம் விடுமுறை அறிவித்தார்.
கர்நாடகம் காவிரி விஷயத்திலும், கேரளம் முல்லைப் பெரியாறு விஷயத்திலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன ? நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை ஏற்க மறுத்தது ஓர் அவமதிப்பு ; அரசே முன்னின்று பந்த் நடத்தியது மற்றோர் அவமதிப்பு. ஆக டபுள் அவமதிப்பு. இதை பாராட்டாமல் கேலி சித்திரம் போட்டு வலைப்பதிவில் மறுபதிப்பு செய்யும் அறியாமையை என்ன என்று சொல்லுவது ?
இட ஒதுக்கீடு பற்றி உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடனேயே பிரச்சினையின் முக்கியத்துவம் காரணமாக முழு அடைப்பு பற்றிய அறிவிப்பும் உடனேயே வந்தது. ராமதாஸோ அல்லது ஜெயலலிதாவோ முந்திக்கொண்டார்கள் என்றால் என்ன செய்வது ? என்று சில சுயநலவாதிகள் சிந்திக்கிறார்கள்.
பல பேர் பஸ் ஸ்டாண்டிலும், ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் ரெஸ்ட் எடுத்தார்கள், பரிட்சைக்கு செல்லும் மாணவர்கள், வாக்கிங் போனார்கள், ஆட்டோகள், பஸ்கள் ஓடாததால் எறிபொருளை சேமிக்க முடிந்தது, நகரம் அமைதியாக இருந்தது. பொருளாதார ரீதியிலோ, தமிழகத்துக்குக் கோடிக் கணக்கில் நஷ்டம். ஆனால் அவர்கள் வெளியில் போய் உழைத்திருந்தால் வெயிலில் அவதிப்பட்டிருப்பார்கள் இது யாருக்கும் புரியவில்லை. பந்த அமைதியாக நடந்ததால் எல்லோரும், சன் டிவியில் 'காசேதான் கடவுளடா' படம் பார்த்து சனிக்கிழமை எண்ணை தேய்த்து குளித்தார்கள். கோழி கறி சாப்பிட்டார்கள். இதனால் இந்த பந்த் வெற்றி பெறவில்லை. கடைசியாக ‘சமூக நீதிக்கு மக்களிடமிருந்து கிடைத்த அமோக ஆதரவு’ என்று சன் டீ.வி.யில் அறிவித்த்ததால் பந்த் வெற்றி பெற்றது. இதை புரிந்துக்கொள்ளாமல் சில சுயநலவாதிகள் பிதற்றுகிறார்கள்.
சில பிரிவினரை இட ஒதுக்கீடு தந்து அவர்களை கைக்குள் போட்டுக்கொள்வது, தமிழக அரசு பணிகள் மற்றும் கல்விநிலையங்களில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியான முடிவுகளை அரசு மேற்கொள்ளும் என்று அறிவித்து, ஜாதி அரசியலை ஊக்கிவித்து பிரித்து ஆளும் தந்திரத்தை சிலர் நக்கலடிக்கிறார்கள். இவர்கள் தான் சுயநலவாதிகள். ஏன் என்று சிந்தித்தால் காரணம் உங்களுக்கு புரிந்துவிடும்.
கலைஞர் எல்லோரையும் மரியாதையாக போற்றிவார். போற்றிய லிஸ்ட் இதோ மூதறிஞர் ராஜாஜியை "குல்லுகபட்டர்' (சதிகாரர்) என்றார்; கர்மவீரர் காமராஜரை "அண்டங் காக்கா' என்று அர்ச்சித்தார்; கக்கன்ஜியை "கக்கன் என்ன கொக்கா' என்று நஞ்சைக் கக்கினார்... ஜாம்பவான் பக்தவச்சலனாரை குரங்கு போல் கார்ட்டூன் போட்டார்; வாழப்பாடியாரை "வழிப்போக்கன்' என்றார்; மூப்பனாரை "காவேரி, தென்பெண்ணைப் பாலாறு... மூப்பனார் மூளையில் கோளாறு' என்றார்; எம்.ஜி.ஆரை "மலையாளி, கூத்தாடி, கோமாளி' என்றார்; நாவலரை "நெடுமரம்' என்றார்; நாஞ்சிலாரை "மந்திரக் கோல் மைனர்' என்றார்; ஆர்.வி.,யை "கைபர் கணவாய் வழி வந்தவரே' என்றார்; ஹிந்து பத்திரிகையை "மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு' என்றார்...
துக்ளக் சோவை "சொட்டைத் தலையர், பபூன்' என்றார்; குமுதம் எஸ்.ஏ.பி.,யை "குள்ள நரி' என்றார்; ப.சிதம்பரத்தை "செட்டி நாட்டு சின்னப் பையன், சீமான் வீட்டு கன்றுக் குட்டி' மற்றும் சமீபத்தில் "ஈ, எறும்பு, கொசு' என்றார்; பேராசிரியரை "வெறும் உதவி விரிவுரையாளர் தான்' என்றார்; அரசியல் சட்ட அறிஞர் இரா.செழியனை "ஈனப்பிறவி' என்றார்; வைகோவை "கள்ளத் தோணி, கலிங்கப்பட்டி களிமண்' என்றார்; பா.ஜ.,வை "தீண்டத்தகாத கட்சி' என்றார்...
வாஜ்பாய், அத்வானியை "விஷ ஜந்துக்கள்' என்றார்; பா.ஜ., தலைவர்களை "பண்டாரம், பரதேசி, காவி உடை, கமண்டலம், ஆக்டோபஸ்' என்றார்; பா.ஜ., பொதுச் செயலாளர் எச்.ராஜாவை "கூஜா' என்றார்; முதல்வர் ஜெ.,யை "பாப்பாத்தி, பத்ரகாளி, காந்தாரி' என்றார்; ஒட்டு மொத்த இந்துக்களை "திருடன்' என்று திட்டினார்; இரண்டு கோடி தமிழக வாக்காளர்களை "பருத்தி விதை, தவிடு, புண்ணாக்கு தின்னும் மாக்கள், வாழை மட்டைகள், மடச் சாம்பிராணிகள், புத்திகெட்ட ஜென்மங்கள், சோற்றால் அடித்த பிண்டங்கள்' என்றார்.
இந்திராகாந்தியை, "கிராப் வெட்டிய காஷ்மீர் பாப்பாத்தி' என்றும், பெருந்தலைவர் காமராஜரை, "கோமாளி ராஜா' என்றார். ரஜினி பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு அளித்து "வாய்ஸ்' கொடுத்துள்ளதால், "மராட்டியரே, கர்நாடக வழி வந்தவரே, கண்டக்டரே, பரட்டையரே, கோமாளியே, கூத்தாடியே...' என்றார். தினமும் பஜனை செய்து, கடைசி வரை 'ராம் ராம்' என்று சொன்ன காந்தியை கலைஞர் பின்பற்றுகிறார், என்று சொன்னால் மிகையாகாது. இது தெரியாமல் சில சுயநலவாதிகள் தூற்றுகிறார்கள்.
இன்று உச்சநீதிமன்றத்தில் வந்த இந்த வழக்கு, முதலில் விசாரணைக்கு வந்தபோது, அந்த வழக்கைத் தொடர்ந்த இளைஞர் இயக்கம், ஸ்ட்ரைக் செய்து கொண்டிருந்தது. அப்போது வந்த இடைக்கால உத்திரவு, அரசு தரப்புக்குச் சாதகமாக அமைந்தது. அந்த நிலையில் ஸ்ட்ரைக் நிறுத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறிய அறிவுரையை ஏற்று, அந்த இளைஞர் இயக்கம் ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்றது. "இப்போது, சுப்ரீம் கோர்ட்டை சற்றும் மதிக்காமல், இடைக்கால தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசே முன்வந்து பந்த் நடத்துகிறது. இளைஞர்களுக்கு இருக்கிற பொறுப்புணர்வு, அரசுக்கு மட்டும் வேண்டாமா?' விஜயன் அவர்கள் எழுப்புகிற கேள்வி பகுத்தறிவு இல்லாமல் கேட்கப்படும் கேள்வி. இவர்களை சுயநலவாதிகள் என்று சொல்லுவதை தவிற வேறு என்ன சொல்லமுடியும்.
1931 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்டவர்களைப் பற்றிய ஒரு முடிவு எடுப்பது சரியல்ல; இந்த பழைய கணக்கெடுப்பின் அடிப்படையில் 27 சதவிகித இடஒதுக்கீடு என்று நிர்ணயம் செய்யப்படுவது ஏற்க முடியாதது என்று உச்சநீதிமன்றம் பிதற்றுகிறது. குழந்தையை கேட்டால் கூட சொல்லும், கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் யாரையும் முன்னேற்றவில்லை என்று. குழந்தைக்கு தெரிந்தது, உச்சநீதி மன்றத்துக்கு தெரியவில்லை. இவர்களுடைய பென்சிலால் எந்த சமயத்தில் சித்திரம் வரையும் என்று தெரிந்திருக்கும். ஆம் இவர்கள் தாம் சுயநலவாதிகள்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, April 09, 2007
தமிழக பந்த் பற்றி சுயநலவாதிகள்
Posted by IdlyVadai at 4/09/2007 12:29:00 PM
Labels: அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










33 Comments:
அப்பா, சூடு தாங்கவில்லை.
தமிழகத்தில் மட்டுமல்ல இணையத்திலும் வெடிமருந்துகள் கேட்காமல் வெடிக்கிறது.
நீங்க பார்ப்பனருங்களா இட்லிவடை? இல்லை பார்ப்பன அடிவருடியா?
இப்படிப் பாசிஸமாகவே எழுதுறீங்களே!!
உங்கள் கையில் என்ன ஆயுதம் இருக்குதுன்னு சொல்லிட்டீங்கன்னா எங்க கையில எதை எடுக்கணும்னு பகுத்தறிவோட சுயமரியாதையா முடிவெடுக்க வசதியா இருக்கும்!
பார்ப்பனக் குள்ளநரித்தனத்துடன் பாசிஸமா மட்டும் எப்போதும் நீங்க எழுதி நாங்க என்ன எழுதினாலும் அது பெயிலிஸமா போறமாதிரி எங்களை எழுத வைக்க வந்தேறிகளின் 5000 ஆண்டு பூணூல் சதி இது!
ஈவெராமட்டும் இல்லைன்னா நீங்க எழுதுறது பச்சைப் பாசிஸம் ன்ற உண்மை விடுதலையாகி பார்ப்பனர்களுக்குச் சிம்மசொப்பனமா, கருப்பு பெயிலிஸமா உருவெடுத்திருக்காது!!
அம்பி , உள்குத்து பலமா இருக்கு .பேசாமே நீ துக்ளக்லே சேந்துடு.
இப்படிக்கு
aariya butter.
//பேசாமே நீ துக்ளக்லே சேந்துடு.//
too late.. He has been already employed in Thuglak!
இது உள்குத்து இல்லை மண்டையில நறுக்குனு குட்டு.
இந்த பந்த் எல்லோரும் இகழப்பட்டது.
பொதுமக்களால் இந்த பந்த் வெறுக்கப்பட்டது.
இடம் ஒதுக்கீடுக்கும் பந்துக்கும் ஒரு தொடர்பும் மக்கள் மனதில் இல்லை.
பந்து நிகழ்ந்த அன்று மயிலையில் அறுபத்து மூவர் விழா. எல்லா ஆட்டோ ஓட்டுனர்களும் இந்த அரசை வாய்க்கு வந்த படி இகழ்வதை கேட்டேன். ஒருநாள் எங்கள் வருமானம் நடக்கிறது. அதையும் கெடுக்க பார்க்கிறார்கள் என்று அவர்கள் வருத்தப்பட்டார்கள். பேருந்துகள் ஓடாததால் பாதிகூட்டமே இருந்ததாக எல்லா கடைகளும் மூடப்பட்டதாகவும் அங்கிருந்த வியாபாரிகள் வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். பல கடைகள் திறந்து நன்றாக இயங்கிக்கொண்டிருந்தன. ஒரு கடைக்காரரை நீங்கள் கடையை ஏன் மூடவில்லை என்று கேட்டான். அதற்கு அவர், யாராவது மூடச்சொன்னால் அவனை உருளைக்கட்டையால் போடுவேன் என்று வேகப்பட்டார்.
அரசே இம்மாதிரி நடத்தியது இந்த அரசில் இருப்போருக்கு சிறிதும் சமூக அக்கறை இல்லை என்பதைகாட்டுகிறது.
Wait, soon the SC will declare that 69% reservation is illegal.
Will DMK quit UPA in protest.
கலக்கல் இ-வடையாரே, திமுக என்னும் வெறிக்கும்பலை இப்படி பழிக்கிறீங்க...ஆனா என்ன உங்களைத்தேடி ஆட்டோ வரும்....ஜாக்கிரதையா இருங்க.....
நான் உங்கள் பதிவின் பச்சைக் கலர் எதோ பார்ப்பவர்களுக்கு பசுமையாகத் தெரியட்டும் என்றுதான் போட்டிருந்தீர்கள் என்று நினைத்தேன். ;)
//நான் உங்கள் பதிவின் பச்சைக் கலர் எதோ பார்ப்பவர்களுக்கு பசுமையாகத் தெரியட்டும் என்றுதான் போட்டிருந்தீர்கள் என்று நினைத்தேன். ;)
//
மோகன்தாஸ் அப்பு இது ஜூப்பரப்பு...
IV, a very well written article. Thenaali Raman thamizil ezuthiyadhu pOl irukkuRadhu. karunaanidhi pazhuththa arasiyal vaadhi alla, pagattu suyanala vaadhi enRu thelivaaga eduththurakkum katturai. congrats.
நல்லா சுடுறீங்கடா டேய் சொந்தமா சரக்கே கிடையாதா சும்மா சாம்பார் மட்டும் திண்ணா கட்சீல இப்படி தான் ஆவும்
//மோகன்தாஸ் அப்பு இது ஜூப்பரப்பு...//
குழலி உங்க பிங்க் கலரு நீங்க எப்படினு சொல்லுது.
ஆதிக்க சாதினர் தங்கள் தேவைக்கு ஏற்ப சாதியை பயன்படுத்துவார்கள் என்பதற்கு இந்த பதிவே உதாரணம்
//ஆதிக்க சாதினர் தங்கள் தேவைக்கு ஏற்ப சாதியை பயன்படுத்துவார்கள் என்பதற்கு இந்த பதிவே உதாரணம//
இருந்தாலும் குழலி இப்படில்லாம் நேரடியா தாக்ககூடாது.
ஸாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக்
""இருந்தாலும் குழலி இப்படில்லாம் நேரடியா தாக்ககூடாது.''
கீழேயுள்ளதுதான் சரியானது.
இருந்தாலும் குழலியை இப்படில்லாம் நேரடியா தாக்ககூடாது.
எவனோ ஒருத்தன் வாந்தி எடுத்தானாம் அத இட்லி வட போயி நக்குனானாம். இட்லி வட உனக்கு ஏன் இந்த பொழப்பு இதுக்கு பேசாம துக்ளக்ல சேர்ந்துடு
பகுதரிவு மடயர்கலெ !!!
இ-வடையாரே சொன்னதை மருக்க துப்பட்ரவர்கலெ .....
சுப்பு.
//எவனோ ஒருத்தன் வாந்தி எடுத்தானாம் அத இட்லி வட போயி நக்குனானாம். இட்லி வட உனக்கு ஏன் இந்த பொழப்பு இதுக்கு பேசாம துக்ளக்ல சேர்ந்துடு//
இட்லி வடை நக்கி துப்பியதை பக்கிலுக் எடுத்து தினகரனில் போடலாமே?
சூப்பரா இருக்கும்.
ஊருக்குள்ள சில பேரு இருக்கானுங்க, அவனுங்க மத்தவங்களையெல்லாம் நல்ல கிண்டல் பன்னுவானுங்க ஆனால் மத்தவங்க அவங்கள கிண்டல் பன்னாமட்டும் கோபம் பொத்துகிட்டு வரும். மத்தவங்கள ஈசியா கேள்வி கேட்பனுங்க ஆனால் இவனுங்கள கேள்வி கேட்டா எரிஞ்சு விழுவானுங்க.
இப்படி ஒரு பந்த் நடத்துனதுனால என்னதான் ஆச்சு? அதுக்குப் பதிலா அன்னைக்கு ஒரு நாள் வரி வருமானத்தை (என்னமோ கோடிக்கணுக்குல சொன்னாங்க) பின்னடைந்து இருக்கும் இடத்தில் ஒரு பள்ளி கட்டவோ இருக்கும் பள்ளிகளில் வசதியைப் பெருக்கவோ செய்திருந்தால் அதற்கான ஆதரவு அமோகமாக இருந்திருக்கும். அன்று வேலை செய்தால்தான் சாப்பாடு என்றிருக்கும் பாட்டாளிகளைப் பத்தி இவர்களுக்கு என்ன கவலை? எல்லாம் வேஷம்தானே. இந்த உண்ணாவிரதமாகட்டும் (பாருங்கப்பா அந்தக் கட்சி நடவடிக்கையும் சொல்லறேன்) பந்தாக்கட்டும் பைசா பிரயோஜனமில்லாத மக்களை திசைதிருப்பச் செய்யும் வித்தைகள். ஆக்கபூர்வமாக சிந்திக்கத் தெரியாத (தெரியாத அப்படின்னு சொல்லறது தப்புதான். அவங்க விஷயத்தில் நல்லாதான் சிந்திக்கறாங்க) விரும்பாத ஆட்சியாளர்கள் இருக்கும் வரை நம் தலைவிதி இப்படித்தான்.
இலவசம் இதோ சில தகவல்கள் -
கர்நாடக்காவில் காவிரிக்கு பந்த் நடந்த போது, Federation of Karnataka Chamber of Commerce and Industry (FKCCI)ஒரு ஆய்வு நடத்தியது. அதில் மொத்தம் 500 கோடு வருவாய் இழப்பு என்று கணக்கிட்டது. ( தமிழ்நாடு கர்நாடகத்தைவிட பெரியது ). இந்த 500 கோடியில் என்ன் என்ன செய்யலாம்
1. 20 மேம்பாலம் ( 25 கோடி செலவில் ) கட்டலாம்.
2. ஒரு கிலோ மீட்டர் 2 கோடி என்று 250 கிலோ மீட்டர் நல்ல ரோடு போடலாம்.
3. 100 கோடி செலவில் ஹைடெக் கார் பார்க்கிங் ஐந்து கட்டலாம்.
4. எல்லா கிராமங்களில் இருக்கும் ஏழைகளுக்கு படிப்பு, உணவு கொடுக்கலாம்.
( தகவல்களை மெயிலில் அனுப்பிய நண்பருக்கு நன்றி )
நண்பரே - உங்கள் 'For your eyes only' பின்னூட்டம் பார்த்தேன். நான் தப்பாக நினைக்கவில்லை :-)
பந்த் அன்னைக்கி சன் டிவி ஒளிபரப்பை ஸ்டாப் செய்தார்களா?
so long as there is a poverty of ideology, the likes of karunanidhi and jayalalitha will flourish. both are no gooders when it comes to decent language,inspite of both claiming to be voracious readers!!!!wonder what they read?
இந்த பதிவையும் படிங்க
http://osaichella.blogspot.com/2007/04/blog-post_10.html
மிக அருமையாக எழுதியுள்ளார் நண்பர் ஓசை செல்லா.
பாப்பார ஆபாசபோலி கையும் களவுமா மாட்டிகிட்டானே? அதை பத்தி என்ன நினைக்கிறே இட்லிவடை
Empty vessels make the most ஓசை!
அடப்பாவி அவனா இவன்? பாத்தா ஆளு கோட்டு சூட்டெல்லாம் போட்டு இந்த பூனையும் பீர் குடிக்குமான்ற மாதிரியில்ல இருக்கான்? அதை விட அதிர்ச்சி அவனோட கூட்டுக் காவாளித்தனம் பண்ண 'நல்லவங்க' பத்தின தகவல்கள் தான்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவத்தில் அவர்களுக்கு ஒரு நல்ல பாடத்தை கற்பிக்க வேண்டும். ஒரு பெண் முற்போக்கு கருத்துக்கள் கொண்டிருந்தால் இவர்கள் இந்தளவிற்கு கீழிறங்கிச் செல்கிறார்களே இதிலிருந்தே இவர்களின் யோக்கியதையும் பார்ப்பனியத்தின் ஆனாதிக்க மனப்போக்கையும் காட்டுகிறது.
பாலாவிடம் ஒரு பெர்சனல் வேண்டுகோள்.. தயவு செய்து இந்தத் தகவல்களை அம்பலப்படுத்துங்கள். அவர்கள் நடத்திய காமத்தளம் பற்றிய தகவல்கள், அதை ஹோஸ்ட் செய்த ஐப்பி விபரங்கள் உட்பட..
தேன்கூடு முற்போக்கு சிந்தனை கொண்டவர்களை காரணமின்றி விலக்கிக் கொண்டிருக்கும் சூழலில் இது போன்ற தளங்களை தங்கள் பட்டியலில் இனைக்க பரிசீலனையில் வைத்தது என்ன ஆச்சர்யப்படுத்தவில்லை. இது புரிந்து கொள்ளத்தக்கதே. பாப்பான் உடைத்தால் மன்குடமா? இப்போ போலி மேட்டரில் உத்தமன் வேஷம் போட்டவனெல்லாம் இதுக்கு என்ன சொல்லப் போகிறான் என்று கவனிக்க வேண்டும்.
Offcourse அப்படி வேஷம் போட்டவங்கள்ல பாதிப் பேர் போலியை விட கேவலமான வேலைகளைத் தான் செய்து வந்துள்ளார்கள் போல் இருக்கிறது
பார்ப்பனர்கள் என்றாலே நல்லவர்கள், அப்பாவிகள் என்று படித்தவர்கள் மத்தியில் நிலவும் கருத்துருவாக்கத்துக்கு இதை வெளியிடுவதன் மூலம் சரியான ஆப்பு அடிக்க வேண்டும். அவர்களுடைய புனித வட்டத்தை உடைத்தெரிய வேண்டும்.
இந்த லச்சணத்தில் இந்தாள் நம்மைப் பார்த்து 'போலியின்' கையாட்கள் என்றெல்லாம் போகிற போக்கில் பேசிய பேச்சுக்களை நினைத்தால் எனக்கு ஒன்று தான் நினைக்கத் தோன்றுகிறது. அது - "கலி முத்திடுத்து"
எங்கூருப் பாக்கம் ஒரு பழமொழி சொல்வாங்க "நல்லவனப் போல இருப்பானாம் பரம அயோக்கியன்" இது இப்ப நியாபகத்துக்கு வருது.
பி.கு - தகவல் தந்து என் தலை சுத்துவதை நிறுத்திய அ.மு.க நன்பருக்கு ஸ்பெஷல் நன்றி!
அடப்பாவி அவனா இவன்? பாத்தா ஆளு கோட்டு சூட்டெல்லாம் போட்டு இந்த பூனையும் பீர் குடிக்குமான்ற மாதிரியில்ல இருக்கான்? அதை விட அதிர்ச்சி அவனோட கூட்டுக் காவாளித்தனம் பண்ண 'நல்லவங்க' பத்தின தகவல்கள் தான்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவத்தில் அவர்களுக்கு ஒரு நல்ல பாடத்தை கற்பிக்க வேண்டும். ஒரு பெண் முற்போக்கு கருத்துக்கள் கொண்டிருந்தால் இவர்கள் இந்தளவிற்கு கீழிறங்கிச் செல்கிறார்களே இதிலிருந்தே இவர்களின் யோக்கியதையும் பார்ப்பனியத்தின் ஆனாதிக்க மனப்போக்கையும் காட்டுகிறது.
பாலாவிடம் ஒரு பெர்சனல் வேண்டுகோள்.. தயவு செய்து இந்தத் தகவல்களை அம்பலப்படுத்துங்கள். அவர்கள் நடத்திய காமத்தளம் பற்றிய தகவல்கள், அதை ஹோஸ்ட் செய்த ஐப்பி விபரங்கள் உட்பட..
தேன்கூடு முற்போக்கு சிந்தனை கொண்டவர்களை காரணமின்றி விலக்கிக் கொண்டிருக்கும் சூழலில் இது போன்ற தளங்களை தங்கள் பட்டியலில் இனைக்க பரிசீலனையில் வைத்தது என்ன ஆச்சர்யப்படுத்தவில்லை. இது புரிந்து கொள்ளத்தக்கதே. பாப்பான் உடைத்தால் மன்குடமா? இப்போ போலி மேட்டரில் உத்தமன் வேஷம் போட்டவனெல்லாம் இதுக்கு என்ன சொல்லப் போகிறான் என்று கவனிக்க வேண்டும்.
Offcourse அப்படி வேஷம் போட்டவங்கள்ல பாதிப் பேர் போலியை விட கேவலமான வேலைகளைத் தான் செய்து வந்துள்ளார்கள் போல் இருக்கிறது
பார்ப்பனர்கள் என்றாலே நல்லவர்கள், அப்பாவிகள் என்று படித்தவர்கள் மத்தியில் நிலவும் கருத்துருவாக்கத்துக்கு இதை வெளியிடுவதன் மூலம் சரியான ஆப்பு அடிக்க வேண்டும். அவர்களுடைய புனித வட்டத்தை உடைத்தெரிய வேண்டும்.
இந்த லச்சணத்தில் இந்தாள் நம்மைப் பார்த்து 'போலியின்' கையாட்கள் என்றெல்லாம் போகிற போக்கில் பேசிய பேச்சுக்களை நினைத்தால் எனக்கு ஒன்று தான் நினைக்கத் தோன்றுகிறது. அது - "கலி முத்திடுத்து"
எங்கூருப் பாக்கம் ஒரு பழமொழி சொல்வாங்க "நல்லவனப் போல இருப்பானாம் பரம அயோக்கியன்" இது இப்ப நியாபகத்துக்கு வருது.
பி.கு - தகவல் தந்து என் தலை சுத்துவதை நிறுத்திய அ.மு.க நன்பருக்கு ஸ்பெஷல் நன்றி!
இங்கே எவனோ ஒரு பார்ப்பான் கையும் களவுமா மாட்டிக் கொண்டது மட்டும் புரிகிறது. ஆனால் யார் அது? போலி தளம் மட்டும் தான் ஆரம்பித்தானா இல்லை வேறு எதாவது வெவகாரமான வேலைய செய்துப்புட்டானா? ஒரு ஆளா இல்லை ஒரு குரூப்பா?
யாராவது வெளக்கமாச் சொல்லி சுத்திட்டு இருக்க என்னோட தலைய நிப்பாட்டுங்கப்பா..
அந்த மடராமன் காமகேடிகளுக்கு வக்காலத்து வாங்கும்போதே நினைத்தேன் ஒருமாதிரியா தான் இருப்பான்னு. என் நெனைப்பு சரியா போச்சி.
//மிக அருமையாக எழுதியுள்ளார் நண்பர் ஓசை செல்லா.//
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்? அவர் பதிவுகளைப் படிக்க, படிக்க அவர் ஒரு காலி பெருங்காய டப்பா என்பது புலப்படுகிறது.
//இந்த பதிவையும் படிங்க
http://osaichella.blogspot.com/2007/04/blog-post_10.html
மிக அருமையாக எழுதியுள்ளார் நண்பர் ஓசை செல்லா.
//
ஆஹா!!! என்னே ஒரு அரிவு கூர்மை!!!
So, Shall we write BATCH programs in MSDOS 1.0 to implement Railway reservation system???
:-))) செரியான மன்குனிடா
Post a Comment