பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 02, 2007

அபிஷேக் - ஐஸ்க்காக சூடான பாலில் குளித்தார்

அபிஷேக் - ஐஸ்வர்யா ஜோடியின் திருமண வாழ்க்கை சந்தோசமாக அமைவதற்காக உ.பி.,யில் ஒருவர் சூடான பாலில் குளியல் போட்டு கடவுளிடம் வேண்டினார்.

வாரணாசி சிவ்பூர் பகுதியை சேர்ந்தவர் பானி பகத் (50). இவரது முன்னோர்கள் சப்தசாகர் என்ற இடத்தில் உள்ள துர்கா கோவிலில் சாமியாடி வந்தனர். சாமியாடுபவர் உடலில் துர்கா தேவி தங்கி இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே, ஆண்டுதோறும் நடக்கும் பூஜையின்போது சாமியாடுபவர் மீது கொதிக்கும் பாலை அபிஷேகம் செய்தால் துர்கா தேவிக்கே அபிஷேகம் செய்வதாகவும் அதன் மூலமாக நினைத்த காரியம் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை. அதன்படி துர்கா கோவிலில் தற்போது சாமியாடி வரும் பகத் மீது சூடான பாலை ஊற்றி மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கோவில் விழாவில் அபிஷேக் - ஐஸ் தம்பதி வளமுடன் வாழ்வதற்காக நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அப்போது, துர்கா தேவியின் அருளை பெற்று சாமியாடிக் கொண்டிருந்த பகத் மீது சூடான பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். சிறப்பு பூஜையுடன் மேள தாளங்கள் முழங்க நெய் மற்றும் பாலாடை போன்றவையும் பகத் மீது ஊற்றி துர்கா தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இது குறித்து பகத் கூறுகையில், ""துர்கா தேவியின் அருளை பெறுவதற்காக எனது முன்னோர்கள் காலம் முதலே கடந்த அறுநூறு ஆண்டுகளாக இந்த பூஜை நடத்தப்படுகிறது. இதற்கு "குவால்-பால் பூஜை' என்று பெயர். இந்த பூஜை மூலமாக சொத்து, குழந்தைகள் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான வசதிகள் மட்டுமன்றி கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையும் கிடைக்கும்,'' என்றார்.

பாலிவுட் நடிகர் என்பதால் பால் அபிஷேகமா அல்லது அபிஷேக் என்பதால் அபிஷேகமா ?

1 Comment:

Anonymous said...

http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=195375