பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 28, 2007

சாப்பல் அடிக்கும் SMS பவுண்டரிகள்

நேற்று இரவு எல்லா சேனல்களிலும் இந்த செய்தி வந்துகொண்டிருந்தது. சாப்பல் நிச்சயம் வீட்டுக்கு அனுப்பபடுவார் என்று தெரிகிறது. அவர் அடிக்கும் பவுண்டரிகள்...

* அதில் தேர்வு குழுவினர் இளம் வீரர்களை தேர்வு செய்யாமல் சீனியர் வீரர்களை தேர்வு செய்தனர்

* உலக கோப்பை போட்டிக்காக நான் கேட்ட அணி கிடைக்கவில்லை. கடைசியாக நடந்த தேர்வு குழு கூட்டத்தில், இளம் வீரர்களை சேர்க்க போராடினேன். ஆனால் டிராவிட், வென்சாகரும் அவர்கள் சரியாக விளையாடா விட்டால் என்ன செய்வது என்று் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

* சீனியர்கள் அணியில் தங்களது இடத்தை நிரந்தரமாக்கி கொள்வதற்காகவே விளையாடினர்

* சுரேஷ் ரைய்னா இடம் பெற்றிருக்க வேண்டும்

* தினேஷ் கார்த்திக் சிறந்த பேட்ஸ்மேன். வருங்காலத்தில் அணியின் தலைமை பொறுப்பை ஏற்கும் திறமை அவருக்கு இருக்கிறது.

* யுவறாஜ் சிங் தற்போது பெரிய ஸ்டாராக நினைத்து கொண்டிருப்பதாகவும் அவர் ஒரு வளரும் வீரர் தான்

( இவை எல்லாம் இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில பத்திரிகை நிருபருக்கு சேப்பல் எஸ்.எம்.எஸ். அனுப்பிய செய்திகள் )

பிகு: நாடு திரும்பும் இந்திய வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கபடுகிறது

அப்படியே இதையும் படிங்க/பாருங்க

2 Comments:

Anonymous said...

சதம் அடித்த பின் சாப்பல் தன்னைப் பதவி விலகச் சொன்னார் என்று கங்கூலி சொன்னது எவ்வளவு தவறோ அதே அளவு தவறு சாப்பல் இப்பொழுது செய்வது.

ஹரன்பிரசன்னா said...

கோச்சையும் கேப்டனையும் மாற்ற வேண்டிய தேவை இல்லை. இவர்களே தொடர்வது நல்லது. சாப்பலின் சில கருத்துகள் கடுமையாகத்தான் இருக்கின்றன. ஆனால் அதில் உண்மை இல்லாமல் இல்லை. குறிப்பாக யுவராஜ் பற்றி அவர் சொல்லியது. சாப்பல் செய்த மிகப்பெரிய தவறு ஓப்பனிங் பாட்ஸ்மேன்களைப் பிரித்தது. சச்சினும் கங்கூலியுமே ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக இருந்திருக்கவேண்டும். அல்லது சச்சின் சேவாக். ஒன் டவுன் சேவாக் அல்லது கங்கூலி. இதை மாற்றியதே சாப்பல் செய்த தவறு. மற்றபடி உலகக்கோப்பையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறாதது எப்போதும் போல் ஒரு போட்டியில் ஏற்பட்ட தோல்வியாக எடுத்துக்கொண்டால் போதுமானது.