"வெற்றி கொண்டான் பேட்டி அறிவாலயத்தில் தயாரிக்கப்பட்டு முதல்-அமைச்சர் கருணாநிதி ஒப்புதலுடன் வெளியானது'' என்று காட்டமாக கருத்து தெரிவித்து பேட்டி அளித்தார் மருத்துவர் ஐயா ராமதாஸ் இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் அன்பழகன், டாக்டர் ராமதாசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், டாக்டர் ராமதாசின் இழிவான கற்பனையை வன்மையாக கண்டிக்கிறேன். டாக்டர் ராமதாஸ் இப்படி பேட்டி அளித்திருப்பது உள்நோக்கத்தோடுதான் அவர் செயல்படுகிறார் என்பதை உறுதிபடுத்தி விட்டது'' என்று குறிப்பிட்டுள்ளார். முழு விவரம் கீழே..
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் ஈடுபட்டு, அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்களுடனும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடனும், பேசியும், பழகியும், பல கட்டங்களில் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தையும் நடத்தி வந்துள்ளார்.
அவரது அரசியல் ஆளுமையில் உள்ள பண்பாட்டையும், நாகரீகத்தையும் எவரும் அறிவர். எதிர்க்கட்சியாக செயல்பட்ட காலகட்டங்களில் கூட எந்த ஒரு தலைவரையும், மரியாதைக் குறைவாகவோ, நாகரீகமற்ற முறையில் பேசியதோ, எழுதியதோ கிடையாது.
வார இதழில் வெற்றி கொண்டான் பேட்டி கொடுத்தது குறித்து, பெரிதும் வருத்தப்பட்டதோடு, வெற்றி கொண்டானோடு தொடர்பு கொண்டு உடனடியாக அவர் கொடுத்த பேட்டிக்கு வருத்தம் தெரிவிக்கச் சொல்லி, முதல்வர் கருணாநிதிதான் அறிக்கை விட வைத்தார்.
ஆனால் இன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த ராமதாஸ், வெற்றி கொண்டான் வாரப் பத்திரிகைக்கு அளித்த பேட்டி, அறிவாலயத்தில் தயாரிக்கப்பட்டு, கலைஞரின் பார்வைக்கு கொடுக்கப்பட்டு , வெளியிடப்பட்டதே என்று கூறியுள்ளார்.
ராமதாஸின் இந்த இழிவான கற்பனையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். முதல்வர் கருணாநிதியுடன் இத்தனை ஆண்டுகள் பழகியும், அவருடைய அரசியல் பண்பாட்டையும், அரசியல் நாகரீகத்தையும் தெரிந்து கொள்ளாமல் , கலைஞர் மீது குற்றம்சாட்டியிருப்பது கண்டு நான் வேதனைப்படுகிறேன்.
டாக்டர் ராமதாஸ் இப்படி பேட்டி அளித்திருப்பது, உள்நோக்கத்தோடுதான் அவர் செயல்படுகிறார் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது - அன்பழகன்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, March 27, 2007
ராமதாஸ் - இது டூமச் - அன்பழகன்
Posted by IdlyVadai at 3/27/2007 10:32:00 AM
Labels: அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)











5 Comments:
It seems... nobody cares about tamil nadu and people. Great Personal Politics!!
Perhaps Anbazhalagan has forgotten the expletives Karunanidhi used against MGR
what about thuglak question and answer?
Dr. Ramadoss knows vwey well about Dr. Kalaignar; as the saying "Paampin Kaal Paampu Ariyum"
that is why he can correctly said that the interview and the statement of the Vetrikondan has been prepared and okd by Kalaignar at the Arivvlayam.
Thuglak Question: To sing the praises of the DMK after overlooking its mistakes, the PMK is not its branch office, says Ramadoss. Comment.
Cho's Answer: It is evident that Dr Ramadoss has his logistics worked out on this intermittent criticism of the DMK. The truth is not lost on the CM either. Yet he calls the PMK founder's diatribes as "constructive criticism." For the time being that is it.
Post a Comment