போபர்ஸ் வழக்கில் தொடர்புடைய இத்தாலிய தொழிலதிபர் குவாத் ரோச்சியை இந்தியாவுக்கு கொண்டு வர சட்டப்பூர்வமான நடவடிக்கை களை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெய லலிதா கூறியுள்ளார். குவாத் ரோச்சியை அர்ஜெண்டை னாவில் கைது செய்யப்பட்ட செய்தியை உடனடியாக பொது மக்களுக்கு தெரிவிக்காமல் மத்திய அரசு மூடி மறைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையி லான கூட்டணி அரசின் செயல்பாடு தொடர்பான திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது. போபர்ஸ் வழக்கு தொடர்பாக 14 ஆண்டுகாலமாக தேடப்பட்டு வரும் இத்தாலிய தொழிலதிபர் குவாத் ரோச்சியை அர்ஜெண்டைனாவில் 6.2.2007ல் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், 23ந் தேதி அனைத்து தொலைக்காட்சிகளிலும் இந்த செய்தி வெளியானபிறகு சிபிஐ வேறு வழியில்லாமல் இதுபற்றி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அர்ஜெண்டைனா தலைநகரம் வழியே பயணம் செய்தபோது அவர் கைது செய்யப்பட்டார். இது போபர்ஸ் வழக்கு தொடர்பான இன்டர்போல் வேண்டுகோளுக்கிணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குவாத்ரோச்சி சர்ச்சைக்குரிய தொழிலதிபர். நேரு குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவர். போபர்ஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். போபர்ஸ் வழக்கில் அவருக்குள்ள தொடர்பு 1987ல் தெரிய வந்தது முதல் காங்கிரஸ் அரசு அவரை கைது செய்வதில் விருப்பம் காட்டவில்லை. அது மட்டுமல்லாமல் அவரை சட்டத்திலிருந்து விடுவிக்க துணை நின்றது. மேலும் அவருடைய முடக்கப்பட்ட வங்கிக்கணக்கி லிருந்து ரூ.30 கோடியை எடுத்துக் கொள்ள சிபிஐ உதவி செய்தது. அவர் எடுத்துக்கொண்ட பணம் இந்திய மக்களுக்கு உரித்தானது.
இதற்கு முந்தைய சந்தர்ப்பங்களில் அவரை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வர வாய்ப்பு கிடைத்தபோது, அவர் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட வில்லை. இப்போது அர்ஜெண்டைனா அரசு அவரை இந்த மாதம் 6ந் தேதி கைது செய்தது. 18 நாட்களுக்கு முன்பு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந் தாலும், காங்கிரஸ் கூட்டணிஅரசு மற்றும் சிபிஐ இந்த தகவலை பொது மக்களுக்கு தெரிவிக்கவும் இல்லை. அவரை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சியும் மேற்கொள்ளப்பட வில்லை.
கடந்த 13ந் தேதி இந்த பிரச்சனை பற்றி விவாதிக்க பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோச னைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. ஆனால் அது பற்றிய விவரம் பொதுமக்களுக்கு வெளியிடப்பட வில்லை. அர்ஜெண்டைனாவோடு செய்தி களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் இல்லாததால், குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு கொண்டுவருவதற் கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை.
அனைத்து வழிமுறைகளையும் மேற்கொண்ட பிறகு 30 நாட்களுக்குள் இதற்கான வேண்டு கோளை சமர்ப்பிக்க வேண்டும். அர்ஜெண்டைனாவில் இன்னொரு நாட்டால் தேடப்படும் நபர் கைது செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் அவரை ஒப்படைப் பதற்கான நடவடிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். ஆனால் வேண்டு மென்றே காலம் கடத்தப்பட்டுள்ளது. 6ந் தேதி கைது செய்யப்பட்டபிறகு இப்போது குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு கொண்டு வர 10 நாட்களே உள்ளது. அப்படியிருந்தும் மத்திய அரசோ, சிபிஐயோ எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
மத்திய அரசு திட்டமிட்டு எதிர்க் கட்சியினரை பழிவாங்கும் வகையில் பொய் வழக்குகளை போட்டுள்ளது. ஆனால் அதிகாரத்துக்கு நெருக்கமானவர்கள் என்று வரும்போது, திட்டமிட்டு 18 நாட்களை வீணாக்கியுள்ளனர். மிகவும் தேடப்படும் குற்றவாளியை இந்தியா வுக்கு கொண்டு வர எந்த நடவடிக்கை யும் மேற்கொள்ளவில்லை. இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க பிரதமர், உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் கடமைப்பட்டுள்ளனர்.
சட்டம் தன் வழியை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். குவாத் ரோச்சி கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்படாமலே இருக்க மற்றொரு நாடகம் நடத்தப்படு வதாக மக்கள் சந்தேகிக்கின்றனர். அவ்வாறு நிகழ்ந்தால் அது மக்களுக்கு செய்யப்படும் துரோகம் ஆகும். அந்த தவறை செய்தால்,தேசம் அவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்டும்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, February 24, 2007
குவாத்ரோச்சி - ஜெ அறிக்கை
Posted by IdlyVadai at 2/24/2007 04:46:00 PM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)











0 Comments:
Post a Comment