இந்த பகுதியில் சில கேள்வி பதில்கள் ( எந்த பத்திரிக்கை என்று பின்னூட்டத்தில் சொல்லலாம் )
1. கே : "தமிழக ஆட்சியில் பங்கு கேட்பது, பிச்சைக்காரர்களை விட கேவலமாக உள்ளது' – என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும்; "ஆட்சியில் பங்கு கேட்பது, யானை பிச்சை எடுப்பது போன்றது' – என்று பீட்டர் அல்ஃபோன்ஸும் கருத்து கூறியுள்ளார்களே! இது எதைக் காட்டுகிறது?
ப : பீட்டர் அல்ஃபோன்ஸ் இப்படிப் பேசியிருக்கக் கூடாது. பிச்சை போட்டவுடன், அதைப் பெற்றுக் கொள்கிற யானை என்ன செய்கிறது? பிச்சை போட்டவரின் தலைமீது கை (தும்பிக்கை) வைக்கிறது. காரியம் ஆனவுடன் காங்கிரஸும் இப்படித் தன் தலை மீது கை வைத்து விடுமோ – என்ற கவலை முதல்வருக்கு வருமே!
2. கே : "என் மனைவி பக்தி மேலிட்டு சாய்பாபா காலில் விழவில்லை. வயதில் பெரியவர்கள் வந்தால், அவர்களை வணங்குவது என்ற மரியாதை நிமித்தம் காட்டிய மரபுதானே தவிர, வேறில்லை' – என்று முதல்வர் விளக்கம் அளித்துள்ளது பற்றி?
ப : சாய்பாபா, தனது வீட்டிற்கு வந்து சென்றபிறகு, அவரை எவ்வளவு அவமதிக்க முடியுமோ, அவ்வளவு அவமதித்து வருகிறார் முதல்வர். வயதைத் தவிர, மரியாதைக்குரிய அம்சம் வேறெதுவும் சாய்பாபாவிடம் இல்லை என்று சொல்வது போல, "சாய்பாபா வயதானவர் என்பதால், மனைவி மரியாதை காட்டினார்...' என்கிறார்; "சாய்பாபா காவிரி என்றால், நான் கொள்ளிடம்...'; "அவரும் இலவசம் தருகிறார், நானும் இலவசம் தருகிறேன்...' – என்றெல்லாம் பேசி, சாய்பாபாவை முதல்வர் தனக்கு இணையாக்கி, அவரை சாதாரண மனிதர் என்பது போல குறிப்பிடுகிறார்.
இதைவிட வேதனை – "நான் யாரிடம் அனுமதி பெற வேண்டுமோ, அவரிடம் அனுமதி பெற்றுத்தான் – வீரமணியிடம் அனுமதி பெற்றுத்தான் – சாய்பாபாவுடன் விழாவில் கலந்து கொண்டேன்...' என்றும் முதல்வர் கூறியிருக்கிறார். "வீரமணி சம்மதம் பெற்று, விழாவில் பங்கேற்பு; வயதுக்கு மரியாதையே தவிர, பக்தி அல்ல; நானும் சாய்பாபாவும் ஒண்ணு, அறியாதவன் வாயிலே மண்ணு...' என்ற வகைகளில் பேசுகிறவருடைய வீட்டிற்குப் போக வேண்டிய நிலை சாய்பாபாவிற்கு வந்தது ஏன் – என்பதுதான் புரியவில்லை.
3. கே:சிம்புவின் புது ஹேர் ஸ்டைல் எப்படி?
ப: வைக்கோல் புதரில் மாட்டிக் கொண்ட மூஞ்சூறு போல் இருக்கிறது.
4. கே: முத்தத்தைப் பற்றி தாங்கள் எழுதிய பல பதில்களைப் படித்திருக்கிறேன். ஆனால், அதைப் பற்றி வாத்ஸ்யாயனர் என்ன எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லையே?!
ப: பல பதில்களா?! நல்ல கதை! சரி, ஒரு காதல் (காம) களஞ்சியத்தையே படைத்த வாத்ஸ்யாயனர், அதில் மிக முக்கிய மான பகுதியான முத்தத்தைப் பற்றி எழுதாமல் இருப்பாரா? ‘காதல் ஜோடி இணைவதற்கு அவசரப்படக் கூடாது’ என்கிறார் வாத்ஸ். ‘தழுவல், லேசான கீறல்கள், முத்தம் - இவற்றை மாற்றி மாற்றி அனுபவிக்க வேண்டும் (fore play!). அதற்காக ரொம்ப நேரம் முத்தமிட்டுக்கொண்டே இராமல், அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும்...’ - வாத்ஸ்யாயனரின் ஆரம்பமே இப்படி!
அடிப்படையில் மூன்று வித முத்தங்களைப் பெண்கள் பின்பற்ற வேண்டும் என்கிறார். அடையாளப்பூர்வமான முத்தம் - இதில் உதடுகள் இணையும். ஆனால், பெண் தன் உதடுகளை நகர்த்தாமல் சும்மா வைத்துக்கொண்டு இருக்க வேண்டும். அடுத்தது, சிலிர்ப்பான முத்தம் - கீழ் உதட்டால் மட்டும் காதலனின் உதடுகளை வருடுவது. பிறகே, அழுத்த முத்தம் - ம்... இது முழுமையான, நாவுகளின் நுனிகளும் இயங்கும் சற்றே ஆவேசமான, ஒலியெழுப்பும் முத்தம்! பிறகு, வாத்ஸ்யாயனர் நுணுக்கமாக, பக்கம் பக்கமாக முத்தம் பற்றி புகுந்து விளை யாடுகிறார். அதையெல்லாம் நான் இங்கே சொல்ல மாட்டேம்ப்பா!
5. கே: முடி கண்ணை மறைப்பதால் கலாமுக்கு நாட்டு நடப்பு தெரியவில்லை என்று பால்தாக்கரே சீறியிருக்கிறாரே?
ப: தலைமுடியை ஒதுக்கி விட்டுக் கொண்டு உலகைச் சீராகப் பார்க்கலாம். அகந்தை கண்களை மறைத்தால் எதையும் எப்போதும் சரியாகக் காண முடியாது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, February 15, 2007
பத்திரிக்கை விஷமம் - 5
Posted by IdlyVadai at 2/15/2007 01:36:00 PM
Labels: பத்திரிக்கை விஷமம்
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










7 Comments:
1. துக்ளக்
2. துக்ளக்
3. குமுதம் - அரசு பதில்கள்
4. ஆவிகடன் - மதன் பதில்கள்
5. கல்கண்டு
இதில் குமுதம், ஆவி படித்துவிட்டேன். மற்றது - அவர்கள் பதில் சொல்லும் பாணியை வைத்து எழுதியது.
சென்ஷி
சென்ஷி - ஒன்று தப்பு :-)
5- Kalki
அனானி - சூப்பர்.
சூப்பர் பதில்கள் துக்ளக்கிலிருந்து.
பதிவுக்கு நன்றி
1. துக்ளக்
2. கல்கி
3. குமுதம்
4. ஆவி
4. கல்கண்டு
01. thuglak
02. thuglak
03. Kumudam
04. vikatan (hi madan!)
05. Kalki
Eppadi?
Post a Comment