தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஏழு ஆண்டுகளுக்க பின் குற்றவாளிகள் 3 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.இது குறித்து தெரிவித்த பலியான மாணவிகளின் உறவினர்கள் நீதிக்கு கிடைத்த வெற்றி என்றனர்.பலியான மாணவி ஹேமலதாவின் தந்தை கூறுகையில் தீர்ப்பு தாமதமாக வந்தலும், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி என்றார்.பலியான மற்றொரு மாணவியின் தந்தை கூறுகையில் , இந்த தீர்ப்பிலிருந்து தவறு செய்பவர்கள் அனைவரும் திருந்த வேண்டும் என்றார். தீர்ப்பு வழங்கப்பட்டபோது மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் வடித்தனர்
கொடைக்கானல் ஓட்டல் வழக்கில் கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி சென்னை தனிக்கோர்ட்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண் டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதையொட்டி அ.தி.மு.க.வினர் போராட் டத்தில் குதித்தனர்.
கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் சென்ற பஸ் தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் மறிக்கப்பட்டது. அந்த பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் தீயில் கருகி இறந்தனர். அதோடு 18 மாணவிகள் தீக்காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் டி.கே.ராஜேந்திரன், நகர செயலாளர் நெடு என்கிற நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத்தலைவர் மாது என்கிற ரவீந்திரன், ஊராட்சிமன்ற தலைவர் முனியப்பன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் முருகேசன், தவுலத் பாஷா, வேலாயுதம், முத்து என்கிற அறிவழகன், ரவி, வி.முருகன், வி.பி.முருகன், வடிவேல், சம்பத் மற்றும் நஞ்சன் என்கிற நஞ்சப்பன், பழனிசாமி, ராஜ×, மணி என்கிற கூடலர் மணி, மாது, ராமன் (அரசு போக்குவரத்து கழக கண்டக்டர்), சண்முகம், சந்திரன், செல்லகுட்டி, காவேரி, மணி, மாதையன், செல்வம், மாதேஸ், செல்வராஜ், மாணிக்கம், வீரமணி, உதயகுமார் ஆகிய 31 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் செல்லக்குட்டி இறந்துவிட்டார்.
இந்த வழக்கு விசாரணை சேலம் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அ.தி.மு.க. நிர்வாகிகள் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேர் கொலை குற்றவாளிகள் என்று நீதிபதி கிருஷ்ணராஜா தீர்ப்பு கூறினார்.
மாதேஸ், பழனிசாமி ஆகிய 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மற்றவர்கள் மீது தனித்தனி பிரிவுகளின்கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தண்டனை விவரம் அறிவிக் கப்படும் என்று நீதிபதி தெரி வித்தார்.
நீதிபதி கிருஷ்ணராஜா வழங்கிய தண்டனை விவரம் வருமாறு:-
கொலை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் 46 பேரை கொல்ல முயன்றதாக 307-வது பிரி வின்கீழ் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 46 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இது தவிர சொத்து சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவு களில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் 7 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ. 13 ஆயிரம் அபராதமும் இவர்களுக்கு பொருந்தும்.
டி.கே.ராஜேந்திரன் உள்பட மற்ற 25 பேருக்கும் பொது சொத்துக்கு சேதம் விளை வித்தல், சாலை மறியல், பஸ் கண்ணாடிகளை உடைத்து எறிதல், வாகனங்களையும், மனித நடமாட்டத்தையும் தடுத்தல், சட்ட விரோதமாக கும்பலாக கூடுதல், உயிர் சேதம் விளைவிக்கும் எண்ணத்துடன் சட்டவிரோத கும்பலுடன் கூடி கலகம் விளை வித்தல், தமிழ்நாடு சொத்து பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் குற்றம் நிரூபிக் கப்பட்டுள்ளதால் 25 பேருக்கும் தலா 7 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும், தலா ரூ. 13 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதில் மணி என்ற மெம்பர் மணி என்பவர் பயங்கர ஆயுதங்களால் பஸ்சை உடைத்ததாக அவருக்கு கூடுதல் 6 மாதம் (அதாவது 7 ஆண்டு 9 மாதம்) ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, February 16, 2007
3 பேர் தூக்கு, 25 பேருக்கு 7 வருடம்!
Posted by IdlyVadai at 2/16/2007 01:49:00 PM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










2 Comments:
Nenju niraintha theerppu!
மிகவும் சரியான தீர்ப்பு. அவர்களது கருணை மனுவை நமது குடியரசுத்தலைவர் நிராகரிப்பார் என நம்புவோம்.
Post a Comment