பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 13, 2006

ஜனாதிபதி விருதுகள் திருப்பி அளிக்கப்பட்டன

நாடாளுமன்றத்தின் மீது தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தியதன் 5வது ஆண்டு தினமான இன்று, நாடாளுமன்றத்தை பாதுகாக்க தீவிரவாதிகளுடன் தீரமாக போராடி வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட வீரதீர விருது பதக்கங்களை அவர்களது குடும்பத்தினர் இன்று அரசிடம் திருப்பி கொடுத்துள்ளனர். இது தொடர்பான குற்றவாளியான அப்சல் குருவின் மரண தண்ட னையை நிறைவேற்றுவதில் தயக்கம் காட்டப்படுவதை கண்டித்து, வீரர் களின் குடும்பத்தினர் மேற்கொண்ட இந்த எதிர்ப்பு நடவடிக்கை அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கும்போதே பட்டப் பகலில் கடும் பாதுகாப்பையும் மீறி உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் முயற்சி மேற் கொண்டனர். அவர்களது முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித் தனர். தீவிரவாதிகளுடன் நடந்த சண்டை யில் பாதுகாப்பு படையை சேர்ந்த எட்டு வீரர்கள் தங்களது இன்னுயிரை நீத்து வீரமரணம் அடைந்தனர்.

அவர்களது வீரமரணத்தை, தேசப் பற்றை பாராட்டி கௌரவிக்கும் வகை யில் அவர்களுக்கு வீரதீர பதக்கங்கள் வழங்கப்பட்டன. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளியான அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை நிறைவேற்றுவதில் தயக்கம் காட்டப் பட்டு வருவது அந்த குடும்பத் தினரை பெரும் வேதனைக்கு உள்ளாக்கி இருப்பதாக கூறப்படு கிறது.

தாய்நாட்டின் மானத்தை பாது காத்ததற்காக உயிரை தியாகம் செய்த வீரர்களை கௌரவித்து வழங்கப்பட்ட இந்த பதக்கங்கள், குற்றவாளிக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் ஏற்படும் காலதாமதத்தால் புனிதம் இழந்துவிட்டதாக அவர்கள் கருது வதாக அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணியின் தலைவர் எம்.எஸ்.பிட்டா கூறியுள்ளார்.

வீரர்களின் தியாகத்தை கேலி கூத்தாக்கும் அரசின் செயலை கண்டித்து பதக்கங்களை, வீரர்களின் குடும்பத்தினர் இன்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்று திரும்ப ஒப்படைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. வீரர்களின் தியாகத்தை கேலி கூத்தாக அரசு நினைக்கும்போது, அந்த பதக்கங்களை வைத்திருப்பதில் எந்த பயனும் இல்லை என்று பிட்டா கூறினார்.

இந்த நடவடிக்கை மத்திய அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே அரசு வழங்கிய பதக்கங்களை திருப்பி செலுத்துவது அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. அரசியல் சட்டத்துக்கு விரோதமாக யாரும் எதையும் செய்ய அனுமதிக்க முடியாது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

எடிட் செய்யாத வீடியோ காட்சிகள் பார்க்க : http://www.ibnlive.com/videos/28372/raw-unedited-footage-of-dec-13-attack.html

3 Comments:

Anonymous said...

மானம் கெட்ட இந்த மத்திய அரசு இனி மீசையை மழித்துவிட்டு புடவையை கட்டிக்கொள்ளட்டும். ஓட்டுப்பொறுக்கி அரசியலின் கேடுகெட்ட நிலைக்கு இது சரியான உதாரணம்

Anonymous said...

இந்த மத்திய அரசு இனி மீசையை மழித்துவிட்டு புடவையை கட்டிக்கொள்ளட்டும்


sorry sir , if any inaction on anyone part means that has to be equivalent to being a woman?!!!!!!!you are talking in a nation where godd or bad a lady prime minister ruled that too stood up to the US, right now there is a lady driving the central government, and (kalpana chawla) women like sunitha williams are participating/ participated in space programmes where
indian men have not been able to go??so can you be more gender senstive please because we are in the 21st century, just in case you have not wokenup.

Anonymous said...

From aasath

We are at 21st century. okay

We will apreciate our female genders and also. we will ready to treat as a person, not as commadity (as Kayranji (maharashtra) dalit massacare.

Pitta had born at Punjab as like Bagath. But, Bagath had planned to want to hear some Deafs (so-called MPs). Pitta and the so-called freedom
(to save the paliment) fighters for Hindutva right-wing.

First anonymy criticise correctly with his fuedal values like the thoughts of Kanchi Periyavaa.

Second Ammbi from USA.

We need the correct view about this Parliment. It is the symbol of colonization like the Association of Commonwealth. It do the laws for them (Imperialism and Broker capitalism & His Fuedalism) today also.

School students of North-eastern states (seven sisters)had returned their schoolbook to their Dist. Collectors on before three months due to the Special Military act of Indian Army. Why yours eye has not view this Mass struggle.

-aasath