மகாராஷ்டிராவில் இன்று நடந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் மாலேகான் பகுதியில் அடுத்தடுத்து 4 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் ஒரு குண்டு மானி மசூதி அருகே வெடித்துள்ளது. வெள்ளிகிழமை தொழுகை முடிந்தபின் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அடுத்த முஷாய்ரா சவுக் பகுதியில் ஒரு குண்டு வெடிப்பும், பாஜு கானா பகுதியில் 2 குண்டுகளும் வெடித்தது. இதில் 25 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து மகாராஷ்டிரா முழுவதும் உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாலேகான் பகுதியில் மொபைல் போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. 8 போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நாசிக் மாவட்ட துணை கலெக்டர் புனேயிலிருந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். கடந்த ஜுலை 11ம் தேதி ரயில் நிலையங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பின் பீதி அடங்காத நிலையில் நாசிக்கில் அடுத்தடுத்து 4 இடங்களில் குண்டு வெடித்தது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நிலவரப்படி 25 பேர் மரணம். 100 பேர் காயம்
NTDV
CNN-IBN
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, September 08, 2006
மகாராஷ்டிராவில் குண்டு வெடிப்பு
Posted by IdlyVadai at 9/08/2006 03:29:00 PM
Subscribe to:
Post Comments (Atom)











1 Comment:
check out www.tamilblogs.com - new tamil aggregator
Post a Comment