எம்.எல்.ஏ. பதவி ஏற்று விட்டு வெளியில் வந்த நடிகர் விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் -
கேள்வி:- சட்டசபைக்கு தொடர்ந்து வருவீர்களா?
பதில்:- வருவேன்.
கே:- சட்டசபையில் எந்த பிரச்சினை குறித்து பேசுவீர்கள்?
ப:- முதன் முதலாக சட்ட சபைக்கு செல்கிறேன். 2 கட்சிக்கும் (அ.தி.மு.க., தி.மு.க.) மக்கள் முக்கியத்துவம் கொடுக்காமல் மக்கள் என்னை ஆதரித்துள்ளனர். எனவே மக்கள் பிரச்சி னைகள் குறித்து பேசுவேன்.
கே:- தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவீர்களா?
ப:- நான் ஆட்சியில் இல்லை. எம்.எல்.ஏ. ஆக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறேன்.
என் தொகுதி மக்களுக்காக போராடுவேன். இப்போது தான் சட்டமன்ற வளாகத்துக்கே வந்து இருக்கிறேன்.
இன்னும் 10 நாள் கழித்து கேளுங்கள். இன்னும் படமே போடவில்லை. அதற்குள் கிளைமாக்ஸ் பற்றி கேட்டால் எப்படி?
கே:- உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவீர்களா?
ப:- போட்டியிடுவேன்.
கே:- தனித்துப் போட்டியிடுவீர்களா?
ப:- பின்னர் அறிவிப்பேன்.
கே:- முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்திப்பீர்களா?
ப:- முதல்-அமைச்சர் எனக்கு தெரியாதவர் அல்ல. மக்கள் பிரச்சினைக்காக நிச்சயம் அவரை சந்தித்து பேசுவேன்.
கே:- நடிகர் சங்க தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவீர்களா?
ப:- நான் அதை இங்கு சொல்ல இயலாது. கலந்து பேசி முடிவு செய்வேன்.
கே:- சட்டசபையில் தனி ஆளாக எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?
ப:- மக்கள் ஆதரவுடன் இப்போது தான் நான் சட்ட சபைக்கு வந்து இருக்கிறேன். சட்டசபையில் எப்படி செயல் படுவது என்று கலந்து பேசி முடிவு செய்வேன்.
கே:- தேர்தலில் உங்களைத் தவிர கட்சியில் மற்றவர்கள் தோற்று விட்டார்களே?
ப:- இதில் எனக்கு வருத்தம் இல்லை. நான் அதிக வாக்கு களில் வெற்றி பெற்றுள்ளேன். இதுவே எங்களுக்கு மிகப் பெரிய வெற்றிதான். புதிய வாக்காளர்கள், மாணவர்கள் எனக்கு ஓட்டுப் போட்டுள்ளார்கள். இந்த தேர்தலில் பணபலம், ஆள் பலத்தை தாண்டி நான் ஜெயித்து இருக்கிறேன்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, May 18, 2006
MLA விஜயகாந்த் பேட்டி
Posted by IdlyVadai at 5/18/2006 06:46:00 PM
Subscribe to:
Post Comments (Atom)











2 Comments:
//கே:- தேர்தலில் உங்களைத் தவிர கட்சியில் மற்றவர்கள் தோற்று விட்டார்களே?
ப:- இதில் எனக்கு வருத்தம் இல்லை.....//
நேசமாவே இப்படியா சொன்னார்?
:-((
அதெல்லாம் சரி!! நேத்து ஏன் பதவி ஏத்துக்க வரலையாம் ????????.
அன்புடன்,
துபாய் ராஜா.
Post a Comment