இந்தியா டுடே'வில் DTH விவகாரம் உட்பட மாறனை சுற்றியுள்ள சர்ச்சைகளை பற்றி ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. இதில் மாறனின் பேட்டியும் இடம் பெற்றிருக்கிறது. அதன் scan'களை நீங்கள் இங்கு பார்க்கலாம்:
http://img263.imageshack.us/img263/5247/itdm013mg.jpg
http://img263.imageshack.us/img263/1228/itdm023oq.jpg
http://img276.imageshack.us/img276/4131/itdm030yj.jpg
பகிர்ந்துகொண்ட திருவாளர் பொதுஜனம் அவர்களுக்கு நன்றி.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, May 01, 2006
இந்தியா டுடே - DTH கட்டுரை
Posted by IdlyVadai at 5/01/2006 11:54:00 AM
Subscribe to:
Post Comments (Atom)











6 Comments:
ஆண்டவா!
அரசியலில் சரியான அடித்தளம் இல்லாமல் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட தயாநிதி மாறன் கொடுக்கப் போகும் விலை மிக அதிகமாக இருக்கப் போகிறது என்று தோன்றுகிறது. மாறன் குடும்பத் தொழிலை நீக்கி விட்டால் திமுக கூட்டணி வெற்றிக்கு எதிர்ப்பு காட்ட காரணமே இல்லாமல் போய் விடும். அரசியல் சாணக்கியர் கலைஞர் செயல்பட இன்னும் ஒரு வாரம் அவகாசம் இருக்கிறது. பேரன்களை ஓநாய்களுக்கு எறிந்து விட்டு, தனது கட்சியின், கூட்டணியின் வெற்றியை உறுதி செய்து கொள்ளலாம் அவர்.
நன்றி இட்லி வடை!
//அரசியல் சாணக்கியர் கலைஞர் //
கலைஞர் சாணக்கியர் கிடையாது. அவரின் 50 வருட அரசியலில் அவரால் ஆட்டியில் இருக்க முடிந்தது வெறும் 9வருடங்கள் தான். அவரால் எம்.ஜி.யாரை எதிர்த்து ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஜெயலலிதாவை எதிர்க்கும் போது தடுமாறுகிறார்.
அவரால் திடமான முடிவு எடுக்க முடிந்ததில்லை. அவர் ஒரு தமிழில் நன்றாகப் பேசத் தெரிந்த அரசியல்வாதி. சாணக்கியன் அல்ல.
நைசாக பையனை (பையன்களை?) அரசியலில் நுழைத்தது. கேட்டால் பதிலே சொல்லாமல் பல காலம் இருந்து விட்டு, இப்போது பொதுமக்களே "ஸ்டாலினா..அவரு கட்சிக்காக இவ்வளவு வருஷம் கஷ்டப்பட்டிருக்காருப்பா" என்ற மனோபாவத்தை மாறச் செய்தது. இவ்வளவு வருஷம் 'கட்சிக்குள்' மட்டும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததற்கு காரணம் தி.மு.க.வின் கையில் ஆட்சி அதிகாரம் இல்லாததே. மத்தியில் ஆட்சியில் பங்கேற்க சான்ஸ் கிடைத்த போதெல்லாம் தனது 'மனசாட்சி'க்கு முன்னுரிமை அளித்தது. மனசாட்சிக்குப் பிறகு இப்போது அவரது மகன். ம்.. இப்படியே விட்டால் அடுத்த பிரதம மந்திரி பதவிக்கு ஒரு வேளை சான்ஸ் கிடைத்தால் உதயநிதி தான் (வயது 35 இருக்க வேண்டுமோ பிரதமர் பதவிக்கு?!)
இப்படியெல்லாம் வைத்துப் பார்த்தால், அவரது திராவிட முன்னேற்றக் கம்பெனிக்குள் அவர் ஒரு சாணக்கியர் தான். ஆனால் குறுக்கு புத்தி சாணக்கியர்.
I totally agree with Mahes. MK's political career is ridden with one big blunder followed by another and yet people always talk about what a smart politician he is!?
மகேஸ் ...கருணாநிதி 9 வருடங்கள் அல்ல கிட்டத்தட்ட 13 வருடங்கள் முதல்வராக இருந்திருக்கிறார்.
1969-71, 1971-74, 1989-91 & 1996-2001.
Post a Comment