முதல்-அமைச்சராக கருணாநிதி தேர்வு: கவர்னரை சந்தித்து மந்திரிகள் பட்டியலை கொடுத்தார்
இன்று காலை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வந்து சேர்ந்தனர். இதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு அண்ணா அறிவலாயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்தது.
கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக கருணாநிதி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானத்தை அன்பழகன் முன் மொழிய ஆற்காடு வீராசாமி வழிமொழிந்தார். சட்ட சபை கட்சித் தலைவராக தேர்ந்து எடுக்கப்படுபவர்தான் முதல்- அமைச்சர் பதவியை ஏற்க வேண்டும்.
அந்த வகையில் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்களால், கருணாநிதி முதல்- அமைச்ச ராக தேர்ந்து எடுக்கப்பட்டார். இதையடுத்து தி.மு.க. மூத்த தலைவர்களுடன் கவர்னர் மாளிகைக்கு கருணாநிதி புறப் பட்டு சென்றார்.
கவர்னர் பர்னாலாவை மதியம் ஒரு மணிக்கு கருணாநிதி சந்தித்தார். அப்போது சட்டசபை தி.மு.க. தலைவராகதான் தேர்வு செய்யப்பட்டுள்ள கடிதத்தை அவர் கவர்னர் பர்னாலாவிடம் வழங்கினார்.
பிறகு தி.மு.க. ஆட்சிக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம் என்று காங்கிரஸ், பா.ம.க., கம்ïனிஸ்டு கட்சிகள் உறுதி அளித்து கொடுத்துள்ள கடிதங்களையும் கவர்னர் பர்னாலாவிடம் கருணாநிதி கொடுத்தார்.
தி.மு.க. ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும் கடிதத்தை காங்கிரஸ் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்க பாலு, சுதர்சனம், ஜே.எம்.ஆரூண் ஆகியோர் இன்று மதியம் கருணாநிதியிடம் கொடுத்தனர்.
இதன் அடிப்படையில் தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கருணாநிதி கோரினார்.
இதை கவர்னர் ஏற்றுக் கொண்டார். பிறகு கருணா நிதியை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் பர்னாலா அழைப்பு விடுத்தார்.
கவர்னரின் அழைப்பை தொடர்ந்து புதிய அமைச்சர்கள் பட்டியலை கவர்னரிடம் கருணாநிதி வழங்கினார். அதை கவர்னர் ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து புதிய அமைச் சரவை பதவி ஏற்பு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவர்னர் இன்று பிற்பகல் வெளியிடுவார். நாளை காலை 10 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.
மந்திரிகள் பட்டியல்:
கருணாநிதி- உள்துறை;
அன்பழகன்- நிதி;
ஆற்காடு வீராசாமி- மின்சாம்;
மு.க.ஸ்டாலின்- உள்ளாட்சித்துறை;
கோ.சி.மணி- கூட்டுறவு;
வீரபாண்டி ஆறுமுகம்- விவசாயம்;
துரைமுருகன்- பொதுப்பணித்துறை;
பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன்- அறநிலையத்துறை;
பொன்முடி- உயர்கல்வி;
கே.என்.நேரு- போக்குவரத்து;
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்- பிற்படுத்தப்படடோர் நலம்;
ஐ.பெரியசாமி- வருவாய், சட்டம்;
சுரேஷ்ராஜன்- சுற்றுலா;
பரிதி இளம்வழுதி- செய்தி, விளம்பரம்;
ஏ.வ.வேலு- உணவு; சுப.தங்கவேலன்- வீட்டுவசதி;
சாத்தூர் ராமச்சந்திரன்- மக்கள் நலவாழ்வு;
தா.மோ.அன்பரசன்- தொழிலாளர்நலம்;
கே.ஆர்.பெரியகருப்பன்- குடிசை மாற்று வாரியம்;
என்.கே.கே.பி.ராஜா- கைத்தறி;
தங்கம் தென்னரசு- பள்ளிக்கல்வி;
உபயதுல்லா- வணிக வரிகள்;
மைதீன் கான்- விளையாட்டு;
என்.செல்வராஜ்- வனத்துறை;
வெள்ளக்கோவில் சாமிநாதன்- நெடுஞ்சாலைத்துறை;
பூங்கோதை- சமூக நலம்;
கீதா ஜீவன்- கால்நடை;
தமிழரசி- ஆதிதிராவிடர் நலம்;
கே.பி.பி.சாமி- மீன்வளம்; மதிவாணன்- பால்வளம்;
கே.ராமச்சந்திரன்- கதர்வாரியம்.
மந்திரி சபையில் காங்கிரஸ் இடம் பெறுமா ?
இன்று காலை 9.45 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் வீட்டுக்கு வீரப்பமொய்லி சென்றார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும் சென்றார். இருவரும் கருணாநிதியை சந்தித்து பேசினார்கள். தேர்தல் முடிவு குறித்து ஆலோசித்தனர். 10.45 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது.
கருணாநிதியுடன் பேசியது பற்றி வெளியில் வந்த வீரப்பமொய்லி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நானும், கிருஷ்ணசாமியும், தி.மு.க. தலைவர் கருணா நிதியை சந்தித்து சோனியா காந்தியின் வாழ்த்துக்களை தெரிவித்தோம். எங்கள் கட்சி சார்பிலும், தொண்டர்கள் சார்பிலும் கருணாநிதிக்கு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்து சொன்னோம்.
தி.மு.க. ஆட்சிக்கு காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தருகிறது. இதற்கான ஆதரவு கடிதத்தை கிருஷ்ணசாமி கவர்னரிடம் கொடுப்பார்.
கேள்வி: தி.மு.க. மந்திரி சபையில் காங்கிரஸ் இடம் பெறுமா?
பதில்: பல விஷயங்கள் பற்றி பேசினோம். இந்த கேள்விக்கு எங்கள் பதில் எளிமையானது. தி.மு.க. ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிக்கிறோம்.
அதே போன்று புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு தி.மு.க. நிபந்தனையற்ற ஆதரவு தருகிறது.
வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஜெயலலிதா ஆலோசனை
வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் நேற்று போயஸ் கார்டன் சென்றனர். வெற்றி பெற்ற செங்கோட்டையன், ஜெயக்குமார், பி.கே. சேகர்பாபு, ஜி. செந்தமிழன், கு. சீனிவாசன், வி.பி. கலைராஜன், பதர்சயீத், எஸ்.வி. சேகர் உள்ளிட்ட பலர் ஜெயலலிதா வீட்டுக்கு சென்றனர்.
வெற்றி பெற்ற சான்றிதழை காட்டி ஜெயலலிதாவிடம் ஆசி பெற்றனர். அவர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வெளி மாவட்டங்களில் வென்ற அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று சென்னை வருகிறார்கள். அவர்களையும் ஜெயலலிதா சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, May 12, 2006
இன்றைய செய்திகள்
Posted by IdlyVadai at 5/12/2006 03:11:00 PM
Subscribe to:
Post Comments (Atom)











7 Comments:
234க்கு 15% 35 வருகிறது. அதில் 31 பேர் இப்போதா ?
மேலும் இது தி மு க வின் 96க்கு 30% வருகிறது. மூன்றில் ஒருவர் மந்திரியா ?
தவிர இந்த 31ல் பெண்கள் 3 பேர்தானா?
பெரிய அமைச்சரவையா இருக்கும் போல இருக்கே. போன வாட்டி எத்தன பேர் இருந்தாங்க?
Update: தமிழக அமைச்சர்கள் இலாகாக்கள் அறிவிப்பு.
மு.க.ஸ்டாலின்- உள்ளாட்சித்துறை!!
//ஐ.பெரியசாமி- வருவாய், சட்டம்;//
காவல் துறை??
Police Department will be with Kalaignar only as he has retained the Home Department.
Why not DMK ask Veerapa Moily for water instead of Congress support?
macmohan...வெவரம் புரியாத புள்ளையா இருக்கீங்களே?!
Post a Comment