கேரள கம்யூனிஸ்டு கட்சி யினர் தங்கள் மாநில நலனை மட்டும் பார்க்கிறார்கள். தமிழக கம்ïனிஸ்டுகள் அகில இந்திய, அகில உலக பார்வை கொண்டவர்கள். கேரளா வின் நன்மைக்கு, கேரள மக்கள் நல்வாழ்விற்கு குரல் கொடுக்கும் அச்சுதானந்தன் போல தமிழக மக்கள் நலனுக் காக சங்கரய்யா போன்றவர் கள் குரல் கொடுப்பதில்லை.
மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியினர் கேரளாவில் காங் கிரசை எதிர்த்து போட்டியிடு கிறார்கள். இங்கு கூடலூர் வரை காங்கிரசுடன் ஒரே மேடையில் அமர்ந்து கட்டித் தழுவி பேசுகிறார்கள். 10 கிலோ மீட்டர் தாண்டி கேரள எல்லைக்கு போனால் காங் கிரசை திட்டி பேசுகிறார்கள். 10 கிலோ மீட்டருக்கு ஒரு கூட்டணி வைக்கும் கம்ïனிஸ்டுகளுக்கு எங்களை பற்றி பேச தகதி இல்லை. - வைகோ
தி.மு.க. தேர்தல் அறிக்கை முதல்பரிசை தட்டிச் சென்று விட்டது என்று கூட்டணி கட்சி தோழர்கள் கூட சொன்னார்கள். எல்லோருடைய எண்ணத்தை யும் உருட்டி உருவாக்கப்பட்டது தான் இந்த தேர்தல் அறிக்கை.
தனிப்பட்ட ஒருவரின் திறமை யின் அடையாளம் அல்ல. இது ஏழைகளின் கண்ணீரை தொட்டு, உழைப்பாளிகளின் வியர்வையை தொட்டு, வணிகர் களின் ஆலோசனையில், நடுத் தெருவில் நாதியற்று நிற்கும் ஏழைப் பெருங்குடி மக்களை எண்ணி எழுதப்பட்டது. தமிழகத்தின் எதிர்கால தலையெழுத்தை நிர்ணயிக்க எழுதப்பட்டது. - கலைஞர்
ஏழைகளின் வாழ்வு மலருவதற்காகவும், மக்களுக்காக உழைக்கவும் மீண்டும் அதிமுக அரசை ஆட்சியில் அமர்த்த வேண்டும். முந்தைய தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய மனநிறைவு எனக்கு உள்ளது.
வரலாறு காணாத இயற்கை பேரழிவுகளும் எண்ணற்ற இடையூறுகள் ஏற்பட்ட போதும் தொடர்ந்து சாதனை படைத்துள்ளோம். ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் 32லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். - ஜெயலலிதா
எம்.ஜி.ஆரால் தொடங்கப் பட்ட சத்துணவு திட்டத்தில் முட்டையை சேர்த்தவர் கருணா நிதி. தற்போது தனது தேர்தல் அறிக்கையில் சத்துணவில் வாரத் திற்கு 2 முட்டை வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். அது உறுதியாக நிறை வேற்றப்படும்.
இதன் மூலம் தற்போது வாரத் திற்கு 3 கோடி முட்டை சப்ளை செய்யும் நீங்கள் 6 கோடியாக உங்களது வர்த்தகத்தை உயர்த்த முடியும். தொழில் வளர்ச்சி அடையும்.
எனவே கருணாநிதி தலைமை யிலான ஆட்சி அமைய நீங்கள் அனைவரும் காங்கிரஸ் வேட் பாளர் டாக்டர்.ஜெயக்குமா ருக்கு கை சின்னத்தில் வாக்களி யுங்கள். - மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முழுவதும் நான் 30 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றுப் பயணம் செய்துள்ளேன். 2-வது முறையாக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரசாரம் செய்து வருகிறேன்.நிறைய இடங்களில் நமது கட்சி கொடியை கட்ட விடாமல் தடை செய்கிறார்கள்.
சில இடங்களில் மேடை அமைப்பதற்கு தடை செய்கிறார்கள். 2 பெரிய கட்சிகளும் தேசிய முற்போக்கு திராவிட கழக வளர்ச்சிக்கு தடங்கல் ஏற்படுத்துகிறார்கள். நான் நேற்று கூட சென்னையில் பிரசாரம் செய்தேன். எனது பிரசாரத்தை மக்கள் பார்க்கக் கூடாது என்று தடை செய்கிறார்கள்.
நமது கட்சிக்கு வரும் கூட்டத்தை பார்த்து ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் பயப்படுகிறது. அதனால் நமக்கு எப்படி எல்லாம் தொல்லை கொடுக்க முடியுமோ அப்படியெல்லாம் கொடுக்கிறார்கள். - விஜயகாந்த்
முதல்அமைச்சர் ஜெயலலிதா மிகுந்த பண்பாடு மிக்கவர் ஆவார். நான் டெல்லி சென்று வந்தபோது அவரை விமானத்தில் சந்தித்தேன்.அப்போது மழைநீர் சேமிப்புதிட்டம் சிறப்பாக உள்ளது என்று கூறினேன்.உடனே அவர் முகமலர்ச்சியுடன் நன்றி தெரிவித்து பேசினார். இது அவருடைய உயர்ந்த பண்பாட்டினை விளக்குகிறது.
ஆனால் தி.மு.க தலைவர்களுக்கு மரியாதை என்பது தெரியவில்லை.தயாநிதிமாறன், வைகோவைப் பார்த்து ஒண்டிக்கு ஒண்டிவர்றியா என்று நாகரீகமற்ற முறையில் பேசி இருக்கிறார்.அவர் எம்.பி.ஏ படித்த பட்டதாரி என்கிறார்கள்.ஆனால் கற்றவர் இப்படி நாகரீகமற்ற வார்த்தைகளை உபயோகிப்பதா? - சரத்குமார்
வருகிற சட்டசபை தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்காது. பா.ஜனதா கூட்டணியில் 18 கட்சிகள் இடம் பெற்று உள்ளன. இந்த கூட்டணிக்கு 25 இடங்கள் வரை கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. பா.ஜனதா கூட்டணி இல்லாமல் ஆட்சி உருவாக்க முடியாது.மின்னணு வாக்குபதிவில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. உக்ரைன் உள்பட சில நாடுகளில் இவ்வாறு முறைகேடுகள் நடந்து இருக்கிறது.சி.என்.என். இந்து போன்ற பத்திரிகைகள் நடத்திய கருத்து கணிப்பில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று சொல்லி இருக்கிறார்கள்.ஆனால் கருணாநிதி 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார். அதை அவர் எப்படி சொல்கிறார். அவரால் எப்படி சொல்ல முடிகிறது. இதில் தான் ரகசியம் இருக்கிறது. இந்தியாவுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள், மதம் மாற்றுகிறவர்களால் ஆபத்து இருக்கிறது. எனவே பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்.அவ்வாறு வெற்றி பெற செய்தால் சேலத்திற்கு சர்வதேச விமான நிலையம் கொண்டு வரபாடுபடுவோம். - சு.சுவாமி
பிகு: சென்னையில் நேற்று 105 டிகிரி வெயில் கொளுத்தியது இன்றும் வெயில்தாக்கம் இருக்கும் என்று வானிலை மையம் அறிவிப்பு
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, April 30, 2006
தேர்தல் மேடைகளை சுற்றி
Posted by IdlyVadai at 4/30/2006 01:29:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










3 Comments:
வெயிலோட தாக்கம் வெளங்குதுங்க- அதும் வரிசப்படி தானே போட்ருக்கீங்க
Really a Good Work!!
//தமிழ்நாடு முழுவதும் நான் 30 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றுப் பயணம் செய்துள்ளேன் - விஜயகாந்த்//
ஆஹா, இன்னும் இந்த புள்ளிவிவரத்தை விடமாட்டேங்குறாரே...
Post a Comment