1. சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம்
அதிமுக கூட்டணியில் நாகர்கோவில் தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் அக்கட்சி சார்பாக ரத்தினராஜ் போட்டியிடுகிறார். நாகர்கோவில் தொகுதியின் தற்போதைய அதிமுக எம்எல்ஏ ஆஸ்டின் அத்தொகுதியை கேட்டு கட்சித் தலைமையிடம் விண்ணப்பம் அளித்திருந்தார். ஆனால், நாகர்கோவில் தொகுதி கூட்டணி கட்சியான மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, ஏமாற்றமடைந்த ஆஸ்டின் தற்போது சுயேச்சையாக அத்தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும், அங்கு தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், ஆஸ்டினை கட்சியிலிருந்து நீக்கி பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று உத்தரவு வெளியிட்டுள்ளார்.
அதில், கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட ஆஸ்டின், இன்று முதல் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார். அதிமுக தொண்டர்கள் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
2. எடப்பாடி கணேசன் பா.ம.க.வில் இருந்து நீக்கம்
எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள இவருக்கு, இத் தேர்தலில் போட்டியிட கட்சி சார்பில் டிக்கெட் கிடைக்கவில்லை. எனவே, சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
இவரையும், எடப்பாடி நகர செயலாளர் அ. செங்குட்டுவன், நகரத் தலைவர் எம்.டி. ரமேஷ் ஆகியோரையும் கட்சியில் இருந்து நீக்குவதாக பா.ம.க. பொதுச் செயலாளர் தென்.சு. மூக்கையா தெரிவித்துள்ளார்.
1996-ல் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வென்றது. அதில் எடப்பாடி கணேசனும் ஒருவர். 2001-ல் அதிமுக கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
எம்.ஜி.ஆர். காலத்தில் 1977 முதல் 1980 வரையிலும், 1980 முதல் 1984 வரையிலும் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, April 22, 2006
இன்றைய நீக்கங்கள்
Posted by IdlyVadai at 4/22/2006 07:15:00 PM
Subscribe to:
Post Comments (Atom)











0 Comments:
Post a Comment