தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் நடிகர் விஜயகாந்த் சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். படித்து பாருங்கள் ஜாலியா இருக்கு.
கேள்வி: 1 மாத சுற்றுப் பயணத்தில் எப்படி உணர்ந்தீர்கள்?
பதில்: 12 மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தேன். மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். வெற்றி கண்ணுக்கு தெரிகிறது.
கே: கூட்டணி வைப்பது இல்லை என்ற முடிவை மாற்றும் எண்ணம் உண்டா?
ப: என் முடிவில் மாற்றம் இல்லை.
கே: தனித்து நின்றால் வெற்றி பெற முடியுமா?
ப: ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்கிறவன் முதலில் வரவேண்டும் என்று தான் நினைக்க வேண்டும். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். எம்.ஜி.ஆர். படைத்த வரலாற்றை நான் படைக்க கூடாதா?
கே: தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்?
ப: ஜோசியம் எல்லாம் பார்க்ககூடாது. முதலிடத்தில் வருவேன் என்று ஏற்கனவே கூறிவிட்டேனே.
கே: தேர்தல் சின்னம் முடிவு செய்து விட்டீர்களா?
ப: மனதில் இருக்கிறது. இப்போது கூற முடியாது.
கே: நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிடுவீர்கள்?
ப: எல்லா தொகுதியும் என் தொகுதிதான். பண்ருட்டியில் கூட நான் போட்டியிட பண்ருட்டி ராமச்சந்திரன் மனு செய்துள்ளார்.
கே: பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா?
ப: 60 சீட் வரை ஒதுக்குவேன். இப்போதே 40 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
கே: அறிமுகம் இல்லாத வேட்பாளர்களால் உங்கள் கட்சிக்கு பின்னடைவு ஏற்படுமா?
ப: அந்தந்த தொகுதியில் உள்ளவர்களை மக்களுக்கு தெரியாதாப அதில் பிரச்சினை ஒன்றும் இருக்காது.
கே: வாரிசு அரசியலை வரவேற்கிறீர்களா?
ப: மக்கள் ஏற்றுக் கொண்டால் யார் வேண்டுமானாலும் வரலாம். வாரிசு அரசியலை நான் எப்போதும் எதிர்க்கவில்லை.
கே: உங்கள் மனைவி தேர்தலில் போட்டியிடுவாரா?
ப: இல்லை.
கே: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் 2-ம் கட்ட தலைவர்கள் யாரும் இல்லையே?
ப: எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது யார் இருந்தார்கள். மதுரை முத்து, கே.ஏ. கிருஷ்ணசாமி எல்லாம் அதன்பிறகு தானே வந்தார்கள்.
கே: தேர்தல் செலவை சமாளிக்க என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள்?
ப: சந்திப்போம், சமாளிப்போம். மக்கள் ஓட்டு போட்டால் போதும்.
கே: தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு கிராமங்களில் உள்ள செல்வாக்கு நகர்புறத்தில் இருப்பதாக தெரியவில்லையே?
ப: அப்படி இல்லை. நகர்புறத்திலும் எங்களுக்கு செல்வாக்கு உள்ளது.
கே: அ.தி.மு.க.வை விட தி.மு.க.வை அதிகம் தாக்கி பேசுவது ஏன்?
ப: அப்படி இல்லை. 2 கட்சிகளையும் சமமாகத்தான் தாக்கி பேசுகிறேன்.
கே: பா.ம.க.வை விமர்ச் சிப்பது இல்லையே?
ப: எனக்கு தி.மு.க-அ.தி.மு.க.தான் போட்டி.
கே: நீங்கள் அரசியலுக்கு வந்த பிறகு உங்கள் சக நடிகர்கள் வேறு கட்சிக்கு அதிகளவில் சென்று சேரு கிறார்கள். அது உங்களை தனிமைப்படுத்தும் திட்டமா?
ப: என்னை யாரும் தனி மைப்படுத்த முடியாது. சினிமாவில் தனியாக போராடியே ஜெயித்தேன். அரசியலிலும் ஜெயிப்பேன்.
கே: சினிமாவில் உங்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர் கள், உதவியை பெற்றவர்கள் பற்றி கடுமையாக தாக்கி பேசுகிறார்களே என்று வருத்தப்பட்டது உண்டா?
ப: இல்லை. அவர்கள் இருக்கிற இடத்திற்கு தகுந்தாற் போல் பேசுகிறார்கள். இதை தவிர்த்து தனிப்பட்ட முறையில் நண்பர்கள் தான்.
கே: சினிமா பைட்டை (சண்டை) சமாளித்ததால் அரசியல் பைட்டை சமாளித்து விடலாம் என்று நினைக்கிறீர்களா?
ப: சினிமாவில் சண்டை காட்சிகளில் நான்தான் அதிகம் ரிஸ்க் எடுப்பேன். ஆனால் அரசியல் பைட்தான் ரொம்ப கஷ்டமாக இருக்குது. இதையும் சமாளிப்பேன்.
கே: அரசியல் கட்சி தொடங்கியதால் உங்கள் சுதேசி, பேரரசு படத்தை வாங்க பயப்படுகிறார்களா?
ப: இல்லை. தியேட்டர் கிடைக்காததுதான் பிரச்சினை. சுதேசி 3-ந்தேதி ரீலிசாகிறது. பேரரசு அடுத்ததாக வெளி வரும்.
கே: முதல்வரானால் முதல் கையெழுத்து எதில் போடுவீர்கள்?
ப: அதை இப்போது கூறமுடியாது.
கே: சினிமாவில் போலீசாக அதிக படத்தில் நடித்தீர்கள். அவர்களுக்கு நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள்?
ப: மனிதாபிமான முறையில் நடத்துவேன். அவர்களை பழிவாங்க மாட்டேன்.
நன்றி: மாலை மலர்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, February 24, 2006
எனக்கு தி.மு.க-அ.தி.மு.க.தான் போட்டி - விஜயகாந்த்
Posted by IdlyVadai at 2/24/2006 05:06:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










2 Comments:
இட்லி வடை..ஒவ்வொரு கேள்விக்கும் உங்க கமெண்ட் இருந்தா இன்னும் காமெடியா இருந்திருக்கும்... முக்கியமாக.. இந்த இரு தொடர் கேள்விகளுக்கு ;-))))
வாரிசு அரசியலை வரவேற்கிறீர்களா?
உங்கள் மனைவி தேர்தலில் போட்டியிடுவாரா ?
யாத்திரீகன் என் மேல் உங்களுக்கு அப்படி என்ன கோபம் ? சரி நீங்க என்ன கமெண்ட் எழுதியிருப்பீங்க ?
Post a Comment