எவ்வளவு நாள் தான் பத்திரிகைகள் சினிமா நடிகர்/நடிகைகளைப் பற்றிக் கிசுகிசு எழுதுவார்கள்; ஒரு மாறுதலுக்கு பத்திரிகை/எழுத்தாளர்கள் பற்றி கிசுகிசு...
* அவர் ஒரு எழுத்தாளர்; ஆறு மணிக்கு டிவியில் 'வந்தே மாதரம்' முடிந்தவுடன் பிரபலங்களைப் பேட்டி எடுப்பார். ஒரு நாள் 'தீர்த்தம்' கொஞ்சம் ஓவராகப் போய், ஏதோ சில உண்மைகளை ஒளறிவிட்டார். அதை, தற்போது 'குங்குமம்' வைத்துக்கொள்ளும் ஒரு எழுத்தாளர் பாக்கு சாப்பிட்டுக்கொண்டே கேட்டுவிட்டு 'ரிப்போர்டர்'-க்குப் போட்டுக்கொடுக்க, பேட்டி எடுக்கும் எழுத்தாளர், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சுபம்!
* இவர் புதுசாக சினிமாவிற்கும் வசனம் எழுத ஆரம்பித்திருக்கிறார். இவர் ஒரு பக்கக் கதை எழுதினாலும் ஒரு விழா வைக்க ஏற்பாடு செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார். அதனால் இவரை கண்டால் எல்லா பதிப்பகங்களும் 'துண்டைக் காணோம்! துப்பட்டாவைக் காணோம்!!' என்று தலைதெறிக்க ஓடுகிறார்கள். பயம்!
* ஒரு பிரபல வார பத்திரிக்கையில் எழுத்தாளர்களை பற்றி வந்த தொடர் இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது; அதில் அந்த தொடர்க்கு வரைந்த ஓவியரின் பெயர் மற்றும் அவரைப் பற்றிய விபரங்கள் மட்டும்...மாயம்!
தொடரும்...
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, February 21, 2006
சுபம், பயம், மாயம் !
Posted by IdlyVadai at 2/21/2006 11:30:00 AM
Subscribe to:
Post Comments (Atom)











2 Comments:
kuthu kuthu kumaangkuthu !!
ஆஹா - LazyGeekக்கா ? சந்தோஷம்.
Post a Comment