மதர்ஸ் டேயை முன்னிட்டு ஒரு சின்ன வாக்கெடுப்பு
(கல்யாணம் ஆன பெண்களுக்கு மட்டும்)
நீங்கள் விரும்பி சாப்பிடும் உணவு
அம்மா செய்ததா ?
மாமியார் செய்ததா ?
[ஓட்டு பெட்டி இருக்குது பார் மேலே]
கவலைப்படாதீர்கள், நாளை கல்யாணம் ஆன ஆண்களுக்கு ஒரு வாக்கெடுப்பு
[update] 
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, May 09, 2005
கல்யாணம் ஆன பெண்களுக்கு மட்டும்
Posted by IdlyVadai at 5/09/2005 12:31:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










9 Comments:
ஹலோ இட்லி. நான் ஒட்டுப் போடலே. இருந்தாலும் ஒரு கேள்வி. எங்கேயாச்சிம் மாமியார் அம்மா ஆவாங்களா? மாமியார் மாமியார் தான். அம்மா அம்மா தான். என்ன? நான் சொல்றது புரிஞ்சிதா? மாமியார் தான் அம்மா என்று செண்டிமண்டலாக பேசினால் அதெல்லாம் சும்மா....
அல்வாசிட்டி.விஜய்,
வாக்கு நிலவரத்தை பார்த்தால் அப்படி தெரியவில்லையே ;-)
தற்போது நிலவரம் - 2:3
கணவன் செய்ததா என்கிற தேர்வு இருந்திருந்தால் மாமியாரும் அம்மாவும் டெபாசிட் இழந்திருப்பார்கள்!!!
--Haranprasanna
haranprasanna,
உங்களை பின்னுட்டத்தைப் பார்த்தால் புச்சா கல்யாணமானவர் போல் தெரிகிறதே ?
//வாக்கு நிலவரத்தை பார்த்தால் அப்படி தெரியவில்லையே ;-)//
அட இட்லி. கல்யாணம் ஆகாத புள்ளையாண்டானா நீங்க. எப்படி வாக்கு நிலவரம் வருதோ, அதை அப்படியே ரிவர்ஸ்-ல எடுத்துக்கோங்க. அதுவுமில்லாம 'மாமியார் தான் அம்மா என்று செண்டிமண்டலாக பேசினால் அதெல்லாம் சும்மா.... ' மாமியார் மாமியார் தான். அம்மா அம்மா தான்... :-))))
அம்மா அம்மா தான் (மாமியார் ஆகும் வரை) ;-)
//அம்மா அம்மா தான் (மாமியார் ஆகும் வரை) ;-) //
இது பாயிண்டு...
லாவக முனிவர் சொல்கிறார் "மகனே!! நீ ஞானம் பெற்றுவிட்டாய். தேவையில்லை உனக்கு திருமணம்" ;-) ;-)
அம்மாவா இருந்தாலும், மாமியாரா இருந்தாலும்.... யாரா இருந்தாலும் சரிதான், என்னை சமைக்கச் சொல்லாதவரை!. என்னங்க இது? மாமியாரோட காழ்ப்புணர்வு கொள்ள, ஆயிரம் இருக்கும்போது...நம்ம இத இதிலயா காட்டுவாங்க!...என்ன மாதிரிப் பாராட்டிட்டு போய்ட்டே இருங்க! "அத்தை!, (இத அந்த கால சரோஜாதேவி மாதிரி அத்தேன்னு கொஞ்சி சொன்னிங்கன்னா இன்னும் நல்லது). சூப்பர் உங்க சமையல்! சம்பார், ரசம் எல்லாம் சும்மா சிறுவாணித் தண்ணி மாதிரி தித்திப்பா இருக்கு! (தண்ணி மாதிரின்னு 'தட்டறதுதான்' நோக்கம்!, 'சூப்பர், தித்திப்பு' எல்லாம் அவங்கள வாய்யெல்லாம் பல்லாக்கி விடும்). அப்புறம், எடுத்து விடுங்க அடுத்தத, அத்தே! ஐயோ! அவியல், பொரியல்னு அசத்துறிங்க எனக்கு கண்ணுகலங்கி வயிரேல்லாம் கலங்குதத்த!(வார்த்தைக்கு வார்த்த அத்தையும், அசத்திட்டிங்க!, கலக்கிட்டிங்க! முக்கியம்.). அப்புறம், அந்தப் பாயாசம் கொன்னுட்டிங்க போங்க!.(எதிலடா உங்க மேல குத்தம் கண்டுபிடிக்கலாம்ங்கறதுக்காகவே சில மாமியார்கள் சமைப்பார்கள்! அப்படிபட்டவுங்களோ அல்லது கொஞ்சம் புத்திசாலி மாமியாரகவோ இருந்தால், நாம வாயெல்லாம் பல்லா, ஒண்ணுமே பேசாம சாப்பிட்டுப் போறதுதான், எல்லாருக்கும் நல்லது, குறிப்பா நம்மக் கட்டுன பேக்குகளுக்கு (செல்லமாத்தான்...ம்க்கும்...)
//உங்களை பின்னுட்டத்தைப் பார்த்தால் புச்சா கல்யாணமானவர் போல் தெரிகிறதே ? //
அது நடந்து ஒரு வருசமாயிட்டு. ஹ்ம்ம்ம்ம்...
Post a Comment