இன்று இரா. மகேசன் அவர்கள் எனக்கு ஒரு புதிர் அனுப்பியிருக்கிறார்.
வணக்கம் இட்லி,
இதோ உங்களுக்காக இன்னொரு புதிர். ஒரு தர்க்கப் பேராசிரியர் கடைக்குள் நுழைகிறார். கடைக்காரர் இடக்காக பேசுபவர்.பேராசிரியரை மடக்க எண்ணினார். ப்ரோபசர் கேட்டார். "அய்யா, உங்களுக்கு எத்தனை குழந்தைங்க?" "மூணுங்க" "வயசு என்ன?" கடைக்காரர், "மூணு பேர் வயசையும் பெருக்கினா 72 வருங்க." என்றார். ப்ரோபசர் யோசித்து, "தகவல் பத்தாதுங்களே?" என்றார். கடைக்காரர், "வெளியே போய் பாத்திங்கன்னா எதிர்க் கடை நம்பர் இருக்கு பாருங்க, அதான் என் பிள்ளைங்க வயசைக் கூட்டினா வற்ற தொகைங்க." ப்ரோபசர் வெளியே போய் பார்த்துவிட்டு "இப்ப கூட தகவல் பத்தாதுங்க" என்றார். கடைக்காரர் புன்னகைத்து, "என்ன ப்ரோபசர் நீங்க. மூனாவது தகவல் தர்றேன். என் பிள்ளைங்க மூணுபேத்தில சின்னவனுக்கு - கடைக்குட்டிக்கு - ஐஸ்க்ரீம்னா ரொம்ப பிரியம்." ப்ரோபசர், "அப்படியா? இப்ப தகவல் போதுங்க" என்று மூணு பேர் வயதையும் சரியாக சொல்லிவிட்டார்.என்ன வயசு? எப்படி சொன்னார்?
- நன்றி : 21ம் விளிம்பு - சுஜாதா பி.கு. எனக்கு விடை தெரியும்.
- மகேசன் இரா
தமிழர்களை கொஞ்சம் யோசிக்க செய்த இரா. மகேசனுக்கு என் ஸ்பெஷல் நன்றி.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, May 08, 2004
வயசு என்ன ?
Posted by IdlyVadai at 5/08/2004 10:28:00 AM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










0 Comments:
Post a Comment