பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 01, 2012

இனி ஒபாமாவுடன் தான் கூட்டணி... ஆங்!...










நாக்கு இல்லேன்னா பேச்சு வராது என்று சொல்வாங்க!


Read More...

Tuesday, January 31, 2012

தி.மு.க.4 பெட்டிக் கடைகளாக...

தி.மு.க.4 பெட்டிக் கடைகளாக...சிதறுண்டு போகும் - குமுறுகிறார் பெரம்பூர் கந்தன் (தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்)

தி.மு.க.வின் கொள்கைகளையும் லட்சியங்களையும் ஆழக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு ‘தம் குடும்பம் மட்டுமே கழகக் குடும்பம்’ என்று கலைஞர் செயல்படுவதால் எதிர்காலத்தில் கட்சி நான்கு பெட்டிக் கடைகளாகச் சிதறுண்டு போகும்," என்று எச்சரிக்கிறார் பெரம்பூர் கந்தன். இவர் கலைஞர் பாசறையின் அமைப்பாளர். தவிர, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர். தி.மு.க. பொதுக்குழு கூடும் சமயம் கந்தன் வீசுவது சாதாரண குண்டல்ல; கந்தக குண்டு...

அண்ணா கழகக் குடும்பத்தை எப்படிப் பார்த்தார் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். 1962 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 50 இடங்களில் கழகம் வென்றது. அதே சமயம் தில்லியில் மக்களவைக்கு எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தமிழகத்தில் சட்டமன்றக் கட்சிக்கு நெடுஞ்செழியனும், பாராளுமன்ற கட்சிக்கு இரா.செழியனும் தலைவர்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற பேச்சு இருந்தது. அண்ணா, நெடுஞ்செழியன் மற்றும் செழியனைக் கூப்பிட்டார். ‘சகோதரர்களான நீங்கள் இருவரும் இந்த இரு அமைப்புகளிலும் தலைவர்களாக இருப்பது என்பது, கழகம் ஒரே குடும்பத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவது போலத் தோற்றம் கொடுக்கும். எனவே உங்களில் ஒருவருக்குத்தான் வாய்ப்புக் கொடுக்க முடியும். அது யார் என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்,’ என்று சொல்லிவிட்டார். கடைசியில் செழியன் பாராளுமன்றக் கட்சித் தலைவராகப் போடப்படாமல் நாஞ்சில் மனோகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதான் அண்ணா கழகக் குடும்பத்தை நடத்திய முறை.

ஆனால் இப்போது என்ன நடக்கிறது? மகன் துணை முதல்வர். அவரைவிடத் தகுதியானவர்கள் கழகக் குடும்பத்தில் இல்லையா? மற்றொரு மகன் மத்திய அமைச்சர். மகள் தில்லி மேலவை உறுப்பினர். பேரன் மத்திய அமைச்சராக இருந்தவர். இப்போது கலைஞரின் சிந்தனைகள் கழகத்தின் எதிர்காலம் குறித்து இல்லை. எந்தெந்தப் பதவிகளை யார், யாருக்குப் பங்கு போட்டுக் கொடுத்தால் குடும்பத்தில் பிரச்னை வராது என்பதே அவரது 24 மணி நேர யோசனையாக இருக்கிறது. எந்த வகையில் கழகச் சட்ட திட்டங்களைத் திருத்தினால், வாரிசுகளின் வாரிசுகளுக்குப் பதவிகள் கிடைக்கும் என்று ஆராய்கிறார்கள். இந்த நிலை உருவாவதற்கு, பேராசிரியர் அன்பழகனும் ஒரு காரணமாகிப் போனார். மூத்த தலைவர் என்ற முறையில் நடக்கின்ற தவறுகளைச் சுட்டிக் காட்டாமல், தமக்கு இரண்டாவது இடம் சாஸ்வதமாக இருந்தால் சரி என்று சுயநலத்துடன் செயல்பட்ட பேராசிரியர், இந்த இயக்கம் இப்படித் தறிகெட்டுப் போவதற்குக் காரணமாக அமைந்தவர்களில் ஒருவராகி விட்டார். இந்த வகையில் வரலாறு அவரது நிலைப்பாட்டை விமர்சனப் பார்வையோடு தான் அணுகும்.

மொழி, இனம், பொருளாதாரம், சாதி பேதமற்ற சமதர்ம சமுதாயம் ஆகியவை குறித்து மிகத் தெளிவாகச் சொல்லப்பட்ட கொள்கைகள் கலைஞர் காலத்தில் நீர்த்துப் போய்விட்டன. உயர்மட்டத்திலேயே சுய நலம் குடிகொண்டதால், கட்சியிலிருக்கும் இளைய தலைமுறையும், பதவி, பணம் என்று அலைபாய்கிறது. யாருக்கும் கொள்கைத் தெளிவு இல்லை. ஒரு உதாரணம். ஜனவரி 25ம் தேதி என்பது தமிழுக்காக உயிர்விட்ட தியாகிகளின் நினைவைப் போற்றுகின்ற தினம். ஆனால் இதையே ஒரு கொண்டாட்டமாக சித்திரிக்கிறார்கள். பேச வரும் தலைவருக்கு எப்படி வரவேற்பு கொடுப்பது என்று கூட்டம் போட்டு யோசிக்கிறார்கள். இதன் மூலம் சிலரது பிழைப்பு ஓடுகிறது. இன்று இயக்கத்தில் வியாபாரிகள் அதிகமாகி விட்டார்கள். பிரைவேட் லிமிடெட் கம்பெனி போல் ஆகிவிட்டது கட்சி.

கழகத்துக்கு உண்மையாகப் பாடுபட்டவர்களுக்கு மதிப்பில்லை. 1991 - 96ல் சட்டமன்றத்தில் ஒற்றை உறுப்பினராக இருந்து கட்சியின் கௌரவத்தைக் காப்பாற்றி, ஜனநாயகத்துக்குப் போராடிய பரிதி இளம்வழுதி, சிலரது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப, கருவேப்பிலையாக ஓரம் கட்டப்படுகிறார். ‘அண்ணா வழியில் அயராது உழைப்போம்’ என்ற கோஷத்தை வெற்று கோஷமாக்கிவிட்டு, அயராது உழைத்த கலைஞரின் குடும்பம் இன்று இந்தியாவின் முன்னணி செல்வந்தர்களில் ஒன்றாகிவிட்டது. கட்சிப் பத்திரிகையான முரசொலி, தொண்டர்கள் உழைத்துக் கொடுத்த பணத்தில் வளர்ந்தது. ஆனால் அதன் நிர்வாகம் கலைஞர் குடும்பத்தின் கையில். அண்ணா அவர்கள் கழக ஏடான ‘நம் நாடு’ பத்திரிகையை, கழக நிர்வாகிகளிடம் அல்லவா ஒப்படைத்திருந்தார்?

இப்போது சொன்னவற்றைவிட மிகப் பெரிய கொடுமை 2009ல் முள்ளிவாய்க்காலில், கொத்துக் கொத்தாக ஆயிரக் கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டபோது மத்திய அரசில் பதவிதான் முக்கியம் என்று நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தமிழினத்துக்கே துரோகம் செய்தாரே... இதை மன்னிக்கவே முடியாது. ‘இன துரோகி’ பட்டத்துக்குப் பொருத்தமானவர் கலைஞரே. இந்த உச்சபட்ச துரோகம்தான் எனக்குத் தீராத மனக்கொதிப்பை ஏற்படுத்திவிட்டது.

இனியும் என்னால் கழகத்தில் நீடிக்க முடியாது. எனவே நான் என்னை அதிலிருந்து விடுவித்துக் கொள்கிறேன். தி.மு.க.வின் ‘கொள்கை’ ஊழல் புகாரில் மாட்டிக் கொண்டு ஒரு வருடமாக திகாரில் இருக்கிறது. எனவே வெட்கப்பட்டு வேதனைப்பட்டு என்னை விடுவித்துக் கொள்கிறேன். ஊழல் புகாரில் ஜெயிலில் இருந்தவருக்கு, பட்டுக் கம்பள வரவேற்பு! ஊழலுக்குத் தாலாட்டுப் பாடும் கட்சியில் எப்படி இருக்க முடியும்?" என்றுகேட்கிறார் கந்தன். இவர் வீசும் ஏவுகணைகளால் பொதுக்குழுவில் சலசலப்பு ஏற்படும்" என்கிறார்கள் சில மூத்த பிரமுகர்கள். பொதுக்குழுவில் இதைவிட இன்னும் பூதாகரமான வெடிகள் வெடித்தாலும் ஆச்சரியமில்லை.

நன்றி - கல்கி
படம் நன்றி - Times of India.


நோ கமெண்ட்ஸ்!

Read More...

Monday, January 30, 2012

கேக் வெட்டிய அழகிரி


இன்று ஆங்கில தேதிப்படி தன் பிறந்த நாளை கேக் வேட்டி சிம்பிளாக அழகிரி கொண்டாடினார் என்ற செய்தியுடன் அவர் அளித்த பேட்டிக்கு பல சாயம் பூச ஆரம்பித்துவிட்டது மீடியா. திமுக பொதுக்குழு கூடுவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கின்ற நிலையில், மீடியாக்கள் என்ன எதிர்பார்த்தனவோ அது நடந்துவிட்டது. அழகிரியிடம் என்ன கேள்வி கேட்டால், அதற்கு எவ்வாறு பதில் கிடைக்கும் என்பது மீடியாவிற்கு அத்துப்படி. அதன்படி, தங்கள் பிறந்தநாளன்று, ஸ்டாலினுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவருக்கென்று தனிப்பட்ட முறையில் ஏதும் கூற விரும்பவில்லை, அவரும் மற்றவர்கள் போல ஒரு திமுக தொண்டர்தான் என்ற ரீதியில் அழகிரி பதிலளித்துள்ளார்.

ஏற்கனவே கழகத்தில் புகைந்துக்கொண்டு இருக்கும் வாரிசுப் புகைச்சலில், இம்மாதிரியான பதில் குடும்பத்திலும், கட்சி மட்டத்திலும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அழகிரிக்குத் தெரியாத்தல்ல. ஆயினும் மீடியாவிற்கு தீனி போடும் வகையில் எதற்காக இப்படி ஒரு பூடகமான பதில்?

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் மற்றும் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் அடைந்த அவமானகரமான படுதோல்வி, அலைக்கற்றை வழக்கில் தொடர்ச்சியாக கழகத்தின் சுயமரியாதையை (??!!) கேள்விக்குரியதாக அடிக்கும் காங்கிரஸ் (சிபிஐ) யின் தொடர் நடவடிக்கைகள் மற்றும் காங்கிரஸின் உதாசீனமான போக்கு போன்றவற்றால் கழகம் நொந்து போயிருக்கும் நிலையில், இன்னும் இரண்டு ஆண்டுகளில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் வேறு கழகத்தில் கிலியைக் கிளப்பியுள்ளது. இன்றைய நிலை தொடர்ந்தால், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் திமு கழகத்திற்கு என்ன நேரும் என்பதை குடும்பம், மற்றும் கட்சியில் உள்ள சகலரும் அறிவர். எனவே கட்சியை மறுசீரமைக்கும் விதமாக ஸ்டாலின் மாவட்டங்கள்தோறும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இளைஞரணிக்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். இது தொடர்பாக மீடியாக்களில் பல ஹேஷ்யங்கள் நிலவுகின்றன.

இந்த மறுசீரமைப்பில் ஸ்டாலின் தனது ஆதரவாளர்களாகப் பார்த்து நியமித்து வருவதாக மீடியாக்களில் தகவல்கள் வந்தவண்ணமிருப்பதால், அழகிரி தரப்பு சற்றே சுணக்கத்தில் இருப்பதாகத் தெரிகிறது. தவிர, வருகின்ற பிஃப்ரவரி மூன்றாம் தேதி நடைபெறவிருக்கின்ற திமுக பொதுக்குழு கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த்தாகக் கருதப்படுகிறது. கட்சியின் இளைஞரணித் தலைவர் பொறுப்பிலிருந்து ஸ்டாலின் விலகி, அப்பொறுப்பிற்கு அவரது மகன் உதயநிதி வருவாரா? கனிமொழியின் தியாகத்தை மெச்சி, தகுந்த கட்சிப் பதவி கிடைக்குமா? இதையெல்லாம் விட முக்கியமாக கட்சியின் “ப்ரெஸிடெண்ட் ஃபார் லைஃப்” கருணாநிதி விலகி, அப்பொறுப்பிற்கு ஸ்டாலின் வருவாரா? இப்படியெல்லாம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அழகிரியின் இந்த தடாலடியான பதில், ஸ்டாலினை மட்டுமல்லாது, கருணாநிதியையும் கலகலக்கச் செய்திருக்கும். இனிவரும் நிகழ்வுகள் பலநாட்கள் பட்டினி கிடந்தவனுக்கு, கல்யாண போஜனம் கிடைத்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கப் போகின்றன.

டவுட்1: இன்று அழகிரி அளித்த பேட்டியில் கலைஞர் வழியில் தான் நடக்கிறேன் என்று சொல்லிவிட்டு, கட்சி பதவி வேண்டாம் என்று சொல்லுகிறார்.
டவுட் 2: தமிழ் வருடம் அது இது என்று பேசி, ஏன் ஆங்கில தேதிப்படி கொண்டாடுகிறார்கள் ?
டவுட் 3: ஸ்டாலினுக்கே கட்சியில் இந்த சாதாரண நிலை என்றால் பேராசிரியர் அன்பழகன் என்ன நினைப்பார் ?
டவுட் 4: படத்தில் அண்ணன் கேக் வெட்ட தயாராக இருக்கிறாரா இல்லை .....?

அண்ணனுக்கு சூடா ஒரு கப் ஹார்லிக்ஸ் !

Read More...

The Hindu Vs TOI







எந்த பத்திரிகை நக்கீரன் வெளியிட்ட 'மாமி' செய்தியை ஆங்கிலத்தில் வெளியிட்டது ? ஹி<பிப்><பிப்><பிப்>:)

Read More...

Thursday, January 26, 2012

குடியரசு தின நல்வாழ்த்துகள்

Read More...

Monday, January 23, 2012

BarbarVsBarkha

கடந்த இரண்டு நாட்களாக ட்விட்டரில் #Barkhabarks, #BarkhaDutt என்ற Tagல் ஒரு பெரிய யுத்தமே நடந்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் இதை பற்றி எந்த நியூஸ் பேப்பர் டிவியிலும் வரவில்லை. சரி எதிராஜ் தான் சரியான ஆள் அவரிடம் கேட்கலாம் என்று அவரிடம் சாட்டில் பேசினேன். பேசிய பிறகு பார்த்தால் இதுவே மினி கட்டுரையாக எழுதலாம் போல இருக்கு அனுப்புங்க என்றேன். அது கீழே...


இரண்டு நாட்களாக ட்விட்டரில் நடந்து வரும் ஒரு பஞ்சாயத்து பற்றியது இவ்விஷயம். #Barkhabarks, #Barkha Dutt இவ்விரண்டு ஹேஷ் டேக்’களும் இரண்டு நாட்களாக போட்டி போட்டுக் கொண்டு முதலிரண்டு இடங்களில் ட்ரெண்டிக் கொண்டிருக்கின்றன. @Primary_red என்பவர் தனது வலைப்பக்கத்தில், கார்கில் யுத்தக்கள நிலவர செய்தியாக்கத்தில், செய்தியாளர் பர்கா தத், இந்திய வீரர்களின் யுத்த நிலைகளையும், போர்த் தந்திரங்களையும் அவ்வப்போது நேரடி ஒளிபரப்பில் தெரிவித்த்தால்தான் பெருமளவில் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர் என்று எழுதியிருந்தார். இதனை பிரபல ட்விட்டர் @barbarindian என்பவர் ஆமோதித்து, அதற்கு காரணம் பர்கா என்றும், அதனை ஒரு Manslaughter என்றும் வர்ணித்திருந்தார். இது போன்று ட்விட்டியதற்காக @barbarindian மீது வழக்கு தொடுப்பேன் என்று பர்க்கா ட்வீட்டியிருந்தார்.



இதற்கு பதிலடியாக ட்விட்டரில் @barbarindian னின் ஆதரவாளர்கள் மேற்கூறிய இரண்டு # Tags மூலமாக போர் தொடுத்து, இரண்டு நாட்களாக இவ்விரண்டும் முன்னணியில் இருக்கின்றன. இதுதான் விஷயம். எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என ஸர்வ சுதந்திரங்களுக்கும் உரிமை கொண்டாடும் மீடியாக்கள், தங்களை யாரேனும் விமர்சனம் செய்தால் பொசுக்கென்று கோர்டுக்கு இழுக்கின்றனர். இதே பர்கா தத் ஏற்கனவே ஒருமுறை ஒரு வலைப்பதிவாளரை நீதிமன்றத்திற்கு இழுத்திருக்கிறார். காரணம் இதேதான், மும்பை மற்றும் கார்கில் தாக்குதலின் போது நேரடி கவரேஜ் கொடுத்த்தை விமர்சித்ததற்காக.

2008 மும்பை தாக்குதலின்போது, தாஜ் ஹோட்டல் கடுமையாக தாக்குதலுக்காட்பட்டிருந்த சமயம், தொலைக்காட்சி செய்தியாளர்கள், இந்திய பாதுகாப்புப்படையின் ஒவ்வொரு அசைவையும் நேரடி ஒளிபரப்பில் காண்பித்துக் கொண்டிருந்தனர். ஹோட்டலினுள்ளிருந்த தீவிரவாதிகள் இதனைத் தொலைக்காட்சி மூலம் கண்டு, அதற்கேற்ப வியூகங்களை வகுத்ததால், இந்த தாக்குதல் சுமார் 36 மணிநேரம் வரை நீடித்தது. இம்மாதிரியாக மீடியாக்கள் அடித்த கூத்திற்கு அப்போதே பலத்த கண்டனக்குரல்கள் எழுந்தன. இத்தாக்குதலில் யூதர்கள் சிலர் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்த்தோடு மட்டுமல்லாமல், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத், இந்தியா நடத்திய ஆபரேஷனின்போது, அங்கு மீடியாக்களை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமத்தித்திருந்ததற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரில் நடக்கும் இவ்விஷயம் அவ்வளவாக ஒன்றும் பெரிதில்லை என்ற போதிலும், மீடியாக்கள் தங்கள் பொறுப்புணர்ந்து எதை எப்போது எப்படி கையாள வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். கார்கில் யுத்தமாகட்டும், அல்லது மும்பை தாக்குதலாகட்டும், மீடியாக்கள் செய்தது அட்டூழியம், நிச்சயம் அங்கு நடந்த கொலைகளில் தீவிரவாதிகளுக்கு இணையாக அவர்களுக்கும் பங்குண்டு என்பதை யாராலும் மறுக்க இயலாது. பரபரப்பாக செய்தி தருகிறேன் பேர்வழி என்று இவர்கள் அடித்த கூத்தினால் பல குடும்பங்கள் இன்று தெருவில் நிற்கின்றன. இதை யாரேனும் விமர்சனம் செய்யும்போது, அவர்களை அடக்குவதற்காக சட்டரீதியான நடவடிக்கை என்ற பெயரில் மிரட்டுகிறார்கள்.

பாகிஸ்தானிலுள்ள ஒஸாமாவைத் தீர்த்துக்கட்ட சிஐஏ, பாகிஸ்தானுக்கே தெரியாமல், கச்சிதமாக ஆபரேஷனை நிகழ்த்தி வெற்றி கண்டது. ஆனால் நம்மூரிலோ, கட்டெறும்பை நசுக்கினால் கூட மீடியாவிற்கு எப்படியோ தெரிந்து வந்து விடுகிறார்கள்.

விஷயம் ரொம்ப சிம்பிள், மீடியாக்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்; சரியோ, தவறோ அடுத்தவர்களை விமர்சனம் செய்ய நாம் தயங்காத போது, நம்மீதான விமர்சனங்களையும் அதே போலவே எதிர்கொள்ள வேண்டும்.

மீடியாவிற்கு பரபரப்பு வேண்டும் என்றால் இருக்கவே இருக்கு யானை சிலைகளும் அதற்கு போடும் முக்காடுகளும்.

Read More...

Sunday, January 22, 2012

Angry Salman Rushdie




( படம் உதவி : http://www.techno18.com/2011/05/how-to-play-angry-birds-online-for-free/
)

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என்பதற்காகவே, தன்னைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் போலீஸார் பொய் சொல்லியுள்ளனர் என்ற குற்றச்சாட்டு பொய்யாக இருந்தால் ராஜஸ்தான் போலீஸார் அவர் மீது வழக்கு தொடர வேண்டும். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள்.

Read More...