
அதிகாலை அலாரம் வைத்து அரக்கப்பறக்க எழுந்து குளித்து, உடைமாற்றி, அமர்ந்து சாவகாசமாக ஐபிஎல் பார்க்கும் ஒருவனிலிருந்து ஆரம்பிக்கிறது காமெடிக் கச்சேரி!
இதுவரை கிரிக்கெட் உலகம் நமக்கு காட்டிய விளையாட்டை சூதாட்டமாக ஜாலி கலாட்டவாகப் படைத்து மனதைக் கவ்வியிருக்கிறது - 'சூது கவ்வும்'!
சூதாட்டத்துக்கு ஐந்து விதிகளை வகுத்துக்கொண்டு 'மிக நேர்மையாக, இதயக் சுத்தியுடன்' பெட் வைக்கும் குரு, கிரிக்கெட் போர்டின் தலைவரின் மாப்ளை!. மாமனார் நடத்தும் போட்டியில் பெட் வைத்தால் என்ன ஆகும் என்பதே ...படம்!. கிரிக்கெட் விளையாட்டு போலவே பல ட்விஸ்ட், க்ளைமாக்ஸ் என்று அசத்துகிறது திரைக்கதை.
''நீங்க ஐபிஎல் பார்ப்பதில்லையா ?"
''எதுக்குப் பார்க்கணும், அது தான் முடிவு தெரியுமே?''
''சென்னைக்கு ஜட்டியோடு வந்தவன் எல்லாம் பேண்ட் போடுகிறான். ஜட்டி இல்லாம வந்தவன்தான் சூட் போடுகிறான்!''
''சார்... கடைசி பால் மட்டும் நோபால் போடாதீங்க சார்!"
''நான் கத்த மாட்டேன். தயவுசெஞ்சு ஸ்ரீசாந்தோட கர்ச்சீப்பை மட்டும் வாய்ல திணிக்காதீங்க.. நாறுது!''
''ஸ்பாட் ஃபிக்ஸிங் பண்றதுக்கு குருட்டுத் தனமான முட்டாள்தனமும், மேட் ஃபிக்ஸிங் பண்றதுக்கு முரட்டுத் தனமான புத்திசாலித்தனமும் வேணும்!''
"ஒவ்வொரு ஓவரிலும் 4 நோபால் போடறான்.. இதுல இவன் நோபால் போடாம இருக்க தான் நாம் பெட் பண்ணனும்''.
இப்படி சீனுக்கு சீன் சிரிப்பு மேளா நடத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் லலித் மோடி, தன்னுடைய படம் ரிலீஸ் ஆனவுடன் ஒளிந்தோடி பல வருஷங்களாக லண்டனில் சுற்றுலாவில் இருக்கிறார்.
ஆனால், அசட்டுக் காமெடிகளாக இல்லாமல் நினைத்து நினைத்துச் சிரிக்கும் அளவுக்கு ஒவ்வொரு பந்தும்அவ்வளவு இன்ட்ரஸ்டிங் ப்ளஸ் இன்டெலிஜென்ட். கிரிக்கெட் உலகில் இதற்குக் கலகல வரவேற்பு!
படத்தில் ஹீரோ என்று யாரைச் சொல்வது? அமெச்சூர் ஸ்பாட் ஃபிக்ஸிங் செய்யும் குருவையா ? அதிகாலை டிவியில் ஹைலட் போடும் போது ஸ்பாட் ஃபிக்ஸிங் செய்யும் விண்டூவையா? ஹர்பஜனுக்கு சிலை வைக்கும் ஸ்ரீசாந்தையா? நேர்மையான கிரிகெட் தலைவராக வரும் பவாரையா?
படத்தில் ஜம்பிங் ஜபாங் ஜம்பக் ஜம்பக் இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை எல்லோர் வாயிலும் முணு முணுக்கும் பாடல். கதாநாயகியாக வரும் அந்த பாலிவுட் நடிகை கற்பனையாக வந்தாலும் கொஞ்சிக் கொஞ்சியே கிளாமரும் ஹ்யூமருமாக வசீகரிக்கிறார். கடைசிவரை அவர் யார் என்ற தகவலை மும்பை போலீஸ் மறைத்துவிட்டது பலருக்கு ஏமாற்றம்.
படத்தின் குறைகள், நிறையவே! இவ்வளவு சொதப்பலாக ஒரு பெட்டிங் கும்பல் இருக்க முடியுமா? கிரிக்கெட் குழுவின் தலைவர் தன் மாப்பிளை ஒரு அமெச்சூர் பெட்டிங் கும்பலுடன் இருக்கிறார் என்று எப்படித் தெரியாமல் போனது? இவ்வளவு நாளாக இதை வெற்றிகரமாக இந்தியா முழுவதும் நடத்திய இந்த கும்பலை பின்தொடராமல் போலீஸ் ஏன் இவ்வளவு நாள் வேடிக்கை பார்த்தது? இதை எல்லாம் யோசித்தால் படத்தை ரசிக்க முடியாது. ஆனால், அது எதையும் யோசிக்கவிடாமல் அள்ளுகிறது மீடியா காமெடி!
குருநாத் போலீஸில் மாட்டிக்கொள்ளும் போது நான் இந்தக் கும்பலுக்குத் தலைவன் இல்லை என்று ஜகா வாங்குவதும், இன்ஸ்பெக்டர் அசால்டாக தன் ஐபோனில் கூகிள் Cache திறந்து காமிக்கும் போது "சும்மா காமெடி செய்தேன்!" என்று குரு சொல்லுவது நல்ல தமாஷ் + டிவிஸ்ட்.
மேட்ச் ஃபிக்ஸிங் ரூல்ஸ் என ஐந்து விதிகளை குரு எழுதி வைத்திருப்பார். அதில் முதலாவது, அதிகாரத்தில் இருப்பவர் பெட் வைக்க கூடாது என வரும். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் நடத்தும் குரு தயங்குவார். உடனே விண்டூ குருவிடம் "சொதப்பினா கவலை பட வேண்டாம்"' என்ற கடைசி ரூல்ஸை நினைவுப்படுத்துது 'செம'.
வெளியுலகை மறக்கடித்து, ஆறாம் அறிவை முடக்கிவைத்து, இருபது ஓவர் மேட்சைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருக்க முடியுமென்றால், இப்படியான 'சூது’களுக்கு நிச்சயம் விரிக்கலாம் சிவப்புக் கம்பளம்! வாழ்க ஐபிஎல்!
( ஒரிஜனல் சூது கவ்வும் விமர்சனம் - நன்றி விகடன் )


இந்த வருடம் IPL பற்றி எதுவும் எழுதக்கூடாது என்ற எனது எண்ணத்தை இன்று மதியத்திலிருந்து ஆங்கிலச் செய்திச்சேனல்களில் அல்லோலகல்லோலப்படும் மேட்ச் ஃபிக்ஸிங் குறித்த செய்திகள் மாற்றி விட்டது. ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகிய மூவரையும் தில்லி போலீஸ் கைது செய்துள்ளது. மூவரில் ஸ்ரீசாந்த் தான் சூத்ரதாரி என்று தெரிகிறது. அவர் மூலம் தான் துபாய் சூதாட்டக்கார கும்பல் மற்ற இருவரையும் வளைத்துப் போட்டுள்ளது. கேரளா என்பதால், துபாய் கனெக்ஷன் ஆச்சரியம் அளிக்கவில்லை. 



நாமக்கல் மாணவர்கள் கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொல்லி மார்க் வாங்கிவிட்டாகள் என்று இணைய கிழட்டு இளைஞர்கள் டிவிட்டர் ஃபேஸ் புக்கில் அதைப் பற்றி விவாதித்தார்கள். அவர்கள் செய்தது குறுக்கு வழி. அப்படி எல்லாம் படிக்கக் கூடாது என்று. உலகைச் சுற்றி வந்தவர்களுக்கு
மாம்பழம் 










