பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 25, 2013

சூது கவ்வும் - சினிமா விமர்சனம் ( புதிய காப்பி )



அதிகாலை அலாரம் வைத்து அரக்கப்பறக்க எழுந்து குளித்து, உடைமாற்றி, அமர்ந்து சாவகாசமாக ஐபிஎல் பார்க்கும் ஒருவனிலிருந்து ஆரம்பிக்கிறது காமெடிக் கச்சேரி!

இதுவரை கிரிக்கெட் உலகம் நமக்கு காட்டிய விளையாட்டை சூதாட்டமாக ஜாலி கலாட்டவாகப் படைத்து மனதைக் கவ்வியிருக்கிறது - 'சூது கவ்வும்'!

சூதாட்டத்துக்கு ஐந்து விதிகளை வகுத்துக்கொண்டு 'மிக நேர்மையாக, இதயக் சுத்தியுடன்' பெட் வைக்கும் குரு, கிரிக்கெட் போர்டின் தலைவரின் மாப்ளை!. மாமனார் நடத்தும் போட்டியில் பெட் வைத்தால் என்ன ஆகும் என்பதே ...படம்!. கிரிக்கெட் விளையாட்டு போலவே பல ட்விஸ்ட், க்ளைமாக்ஸ் என்று அசத்துகிறது திரைக்கதை.

''நீங்க ஐபிஎல் பார்ப்பதில்லையா ?"

''எதுக்குப் பார்க்கணும், அது தான் முடிவு தெரியுமே?''

''சென்னைக்கு ஜட்டியோடு வந்தவன் எல்லாம் பேண்ட் போடுகிறான். ஜட்டி இல்லாம வந்தவன்தான் சூட் போடுகிறான்!''


''சார்... கடைசி பால் மட்டும் நோபால் போடாதீங்க சார்!"

''நான் கத்த மாட்டேன். தயவுசெஞ்சு ஸ்ரீசாந்தோட கர்ச்சீப்பை மட்டும் வாய்ல திணிக்காதீங்க.. நாறுது!''

''ஸ்பாட் ஃபிக்ஸிங் பண்றதுக்கு குருட்டுத் தனமான முட்டாள்தனமும், மேட் ஃபிக்ஸிங் பண்றதுக்கு முரட்டுத் தனமான புத்திசாலித்தனமும் வேணும்!''

"ஒவ்வொரு ஓவரிலும் 4 நோபால் போடறான்.. இதுல இவன் நோபால் போடாம இருக்க தான் நாம் பெட் பண்ணனும்''.


இப்படி சீனுக்கு சீன் சிரிப்பு மேளா நடத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் லலித் மோடி, தன்னுடைய படம் ரிலீஸ் ஆனவுடன் ஒளிந்தோடி பல வருஷங்களாக லண்டனில் சுற்றுலாவில் இருக்கிறார்.

ஆனால், அசட்டுக் காமெடிகளாக இல்லாமல் நினைத்து நினைத்துச் சிரிக்கும் அளவுக்கு ஒவ்வொரு பந்தும்அவ்வளவு இன்ட்ரஸ்டிங் ப்ளஸ் இன்டெலிஜென்ட். கிரிக்கெட் உலகில் இதற்குக் கலகல வரவேற்பு!

படத்தில் ஹீரோ என்று யாரைச் சொல்வது? அமெச்சூர் ஸ்பாட் ஃபிக்ஸிங் செய்யும் குருவையா ? அதிகாலை டிவியில் ஹைலட் போடும் போது ஸ்பாட் ஃபிக்ஸிங் செய்யும் விண்டூவையா? ஹர்பஜனுக்கு சிலை வைக்கும் ஸ்ரீசாந்தையா? நேர்மையான கிரிகெட் தலைவராக வரும் பவாரையா?

படத்தில் ஜம்பிங் ஜபாங் ஜம்பக் ஜம்பக் இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை எல்லோர் வாயிலும் முணு முணுக்கும் பாடல். கதாநாயகியாக வரும் அந்த பாலிவுட் நடிகை கற்பனையாக வந்தாலும் கொஞ்சிக் கொஞ்சியே கிளாமரும் ஹ்யூமருமாக வசீகரிக்கிறார். கடைசிவரை அவர் யார் என்ற தகவலை மும்பை போலீஸ் மறைத்துவிட்டது பலருக்கு ஏமாற்றம்.

படத்தின் குறைகள், நிறையவே! இவ்வளவு சொதப்பலாக ஒரு பெட்டிங் கும்பல் இருக்க முடியுமா? கிரிக்கெட் குழுவின் தலைவர் தன் மாப்பிளை ஒரு அமெச்சூர் பெட்டிங் கும்பலுடன் இருக்கிறார் என்று எப்படித் தெரியாமல் போனது? இவ்வளவு நாளாக இதை வெற்றிகரமாக இந்தியா முழுவதும் நடத்திய இந்த கும்பலை பின்தொடராமல் போலீஸ் ஏன் இவ்வளவு நாள் வேடிக்கை பார்த்தது? இதை எல்லாம் யோசித்தால் படத்தை ரசிக்க முடியாது. ஆனால், அது எதையும் யோசிக்கவிடாமல் அள்ளுகிறது மீடியா காமெடி!

குருநாத் போலீஸில் மாட்டிக்கொள்ளும் போது நான் இந்தக் கும்பலுக்குத் தலைவன் இல்லை என்று ஜகா வாங்குவதும், இன்ஸ்பெக்டர் அசால்டாக தன் ஐபோனில் கூகிள் Cache திறந்து காமிக்கும் போது "சும்மா காமெடி செய்தேன்!" என்று குரு சொல்லுவது நல்ல தமாஷ் + டிவிஸ்ட்.

மேட்ச் ஃபிக்ஸிங் ரூல்ஸ் என ஐந்து விதிகளை குரு எழுதி வைத்திருப்பார். அதில் முதலாவது, அதிகாரத்தில் இருப்பவர் பெட் வைக்க கூடாது என வரும். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் நடத்தும் குரு தயங்குவார். உடனே விண்டூ குருவிடம் "சொதப்பினா கவலை பட வேண்டாம்"' என்ற கடைசி ரூல்ஸை நினைவுப்படுத்துது 'செம'.

வெளியுலகை மறக்கடித்து, ஆறாம் அறிவை முடக்கிவைத்து, இருபது ஓவர் மேட்சைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருக்க முடியுமென்றால், இப்படியான 'சூது’களுக்கு நிச்சயம் விரிக்கலாம் சிவப்புக் கம்பளம்! வாழ்க ஐபிஎல்!

( ஒரிஜனல் சூது கவ்வும் விமர்சனம் - நன்றி விகடன் )

Read More...

Friday, May 24, 2013

ஐபிஎல் பாட்டு


விண்டூ, குருநாத், சீனிவாசன் என்று எல்லோரும் இந்த பாட்டுக்கு ஆடலாம்.

Read More...

Tuesday, May 21, 2013

கட் & பேஸ்ட்


இட்லிவடை கூட கட் & பேஸ்ட் தான்.. இப்பவே சொல்லிபுட்டேன். கடைசி தகவல் இந்த நீயூஸே ஏதோ தெலுங்கு டிவியில் வந்தாம் அதை விகடன் காப்பி அடித்துவிட்டது என்று பேசிக்கொள்கிறார்கள் !

Read More...

Sunday, May 19, 2013

அப்படியா ? சீமானுக்கு வாழ்த்துகள்!

முன்பு திராவிடஸ்தான் உருவாக்கித் தர வேண்டுமென்று ஜின்னாவை நாடினார் ஈரோடு வெங்கிடசாமி ராமசாமி நாயக்கர்; இன்று நாயக்கரின் பேரன் சீமான் ஈழம் உருவாக்குவதற்காக ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக்கை நாடியுள்ளார். ஜின்னா திராவிடஸ்தானை உருவாக்கித் தந்த அதே பாதையில் யாசின் மாலிக்கும் ஈழத்தைப் பெற்றுக் கொடுப்பார் என நம்புவோமாக.

அடுத்து சீமான் ஹஃபீஸ் ஸயீதை அழைத்து வருவார் எனவும் நம்புவோமாக!

Read More...

Thursday, May 16, 2013

IPL Match fixing - எ.அ.பாலா

இந்த வருடம் IPL பற்றி எதுவும் எழுதக்கூடாது என்ற எனது எண்ணத்தை இன்று மதியத்திலிருந்து ஆங்கிலச் செய்திச்சேனல்களில் அல்லோலகல்லோலப்படும் மேட்ச் ஃபிக்ஸிங் குறித்த செய்திகள் மாற்றி விட்டது. ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகிய மூவரையும் தில்லி போலீஸ் கைது செய்துள்ளது. மூவரில் ஸ்ரீசாந்த் தான் சூத்ரதாரி என்று தெரிகிறது. அவர் மூலம் தான் துபாய் சூதாட்டக்கார கும்பல் மற்ற இருவரையும் வளைத்துப் போட்டுள்ளது. கேரளா என்பதால், துபாய் கனெக்‌ஷன் ஆச்சரியம் அளிக்கவில்லை.

இதில் தாவூத் இப்ராஹிம் ஆட்களின் பங்கிருப்பது தெரிய வந்துள்ளது. ராஜஸ்தான் அணியின் மற்ற ஆட்டக்காரர்களுக்கோ, அணியை நிர்வகிப்பவர்களுக்கோ இதில் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது. டிராவிட் போன்ற ஒரு நேர்மையானவர் தலைமை வகிக்கும் அணியில் 3 பேர் இப்படி நடந்து கொண்டுள்ளது வருத்தமான விஷயம். அது போல, மும்பை அணியில் யாரும் இது வரை மேட்ச் ஃபிக்ஸிங்கில் மாட்டிக் கொள்ளாதது சந்தேகத்தைத் தருகிறது.

இந்த IPL-இல் பல ஆட்டங்களில் பேட்டிங்கில் சொதப்பி வந்த மும்பையின் போலார்ட், ஒரு ஆட்டத்தில் ஹைதரபாத் அணியின் ஃபெரெரா மற்றும் அமித் மிஷ்ரா பந்து வீச்சை துவம்சம் செய்தபோது, மேட்ச் ஃபிக்ஸிங் மாதிரி எனக்குத் தோன்றியதை டிவிட்டரில் நேற்று பதிந்திருந்தேன். அவர்கள் இருவரும் போலார்டுக்கு அழகாக போட்டுக் கொடுத்த மாதிரி தான் இருந்தது.

தில்லி போலீஸ் 2-3 வாரங்களாகவே, ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகிய மூவரையும் கண்காணித்து வந்துள்ளனர். சில ஆட்டங்களில், இத்தனையாவது ஓவரில் இத்தனை ரன்களுக்கு மேல் தாரை வார்க்க மேற்கூறிய மூவரும், பணம் பெற்றுக் கொண்டுள்ளனர் என்று தெரிகிறது. ஊழலில் உலகப் பிரசித்தி பெற்ற இந்தியாவில் கடந்த சில வருடங்களாக நடந்தேறியுள்ள ஊழல்கள், பகற்கொள்ளைகளை வைத்துப் பார்க்கும்போது இது ஒரு பெரிய விஷயமே இல்லை.

அதோடு, BCCI-இல் நடந்து வரும் உள் சண்டைகள், அதன் அரசியல்வாதி நிர்வாகிகளுக்கிடையே power struggle, இந்திய கிரிக்கெட்டை தங்கள் கையில் வைத்திருப்பதால் அவர்களுக்கு கிடைக்கும் ஆனந்தமான உல்லாச வாழ்க்கை, இதுவரை வெளிவந்த / வெளியே வராத ஊழல்கள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, அரசியல் / கார்ப்பரேட் தலையீடு இல்லாத, கிரிக்கெட் தெரிந்த நேர்மையான ஆட்கள் (கவாஸ்கர், மஞ்ச்ரேக்கர், கபில், சித்து, பேடி போன்றவர்கள்) அங்கம் வகிக்கும் ஒரு நிர்வாகம், BCCI-க்கு மிக அவசியம். மேட்ச் ஃபிக்ஸிங் இரண்டாம் பட்சம் தான்,

தங்கள் சமீபகால மோசமான செயல்களால் கெட்ட பெயரை வேண்டிய அளவு சம்பாதித்து வைத்திருக்கும் தில்லி போலீஸ், மேட்ச் ஃபிக்ஸிங்கில் செலுத்தும் அதிக கவனத்தையும், உளவுத் திறமையையும், தில்லியை பெண்களுக்கு பாதுகாப்பாக வைத்திருப்பதிலும் செலுத்தினால், அவர்களுக்கு புண்ணியமாகப் போகும்.
:-)

Read More...

Tuesday, May 14, 2013

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 14-5-2013

100 கோடியில் அமெரிக்காவில் சுதந்திரதேவி இருப்பது போன்ற ஒரு சிலையை தமிழ்த் தாய்க்கு அமைக்கப் போகிறார் முதல்வர். இதனால் பல நல்லது நடக்கப் போகிறது. அமெரிக்காவில் இந்த சிலை இருப்பதால் தான் அங்கே மின் வெட்டு கிடையாது. அதனால் இந்த சிலை வந்த பிறகு குறிப்பாக மதுரையில் மின்வெட்டு என்ன எந்த வெட்டும் இருக்காது என்று நம்புகிறோம்.


அடுத்த நம்ப முடியாத நியூஸ் ஒன்று போன வாரம் ஊழல் செய்திகளுக்கு நடுவே வந்தது. அது 3D பிரிண்டிங் பற்றியது. ஆராய்ச்சியாளர்கள் 3D பிரிண்டிங் முறையில் துப்பாக்கி தயாரித்து அதை சோதித்தும் உள்ளார்கள்.



இது என்னடா சோதனை என்று நாம் நினைக்க இதைவிட பெரிய சோதனையை மன்மோகன்சிங் சந்தித்துள்ளார். அடுத்த முறை அவர் பிரதமராக இருக்க போகிறாரா என்று தெரியாத நிலையில் மோடி அடித்து விளையாட ஆரம்பித்துள்ளார். காங்கிரஸ் கட்சி இன்று India Shining போல ஒரு வீடியோ தொகுப்பைப் போட ஆரம்பித்துள்ளார்கள். பார்க்கலாம்.
( இடை குறிப்பு: இதற்கு செலவு ரூ180 கோடி )

படம் பார்த்தோமா, அதை பற்றி விமர்சனம் எழுதினோமா என்று இல்லாமல் நம் மக்கள் திடீர் திடீர் என்று இளையராஜா, ரஹ்மான் பற்றி விவாதிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். "இளையராஜா திமிர்பிடித்தவர் என என்னிடம் சொல்லும் எல்லாருக்கும் ஒரே பதில்: 'கரெக்டுங்க. இனிமே நீங்க அவர் மூஞ்சிலயே முழிக்காதீங்க…" என்று போன வாரம் ஒரு ஸ்டேடஸ் பார்த்தேன். இளையராஜா திமிர் பிடித்தவர் கிடையாது என்று அவர் குமுதத்தில் வரும் கேள்வி பதிலைப் படிப்பவர்களுக்கு தெரியும். இதற்கு எதற்கு வீண் விவாதம் ?

விவாதம் என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது கவிஞர் மனுஷ். இவர் வீட்டில் பூனைகுட்டி, டிவி, இண்டர்நெட், ஃபோன் என்று எல்லாம் இருக்கிறது. ஆனால் கரண்ட் மட்டும் இருப்பதில்லை. அதனால் அடிக்கடி ஏஸி ரூம் இருக்கும் டிவி ஸ்டுடியோவிற்கு விவாதத்திற்கு போய்விடுகிறார். அவர் போன வாரம் போட்ட ஸ்டேடஸ் ".இது என் நம்பர். நாளைக்கு கூப்பிடுங்க..இந்தக் கண்ணீர் கதையை சொல்கிறேன்..வயர் மேன்லாம் தெய்வம் சார்..டெய்லி 200 ரூபாய் கொடுக்கிறேன்". அப்படி என்றால் அவர் லஞ்சம் கொடுப்பவர் நல்லவர், அதை வாங்குபவர் தெய்வம்!. அதனால் தான் காங்கிரஸில் நிறைய தெய்வங்கள் இருக்கிறது.
( இடை குறிப்பு: அங்கெல்லாம் கடமைய மீறத்தான் லஞ்சம் அனா இங்க கடமை செய்யவே லஞ்சம்", இந்தியன் படத்தில் ஒரு வசனம். இதற்கு அர்த்தம் என்ன பாஸ் ? )

பசு நமக்கு தெய்வம். கர்நாடகா முதலவ்ர் வந்த முதல் நால் பசு வதை சட்டத்தை எடுத்துவிட்டார். பசு தோல் போர்த்திய புலி என்று நாம் பார்த்திருக்கிறோம். அதே போல வீட்டுல எலி வெளியில புலி என்பதையும் கேள்விப்படிருக்கிறோம். பாகிஸ்தான் நாடாளுமன்ற் தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி வெற்றி பெற்றது. அவருடைய கட்சிச் சின்னம் புலி. தன்னுடைய பிரச்சாரத்துக்கு நிஜமான வெள்ளை புலி ஒன்றைப் பிரச்சாரத்துக்கு வைத்திருந்தார். பிரச்சாரத்தின் போது அது பாவம் இறந்து போனது. அதற்காக வருத்தப்படுவதா அல்லது பாகிஸ்தானைவிட நல்ல இடத்துக்கு போனது என்று சந்தோஷப்படுவதா?

இப்ப மன்மோகன்சிங் பாகிஸ்தான் போவாரா என்று தெரியாது. ஆனால் அவர் டில்லியில் இருப்பதை காட்டிலும் அங்கே போனால் நிம்மதியாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

பாராளுமன்றத்தில் பிஎஸ்பி எம்பி ஒருவர் வந்தே மாதரம் பாடும் போது எழுந்து வெளியே போனது ஒரு சின்ன சர்ச்சையை உண்டு செய்தது. சிரித்துக்கொண்டே 'பைடிஹே' என்று சொல்லும் மீரா குமார் கூட உணர்ச்சிவசப்பட்டு இப்படி எல்லாம் செய்யக் கூடாது என்று கண்டித்தார். அவர் கண்டிக்கும் முன் ஒரு கேள்வி கேட்டிருக்கலாம். அந்த எம்.பி பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியா அல்லது முஸ்லீம் பிரதிநிதியா ? அவர் முஸ்லீம் பிரதிநிதி என்றால் பிரச்சனை. அடுத்த முறை மக்கள் தேர்ந்தெடுக்க கூடாது. Program எழுதும் போது Bug வருவதில்லையா? அதே போல இந்த எம்.பி பாராளுமன்றத்தில் ஒரு Bug.. சரி செய்ய வேண்டியது மக்கள் தான்.

Bug பற்றி ஒரு செய்தி. பூச்சிகளை சாப்பிட்டால் நல்லது என்கிறது செய்தி ஒன்று. இனி சிக்கன், மட்டன் என்று சாப்பிடாமல், பூச்சிகளை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று சொல்லுகிறார்கள். சாப்பிட்டவர்கள் தங்கள் அனுபவங்களைச் சொல்லலாம்.

பிச்சை எடுப்பவர்களுக்கு ஒரு ரூபாய் போட்ட காலம் எல்லாம் போயே போச்சு. ஆனால் ஒரு ரூபாய்க்கு இப்ப நிறைய கிடைக்கிறது. ஒரு ரூபாய்க்கு ஏர்டெல் வீடியோ பார்க்கலாம் என்கிறது விளம்பரம். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி ஏன் ஒரு இட்லிகூட கிடைக்கிறது. ஆனால் அதே ஒரு ரூபாயைப் பிச்சைக்காரர்கள் கூட வாங்க மாட்டார்கள் என்பது தான் முரண்!

அடுத்த முரண் - போன வார உச்ச நீதிமன்றம் சிபிஐ கூடுக்குள் அடைக்கப்பட்ட கிளி என்று கண்டனம் செய்தது. அதனால் இந்தவாரம் கிளி பற்றி ஒரு சின்ன ஜோக்.

பாலியல் தொழில் செய்யும் பெண், பாதிரியாரை பார்க்க செல்கிறாள்!

அய்யா, நான் இரண்டு கிளிகள் வளர்க்கிறேன்! அவை எப்போதும் ஒரே வார்த்தையை தான் சொல்கின்றன என்றாள்!

என்ன என்றார் பாதிரியார்!

"நான் ஒரு விபச்சாரி, உனக்கு சுகம் தரட்டுமா?" என்பதே அது என்கிறாள்!

என்னிடம் இரு கிளிகள் இருக்கின்றன, அவைகள் எப்போதும் ஜெபித்து கொண்டே இருக்கும், அவைகளிடயே விட்டால் அவைகள் உன் கிளிகளை திருத்திவிடும் என்றார்! பாதிரியார்.

கிளிகள் பாதிரியாரின் கூண்டுக்குள் விடப்பட்டன! விபச்சாரியின் கிளிகள் வழக்கம் போல் "நாங்கள் விபச்சாரிகள், உங்களுக்கு சுகம் தரட்டுமா?" என்றது!

உடனே பாதரியாரின் கிளி ஒன்று சொன்னது "சொன்னேன் பார்த்தியா நமது ஜெபத்துக்கு கடவுள் செவி மடுத்துவிட்டார் என்றது!"
( இடை குறிப்பு: நன்றி வால் பையன் )

நாமக்கல் மாணவர்கள் கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொல்லி மார்க் வாங்கிவிட்டாகள் என்று இணைய கிழட்டு இளைஞர்கள் டிவிட்டர் ஃபேஸ் புக்கில் அதைப் பற்றி விவாதித்தார்கள். அவர்கள் செய்தது குறுக்கு வழி. அப்படி எல்லாம் படிக்கக் கூடாது என்று. உலகைச் சுற்றி வந்தவர்களுக்கு மாம்பழம் என்று சொன்ன போது பிள்ளையார் அம்மா அப்பாவைச் சுற்றி வந்து மாம்பழத்தைப் பெற்றார். அது குறுக்கு வழி இல்லையா?

மாம்பழம் என்றதும் நம் நினைவுக்கு வருவது அய்யா தான். அவரை பற்றி ஒரு சின்ன டிவிட்டர் செய்தி.


சிறையில் காந்திய சிந்தனைகள் படிக்கிறார் ராமதாஸ்.
இத சின்ன வயசில் படிச்சிருந்தா இப்ப படிக்க வேண்டி வந்திருக்காது!

Read More...

உதவி வேண்டி...

இட்லிவடை நண்பர்களுக்கு வணக்கம்.

இட்லிவடை நண்பர்களுக்கு, சக்திவேல் என்கிற 4 மாதக்குழந்தையின் அறுவைசிகிச்சைக்காக Save a Life volunteer team அமைப்பை சார்ந்தவர்கள் உதவிகோரியுள்ளார்கள். (விவரம் இணைப்பில்) கடந்த முறை இட்லிவடை நண்பர்கள் மூலம் கணிசமான தொகை ஒரு குழந்தையின் மருத்துவ செலவிற்காக இவர்கள் அளித்துள்ளார்கள் என்பதை அறிந்து இந்தக்குழந்தைக்காக உதவிகோரியுள்ளார்கள். உதவ முன்வருபவர்கள் http://savealifetrust.org/donta.html மேற்கண்ட இணைப்பில் உள்ள விவரங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
With Love
R.Griesh



Read More...